25 October 2010

Endhiran Revisited - சுஜாதாவுக்காக

வணக்கம் மக்களே...!

முன் குறிப்பு: ரங்குஸ்கி காட்சியையும் கலாபவன் மணி காட்சியையும் நீக்கிவிட்டார்கள், க்ளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை குறைத்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றிய டீம் மேனேஜர் ரிச்சர்டை வன்மையாக கண்டிக்கிறேன்...!!! (ஏன் பாஸ் இந்த கொலைவெறி...?)

ஏற்கனவே எந்திரன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து டரியலாகி "எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை...!" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு அமரர் சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா நாவலை படிக்க நேர்ந்தது. சான்ஸே இல்லை... நாவல் முழுவதையும் ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தபோது ஏதோ வேற்றுகிரகத்துக்கு போய்வந்தது போல இருந்தது. அப்பேர்பட்ட ஓர் பேரறிஞனின் வசனங்களை முதல்முறை பார்த்தபோது ரசிக சிகாமணிகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் ரசிக்க முடியவில்லை. எனவே இன்னொரு முறை ஆறு வாரங்கள் கழிந்த பின்னர் ஆரவாரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் "கொளத்தூர் கங்கா, விருகம்பாக்கம் தேவி கருமாரியில் எல்லாம் பார்த்தால் டல்லா இருக்கும்... சத்யம் அல்லது எஸ்கேப் சினிமாஸில் பார்த்தால் நல்லா இருக்கும்..." என்று டீம் மேனேஜர் ரிச்சர்ட் திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால் நான் சத்தியமாக எஸ்கேப் சினிமாஸில் பார்க்கவில்லை. சென்னை ராயபுரத்தில் "மதுரை சுனாமி" அண்ணன் அழகிரி பினாமி பெயரில் வைத்திருக்கும் ஐட்ரீம் சினிமாஸில் படம் பார்க்க நேர்ந்தது. மூட்டைப்பூச்சி கடியைக் கூட தாங்கிக்கொள்ளலாம் ஆனால் ரசிகர்களின் அலப்பறையை எல்லாம் நிச்சயம் தாங்க முடியாது. எனவே இரவுக்காட்சிக்கு சென்றேன். (அப்படியும் கூட்டம் கும்மியடித்தது வேறு விஷயம்...!).

முதல்முறை ரசிக்க முடியாத இசை, வசனம், Sound Effects, பாடல் காட்சிகளை இந்த முறை ஆற அமர ரசித்தேன். சிட்டி தலையை திருப்பும்போதும், அங்க அசைவுகளின் போதும் கேட்கும் Buzzing Sound முதற்கொண்டு மொத்தத்தையும் ரசித்தேன். இந்தமுறைதான் கவனித்து பார்க்க முடிந்தது. ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். (எந்த இடத்தில் என்றெல்லாம் கேட்கக் கூடாது...!).

பாடல் காட்சிகள் - வழக்கமாக ஷங்கர் படங்கள் என்றாலே பிரமிப்பாக இருக்கும். இதிலும் அப்படித்தான் என்பதை நேற்றிரவே சன் டி.வியில் பார்த்திருப்பீர்கள். வெள்ளித்திரையில் பார்த்தால் இன்னும் இன்னும் ஆச்சர்யங்கள். காதல் அனுக்கள் பாடலில் காட்டப்பட்ட பாலைவனத்தையும் பாலைவனத்திற்கு நடுவில் ஆங்காங்கே காணப்பட்ட குட்டிக்குட்டி குளங்களையும் வெகுவாக ரசித்தேன். கிளிமாஞ்சாரோ பாடலில் காட்டுவாசிகளின் உடையலங்காரமும் அவர்களின் நடன அமைப்பும் பிடித்திருந்தது. ரோபோடிக் பாடலில் ஐஸின் நடனம் சிலிர்க்க வைத்தது. பக்கத்து சீட் நண்பனிடம் இருந்து பாப்கார்னை ஆட்டையை போடும் ஆட்டத்தில் மும்முரமாக இருந்ததால் இரும்பிலே ஓர் இருதயம் பாடலை மட்டும் சரிவர ரசிக்க முடியவில்லை.

