13 November 2010

டென்ஷன் ஆகாதீங்கண்ணே...!!!

வணக்கம் மக்களே...

சில மாதங்களுக்கு முன்பு வரை நான் டேபிளில் குத்தாத நாட்களே இல்லை. ஏன் என்று என்னுடன் நெருங்கிப் பழகிய சிலருக்கு தெரிந்திருக்கும். நம்ம பொழப்பு அப்படி. ஒரு பிரபல (அவ்வ்வ்வ்) தொலைதொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி (வீட்ல சொன்னா வெளக்கமாற எடுப்பாங்க).

வாலி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். விவேக் விமான விபத்தில் தனது காலை இழந்துவிட்டதாக சொல்லி பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார். அப்போது பத்து பைசா பிச்சை போட்டுவிட்டு ஒருவன் ஹிஸ்டரி ஆப் த இன்சிடன்ட், ஜியாகரபி ஆப் த ஆக்ஸிடன்ட் எல்லாம் கேட்பான். அதுபோல தான் வாடிக்கையாளர்களும். பத்து ரூபாய் சிம்ம வாங்கிட்டு பத்தாயிரம் கேள்வி கேட்பார்கள். நியாயமாக பார்த்தால் நியாயம் வாடிக்கையாளர்களின் பக்கமே. ஆனாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்களிடம் வசைமொழி வாங்கும்போது வேட்டைக்காரன் விஜயைப் போல நரம்புகள் முறுக்கேற கையை மடக்கி டேபிளில் ஓங்கி ஒரு குத்து குத்தினால் தான் மனம் நிம்மதியடையும். இப்போது வேலையை விட்டுவிட்டதால் டேபிளில் குத்துவதற்கு மாற்று ஏதாவது இருக்குமா என்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு. டென்ஷனை குறைக்க அல்லது டென்ஷன் வராமலிருக்க பத்து வழிகள். ஆக்சுவல்லி நான் ஒன்றும் உளவியல் நிபுணர் அல்ல. இவை அனைத்தையும் என்னுடைய அனுபவங்கள் மற்றும் கேள்வி ஞானம் மூலமே எழுதுகிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மறவாமல் சுட்டிக்காட்டுங்கள்.

1. டென்ஷனை களையெடுக்க முதல் மற்றும் முக்கியமான வழி அதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிப்பது. அலுவலகத்தில் மேனேஜர் டேமேஜர் ஆனது, வீட்டுக்காரி காரி காரி துப்பியது இதுபோல ஏதாவது ஒரு மூலக்காரணம் நிச்சயம் இருக்கும். அது என்ன என்று கண்டுபிடித்து உள்மனதிற்கு புரிய வைத்தாலே பாதி கோபம் குறைந்துவிடும். மேலும், கோபத்தின் காரணங்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு இனி அத்தகைய கோபம் வராமல் இருப்பது பற்றி ஆராய்ச்சி செய்யலாம்.

2. காதலன் படத்தில் சொன்ன மெசேஜ் இது. காதலன் படத்தில் அப்படி என்ன கருமாந்திர மெசேஜ் சொன்னார்கள் என்று யோசிக்க வேண்டாம். இன்பமானாலும் துன்பமானாலும் அந்த உணர்ச்சியை சில நிமிடங்களுக்கு தள்ளிப்போட சொல்லியிருப்பார்கள். அது உண்மையிலேயே நல்ல விஷயம். யார் மீதாவது கோபம் வந்தால் உடனே காட்டிவிட வேண்டாம். குறைந்தது இரண்டு நிமிடங்களாவது அமைதியாக அமரவும். அந்த இரண்டு நிமிடங்கள் முடிந்திருக்கும்போது உங்களுடைய கோபம் இரண்டு கிலோமீட்டர் தாண்டி போயிருக்கும்.

