31 October 2011

பிரபா ஒயின்ஷாப் – 31102011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏழாம் அறிவு பார்த்தபோது திரையரங்கில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மினி ட்ரைலர் காட்டினார்கள். காதல், காதலர்களை கிண்டலடித்து சந்தானம் சொன்ன அந்த தத்துபித்துவத்துக்கு திரையரங்கில் அப்படியொரு ரெஸ்பான்ஸ். எல்லோருமே கடுமையா பாதிக்கப்பட்டிருப்பாங்க போல. அடுத்ததா வித்தகன் ட்ரைலர். தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் போலீஸாக வித்தியாச விரும்பி பார்த்திபன் நடிப்பது ஆச்சர்யம்தான். ஆனாலும் சில வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தன. குறிப்பாக எழுதி வச்சிக்கோன்னு வில்லன் கோபமா பஞ்ச் பேசும்போது பார்த்திபன் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு கண்ணும் கருத்துமாக சொல்லுங்க சார் எழுதிக்கிறேன் என்கிறார். பூர்ணா வேற வழக்கத்தை விட அழகாக தெரிகிறார். எல்லாம் ரசனைக்கார பார்த்திபனின் கைவண்ணம்தான் என்று நினைக்கிறேன்.

ஆணாதிக்க சண்முகம் – மனைவிக்காக கணவன் தாஜ் மகால் கட்டியிருக்கிறான். கணவனுக்காக எந்த மனைவியாவது தாஜ் மகால் கட்டியிருக்கிறாளான்னு சினிமாவுல தொடங்கி எஸ்.எம்.எஸ் வரை நிறைய பேர் நக்கல் விட்டு கேட்டிருப்பீங்க. ஆனா நிஜமாவே ஒரு மனைவி கணவனுக்காக மாளிகை கட்டியிருக்கிறார். மொகலாய மன்னர்களுள் புகழ்பெற்ற பாபரின் மகனும் அக்பரின் தந்தையுமான ஹுமாயுன் இறந்தபிறகு அவருடைய மனைவி ஹமீதா பானு பேகம் அவரது நினைவாக கட்டியிருக்கும் இந்த மாளிகை டெல்லியில் இருக்கிறது. இதன் பெயர் Humayun’s Tomb. (கட்டியது கொத்தனார்தான்னு யாராவது நக்கல் விட்டீங்கன்னா Tomato i will kill you...!) நன்றி: குமுதம்

என்னுடைய ஏழாம் அறிவு படம் பற்றிய பதிவை படித்துவிட்டு நண்பன் ஒருவன் போனில் அழைத்து பொங்கினான். முருகதாஸ் தமிழர்களை பெருமைப்படுத்தியிருக்காரு, தமிழன்னு திமிரு வர வச்சிருக்காருன்னு கொந்தளித்தான். தமிழ் என்ற வடையை காட்டி நம்மை எலிப்பொறிக்குள் சிக்க வைத்துவிட்டார்கள் என்பதை அவன் உணர்ந்த பாடில்லை. சனங்களே... உங்களை ஒன்னு கேக்குறேன். படம் முடிஞ்சதும் இது உலகத்தமிழர்களுக்கு சமர்ப்பணம்ன்னு ஒரு ஸ்லைடு போட்டாங்களே, அது உண்மையா இருந்தா படத்துக்கு கோடி கோடியா கொட்டும் லாபத்தை வைத்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் தமிழர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே...??? (பி.கு ஏழாம் அறிவின் தெலுங்கு வெர்ஷன் பார்த்தவர்கள் யாராவது போதி தர்மர் எபிசோடை மாற்றினார்களா என்று சொல்லுங்களேன்)

சுற்றுலா செல்லும் கொண்டாட்ட மனப்பான்மையை நடுவில் கொஞ்சகாலம் ஒளித்து வைத்திருந்தேன். இப்போது மறுபடியும் அது கொஞ்சம் பொங்கிய நேரம் பதிவர் அஞ்சாசிங்கம் கொல்லிமலை ட்ரிப் பற்றி சொன்னார். விடுமுறை நாளும் கைகூடி வந்ததால் பொட்டியை கட்டிவிட்டேன். அனேகமாக இந்த பதிவை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் கொல்லிமலை சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிங்காரச்சென்னையை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருப்பேன்.

