12 December 2010

சூப்பர்ஸ்டாரிடம் சில கேள்விகள்

வணக்கம் மக்களே...

சில காலமாக சன் டிவியில் எந்திரன் ட்ரைலரை பார்த்து பார்த்து சுவற்றில் முட்டிக்கொண்டு முரட்டுத்தனமாக யோசித்ததன் விளைவே இந்த பதிவு. ரஜினி ரசிக கண்மணிகள் யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.


1.        கிளிமாஞ்சாரோ பாடல் உருவான விதம் குறித்தும் ஐஸ்வர்யா ராயின் பேரழகை குறித்தும் (பாடி ஸ்டெடியா இருக்கு... மைன்ட் ஆப் ஆயிடுச்சு) உங்களது பேட்டி ஒன்றில் சிலாகித்து ஜொள்ளியிருந்தீர்கள். நல்லது. இப்பொழுது கேள்வி அது பற்றியதல்ல. கிளிமாஞ்சாரோ பாடலில் ஏதோவொரு ஸ்டெப்பை முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்து பார்த்ததாக சொன்னீர்களே. அது எந்த ஸ்டெப் என்று தெரிந்துக்கொள்ளலாமா...? அந்த பாடலில் அதிக பட்சம் கடினமான ஸ்டெப் என்றால் அது தோள்பட்டையை உலுக்குவதும், தொடையை தட்டிக்கொண்டு துள்ளிகுதிப்பதும் தான். அந்த ஸ்டெப்பையா முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்தீர்கள்...?

2.        எந்திரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு உங்கள் இரண்டாவது மகளின் திருமணம் நடந்து முடிந்தபிறகு ஒரு பிரஸ்மீட்டில் ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் பிற்பாடு அதுபற்றி மறந்துவிட்டீர்கள் போல. அந்த விருந்தை உங்கள் பேத்தியின் திருமணத்திற்காவது வைப்பீர்களா...? எந்திரன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதைவிட பெரிய விருந்து வைத்துவிட்டேன் என்று சொல்லி டபாய்க்க வேண்டாம். ஏனெனில் எந்திரன் படத்தை நாங்கள் ஒவ்வொருவரும் டிக்கட் எடுத்து தான் பார்த்தோம்.

3.        மைனா படத்தை பார்த்துவிட்டு இதுபோன்ற படத்தில் நான் ஒரு சின்ன பாத்திரத்தில் கூட நடிக்கவில்லை என்று வருத்தப்பட்டிருந்தீர்கள். உண்மையில் மைனா படத்தை எடுப்பதற்கு முன்பு உங்களிடம் கதையை கூறி அதில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டிருந்தால் நடித்திருப்பீர்களா...? அய்யா... நீங்கள் வருத்தப்படவே வேண்டாம். அடுத்ததாக பிரபு சாலமன் இன்னொரு பட்ஜெட் படம் எடுக்க இருக்கிறாராம். அதற்கு ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் தேவைப்படுகிறார். என்ன சொல்கிறீர்கள். வந்து நடித்துவிட்டு போகவேண்டியது தானே...?

திரையுலகினர் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். பேட்டி, பிரஸ் மீட், மேடைப் பேச்சு, கடிதம் இவைகளில் காசா...? பணமா...? என்று கண்டதையும் உளறி வைக்க வேண்டியது. இது ரஜினிக்கு மட்டுமல்ல, மிஷ்கின், ஆர்யா மற்றும் ஏடாகூடமாக எதையாவது பேசி மாட்டிக்கொள்ளும் இன்னபிற திரையுலகினருக்கும் பொருந்தும்.

மேடைப்பேச்சுக்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை திருப்திபடுத்தும் நோக்கில் மற்ற பிரிவினரை தாழ்வாக பேசிவிடுகின்றனர். இதுவே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூலக்காரணம். உதாரணத்திற்கு, மலையாள சினிமாவை உயர்வாக பேச நினைத்த ஆர்யா தமிழ் சினிமாவை இழிவாக பேசியதை சொல்லலாம். இது இன்று நேற்றல்ல எம்.ஆர்.ராதா காலம் தொட்டே நடந்து வருகிறது. மலேசியா மற்றும் பிற மேலை நாடுகளை உயர்த்திப்பேசும் நோக்கில் எம்.ஆர்.ராதா இந்தியாவையும், தமிழகத்தையும் அவரது படங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் ஏகத்திற்கு மட்டம் தட்டி பேசுவார். இன்றளவும் விவேக் அவரது படங்களில் அதையே செய்து வருகிறார். இனியாவது திரையுலகினர் தங்களது படங்களிலும் மேடைப்பேச்சுக்களிலும் சொற்களை கவனமாக கையாண்டால் நல்லது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

74 comments:

  1. முதல்ல வடைய வாங்கிக்கறேன் அப்புறம் கருத்த சொல்றேன்.