3. பார்ப்பது, கேட்பது, படிப்பது. மொத்தத்தில் ஒரு ரசிகனாக இருப்பது. நல்ல திரைப்படங்களை பாருங்கள். (அய்யா சாமி... பிட்டு படத்த வேணும்னா கூட பாருங்க ஆனா தமிழ்ப்படங்களை மட்டும் பாத்துடாதீங்க... கடுப்பேத்துறாங்க மை லார்ட்...). இசை டென்ஷனைக் குறைக்கும் மென்மையான ஆயுதம். உங்களுக்கு எந்த இசை மிகவும் பிடிக்குமோ அதை கேளுங்கள். சிலருக்கு சோகப்பாடல்கள் கேட்டால் கூட நிம்மதி பிறக்கும். (என்னுடைய சாய்ஸ் கானா பாடல்கள் தான்...) எதை படிப்பது...? வேறென்ன நம்ம கடைப்பக்கம் அடிக்கடி வந்து நான் எழுதுற மொக்கைகளை எல்லாம் படித்தால் டென்ஷனுக்கே டென்ஷனாகி விடுமென உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

4. எதையுமே பாசிட்டிவாக யோசிக்க வேண்டுமென பெரியவர்கள் சொல்லுவார்கள். அதெல்லாம் அந்தக்காலம். எந்த ஒரு செயலானாலும் அது ஒருவேளை (நோட் பண்ணிக்கோங்க ஜனங்களே, ஒருவேளை) நெகடிவாக முடிந்தால் உங்களது மனநிலை எப்படி இருக்கும், உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தொலைநோக்கு பார்வையோடு யோசித்து வைப்பது சிறப்பு. (ப்ளானிங் மிக முக்கியம் அமைச்சரே...!)

5. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “Takers may eat better… But the Givers will sleep better…”. விட்டுகொடுத்தலின் மகத்துவத்தை சொல்லும் இந்த பழமொழியை எனக்கு ரொம்பவும் பிடிக்கவும். உங்கள் உறவோ, நட்போ அல்லது யாராக இருந்தாலும் அவர்களுக்காக விட்டுக்கொடுத்து பாருங்கள் உங்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும், நீங்கள் யாருக்காக விட்டுக்கொடுக்கிறீர்களோ அவர்களுக்கு உங்கள் மீது தனி மரியாதை உண்டாகும்.


6. நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது உங்கள் போனை எடுத்து பல வருடங்களாக பேசாமல் இருக்கும் பழைய நண்பனுக்கு கால் செய்து சில நிமிடங்களாவது மனம் விட்டு பேசுங்கள். இந்த போன்கால் உங்களது டென்ஷனை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாக பசுமையான நினைவுகளை விட்டுச் செல்லும். போன்கால் தான் செய்யவேண்டும் என்றில்லை. நண்பரின் இல்லம் போய்வரும் தூரத்தில் இருந்தால் ஈகோவிற்கு கோகோ சொல்லிவிட்டு நண்பர் இல்லத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம்.

7. உங்கள் குடும்பம் குட்டிகளோடு நேரம் செலவிடுங்கள். மாதத்திற்கு ஒருமுறை உங்கள் குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். உங்களது வயதான பெற்றோர்களை தினமும் ஒருமுறையேனும் சந்தித்து சில நிமிடங்கள் ஆறுதலாக பேசுங்கள். ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்ணுங்கள் என்று ஏதோ ஒரு சினிமாப்பாடலில் கேட்ட ஞாபகம். உங்கள் இல்லங்களில் உங்களுக்கு பிடித்தமான வளர்ப்பு பிராணிகளை வளருங்கள். குறிப்பாக மீன்கள், மீன்கள் தொட்டியில் நீந்துவதை பார்த்துக்கொண்டிருந்தால் டென்ஷன் குறையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

8. மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன்... மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்... இது யார் சொன்னதென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே நீங்கள் எப்போதுமே பெரிய மனுஷனாகவே நடந்துக்கொள்ளுங்கள். எல்லா தவறுகளுக்கும் எல்லோரையும் மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் கூட Thanks, Sorry போன்ற தாரக மந்திரங்களை சொல்லி பழகுங்கள்.

9. நிம்மதியான உறக்கம், நிறைவான சாப்பாடு இரண்டும் இருந்தாலே டென்ஷன் உங்களை அண்டாது. இரவு சீக்கிரமே படுக்கைக்கு சென்றிடுங்கள் அதேபோல காலையிலும் சீக்கிரமே எழுந்திருங்கள்.  சிக்கலான விஷயங்களை பற்றி சிந்திக்கும் பொது இரவு நேரத்தில் சிந்திக்காமல் விடியற்காலை எழுந்தவுடன் சிந்தித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். சரியான நேரத்தில் சரிவிகித உணவை சாப்பிடுங்கள்.