ஜொள்ளு:
பகுத்தறிவாவது... வெங்காயமாவது... ஹேப்பி தீபாவளி...!
ட்வீட் எடு கொண்டாடு:
RajanLeaks theTrendMaker™
தமிழன்ற திமிரோட பைக்க ஸ்டாண்டுல இருந்து எடுத்தேன் பின்னாடி இன்னொருத்தன் மேல முட்டுச்சு! கயிவி ஊத்திட்டான்! #7மறிவு

RajanLeaks theTrendMaker™
சுருதியைக் கொல்ல சுமார் லட்சம் பேருக்கு ஹிப்னாடிசம்;மெஸ்மரிசம்லாம் செய்து கொல்லும் டோங்லீ அந்த இழவை ஸ்ருதிக்கே செய்து தொலைத்திருக்கலாம்!

thoatta ஆல்தோட்டபூபதி
2016ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்- ராமதாஸ்# அன்று இந்திய ஜனாதிபதியா இருக்கும் அண்ணன் தங்கபாலுவை வைத்து ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிடுவோம்ல

powshya Chandra Thangaraj
வீட்டில் உட்கார்ந்து டீவி பார்த்துக்கொண்டிருப்பதைத்தான் நிறைய கணவர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதாகச் சொல்கிறார்கள்.

RajanLeaks theTrendMaker™
விஜய் ரசிகர்கள் நல்லாருக்குன்னுதான் சொல்லுவானுக நம்பீராதீங்கோ; அவனுக விஜயவே அழகன்னு சொல்றவனுக! ;-)

அறிமுகப்பதிவர்: முரட்டு சிங்கம்
உலகசினிமா ரசிகர் வட்டத்திற்கு இன்னுமொரு புதிய வரவு. இதுவரை எழுதியிருப்பது ஐந்து இடுகைகள். ஐந்துமே ஒவ்வொரு வகையான உலக சினிமா. American History X – பொழுதுபோக்கு படம், Monster Inc – அனிமேஷன் படம், Donnie Darko – சைக்கோ த்ரில்லர் படம், The Shining – திகில் படம், Fight Club – ஆக்ஷன் படம் என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார். கூடிய விரைவில் வீராசாமி, லத்திகா போன்ற ஒலகப்படங்கள் குறித்து அவர் எழுதுவதற்கு வாழ்த்துவோம்.

கேட்ட பாடல்:
ரா – ஒன் படத்தில் சிகப்பு நிற சிட்டாக கரீனா போட்ட கெட்ட ஆட்டத்திற்காகவே இந்த பாடலை பார்த்தேன். ஆனால் பாடலின் மெட்டும் இசைக்கருவிகளின் விளையாட்டும் ஈர்த்துவிட்டன. இந்தி வெர்ஷனில் கூட பாடலின் நடுவே சில தமிழ் வரிகள் வருவதாக கூறுகிறார்கள். திரும்பத்திரும்ப கேட்டாலும் பாடல் வரிகள்தான் புரிந்து தொலைக்க மாட்டேங்குது...!

இப்ப சொல்லு உன் பேரை...? - சுங்குடி சுப்ரமணியம்
ரஜினி ரசிகர்களே... இதைப் பார்த்துட்டு உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. ரா – ஒன் படத்துல ரஜினி நடிச்சாரா அல்லது எந்திரன் படத்திலிருந்து வெட்டி எறியப்பட்ட காட்சிகளை பொறுக்கி சொருகியிருக்காங்களா...???

ரசித்த புகைப்படம்:
நான் பணிபுரிந்த பழைய அலுவலகத்தின் Smoking Zone – மலரும் நினைவுகள். இந்த புகைப்படத்தை எடுத்தவர் என் பழைய டீம் மேனேஜர் பாலாஜி.

ஃபைனல் கிக்:
காதலுங்குறது கழட்டி போட்ட செருப்பு மாதிரி... சைஸ் சரியா இருந்தா யார் வேணும்னாலும் மாத்திக்கலாம்...!

டிஸ்கி: இது ஒரு Schedule செய்யப்பட்ட இடுகை. நண்பர்கள் யாரேனும் திரட்டிகளில் இணைக்கவும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

28 October 2011

ஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவுலக நண்பர்களுக்கு: கொஞ்சம் பர்சனல் பக்கங்களை புரட்டுகிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம். 