    ReplyDelete
  2. எப்படித்தான் அதிகாலையில் எழுந்து பதிவு போடுகிறீர்களோ...முதல் கருத்து போடும் முன் நண்பர் ரஹிம் போட்டு விட்டார். அது என்னங்க வடை???????????

    ReplyDelete
  3. ரஜினி பிறந்த நாளுக்கு எல்லோரும் ஜாலியான பதிவு போட்டிருக்கும் வேளையில் உங்களின் சீரியசான பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது. என் மண்டைக்குள்ளும் அந்த இரண்டாவது, மூன்றாவது கேள்விகளும் ஓடியது. இப்போது உங்களிடமிருந்து அது பதிவாக.....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஆஹா சர்ச்சைக்குரிய பதிவாக இருக்கிறதே :)

    ReplyDelete
  5. எப்படித்தான் அதிகாலையில் எழுந்து பதிவு போடுகிறீர்களோ...முதல் கருத்து போடும் முன் நண்பர் ரஹிம் போட்டு விட்டார். அது என்னங்க வடை???????????///

    அட......உங்களுக்கு விஷயமே தெரியாதா சிவக்குமார். இப்ப பதிவர்களிடையே பெரும் போட்டியே நடக்கிறது யாரு முதல்ல வடை வாங்கறதுன்னு....ஒரு ஆள் வடைக்காக ஒரு வங்கியே வச்சுருக்காருன்னா பார்த்துக்கங்களேன்....

    ReplyDelete
  6. இதை வருங்கால சூப்பர் ஸ்டார்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. எனக்குப் பிடிச்ச பத்துப் பேரில் என் வலைப்பூவுமா? நன்றி நண்பரே..,

    ReplyDelete
  8. மேடைப்பேச்சுக்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை திருப்திபடுத்தும் நோக்கில் மற்ற பிரிவினரை தாழ்வாக பேசிவிடுகின்றனர்."

    ரஜினி யாரையும் தாழ்த்தி பேச மாட்டார் ...

    ReplyDelete
  9. good one machi ... aanalum superstar mela evalo gandu koodathu

    ReplyDelete
  10. ரஜினி பிறந்தநாள் அன்னைக்கு.. இந்த விளையாட்டுக்கு நான் வரல... :-)

    ReplyDelete
  11. sellathu da,,,,

    ithu rajni adcchi da....

    nee ellam oru mayirum pudunga mudiya ...

    ReplyDelete
  12. நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.... ஏமாற்றமும இல்லை... அவர்கள் சம்பாதிக்கவே நடிக்கிறார்கள் தவிர சாமானியர்களை தூக்கி விட இல்லை...

    ReplyDelete
  13. 1.இத்தன வயசுல அதுவும் ஆட தெரியாத ஆள கூட்டிட்டு போயி சும்மா நடக்க சொன்னாலே கஷ்டமாதானே இருக்கும் பாஸ்..

    2.கல்யாண டென்ஷன்ல மறப்பது சகஜம் தானே.!!!

    3. அது மைனா திரைபடத்தின் அருமையை குறிப்பதற்காக சொல்லப்பட்டது... அண்ணன் தங்கமானவர்னு சொன்னதுக்கு செங்கல கொண்டாந்து உரசி பாத்த கதையா இருக்கு...

    குறிப்ப- எனக்கும் இந்த மாதிரி பல சந்தேகங்கள் வந்தது.. அதுக்கு எடக்குமுட்டக்கா உக்காந்து குப்புற படுஉத்துகிட்டு யோசிச்சு பாத்தப்ப என்சிறிய மூளையில் எட்டிய சிறிய விசயங்கள்.. மத்தபடி ரஜினிக்கும் எனக்கும் எந்த விதமான கொடுக்கல் வாங்கலும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடத்துகிறேன்...