10. உங்கள் வாழ்வில் சில நேரங்களில் இதுவா...? அதுவா...? இரண்டில் எதை தேர்வு செய்வது என்று குழம்பியிருப்பீர்கள். அதுபோன்ற சமயங்களில் யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம். ஒரு நாணயத்தை எடுத்துக்கொல்லுங்கள். பூ விழுந்தால் ஒரு முடிவு என்றும் தலை விழுந்தால் மறு முடிவு என்றும் கருத்தில்கொண்டு நாணயத்தை சுண்டிவிடுங்கள். சுண்டிவிட்ட நாணயத்தை உள்ளங்கையில் பிடித்து மூடிக்கொள்ளவும், பார்க்கவேண்டாம். (கருத்தில் கொள்க... எக்காரணம் கொண்டும் சுண்டிவிட்ட நாணயத்தை திறந்து பார்க்கவேண்டாம்). இப்போது உங்கள் உள்மனம் பூ விழ வேண்டுமென எதிர்பார்க்கிறதா அல்லது தலை விழ வேண்டுமென எதிர்பார்க்கிறதா என்று யோசித்துப் பாருங்கள் உங்கள் குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

டென்ஷனை குறைக்க நான் சொன்ன பத்து கட்டளைகள் பயனுள்ளதாக இருந்ததா. ஒவ்வொரு முறை பயர்பாக்ஸ் கிராஷ் ஆகும்போதும் டென்ஷனாகி டேபிளில் குத்தாமல் முழுப்பதிவையும் எழுதியிருக்கிறேன் எனவே நீங்களும் டென்ஷன் ஆகாம தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்10 நிரலிகளிலெல்லாம் உங்கள் ஓட்டுக்களை பதிவு செய்துவிட்டு அப்படியே நல்லதோ கேட்டதோ பதிவைப் பற்றி நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு செல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
டிஸ்கி: நடுவில் நடிகையின் புகைப்படம் ஏன் என்று கேட்பவர்களுக்கு...? டென்ஷனைக் குறைக்கத்தான்...

48 comments:

  1. டென்ஷனா இருக்கனேன்னு ரிலாக்ஸ் பண்ண உங்க பிளாக் வந்தேன்,.....10 சன் பண்ணீட்டீங்க

    ReplyDelete
  2. தமிழ் 10இல் இணைக்கவில்லையா?நான் இணைக்கிறேன்

    ReplyDelete
  3. ஆல்ரெடி இணைச்சாச்சுன்னு வருது,ஆனா உங்க பிளாக்ல அப்படி காண்பிக்கலையே.

    ReplyDelete
  4. அதை எல்லாம் விடுங்க.. வாடிக்கியாளர் பேசறப்ப / திட்டும் பொழுது நம்மை திட்டவில்லை, நம்ம நிறுவனத்தைத்தான் திட்டுகிறார் என்று எண்ணுங்கள் உங்களுக்கு டென்சன் ஆகாது

    ReplyDelete
  5. ப்ளாக் டைட்டிலுக்கு பொருத்தமான பதிவு! 2 ம், 4 ம் ஓ.கே பிரபாகர்.

    ReplyDelete
  6. @ சி.பி.செந்தில்குமார்
    நான் தமிழ்மணம், தமிழிஷ் என்று வரிசையாக இனைத்துக்கொண்டிருன்தேன்... அதற்குள்ளாகவே நீங்கள் வருகை தந்துவிட்டதால் அதுபோல காட்டியிருக்கிறது... சிரமத்திற்கு மன்னிக்கவும்...

    ReplyDelete
  7. @ LK
    உண்மைதான்... கால் சென்டர்களின் அடிப்படை விதிகளில் இதுவும் ஒன்று... இருப்பினும் சில சமயங்களில் பொங்கி எழுகிறது...

    ReplyDelete
  8. @ சைவகொத்துப்பரோட்டா
    மற்றதெல்லாம் சரியில்லையோ...

    @ Above Three
    நேரமே வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்...

    ReplyDelete
  9. சூப்பர்.. பிரபா

    எல்லாமே நல்ல ஆலோசனைகள்..
    //இரவு சீக்கிரமே படுக்கைக்கு சென்றிடுங்கள் அதேபோல காலையிலும் சீக்கிரமே எழுந்திருங்கள். சிக்கலான விஷயங்களை பற்றி சிந்திக்கும் பொது இரவு நேரத்தில் சிந்திக்காமல் விடியற்காலை எழுந்தவுடன் சிந்தித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்// இது ரொம்ப சரி.. ஆமா அந்த பொன்னு யாரு..?