நம்மூரில் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் பஞ்சமில்லை. அவை கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு திருமணம் பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கிறது. பிடித்திருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையாக பூ வைக்கிறார்கள். (ஏன் இதுக்கு முன்னாடி அவங்க பூவே வச்சதில்லையா...?) அப்புறம் நிச்சயதாம்பூலம் மாற்றுகிறார்கள். கல்யாணத்துக்கு முந்தின நாளே விழாவை சிறப்பிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். (உன் விலா எலும்பை நான் சிறப்பிக்கிறேன் பார்...!) அப்புறம் திருமணம். அடக்கருமமே முதலிரவை கூட நேரம் காலம் பார்த்துதான் நடத்துகிறார்கள். கேட்டால் சாந்தி முகூர்த்தமாம். (சாந்தி அப்புறம் நித்யா...???). இந்த புதுமண தம்பதிகள் ஜோடியா வெளியே போனா எவனாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கானா. வீட்ல ஏதாவது விசேஷம் இருக்கான்னு நைஸா ஆரம்பிக்க வேண்டியது. இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்ன்னு கொஞ்சம் டீப்பா யோசிச்சு பாருங்களேன். (எப்படிய்யா கேக்குறீங்க இப்படி ஒரு வெக்கங்கெட்ட கேள்வியை...?) தப்பித்தவறி அந்த “விசேஷம்” நடந்துருச்சுன்னா அடுத்தது வளைகாப்பு. குழந்தை பொறந்துருச்சுன்னா மொட்டை போடுறது, காது குத்தறதுன்னு ஆரம்பிச்சு ஒரு பட்டியல் போயிட்டே இருக்கு. எதுவுமே கிடைக்கலைன்னா பொறந்தநாள் கொண்டாட வேண்டியது. அப்படி ஒரு பொறந்தநாள் விழாவில் ஏற்பட்ட எரிச்சல்களின் விளைவே இந்த இடுகை.

பிறந்தநாளை ஏன் கொண்டாடுகிறார்கள் என்ற கான்செப்ட் எனக்கு சத்தியமாக புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய பிறந்தநாள் எனக்கு மற்றுமொரு நாளே. யாருடைய பிறந்தநாளுக்கும் வாழ்த்துச்சொல்லியும் எனக்கு பழக்கமில்லை. சிலர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது ஒருவிதமான தர்மசங்கடமான மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல அவர்களின் பிறந்தநாளன்று கடமைக்காக பதில் வாழ்த்து சொல்கிறேன். இதைப்போய் கேக் வெட்டி கொண்டாடுவதெல்லாம் டூ மச். இருந்தாலும் சில பிறந்தநாள் விழாக்களை சகித்துக்கொள்வதற்கு காரணம் – தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடும் போது குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள், ஒருத்தர் முகத்தில் ஒருத்தர் முழிக்காத சொந்தபந்தங்கள் கூட கூடிப்பேசி மகிழ்கிறார்கள்.

இப்போ இந்த ரெண்டாவது சமாச்சாரத்துல தான் பிரச்சனை ஆரம்பிக்குது. மாசக்கணக்கில் சந்திக்காமல் அல்லது சந்திக்கவிரும்பாமல் இருப்பவர்கள் தெரியாத்தனமாக சந்தித்ததும் எப்படி ஆரம்பிக்கிறார்கள் தெரியுமா....? “நீங்க ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்களே...” – அவர் விஜயகாந்த் சைஸில் இருந்தாலும், அவங்க ஜெயலலிதா சைஸில் இருந்தாலும் அதே டெம்ப்ளேட் டயலாக் தான். (உனக்கு எதுக்கு இந்த வேல). அதெப்படி ஒருத்தர பத்தி பின்னாடிப்போய் நாரக்கேவலமா பேசிட்டு முன்னாடி ஆளைப் பார்த்ததும் பல்லைக்காட்டுறீங்க. சாவு வீட்டுக்கு வாசல் வரைக்கும் சிரிச்சிட்டே வந்துட்டு உள்ளே நுழைஞ்சதும் ஒப்பாரி வைக்கிற உயரிய திறமை நம் குல பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. சரி போய்த்தொலைங்க அப்படியாவது சிரிச்சு பேசுறீங்களேன்னு சந்தோஷம்தான். ஆனா, அதோடு முடிந்ததா பிரச்சனை – இல்லையே. வாய் ஏடாகூடமா எதையாவது பேசித்தொலைக்குதே. அப்படி இல்லைன்னா அவங்க இப்படி சொல்லிட்டாங்க, இவங்க அப்படி சொல்லிட்டாங்கன்னு டீச்சர் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணுறது, விழாவில் இருந்து வெளிநடப்பு செய்யுறது இதெல்லாம் எங்க இருந்து கத்துக்கிட்டீங்க சனங்களே.