    ReplyDelete
  14. உங்க கையில சிலபல லட்சத்தை குடுத்து பார்த்தால் அபப்டிதான் பேசத்தோனும் பாஸ்....பணம் ஆயிரமும் செய்யும் :-)

    ReplyDelete
  15. உங்களுக்கெல்லாம் ஜெலுசில் பத்தாது, வேற வேற வேற 'ஹேராம்' படத்தை பத்து தடவை தனியா உட்காத்தி வச்சு பாக்க விடனும் :-)

    இப்பிடி சின்னபுள்ளதனாமா யார்கிட்டையும் மூனென்ன முப்பது கேள்வியும் கேக்கலாம், கமல்கிட்ட நான் கேக்கவா? :-)

    யாருமே 100 வீதம் சரியா இருக்கமுடியாது பாஸ், அப்பிடி நினைக்கிறது உங்களைப் போன்ற 'பிரபல பதிவருக்கு' அழகல்ல :-)

    உங்களுக்கு பிடிச்சவங்களை எவளவும் பாராட்டுங்க, பிடிக்கதவங்கள விமர்சியுங்க, அது உங்க இஸ்டம், ஆனா விமர்சிக்கும்போது வயித்தெரிச்சல் வெளியில தெரியாம பாத்துக்கோங்க :-)

    உங்களையெல்லாம் இப்பிடி புலம்ப விட்டுர்றாரே தலைவர் :-(

    ReplyDelete
  16. பாவம் வயசானவர போய் ஆட சொன்னா முடியுமா? அதான் அதிகமாவே தலைவர் ப்ராக்டீஸ் பண்ணியுருக்கார்....

    விருந்து விஷயம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ரசிகர்கள் தான் முதுகெலும்பு :)

    ReplyDelete
  17. நான் தெரிஞ்சுதான் பாசிட்டிவ் ஒட்டு குத்தினன், ஏன்னா ஒட்டு உங்க பதிவுக்கல்ல, உங்களுக்கு :-) நண்பேண்டா.

    ReplyDelete
  18. அப்புறம் அந்த ஒரு கோடி மேட்டர மறந்துடீன்களே.
    வாய் இருக்குன்னா என்னவேனா பேசலாம்.
    கேக்குறதுக்கு ஆர்வகோளாறு பசங்க நெறையா இருக்காங்க.

    ReplyDelete
  19. நெத்தியடி மச்சி!!

    ReplyDelete
  20. நானும் பார்த்தேன் இவருடைய விளம்பரத்தை, தன்னை தானே புகழ்கிறார்,இவர் பின் ரசிகர் கூட்டம்
    இருப்பத்தால், ஏதோ பேசுகிறார். இது அவருடைய தவறு இல்லை. நம் மக்களின் தவறு.

    ReplyDelete
  21. //அந்த விருந்தை உங்கள் பேத்தியின் திருமணத்திற்காவது வைப்பீர்களா...? எந்திரன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதைவிட பெரிய விருந்து வைத்துவிட்டேன் என்று சொல்லி டபாய்க்க வேண்டாம். ஏனெனில் எந்திரன் படத்தை நாங்கள் ஒவ்வொருவரும் டிக்கட் எடுத்து தான் பார்த்தோம்.//

    ஆஹா... ஆஹா
    பின்னிக்கோடி.... (கிளிமாஞ்சாரோ ஸ்டைலில் சொல்லிக்கொள்ளவும்..)

    ReplyDelete
  22. /////அது மைனா திரைபடத்தின் அருமையை குறிப்பதற்காக சொல்லப்பட்டது... அண்ணன் தங்கமானவர்னு சொன்னதுக்கு செங்கல கொண்டாந்து உரசி பாத்த கதையா இருக்கு...///

    ReplyDelete
  23. பிறந்தநாளும் அதுவுமா...மற்றொருநாள் போட்டிருக்கலாம் இந்த பதிவை.

    ReplyDelete
  24. பிரபாகரன் அவர்களே..

    எந்த ஒருவரைப் பற்றியும் விமர்சனம் செய்யும்போது, அந்த இடத்தில் நம்மை வைத்து ஒப்பீடு செய்தல் அழகு.

    //மைனா படத்தை பார்த்துவிட்டு இதுபோன்ற படத்தில் நான் ஒரு சின்ன பாத்திரத்தில் கூட நடிக்கவில்லை என்று வருத்தப்பட்டிருந்தீர்கள். உண்மையில் மைனா படத்தை எடுப்பதற்கு முன்பு உங்களிடம் கதையை கூறி அதில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டிருந்தால் நடித்திருப்பீர்களா...? அய்யா... நீங்கள் வருத்தப்படவே வேண்டாம். அடுத்ததாக பிரபு சாலமன் இன்னொரு பட்ஜெட் படம் எடுக்க இருக்கிறாராம். அதற்கு ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் தேவைப்படுகிறார். என்ன சொல்கிறீர்கள். வந்து நடித்துவிட்டு போகவேண்டியது தானே...?//

    படத்தைப் புகழ்ந்து சொல்வது என்பது அந்தப் படத்துக்கு தான் தரும் மரியாதை..