    ReplyDelete
  10. 4 வது நான் செய்யும் ஒன்று உங்க கட்டளை எல்லாம் நல்லா தான் இருக்கு

    ReplyDelete
  11. //10. உங்கள் வாழ்வில் சில நேரங்களில் இதுவா...? அதுவா...? இரண்டில் எதை தேர்வு செய்வது என்று குழம்பியிருப்பீர்கள். அதுபோன்ற சமயங்களில் யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம். ஒரு நாணயத்தை எடுத்துக்கொல்லுங்கள். பூ விழுந்தால் ஒரு முடிவு என்றும் தலை விழுந்தால் மறு முடிவு என்றும் கருத்தில்கொண்டு நாணயத்தை சுண்டிவிடுங்கள். சுண்டிவிட்ட நாணயத்தை உள்ளங்கையில் பிடித்து மூடிக்கொள்ளவும், பார்க்கவேண்டாம். (கருத்தில் கொள்க... எக்காரணம் கொண்டும் சுண்டிவிட்ட நாணயத்தை திறந்து பார்க்கவேண்டாம்). இப்போது உங்கள் உள்மனம் பூ விழ வேண்டுமென எதிர்பார்க்கிறதா அல்லது தலை விழ வேண்டுமென எதிர்பார்க்கிறதா என்று யோசித்துப் பாருங்கள் உங்கள் குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.//

    100% correct. ஆனா அது கெட்ட விஷயம் பக்கம் கூட்டிட்டு போனா? விடை கிடைக்கும்... வடை கிடைக்குமா?

    உங்களுக்கு என்ன வயசு ஆகுது? நெறைய அடி பட்டுரிப்பீங்க போல...

    ReplyDelete
  12. @ Riyas
    எந்த பொண்ணு...?

    படத்தில் உள்ள ஹீரோயின் பற்றி கேட்டிருந்தீர்களானால் அவர் பெயர் "ரம்யா நம்பீசன்"... சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமானவர்... இந்த போஸ் ஆட்டநாயகன் படத்துக்காக கொடுத்தது...

    ReplyDelete
  13. எல்லாமே நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  14. @செளந்தர்
    நன்றி நண்பரே... 4வது கட்டளை நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது போல...

    ReplyDelete
  15. @ Saran
    பத்தாவது கட்டளை பெரும்பாலும் யாருக்கும் புரியாது என்று வார்த்தை பிரயோகத்தில் அதிக கவனம் செலுத்தினேன்... அதையும் இலகுவாக புரிந்துக்கொண்ட நீங்கள் உண்மையில் புத்திசாலி தான்... வடை கிடைக்குமா வாந்தி பேதி கிடைக்குமா என்பதை நீங்கள் தான் செயல்படுத்திப் பார்க்க வேண்டும்... என் வயதைப் பற்றி கேட்டிருந்தீர்கள்... என் வயதென்னவோ 23 தான்... ஆனால் நிறைய பார்த்துவிட்டேன்...

    ReplyDelete
  16. @ புவனேஸ்வரி ராமநாதன்
    நன்றி மேடம்... தொடர்ந்து வருகை தாருங்கள்...

    ReplyDelete
  17. சொன்ன பத்து விஷயத்தையும் நீங்க கீப் அப் பண்ணியிருந்தா வேலைய விட்டுருக்க வேண்டாம்ல..

    ReplyDelete
  18. பத்தாவுது கட்டளை எனக்கு கண்டிப்பாக தேவை படும்

    ReplyDelete
  19. பத்தும் நல்லாத்தான் இருக்கு. அனுபவம் பேசுது போல இருக்கு.

    ReplyDelete
  20. இனிமேல் டென்ஷன் வந்தாலே உங்கள் ஞாபகம்தான் வரும்போல இருக்கு :-)

    //உங்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் கூட Thanks, Sorry போன்ற தாரக மந்திரங்களை சொல்லி பழகுங்கள்.//

    உங்க பதிவிற்கு Thanks, பின்னூட்ட தாமதமாகிவிட்டது Sorry


    //சீக்கிரமே படுக்கைக்கு சென்றிடுங்கள் அதேபோல காலையிலும் சீக்கிரமே எழுந்திருங்கள்.//

    செல்லாது செல்லாது :-)

    பத்தாவது சூப்பர், இதை நிச்சயமாக இனிவரும் காலங்களில் கடைப்பிடிப்பேன், பின்னீட்டீங்க நண்பா, நன்றி.