குடும்பம் ஒன்றுகூடி குதூகலமாக இருக்க வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனா இப்ப இருக்குற சூழ்நிலைல இதெல்லாம் நடக்குற காரியமா...? இங்க ஒருத்தர் இப்படி திருப்பிக்கிட்டு நிக்கிறாரு. அங்க ஒருத்தங்க அப்படி திருப்பிக்கிட்டு நிக்கிறாங்க. இந்த பாதியில் வந்து புகுந்த அல்லக்கைங்க தொல்லை வேற தாங்க முடியல. அதனால சனங்களே இனிமே யாரும் தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் விழா எடுக்காதீங்க. அப்படியே யாராவது விழா எடுத்தாலும் வர்றவங்க, வந்தோமா கொஞ்சம் நேரம் உக்காந்தோமா சாப்பிட்டோமான்னு கிளம்புற வழியை பாருங்க. 

என்னடா அம்மாஞ்சி மாதிரி இருந்த பிரபாகரன் இப்படியெல்லாம் நாக்குல பல்லைப்போட்டு பேசுறானேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க. உங்க பெரிய மனுஷங்க சண்டை பெரிய மனுஷங்களுக்குள்ள மட்டும் இருந்திருந்தா யாருக்கும் எந்த பிரச்சனையில்லை. என்றாவது ஒருநாள் உங்கள் சிதையோடு சேர்த்து சண்டை சச்சரவுகளுக்கும் தீ மூட்டியிருப்போம். ஆனால் உங்கள் பகை அடுத்த தலைமுறையினருக்கும் பரவிக்கொண்டிருப்பதை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். நீங்கள் வாழ்ந்து கெட்டது போதும் எங்களையாவது கொஞ்சம் வாழ விடுங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

27 October 2011

பால்கனி – 27102011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வீராணம் குழாய் மாதிரி ஆரம்பிக்கும் ஒரு துளைக்குள் பதுங்கியிருந்த கடாஃபி கடந்த வாரம் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். அவர் நல்லவரா கெட்டவரான்னுற விவாதம் இப்ப வேணாம். ஆனால் அவரை இப்படி சித்தரவதை செய்தி சாகடித்திருப்பதை பார்க்கும்போது கலங்குகிறது. சில நாட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கடாஃபியின் உடலை ஒரு பாலைவனத்தில் ரகசியமாக புதைத்திருக்கிறார்களாம். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்.

ஒலக லெவல் ஜொள்ளு:
ப்ளேபாய் அழகி கெல்லி ப்ரூக்

ஜிம்பாப்வே நாட்டில் ஒருவர் செக்ஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டர் என்னன்னா அவர் மேற்படி சமாச்சாரத்தை செய்தது ஒரு கழுதையுடன். சனிக்கிழமை சாயுங்காலம் சரக்கடித்தேன். இருபத்தைந்து டாலர்களை வேசியிடம் கொடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து பார்த்தால் கழுதையுடன் படுத்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த கழுதையை நான் கன்னாபின்னாவென்று காதலிக்கிறேன். ஒருவேளை நானும் கழுதையா என்று சந்தேகமாக இருக்கிறது. இப்படியெல்லாம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மனுஷன்.

மலைக்க வைத்த புகைப்படம்:
453 Piercings...!

வாராவாரம் அரசகுடும்பத்து மேட்டர் ஒன்னு சிக்கிடுது. அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலியாகும்ன்னு காத்திருந்த கதையா இளவரசர் ஹாரி புதுசா ஒரு பொண்ணை லவ்வ ஆரம்பிச்சிருக்காராம். பொண்ணு பேரு ஜெஸ்ஸி. பாருக்கு சரக்கடிக்க போன இளவரசர் அங்கே ஊற்றிக்கொடுக்கும் பணியாளான ஜெஸ்ஸியை பார்த்ததும் மயங்கிவிட்டார். (ஓ இதான் அழகுல மயங்குறதா) அடுத்த ஒரு வாரத்தில் ஹோட்டல் அறைக்கதவுகள் இரண்டு முறை மூடித்திறக்க இவள்தான் அவளென்று முடிவு செய்துவிட்டாராம் இளவரசர். இதான் சாக்குன்னு ஜெஸ்ஸியும் அண்ணி கேட்’டும் ஒரே சாயலில் இருப்பதாக எழுதி சில மேலைநாட்டு பத்திரிகைகள் குளிர் காய்கின்றன.