    விஜய் டிவியில் ஒரு குழந்தை அழகாகப் பாடவும், அங்கே வந்திருந்த ஆண் நடுவர், நீ எனக்கு மகளாகப் பிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்.. அதை அவரது அப்பா பெருமிதத்தோடு பார்த்தார்.. எதையும் தவறாகவே பார்க்கும் மனதுடையவர்கள் இதைத் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பர்.. ஆனால் அந்த நடுவருக்கும், அந்தத் தந்தைக்கும் தெரியும், அது அந்தக் குழந்தையின் திறமையைப் பெருமைப் படுத்தப் படுவதற்காகச் சொல்லப் பட்டது என்று..

    ReplyDelete
  25. // ஏதோவொரு ஸ்டெப்பை முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்து பார்த்ததாக சொன்னீர்களே. அது எந்த ஸ்டெப் என்று தெரிந்துக்கொள்ளலாமா...? அந்த பாடலில் அதிக பட்சம் கடினமான ஸ்டெப் என்றால் அது தோள்பட்டையை உலுக்குவதும், தொடையை தட்டிக்கொண்டு துள்ளிகுதிப்பதும் தான். அந்த ஸ்டெப்பையா முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்தீர்கள்...? //

    தல பின்னுறீங்க. எதுவும் சொல்றதுக்கில்ல. அப்புறம் அந்த சாப்பிட்டு மேட்டர் சான்சே இல்ல.
    :)))

    ReplyDelete
  26. சபாஷ், சரியான பதிவு அதுவும் அவரது பிறந்த நாள் - 60ம் கல்யாண நேரத்தில்....
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  27. பிரபலமா இருக்குரவங்க என்னசொன்னாலும் செய்தி, என்னபன்னnaலும் ந்யூசு. கேக்கரவங்களுக்கு புத்திவேனாமா?

    ReplyDelete
  28. நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானதே? ரஜினியோ அல்லது அவர்களின் ரசிகர்களோ முடிந்தால் பதில் சொல்லட்டும். எல்லாம் சுயநலவாதிகள்.

    ReplyDelete
  29. neengalam thirunthave mattingala..................

    ReplyDelete
  30. ethukku eduthalum "VAZHKA TAMIL" enru sollrengale,, but "FACTORY"a 'karnataka' la kattitengale

    ReplyDelete
  31. அருமையான கேள்விகள்.

    ReplyDelete
  32. ஹா...ஹா...ஹா...ஹா... தமாஷா இருக்கு. தம்பி கூர்மதியன், சாமக்கோடங்கி ஆகியோரின் பதில்கள் சூப்பர். ரஜினியின் உண்மையான ஒரே ரசிகர் ஒருவரிடமிருந்து நான் ஒரு விஷயம் கேள்விப் பட்டேன், அதாவது ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தியாம், அத்தனை பேரயும் கூப்பிட்டால் சுமார் எட்டாயிரம் மகள்கள் இருந்தால்தான் அத்தனை பேருக்கும் திருமணத்தில் கலந்து கொண்ட மாதிரி இருக்குமாம் என்று அறிவுப் பூர்வமாக கணக்குப் போட்டு காண்பிக்கிறார். இந்த வரவேற்ப்புக்கு அத்தனை மகள்களை கொண்டுவந்து விடுவாரா?

    ReplyDelete
  33. அவரு ஆடலன்னாலும், நடந்து போனாலும் படம் ஓடுது.

    ஆனா சிலபேரு அறிவுஜீவிதானமா குடும்பமே வேணாம். எல்லாரும் கூத்தடிங்கன்னு சொல்றாரு. ஒரு ஹீரோயின் உதட்டையும் மிச்சம் வைக்க மாட்டேன்குராறு
    அவர என்ன பண்ணலாம்!?
    பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு(அடுத்த பதிவுல கமல்கிட்ட கேள்வி கேப்பிங்கல்ல அத சொன்னேன்)!!!!!!

    ReplyDelete
  34. ரஜினியயே கலாய்ச்சிட்டாராமம்.!!!