    அதெல்லாம் இருக்கட்டும் முதல் புகைப்படத்தில இருக்கிறது நீங்க... ஓகே , ரெண்டாவது புகைப்படத்தில இருக்கிறது யாரு? உங்க ஒய்பா (Wife ) ? :-)

    ReplyDelete
  21. என்ன சார் நீங்க , எவ்ளோ பெரிய பதிவு? படிக்கிறதுக்குள்ள டென்சனாகிப் போச்சு ஹி.ஹி,ஹி,.....நாங்க இப்படியும் கூட டேசன் ஆவோம்ல ??

    ReplyDelete
  22. @ ஹரிஸ்
    வேலையை விட்டதற்கு அது காரணமில்லை நண்பரே...

    @ நா.மணிவண்ணன்
    பத்தாவது கட்டளையை புரிந்துக்கொண்டதற்கு ஒரு ஷொட்டு...

    @ சே.குமார்
    வாங்க நண்பரே... உண்மைதான்...

    ReplyDelete
  23. Hmmm prabhakaran,...
    I think The 10th one will be use full for me!!

    Good... keep on...

    ReplyDelete
  24. @ எப்பூடி..
    // இனிமேல் டென்ஷன் வந்தாலே உங்கள் ஞாபகம்தான் வரும்போல இருக்கு //
    அப்படின்னா இனி உங்களுக்கு என் ஞாபகமே வரக்கூடாது...

    // செல்லாது செல்லாது //
    அது எனக்கும் செல்லாதுதான்... பெரும்பாலும் பதிவெழுதுவது பின்னிரவுகளில் தான்...

    என்னது முதல் படத்தில் இருப்பது நானா...? தலைவா எனது பதிவுலக குருவான உங்களுக்கு நன்றி செலுத்தவே முதல் படமாக உங்கள் படத்தை இணைத்தேன்...

    // உங்க ஒய்பா (Wife ) ? // இருக்குற ஆணி போதாதா...?

    ReplyDelete
  25. @ மங்குனி அமைச்சர்
    உண்மைத் தமிழன் எழுதும் பதிவுகளோடு கம்பேர் செய்தால் 25 சதவிகிதம் கூட இருக்காது... இதெல்லாம் பெரிய பதிவா...

    ReplyDelete
  26. @ vim
    Hmmm... Thanks for coming and posting this comment...

    ReplyDelete
  27. சின்ன வயசிலேயே ரொம்ப அனுபவப் பட்டிருக்கீங்க போலிருக்கே.

    ReplyDelete
  28. @ நாகராஜசோழன் M A
    வாங்க நண்பரே... சில நாட்களாக பதிவுகள் எழுதுவதில்லை போல... உங்கள் பின்னூட்டங்களை படிக்கும்போதே நடிகர் சத்யராஜின் குரலே நினைவிற்கு வருகிறது...

    ReplyDelete
  29. யார் சார் அந்த பிகரு.....

    ReplyDelete
  30. @ சிவகுமார்
    சேரன் நடித்து வந்த ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான ரம்யா நம்பீசன்... இந்த ஸ்டில் ஆட்டநாயகன் படத்துக்காக...

    ReplyDelete
  31. ”வாடிக்கையாளர்களும். பத்து ரூபாய் சிம்ம வாங்கிட்டு பத்தாயிரம் கேள்வி கேட்பார்கள்”

    இப்ப நீங்க வாடிக்கையாளர்தானே.. இருபதாயிரம் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து பழி தீர்த்துதுக்கலாமே

    ReplyDelete
  32. @ பார்வையாளன்
    லாஜிக் இடிக்குது நண்பரே...
    பழி தீர்க்கனும்னா சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களைத் தானே வறுத்தெடுக்க வேண்டும்... அதைவிடுத்து என் சகாக்களான பிற அதிகாரிகளை திட்டி என்ன பயன்...

    ReplyDelete
  33. டென்ஷன் எதன் மீது,யார் மீது என்பதை முடிவுபண்ணுங்கள் சார்.