பாடல் வரிகள் - வைரமுத்து, பா. விஜய், மதன் கார்க்கி ஆகிய மூவரும் வடித்திருக்கிறார்கள். ராணுவக் காட்சி கவிதையை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் பிரம்மாண்டமல்ல பாடல் வரிகளிலும் தான். கவிப்பேரரசு வைரமுத்துவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் எழுதிய வரிகளில் எனக்குப் பிடித்த சில வரிகள்...

"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை..." (புதிய மனிதா...)

"சனா... சனா... ஒரே வினா...?
அழகின் மொத்தம் நீயோ...?" (காதல் அனுக்கள்...)

"வயரெல்லாம் ஓசை... உயிரெல்லாம் ஆசை...
ரோபோவை போ போ வேண்ணாதே..." (அரிமா... அரிமா)

தந்தை ஒருபக்கம் அமர்க்களப்படுத்தினால் மகன் மறுபக்கம் அதகளமாக்குகிறார். வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி "இரும்பிலே ஓர் இருதயம்...." பாடலுக்காக வரலாற்று சிறப்புமிக்க வரிகளை எல்லாம் எழுதியிருக்கிறார். சாம்பிளுக்கு இரண்டு வரிகள்...

"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா...
ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா..."

மேலும் பா.விஜய் "கிளிமாஞ்சாரோ..." பாடலில்...

"உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு...
ஒரு யுகம் முடிந்து திற அன்பாய்..."

இந்த வரிகளை எல்லாம் ரசித்தபோது எந்திரன் படம் வெளியாவதற்கு முன் ஏன் பாடல்களை கேட்கவில்லை என்று என் மேலேயே கோபம் வருகிறது.

ரஜினி - வசீகரன், சிட்டி, சிட்டி v2.0 என்று மூன்று பாத்திரங்கள் இருந்தாலும் இரண்டாம் வெர்ஷன் சிட்டியே மொத்த சிக்ஸரையும் அடித்துவிடுகிறார். "சிவாஜி" படத்தில் ரஜினி அடிக்கடி கூல்... கூல்... என்று சொல்வார். ஆனால் இந்தப் படத்தில் வசீகரன் ரஜினி கொஞ்சம் கூட கூல் இல்லை. எதற்கெடுத்தாலும் கத்துவது, கோபப்படுவது என்று சராசரி மனிதனாகவே வலம் வருகிறார். சிட்டி கேரக்டர் உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் வசனங்களை ஒப்பிக்கிறது. சிட்டி v2.0 கேரக்டரில் தான் பழைய ரஜினியை பார்க்க முடிந்தது. உதாரணத்துக்கு "ச்சீ... ன்னுறது, சீதா பிராட்டி சீன் போடுறது..." என்று ஆரம்பித்து தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் வசனம் பேசிமுடித்தபோது தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். மேலும் பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் வில்லச்சிரிப்பு சிரிப்பதும் "மே... மே..." என்று ஆடு போல மிமிக்ரி செய்வதுமாக கலக்கி இருக்கிறார். ரஜினி ஹீரோயிசத்தை விட நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார். இனிவரும் படங்களில் ரஜினி இமேஜ் இம்சைகளையெல்லாம் விடுத்து வில்லனாக நடித்தால் அதிகம் ரசிக்கலாம்.

சுஜாதாவுக்காக - என்று தலைப்பில் போட்டுவிட்டு வசனத்தை பற்றி ஒன்றும் எழுதாவில்லை என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சாதாரணமான படங்களுக்கே அசாதாரணமாக வசனம் எழுதுபவர் சுஜாதா. ஆயுத எழுத்து படத்தின் காதல் பற்றிய ஒரு காட்சியில் Androgen, Estrogen, Testosterone என்றெல்லாம் வசனமெழுதி பொளந்து கட்டியிருப்பார். அப்படிப்பட்டவருக்கு எந்திரன் போன்றொரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால் சும்மா விடுவாரா. அவரது கைவண்ணத்தில் எனக்கு பிடித்த சில வசனங்கள்...

1. ஐஸ்: உள்ள உயிரோட இருக்காரா...?
கருணாஸ்: உள்ள வயரோட இருக்கார்...