    ReplyDelete
  35. @ ரஹீம் கஸாலி, சிவகுமார், nis, வெறும்பய, SUREஷ் (பழனியிலிருந்து), T.V.ராதாகிருஷ்ணன், பார்வையாளன், பதிவுலகில் பாபு, சிவா என்கிற சிவராம்குமார், தம்பி கூர்மதியன், ஜெய்லானி, எப்பூடி.., ஆமினா, மண்டையன், NewAgePeriyar, இளம் தூயவன், பாரத்... பாரதி..., ஆதி மனிதன், Geetha6, சாமக்கோடங்கி, karthikkumar, எம் அப்துல் காதர், ஆகாயமனிதன்.., Lakshmi, விடுத‌லைவீரா, babu, Raja, சே.குமார், Jayadev Das, விக்கி உலகம், Katz, Rafeek

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

    ReplyDelete
  36. @ ரஹீம் கஸாலி
    // ரஜினி பிறந்த நாளுக்கு எல்லோரும் ஜாலியான பதிவு போட்டிருக்கும் வேளையில் உங்களின் சீரியசான பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது //

    பிறந்தநாளன்று வெளியிட வேண்டுமென ப்ளான் பண்ணவில்லை...

    // என் மண்டைக்குள்ளும் அந்த இரண்டாவது, மூன்றாவது கேள்விகளும் ஓடியது //

    மூன்றாவது கேள்வி பற்றிய செய்தியினை உங்களது வலைப்பூவிலிருந்தே தெரிந்துக்கொண்டேன்...

    ReplyDelete
  37. @ சிவகுமார்
    // எப்படித்தான் அதிகாலையில் எழுந்து பதிவு போடுகிறீர்களோ... //

    முந்தய நாள் இரவிலேயே டைப்படித்து வைத்துவிடுவேன்... மறுநாள் காலை வீட்டிலிருந்து கிளம்பும் முன்பு பதிவை பப்ளிஷ் பண்ணிவிட்டு கிளம்புவேன்... வடை பற்றி கஸாலியின் பதிலே போதுமானது என்று கருதுகிறேன்...

    ReplyDelete
  38. @ SUREஷ் (பழனியிலிருந்து)
    // இதை வருங்கால சூப்பர் ஸ்டார்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் //

    ஆஹா நீங்க ரஜினி ரசிகராச்சே தல...

    // எனக்குப் பிடிச்ச பத்துப் பேரில் என் வலைப்பூவுமா? நன்றி நண்பரே.., //

    ஆம்... நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் என்னை அதிகமாக ஊக்கப்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர்... அப்போதெல்லாம் உங்கள் எழுத்துக்களை மிகவும் ரசித்து படிப்பேன்... நீங்களும் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகளை எழுதிக்கொண்டிருன்தீர்கள்... இப்பொழுதெல்லாம் நீங்கள் பதிவெழுதாமல் இருப்பதில் எனக்கு மிகவும் வருத்தம் தான்...

    ReplyDelete
  39. @ பார்வையாளன்
    // ரஜினி யாரையும் தாழ்த்தி பேச மாட்டார் ... //

    காவிரி பிரச்சனையில் தமிழர்களை திருப்திபடுத்தும் ஒரே நோக்கத்தில் "உதைக்க வேண்டாமா..." என்று பேசிவிட்டு, கர்நாடக மக்கள் கலவரமாகி பின்னர் குசேலன் ரிலீசை மனதில் வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டதை எல்லாம் மறந்துவிட்டீர்களா என்ன...

    ReplyDelete
  40. @ Anonymous
    // sellathu da,,,,
    ithu rajni adcchi da....
    nee ellam oru mayirum pudunga mudiya ... //

    நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று குத்துமதிப்பாகவே புரிந்துக்கொள்ள முடிகிறது... ரஜினி ஆட்சியெல்லாம் வரும் என்று கனவு காணாதீர்கள்...

    ReplyDelete
  41. @ சிவா என்கிற சிவராம்குமார்
    // நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை... //

    நடிகர்கள் நடிகர்களாக மட்டுமே இருந்தால் எந்த கலவரமும் இல்லை... மேலும் நடிகர்கள் திரையில் மட்டும் தங்கள் நடிப்புத்திறமையை காட்டினால் போதுமானது...

    ReplyDelete
  42. @ தம்பி கூர்மதியன்
    // இத்தன வயசுல அதுவும் ஆட தெரியாத ஆள கூட்டிட்டு போயி சும்மா நடக்க சொன்னாலே கஷ்டமாதானே இருக்கும் பாஸ்.. //
    நியாயமான பதிலே... ஒப்புக்கொள்கிறேன்...

    // கல்யாண டென்ஷன்ல மறப்பது சகஜம் தானே.!!! //
    சப்பைக்கட்டு... கல்யாண டென்ஷனில் முதலிரவை மறந்துவிட்டேன்னு சொல்றா மாதிரி இருக்கு...