    ReplyDelete
  34. //நான் எழுதுற மொக்கைகளை எல்லாம் படித்தால் டென்ஷனுக்கே டென்ஷனாகி விடுமென //

    naatheri solra... pinna eludhi edhukkuda tension akkura..

    kurangu moonchu kaara?

    ippadikku singa mugam kondavan

    ReplyDelete
  35. //டிஸ்கி: நடுவில் நடிகையின் புகைப்படம் ஏன் என்று கேட்பவர்களுக்கு...? டென்ஷனைக் குறைக்கத்தான்...//

    ஹி ஹி

    ReplyDelete
  36. //டிஸ்கி: நடுவில் நடிகையின் புகைப்படம் ஏன் என்று கேட்பவர்களுக்கு...? டென்ஷனைக் குறைக்கத்தான்.../

    ச்ச ச்ச அப்படிலாம் கேக்க மாட்டோம் :)

    ReplyDelete
  37. //டிஸ்கி: நடுவில் நடிகையின் புகைப்படம் ஏன் என்று கேட்பவர்களுக்கு...? டென்ஷனைக் குறைக்கத்தான்...//

    டென்ஷன்-ஐ குறைக்க வழி சொல்லிபுட்டு நடுவுல இது வேறயா?? டென்ஷன்-ஐ கெளப்பாதீங்க பாஸ்!!

    ReplyDelete
  38. நன்றி நண்பரே..

    ReplyDelete
  39. நீங்க சொல்லியிருக்கும் விதம் நகைச்சுவையாக இருந்தாலும் சொல்லியிருக்கும் விஷயங்கள் நிச்சயம் அருமையானவை, பயனுள்ளவை, உபயோகமானவை! அனுபவம் மனிதனுக்கு நல்ல பாடங்களை கற்று தருகிறது என்பது உண்மைதான்!!

    ReplyDelete
  40. @ விமலன்
    இப்போதைக்கு உங்களுக்கு கீழே கமென்ட் எழுதியிருக்காரே ஒருத்தர்... அவர் மேலதான் டென்ஷன்... ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
  41. @ tamil
    அய்யா... சிங்க முகம் கொண்ட பெரியவரே வணக்கமுங்க...

    கடந்த பதிவில் நீங்கள் எழுதியிருந்த பின்னூட்டத்தில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தமையால் டெலீட் செய்ய நேரிட்டது... வருந்துகிறேன்...

    உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்... இனி வரும் பின்னூட்டங்களிலாவது கொஞ்சம் கெளரவமாக வசைமொழி பாடுங்கள்...

    ReplyDelete
  42. @ அன்பரசன், Prasanna, எம் அப்துல் காதர், venkat
    நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

    @ எஸ்.கே.
    நன்றி நண்பரே... உளவியல் நிபுணரான நீங்கள் என்னை இந்தப் பதிவிற்காக பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது...

    ReplyDelete
  43. nice advices, i am following something in these, i try to follow the others also.. i like very much da.. keep posting..

    ReplyDelete
  44. @ ore kuttaiyil oorina mattaikal
    i think this is arun... Thanks for posting comments regularly...

    ReplyDelete
  45. நல்ல பதிவு.

    தேங்க்ஸ், சாரி இந்த இரண்டு வார்தைலத்தான் உலகமே ஓட்டிட்டு இருக்கு (அவங்க மொழிகளில்)

    ஒரு விஷயம் சொல்லிகிறேனுங்க மன்னிக்கவும் - உலகத்துலேயே freeyaa கிடைக்கறது advice மட்டும் தாங்க.

    ReplyDelete
  46. @ விக்கி உலகம்
    நல்ல பதிவு, நன்றி - இந்த இரண்டு வார்த்தைகளில் தான் பதிவுலகமே ஓடிக்கொண்டிருக்கிறது...!!!

    அதனால தான் அத தாராளமா கொடுக்குறேன்...

    ReplyDelete
  47. மிகவும் சிறப்பான பதிவுகளை கொடுத்ததற்கு நன்றிகள்

    நான் புதியவன் (பதிவுக்கு)

    வழி காட்டுங்கள்

    ReplyDelete
  48. Sometimes keeping our expectations low will also help. Eg. It is known that when you are posted in customer care, what you are going to receive are only abuses and angry words, therefore it is better not to expect kind words and praises there. Similarly, if your manager is a rough fellow, expect only harsh words from him, this way if you are mentally prepared for the worst, you may reduce the tension. By the by, the figure is good looking, the photo clarity is also good. hi...hi...hi...

    ReplyDelete