ஜப்பானிய பாடல்:
இவ்வளவு அழகான பாடலை இன்னும் தமிழில் சுடாதது ஆச்சர்யம். பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடிப் படித்தேன். காதல் தோல்வியடைந்த பெண் ஃபீல் பண்ணி பாடுகிறாள். வரிகள் இப்படி போகிறது – “உன்னைப் பளாரென்று அறையனும் போல இருக்கு... ஆனா உன்னை நேர்ல பார்த்தா அழுதுடுவேன்...”

குவாட்டர் கட்டிங் படத்தில் டூ-வீலர்களை தேடித்தேடி எரிக்கும் கேரக்டர் ஒன்றை காட்டுவார்கள். அதுபோல ஜெர்மனில் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களில் 67 சொகுசு கார்களை ஜஸ்ட் லைக் தட் எரித்து தள்ளியிருக்கிறார். கைது செய்யப்பட இளைஞர் வேலையில்லாத விரக்தியில் காரில் செல்பவர்களைப் பார்த்து வெறியேறி இப்படி செய்ய ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார். இப்போது எனக்கு குவாட்டர் கட்டிங் இல்லை, கற்றது தமிழ் படம் நினைவுக்கு வருகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

26 October 2011

ஏழாம் அறிவும் ஏமாற்றமும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏகப்பட்ட தமிழர்களின் எதிர்பார்ப்புகளோடு களம் இறங்கியிருக்கிறது ஏழாம் அறிவு. சினிமாவே பார்க்காதவர்கள் கூட ஏழாம் அறிவை பரிந்துரைக்க காரணமாக இருந்த விஷயங்கள் போதி தர்மர், தமிழர்களின் பெருமை etc etc. இது உண்மையிலேயே தமிழருக்கு பெருமையா அல்லது வியாபார தந்திரமா என்ற குழப்பத்துடனேயே படம் பார்த்தேன். இனி...

Genetics மாணவி ஸ்ருதி 1600 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சீனா சென்று மருத்துவத்தையும் தற்காப்பு கலைகளையும் பரப்பிய போதி தர்மரைப் பற்றி DNA ஆராய்ச்சி செய்கிறார். போதி தருமரின் வம்சாவளியில் வந்த சூர்யாவுடன் போதி தருமரின் DNA என்பது சதவிகதத்திற்கு மேல் (83.74%) ஒத்துப்போவதால் அவருக்கு போதி தருமரின் DNAவை செலுத்தி பழைய மருத்துவ ரகசியங்களையும், தற்காப்பு கலைகளையும் மீட்டெடுக்க முனைகிறார் ஸ்ருதி. இதற்கிடையே சீனா – இந்தியா பயோ வார், ஆப்பரேஷன் ரெட் இன்னபிற மசாலா மேட்டர்களையும் குழைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கதை... ம்ம்ம் ஓகே ஆனால் திரைக்கதை. இரண்டு குறைகள் – ஒன்று மொக்கை, இன்னொன்று லாஜிக். படம் பார்ப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தறிவு கூட இருக்காது என்று நினைத்துவிட்டு மொழம் மொழமா பூவை சுற்றியிருக்கிறார்கள். இரண்டாம் பாதி ஆரம்பமான பின்பு இப்ப லிப்ட்ல இருந்து வில்லன் வருவான் பாரேன், இப்ப திரும்பி வந்து எட்டிப்பார்ப்பானே என்று கடைக்கோடி ரசிகன் கூட யூகிக்கும் அளவிற்கு பயங்கர க்ளிஷேத்தனங்கள். இரண்டே முக்கால் மணிநேரம் பொறுமையை சோதிக்காமல் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.

சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோயிசம் காட்டுகிறார். ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே. சீன நடிகர் ஜானி பார்த்து பார்த்தே எல்லோரையும் சாகடிக்கிறார் படம் பார்ப்பவர்களையும் சேர்த்து. ஹீரோ பின்னாடியே ஜல்லியடித்துக் கொண்டு திரியும் காமெடியன் மிஸ்ஸிங். (சில காட்சிகள் வரும் குள்ள நடிகரை தவிர்த்து) அதற்கெல்லாம் நேரமும் இல்லை. அது படத்திற்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஸ்ருதியின் தோழிகளாக வருபவர்கள் சூப்பர் ஃபிகர்ஸ்.

பாடல்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். அவற்றை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளி ஓவியர் ரவி கே சந்திரன், கலை இயக்குனர் ஆகியோரது உழைப்பு தெரிகிறது. குறிப்பாக முன் அந்திச்சாரல் பாடலில் காட்டப்பட்ட லொக்கேஷன் பிரமிக்க வைத்தது. பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.