    // அது மைனா திரைபடத்தின் அருமையை குறிப்பதற்காக சொல்லப்பட்டது... //
    உங்கள் பதிலில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது... அருமையா இருந்ததுன்னா அருமையா இருந்ததுன்னு மட்டும் சொல்லியிருந்தாலே போதுமானது...

    // அண்ணன் தங்கமானவர்னு சொன்னதுக்கு செங்கல கொண்டாந்து உரசி பாத்த கதையா இருக்கு... //
    அதே மாதிரி இதுவும் ஒரு பேச்சுக்காக சொன்னதுன்னு நீங்களே ஒத்துக்கிட்டீங்களே.... நன்றி...

    ReplyDelete
  43. @ எப்பூடி..
    // நான் தெரிஞ்சுதான் பாசிட்டிவ் ஒட்டு குத்தினன், ஏன்னா ஒட்டு உங்க பதிவுக்கல்ல, உங்களுக்கு :-) நண்பேண்டா. //
    உங்கள் நட்பை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பதிவை வெளியிட கொஞ்சம் தயங்கினேன்... நல்லவேளையாக நீங்கள் மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை... நன்றி...

    // உங்களுக்கெல்லாம் ஜெலுசில் பத்தாது, வேற வேற வேற 'ஹேராம்' படத்தை பத்து தடவை தனியா உட்காத்தி வச்சு பாக்க விடனும் :-) //
    அதெல்லாம் தேவை இல்லை... ஒரே ஒரு முறை ரஜினியோட பாபா படத்த போட்டு காட்டுங்க... முன்னூறு வருஷம் வாழ்ந்த பாபாஜிக்கு கூட மூச்சு நின்னு போகும்...

    // இப்பிடி சின்னபுள்ளதனாமா யார்கிட்டையும் மூனென்ன முப்பது கேள்வியும் கேக்கலாம், கமல்கிட்ட நான் கேக்கவா? :-) //
    முப்பதென்ன மூவாயிரம் கேள்வி கூட தாராளமாக கேளுங்கள்... கமல் ரசிகனாக இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் கமலை கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் நானல்ல...

    // யாருமே 100 வீதம் சரியா இருக்கமுடியாது பாஸ், அப்பிடி நினைக்கிறது உங்களைப் போன்ற 'பிரபல பதிவருக்கு' அழகல்ல :-) //
    என்னை பிரபல பதிவர் லிஸ்டில் சேர்த்ததற்கு மிக்க நன்றி :)

    // உங்களுக்கு பிடிச்சவங்களை எவளவும் பாராட்டுங்க, பிடிக்கதவங்கள விமர்சியுங்க, அது உங்க இஸ்டம், ஆனா விமர்சிக்கும்போது வயித்தெரிச்சல் வெளியில தெரியாம பாத்துக்கோங்க :-) //
    ஆமாம்... வயிற்றெரிச்சல் தான்... ரஜினி தோளை மட்டும் உலுக்கிவிட்டு கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார் என்பதால் அல்ல... என் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதால்...

    ReplyDelete
  44. @ ஆமினா
    // விருந்து விஷயம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ரசிகர்கள் தான் முதுகெலும்பு //

    ரசிகர்கள் தற்போது பெரிதாக மனமாற்றம் அடைந்து வருகிறார்கள்... ரஜினியை நடிகனாக நிறைய பேர் ரசிக்கின்றனர்... ஆனால் அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்குவார்கள்...

    ReplyDelete
  45. @ மண்டையன்
    // அப்புறம் அந்த ஒரு கோடி மேட்டர மறந்துடீன்களே //

    அது ரொம்ப பழைய மேட்டருன்னுரதால விட்டுட்டேன்...

    ReplyDelete
  46. @ இளம் தூயவன்
    // இது அவருடைய தவறு இல்லை. நம் மக்களின் தவறு //

    சரியாக சொன்னீர்கள்... திருந்த வேண்டியது மக்கள் தான்...

    ReplyDelete
  47. @ ஆதி மனிதன்
    // பிறந்தநாளும் அதுவுமா...மற்றொருநாள் போட்டிருக்கலாம் இந்த பதிவை. //

    வருந்துகிறேன்... ஆனால் திட்டமிட்டு செய்யவில்லை...