2. ஐஸ்: Can you please shutdown your stupid system...?
சந்தானம்: Control, Alt, Delete

3. ரஜினி: நான் கொடுத்த 2 பவர் 9, ஐநூத்தி பன்னண்டு முத்தம்...
ஐஸ்: முத்தம் கொடுக்கும்போது கூட கவுன்ட் பண்ணிட்டு இருப்பீங்களா... பீல் பண்ண மாட்டீங்களா... சரியான Matrix மண்டை...

4. டிராபிக் போலீஸ்: அட்ரஸ் சொல்லுய்யா...
ரோபோ: ஐ.பி அட்ரஸ் தான் இருக்கு... 108.11.0.1

5. ட்ராபிக் போலீஸ்: நக்கலா....?
ரோபோ: இல்ல நிக்கல்... போல்டெல்லாம்  நிக்கல்ல பண்ணது...

6. விஞ்ஞானி ஒருவர்: சிம்பிளா கேக்குறேன்... 24157817 Fibonacci நம்பரா...?
ரோபோ: ஆமாம், 22வது Fibonacci நம்பர்... பை தி வே அது மந்தவெளி பி.சுப்ரமணியத்தோட போன் நம்பர்...

7. ரோபோ: 98dB... Too loud... Who is that செல்லாத்தா...?

8. சந்தானம்: யேய்... நீ என்ன பெரிய இவனா...?
ரோபோ: இலக்கணம் தப்பு...

9. விஞ்ஞானி ஒருவர்: கடவுள் இருக்காரா இல்லையா...?
ரோபோ: கடவுள்ன்னா யாரு...?
விஞ்ஞானி: நம்மள எல்லாம் படைச்சவர்....
ரோபோ: என்னை படிச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...

10. விஞ்ஞானி போஹ்ரா: ஆபத்து வரும்போது யார முதல்ல காப்பத்துவ...? டாக்டர் ஐன்ஸ்டீனையா...? ஒரு சின்ன குழந்தையா...?
ரோபோ: Hypothetical Question...

இதெல்லாம் சும்மா சாம்பிள்தான். சுஜாதா வரிக்கு வரி கோல் போட்டிருக்கிறார். ஆனால் ஏனோ முதல் பாதியில் மட்டும்தான் இதுபோன்ற சுஜாதா டச் கொண்ட வசனங்கள் அதிகம் வருகிறது. ஒருவேளை அதுவரைக்கும்தான் அவர் எழுதியதோ என்னவோ. வசனங்கள் மட்டுமின்றி காதலிக்கு Freakonomics புத்தகத்தை பரிசாக தருவது, ரோபோவை வைத்து ஆயுத பூஜை செய்வது, ரோபோவுக்கு உணர்ச்சிகளை கற்பிக்க வேண்டி ஆசார கோவையை படிக்க கொடுப்பது என்று திரைக்கதையிலும் ஆங்காங்கே சுஜாதா டச்.

டிஸ்கி: இந்தமுறை பார்த்தபோது இடைவேளைக்குப்பின் காரமாக இருந்தது Lays Chips (Spanish Tomato Flavour).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

39 comments:

சர்பத் said...

கண்டிப்பா சுஜாதா ஒரு சகாப்தம். சந்தேகமே இல்லாமல்.

pichaikaaran said...

என் உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்

ராஜகோபால் said...

சுஜாதா புக்ஸ் படிக்க இங்க போங்க

http://marancollects-tamilebooks.blogspot.com

Philosophy Prabhakaran said...

@ சர்பத்
சரியா சொன்னீங்க.... அவர் காலத்தால் அழிக்க முடியாதவர்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
இப்படி ஒரு வார்த்தையை நீங்கள் சொல்லி கேட்க சந்தோஷமாக இருக்கிறது... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ ராஜகோபால்
பயனுள்ள தகவலைத் தந்ததற்கு மிக்க நன்றி நண்பா...

அருண் பிரசாத் said...

டிஸ்கி சூப்பர்....

வசனங்கள் தொகுத்தவிதம் நல்லா இருக்கு பிரபா

Unknown said...