படம் ஆரம்பிக்கும் முன்பு செய்திப்பட பாணியில் போதி தர்மரைப் பற்றி சுமார் இருபது நிமிடக்காட்சிகள் ரசிக்க வைத்தன. தியேட்டருக்கு லேட்டாக வரும் ரசிகர்கள் பாவம். அதே மாதிரி க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு சூர்யா வேப்பிலை மருத்துவம், மஞ்சள் மகத்துவம், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்று தமிழனை குத்திக்காட்டும் வசனங்கள் நச். படம் முடிந்த மறுவினாடியே தெறித்து ஓடும் ரசிகர்களும் பாவம். 

சில காட்சிகளில் மட்டும் தமிழனை பெருமைப்படுத்திய இயக்குனர் பல காட்சிகளில் தமிழனை தலைசொறிய வைத்திருக்கிறார். தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே போதும் என்று நம் தலையில் மாங்கு மாங்கென்று டன் கணக்கில் மிளகாய் அரைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் எடுத்த படத்தில் இலங்கைத்தமிழனின் வீழ்ச்சியை பற்றி பேசி நம்மை புடைக்கச் செய்வார்களாம். என்னங்கடா ஒங்க நியாயம்.

சராசரி பொழுதுபோக்கு படம் என்று நினைத்தால் ரசிக்கலாம். மற்றபடி தமிழ், தமிழன், தமிழனின் பெருமை என்று படத்தில் காட்டப்படும் ஜிம்மிக்ஸ் வேலைகள் எரிச்சலூட்டுகின்றன.

தொடர்புடைய  சுட்டிகள்:


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

25 October 2011

AZAD – வேலாயுதம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆயிரம் அறிவு வந்தாலும் வேலாயுதத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று முந்தாநாள் கர்ஜித்திருக்கும் தானே சிந்தித்து படமெடுக்கும் தன்மானச் சிங்கம் “ஜெயம்” ராஜாவிற்கு இந்த இடுகையை எருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.

விடிஞ்சா தங்கச்சி மூஞ்சியில தான் முழிப்பேன்னு வைராக்கியத்துடன் இருக்கும் பாசக்கார அண்ணன் நாகார்ஜுன். அப்புறம் அம்மா செண்டிமன்ட் இல்லாமலா. அதுவும் கலைராணி அம்மாவா நடிச்சிருக்காங்க. (இவங்க வந்தாலே படத்துல கதறியழுகிற சீன் ஒன்னு கண்டிப்பா இருக்கும்). ரெண்டாவது சீன்லையே அம்மாவும் தங்கச்சியும் “லா... லா...” பேக்ரவுண்ட் மியூசிக்கோட சென்டிமென்ட்டை கரைச்சி அடிக்கிறாங்க. நாகார்ஜுனின் முறைப்பெண்ணாகவும் கடைந்தெடுத்த லூசுப்பெண்ணாகவும் ஷில்பா ஷெட்டி. 

இங்கிட்டு சென்னையில் பத்திரிக்கையாளராக மறைந்த நடிகை செளந்தர்யா. அநியாயத்தைக் கண்டு பொங்கவும் இயலாமையால் வேகவும் செய்யும் செளந்தர்யா, ஆசாத் என்ற கற்பனை கேரக்டரை உருவாக்குறாங்க. ஆசாத் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ரப்பர் வைத்து அழிப்பதாக ஒரு சீன் க்ரியேட் பண்றாங்க. சிட்டி முழுக்க ஆசாத் புகழ் பரவுகிறது. அதாங்க ஷங்கர் படத்துல எல்லாம் காட்டுவாங்களே, அதே மாதிரிதான்.

தங்கச்சி கல்யாணத்துக்காக நாகார்ஜுன் சிட் பண்டில் சேர்த்து வைத்த ஐந்து லட்ச பணத்தை எடுக்க சென்னை வர்றாரு. அப்ப ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அப்பாவிப்பொண்ணு கதறக்கதற ஓடிவந்து நாகார்ஜுன் பின்னாடி ஒளிஞ்சிக்கிறாங்க. அதுக்கு மேல அங்க என்ன நடக்கும்ன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா...???