    ReplyDelete
  48. @ சாமக்கோடங்கி
    // விஜய் டிவியில் ஒரு குழந்தை அழகாகப் பாடவும், அங்கே வந்திருந்த ஆண் நடுவர், நீ எனக்கு மகளாகப் பிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்.. அதை அவரது அப்பா பெருமிதத்தோடு பார்த்தார்.. எதையும் தவறாகவே பார்க்கும் மனதுடையவர்கள் இதைத் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பர்.. ஆனால் அந்த நடுவருக்கும், அந்தத் தந்தைக்கும் தெரியும், அது அந்தக் குழந்தையின் திறமையைப் பெருமைப் படுத்தப் படுவதற்காகச் சொல்லப் பட்டது என்று.. //

    இது ஒரு தவறான உதாரணம்... மேலே நீங்கள் குறிப்பிட்டது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று அதாவது உண்மையில் அந்த நடுவர் குழந்தையின் தந்தை ஆக முடியாது... தத்து கொடுக்க பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்... ஆனால் மைனா பட விவகாரம் அப்படியானது அல்ல... ரஜினி நினைத்தால் அதுப்போன்ற நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து ஊக்கமளிக்கலாம், வாழ்வளிக்கலாம்... ஆனால் அவர் அதை வெறும் வார்த்தையில் மட்டும் செய்கிறார்...

    ReplyDelete
  49. @ Raja
    // ethukku eduthalum "VAZHKA TAMIL" enru sollrengale,, but "FACTORY"a 'karnataka' la kattitengale //

    இதுகூட நல்ல கேள்விதான்... ஆனால் கர்நாடக பேக்டரி பற்றி அதிகாரப்பூர்வ செய்தி, source ஏதாவது இருந்திருந்தால் அதையும் இணைக்கலாம்...

    ReplyDelete
  50. @ Jayadev Das
    // தம்பி கூர்மதியன், சாமக்கோடங்கி ஆகியோரின் பதில்கள் சூப்பர் //

    பதிலுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்... எப்படியிருக்கிறது என்று படித்துவிட்டு சொல்லுங்கள்...

    ReplyDelete
  51. //ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் பிற்பாடு அதுபற்றி மறந்துவிட்டீர்கள் போல. அந்த விருந்தை உங்கள் பேத்தியின் திருமணத்திற்காவது வைப்பீர்களா...?//

    நான் டிவிட்டர்ல கேட்கலாம்னு இருந்தேன். முந்திக்கிட்டிங்க. டின் கட்டப்போறாய்ங்க

    ReplyDelete
  52. ungalikku ethir pathivu potturukkaaru oru aal....
    pls visit http://timeforsomelove.blogspot.com/2010/12/blog-post_12.html

    ReplyDelete
  53. பரவாயில்லையே.. ! ;நச்' போட்டிருக்கீங்க... பதிவத்தான் சொன்னேன்..! நானும் கேட்கத்தான் நினைத்தேன்... அதென்னங்க 'வடை....!'

    ReplyDelete
  54. "நாம் பார்க்கும் பார்வையில் தான் ஒருவர் நிலை அறிகின்றோம்"

    "கருப்பு கண்ணாடி போட்டு பாத்தா எல்லாமே கருப்புத்தான் முதல்ல கண்ணாடியை கழட்டுங்கள்"

    "ரஜினி மகள் கல்யாணத்துக்கு கூப்பிடவில்லை என்று அவரது ரசிகர்களே கவலைப்படவில்லை நீங்கள் ஏன் சார்......?"

    இருந்தாலும் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

    ReplyDelete
  55. ஹா ஹா ஹா உங்க நேர்மை பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  56. ///அதெல்லாம் தேவை இல்லை... ஒரே ஒரு முறை ரஜினியோட பாபா படத்த போட்டு காட்டுங்க... முன்னூறு வருஷம் வாழ்ந்த பாபாஜிக்கு கூட மூச்சு நின்னு போகும்...// ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
    //சப்பைக்கட்டு... கல்யாண டென்ஷனில் முதலிரவை மறந்துவிட்டேன்னு சொல்றா மாதிரி இருக்கு...//
    ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....

    ReplyDelete
  57. வணக்கம் நண்பா
    இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல, லீவ், அதனால இன்னிக்குதான் உங்க பதிவ படிச்சேன், நல்லா எழுதி இருக்கீங்க, உங்களுக்கு பதில் சொல்லனும்னா கமல் ஒரு பேட்டில சொன்னமாதிரி அடுத்தவங்க பாத்ரூம எட்டி பார்க்காதீங்ககறதுதான், சில பேருக்கு எப்படி சொன்னாலும் புரியாது, ஏன்னா இந்த மாதிரி எல்லாம் ரஜினியை பார்த்தாதான் தோணும், எனிவே உங்களுடைய கருத்தை நான் மதிக்கிறேன், எனக்கு பிரண்ட்ஸ்ஷிப் ரொம்ப முக்கியம், தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிரேன்.