என் இனிய இயந்திரா.. தொலைக்காட்சித் தொடராக சின்ன வயதில் பார்த்தது.. சிவரஞ்சினி ஹீரோயினா நடச்சாங்கன்னு நினைக்கறேன்.. பலகாட்சிகள் இன்னும் ஞாபகமிருக்கு.. சுஜாதா சான்சே இல்லங்க.. எப்படியெல்லாம் யோசிச்சு எழுதியிருக்கார்..

நானும் எந்திரனை முதல்நாள் பார்த்தது.. திரும்பவும் பார்க்கனும்..

////விஞ்ஞானி ஒருவர்: கடவுள் இருக்காரா இல்லையா...?
ரோபோ: கடவுள்ன்னா யாரு...?
விஞ்ஞானி: நம்மள எல்லாம் படைச்சவர்....
ரோபோ: என்னை படிச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...////

இந்த வசனம் செம!!

எஸ்.கே said...

என் இனிய இயந்திரா மீண்டும் ஜீனோ இரண்டும் படித்து விட்டு எப்படி இருந்தது தெரியுமா? அற்புதம்! எப்படி யோசித்திருக்கிறார். அவர் வசனங்கள் சொல்லாடல்கள் கதைகளிலேயே மிக அருமையாக இருக்கும் படத்தில் கேட்க வேண்டுமோ!

(அந்த் நாவல்கள் இணையத்தில் மின்புத்தகமாக கிடைக்கின்றன. படித்து பாருங்கள்)

Unknown said...

சுஜாதாவின் சொர்கத்தீவு படித்ததுண்டா
1973 லில் எழுதப்பட்ட நாவல்

Philosophy Prabhakaran said...

@ அருண்பிரசாத்
நன்றி நண்பா... வசனத்தொகுப்பு அட்ராசக்க என்ற பதிவரிடம் இருந்து கற்றுக்கொண்ட ஐடியா...

NaSo said...

தொகுக்கப்பட்ட வசனங்கள் அனைத்தும் அருமை.

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு
என்னது என் இனிய இயந்திரா தொலைக்காட்சி தொடராக வெளி வந்ததா... இந்தத்தகவலை உங்கள் மூலமாகவே தெரிந்துக்கொண்டேன்... அதை திரைக்கதை ஆக்குவதற்கு ஏகப்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படுமே...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
இரண்டின் மின் பதிப்புக்களையும் ஏற்கனவே வைத்திருக்கிறேன்... ஆனால் இதுவரை என் இனிய இயந்திரா மட்டுமே படித்திருக்கிறேன்... மீண்டும் ஜீனோ படித்ததில்லை. கொஞ்ச நாளைக்கு சஸ்பென்ஸ் நீடிக்கட்டும் என்று படிக்காமல் வைத்திருக்கிறேன்... விரைவில் படித்துவிடுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... இதுவரை படித்ததில்லை படிக்க முயற்சி செய்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ நாகராஜசோழன் MA
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

erodethangadurai said...

லேட் விமர்சனம் , இருந்தாலும் மிக அருமையாக தந்துள்ளிர்கள் .....! வாழ்த்துக்கள் நண்பரே .. !

Unknown said...

என் இனிய இயந்திரா தொலைக்காட்சித் தொடர் 1990களின் தொடக்கத்தில் வெளிவந்தது என நினைக்கிறேன்.. மிகவும் சிறிய வயது என்பதால் சரியான ஆண்டு தெரியவில்லை.. தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பானது..

தொழில்நுட்ப ரீதியான விசயங்களை முடிந்தவளவிற்கு அத்தொடரில் கையாண்டிருந்தனர்.. அதில் வரும் நாய் ரோபோ அப்போது குழந்தைகளை மிகவும் ஈர்த்தது.. இன்றளவும் மனதில் நிற்கும் தொடர்..

Philosophy Prabhakaran said...

@ ஈரோடு தங்கதுரை
லேட் விமர்சனம் இல்லை நண்பா... ஏற்கனவே படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிவிட்டேன்... இது revisited விமர்சனம்...

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு
மீண்டும் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி... 1990 என்றால் எனக்கு இரண்டு வயது மட்டுமே இருக்கும்... அதனால் நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை... எங்கள் வீட்டில் அப்போது டி.வியும் இருக்கவில்லை... இதையெல்லாம் மறுஒளிபரப்பு செய்யமாட்டார்களா...