    ReplyDelete
  58. நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.... ஏமாற்றமும இல்லை... அவர்கள் சம்பாதிக்கவே நடிக்கிறார்கள் தவிர சாமானியர்களை தூக்கி விட இல்லை...

    ReplyDelete
  59. தலைவர் பத்தி பேச ஒரு ப்ளாக் வச்சவங்களுக்கெல்லாம் தகுதி இல்ல ... 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு போய் படம் பார்த்துட்டா என்ன வேணாலும் பேசுவியா .... இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனி அட்ரஸ் கேட்டு வந்து அடிபேன் ....

    ReplyDelete
  60. @ thamil kumaran
    // தலைவர் பத்தி பேச ஒரு ப்ளாக் வச்சவங்களுக்கெல்லாம் தகுதி இல்ல ... 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு போய் படம் பார்த்துட்டா என்ன வேணாலும் பேசுவியா .... இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனி அட்ரஸ் கேட்டு வந்து அடிபேன் .... //

    N.R.Prabhakaran,
    828, T.H.Road,
    Thiruvotriyur,
    Chennai - 600019.
    Phone No.: +918015899828

    ReplyDelete
  61. நேச்டு டைம் இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் பண்ணாதீங்க .. தலைவர் ரசிகர்கள் ஒரு டைம் தான் மன்னிபாங்க ..நேச்டு டைம் உனக்கு மரியாதை இருக்காது . எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவ்ளோ தான் .. இனி தலை பத்தி ஏதும் போஸ்ட் பண்ணாத..
    இப்படிக்கு
    ரஜினி ரசிகர்கள்

    ReplyDelete
  62. @ mathan
    // நேச்டு டைம் இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் பண்ணாதீங்க .. தலைவர் ரசிகர்கள் ஒரு டைம் தான் மன்னிபாங்க ..நேச்டு டைம் உனக்கு மரியாதை இருக்காது . எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவ்ளோ தான் .. இனி தலை பத்தி ஏதும் போஸ்ட் பண்ணாத..
    இப்படிக்கு
    ரஜினி ரசிகர்கள் //

    பாஸ்... நான் உங்ககிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கவே இல்லையே... இதற்கு முன்னாடி அட்ரஸ் கேட்டு பின்னூட்டமிட்டது நீங்கதானே... அதான் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டேனே... அப்புறமென்ன...?

    ReplyDelete
  63. thambi adhu madhan.. idhu manmadhan.. vidhyaasam theriyalaya..

    ReplyDelete
  64. nagalam nee manipakaten solala . nee sonathaka nagal una manichutum sonam. today la irnthu un bad times start

    ReplyDelete
  65. @ thamil kumaran
    // thambi adhu madhan.. idhu manmadhan.. vidhyaasam theriyalaya.. //

    ஓஹோ... கூட்டு களவாணிங்களா... வெளங்கிடும்...

    ReplyDelete
  66. @ mathan
    // nagalam nee manipakaten solala . nee sonathaka nagal una manichutum sonam. today la irnthu un bad times start //

    நீங்க என்னை மன்னிக்கவே தேவையில்லை தம்பிகளா... உங்க தலைவர் சொல்லிக்கொடுத்த நாகரிகத்தை கொஞ்சம் காட்டுங்க... ஊர் உலகம் பார்க்கட்டும்...

    ReplyDelete
  67. thambi un blog has been published in orcut rajni fans club.. daily vara mail ku elaaam reply pannuviyaam.... ok va.. aaaama philosophy pesaradhukku ni enna 200 crore flim budget la share holder ah.. illa aish unnoda keep ah?

    ReplyDelete
  68. @ thamil kumaran
    // thambi un blog has been published in orcut rajni fans club.. daily vara mail ku elaaam reply pannuviyaam.... ok va.. aaaama philosophy pesaradhukku ni enna 200 crore flim budget la share holder ah.. illa aish unnoda keep ah? //

    எனக்காக இவ்வளவு ஆர்வமாக முன்வந்து பப்ளிசிட்டி கொடுப்பதற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் :)

    ReplyDelete
  69. rajani fans cannot tolerate comments i liked your atricle if you write about rajanis negative they use bad language and ask for the address of the person who writes negative about rajani smilarly for this article one person has asked for your address indded you have given your address, v .very good keep writing this sort of articles thank you

    ReplyDelete