Unknown said...

சன் தொலைக்காட்சி தொடங்கி ஒரிரு ஆண்டுகளில் அத்தொடரை மறுஒளிபரப்பு செய்ததாக ஞாபகம்.. இணையத்தில் முயற்சித்துப் பாருங்கள்.. கிடைக்க வாய்ப்புள்ளது..

Vimal Raj said...

Supereb ..wonderful.....

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு
முயற்சி செய்து பார்க்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Vimal Raj
Thanks for posting comments... Today only i saw ur blogspot... Y did u stopped writing...?

NewAgePeriyar said...

Extra fitting:
http://www.mycollection.co.in/dialogues.php?did=43

must must read ;)

Philosophy Prabhakaran said...

@ NewAgePeriyar
Ya... Went through ur collection... great fun...

ஆனந்தி.. said...

நிஜம் தான் சுஜாதா ஸ்டைல் ஒரு யூனிக் தான்..இரும்பிலே இருதயம் ஆடியோ வில் ரொம்ப பிடிச்சது...ஆனால் விசுவல் லா என்னவோ அவ்வளவு நல்லா இல்ல..நீங்க சொன்ன dialogues எல்லாமே படம் பார்க்கும்போதும் நல்லா இருந்தது..இப்போ படிக்கும்போதும் நல்லா இருந்தது...எந்திரன் பதிவில் இது கொஞ்சம் வித்தியாச பதிவு..வாழ்த்துக்கள்..!

ராஜ நடராஜன் said...

//ரஜினி ஹீரோயிசத்தை விட நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார்.//

எந்திரனின் எனது பார்வையும் இதுதான்.அதனால
நாம இரண்டுபேரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்கலாமா:)

ராஜ நடராஜன் said...

உங்கள் இடுகையின் காரணமாக என் இனிய இயந்திரா வாசிக்க கிடைத்தது.நன்றி.

Philosophy Prabhakaran said...

@ ஆனந்தி
விளக்கமாக படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஆனந்தி...

@ ராஜ நடராஜன்
அவ்வ்வ்வவ்.... நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா...

Chitra said...

Cool! Cool! :-)

Kousalya Raj said...

ரசிக்கும் படியான பதிவு வாழ்த்துக்கள்...

அரட்டை அருண் said...

this is arun da, nice posting... my idea to popular ur blog to update film ratings and get vote for films by get feedbacks from viewers, by setting parameter marks for each category in film like songs, comedy, acting, reduce mark for copying from other films,.. i am eager to do this with ur support da..

kamal said...

Nice one... I am gr8 fan of sujatha... But Enthiran team never thanked him even in the audio release... One of the short story written by him long before...The Robot named Vijay... That short story is very gud than En Eniya Iyanthara... But I forgot the name.... May God bless you....

Philosophy Prabhakaran said...

@ Chitra & Kousalya
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Philosophy Prabhakaran said...

@ my team
Thanks for coming... i'll consider about ur idea...

Philosophy Prabhakaran said...

@ kamal
Thanks for coming and posting comment for the first time... mmm... Im not aware about the "Vijay Robot"... But i've read one of the sujatha's creation "Enge En Vijay" where he wrote about his lost scooter...

எப்பூடி.. said...

//இனிவரும் படங்களில் ரஜினி இமேஜ் இம்சைகளையெல்லாம் விடுத்து வில்லனாக நடித்தால் அதிகம் ரசிக்கலாம்//

அமாங்க; கமலுக்கு கூட சீடியஸா நடிக்கிறதை காட்டிலும் காமடி சூப்பரா வரும், கமல்கூட மத்தவங்க படங்கள்ல காமடியான நடிச்சா சூப்பரா இருக்கும் :-)

yeskha said...

இரண்டு சிறு திருத்தங்கள்.
1. காதல் அனுக்கள் பாடலில் = காதல் அணுக்கள் பாடலில்

2.ரோபோவை போ போ வேண்ணாதே = ரோபோவை போ போ வென்னாதே (போ + என்னாதே = போவென்னாதே)

குறை சொல்வதற்காக அல்ல. பிழைகள் திருத்தப்பட்டால் படைப்பு இன்னும் திருத்தமாக இருக்குமே அதற்காக..