எதிர்பாராத திருப்புமுனையாக (!!!) நாகார்ஜுனின் பெயரும் ஆசாத்தாக இருக்க, அவனா நீ என்று ஊரே அல்லோலப்படுகிறது. அப்படியே செளந்தர்யாவோட ஒரு ஒன்சைடு லவ்வு, டூயட். செளந்தர்யா நாகார்ஜுனிடம் ஆசாத் கேரக்டரை தொடரச் சொல்லி கடுப்பை கிளப்புகிறார். ஆனால் ஹீரோ ஆணியே புடுங்க வேணாம்னு தலைதெறிக்க ஓடுகிறார். அங்கே சிட் பண்ட் கம்பெனிக்காரன் தலையில் துண்டைப் போடுகிறான். இந்த இடத்தில் மறுபடி ஒரு பப்ளிக் செண்டிமன்ட். ஏமாந்தவர்கள் கதறியழுகிறார்கள். ஹீரோவுக்கு புடைக்கிறது. (என்னன்னு கேட்கப்பிடாது)

அப்புறமென்ன வில்லன் கும்பலை துவம்சம் செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப்போய் தங்கச்சி கல்யாணத்தை நடத்துகிறார். விடுவாரா வில்லன். ஹீரோவின் தங்கச்சியை போட்டுத்தள்ளி சென்டிமென்ட் முறுக்கை பிழிகிறார். சொன்னதுபோலவே கலைராணி கதறிங். 

க்ளைமாக்ஸ் – ஹீரோ Assassin’s Creed ஸ்டைலில் வில்லனுடன் சண்டை போட்டு, உண்மைத்தமிழன் பதிவு சைஸில் வசனம் பேசியே அவரை சாவடிக்கிறார். க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் மறுபடி பப்ளிக் என்ட்ரி. (டேய் இந்த பப்ளிக்க பப்பாளிக்கா அக்குற பழக்கத்தை நிறுத்தி தொலைங்கடா... இதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்...)

பிரகாஷ் ராஜ் – நல்ல போலீஸ், ரகுவரன் – கெட்ட தொழிலதிபர் கம் தீவிரவாதி. இதுல கூத்து என்னன்னா ஹிந்து மத பக்தகேடியாக அறிமுகமாகும் ரகுவரன் பின்பாதியில் இஸ்லாமிய தீவிரவாதின்னு ஒரு மேட்டரை ஒப்பன் பண்றாங்க. (ஆகக்க, மாத்தி மாத்தி டவுசரை கிழிச்சிக்கோங்க சனங்களே...)

இந்த இத்துப்போன கதையில் நாகார்ஜுனாக – விசை, ஷில்பா ஷெட்டியாக – ஹன்சிகா மோத்வானி, செளந்தர்யாவாக – ஜெனிலியா, தங்கச்சி சுஜிதா கேரக்டரில் சரண்யா மோகன் இம்புட்டுதான். இதுக்கு மேலயும் இந்தப்படத்தை பார்க்கணுமான்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க. ஆனா ஒன்னு தியேட்டரில் படம் பார்த்தா இரண்டரை மணிநேர முழுநீள நகைச்சுவை உத்தரவாதம்.

என்சாய்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

24 October 2011

பிரபா ஒயின்ஷாப் – 24102011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு முறை code அடிக்கும்போதும் யாருடா இதெல்லாம் கண்டுபுடிச்சான் அவன் மட்டும் என் கையில கிடைச்சா கொண்டேபுடுவேன்னு ஒரு மனுஷனை திட்டுவேன். அந்த மனிதர் இப்போது நம்முடன் இல்லை. Steve Jobs மறைந்த போது கிடைத்த மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம். C Programming Language, UNIX Operating System ஆகியவற்றின் தந்தை என்றழைக்கப்படும் Dennis Ritchie கடந்த அக்டோபர் மாதம் பன்னிரண்டாம் தேதி தனது எழுபதாம் வயதில் மறைந்துவிட்டார். எனக்கெல்லாம் ஐந்திலக்க சம்பளம் கொடுத்து சோறு போடும் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

தீபாவளி, பொங்கல் என பெரிய படங்கள் ரீலிசாவதற்கு முந்தய வாரம் பெரும்பாலான தியேட்டர்களில் ஈயடிப்பார்கள். அந்த மாதிரி சமயங்களில் தியேட்டர்க்காரர்கள் பழைய ஆங்கில டப்பிங், சாப்ட் போர்ன் படங்களை ரிலீஸ் செய்வார்கள். அந்த வகையில் பொங்கலுக்கு முந்தய வாரம் கஜுராஹோ இளவரசி என்றொரு காவியத்தை பார்த்தேன். இந்தமுறை “அதிசயப்புதையலும் காட்டு மனிதர்களும்” என்று 1979ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆங்கிலப்படத்தின் டப்பிங்கை பார்த்தோம். படத்தில் நிறைய மொக்கை காமெடி வசனங்கள். கொடுத்த முப்பது ரூபாய்க்கு திருப்தி கிடைத்தது.

கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயங்களில் அலுவலகத்தில் இருந்தாலோ அல்லது தொலைக்காட்சியில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டாலோ Cricbuzz என்ற தளத்தை நாடுவேன். பெரும்பாலும் அனைவரும் Cricinfo பார்ப்பார்கள். இது அதைவிடவும் துரிதமான தளம். லைவ் கமென்ட்ரியும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் காமெடி என்னவென்றால் ஓரத்தில் Chatbox என்றொரு சமாச்சாரம். அங்கே கிரிக்கெட் ரசிகர்கள் அடித்துக்கொள்வதை பார்க்க வேண்டுமே, கிரிக்கெட்டை விட செம இன்ட்ரஸ்டிங் அதுதான். அடுத்தமுறை முயற்சி செய்து பாருங்கள்.

தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏழாம் அறிவு பார்க்கலாம் என்று நாளை இரவுக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறேன். அதற்கு வேறு பாஸிடம் ஒருமணிநேர பர்மிஷன் கேட்க வேண்டும். சினிமாவுக்கு போறதுக்கு பர்மிஷன்னு தெரிஞ்சா டவுசர் கிழிஞ்சிடும். என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. பொய் சொல்லவும் பிடிக்கவில்லை. ஒரே எரிச்சலா இருக்கு.

ஜொள்ளு:
அழகு என்பது ஆண்பாலா...? பெண்பாலா...? என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது...
ட்வீட் எடு கொண்டாடு:
iamkarki கார்க்கி
காட்டன் புடவைகளை அனுஷ்கா கட்டிவிட்டு கழட்டினால் காஞ்சிபுரம் பட்டாக மாறுகிறதாம். ஆய்வாளர்கள் தகவல்

naiyandi நையாண்டி
கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன! இதை முதல்லேயே தெரிஞ்சிருந்தா நரகத்திலேயே இருந்து தொலைச்சிருக்கலாம்!

antojeyas Jeyaseelan
ஒருத்தரை மட்டும் கொன்னாஅது "ஆயுதம்".. தியேட்டர்க்கு வர்ற அத்தனை பேரையும் கொன்னா அது "வேலாயுதம்" # இது தாண்டா பஞ்ச்

Kaniyen கனியன்
நிதானம் என்பது, சரக்கு இல்லாதபோது உண்டாகும் மாயத்தோற்றம் !

அறிமுகப்பதிவர்: BALARAMAN - CUDDALORE
சிலர் திரட்டிகள் பற்றி தெரியாமல் அல்லது தெரிந்துக்கொள்ள விரும்பாமல் பதிவெழுதுகின்றனர். அப்படியொரு பதிவர்தான் இவர். அபாரமான எழுத்துத்திறமை படைத்தவர் என்பது உள்ளே நுழைந்து இவருடைய பதினோரு நிமிடங்கள் இடுகையை படித்ததுமே தெரிந்துக்கொண்டேன். செய்தி விமர்சனகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். இவருடைய ஏன் தெலுங்கானா...? கூடங்குளம் போன்ற இடுகைகள் அதற்கு நல்ல உதாரணங்கள். இவருடைய காதலர் தின ஸ்பெஷல் இடுகை. ரூம் நம்பர் 32 என்ற சிறுகதை கிளாஸிக். மறந்தும் தவற விடக்கூடாத நல்லதொரு வலைப்பூ.

கேட்ட பாடல்: விழிகளில் ஒரு வானவில்
லேட் அட்டெண்டன்ஸ். மயக்கம் என்ன படத்தின் “பிறை தேடும் இரவிலே...” பாடலை கேட்டபிறகு சைந்தவி பாடிய பாடல்களை தேடித்தேடி கேட்கிறேன். அப்படிக்கேட்ட பாடல்களில் முதல்முறை கேட்டபோதே வசீகரித்த பாடல் இது. “நீ வந்தாய் என் வாழ்விலே... பூ பூத்தாய் என் வேரிலே...” என்று ஆரம்பிக்கும் அந்த பத்தி முழுவதுமே மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வரிகள் – நா.முத்துகுமார் ஸ்பெஷல். இந்த பாடலை எனக்கு பிடிக்கவில்லை என்று யாருமே சொல்லமாட்டார்கள். இன்னும் விரிவாக இங்கே.

பார்த்த வீடியோ: Mangatha Reloaded
இந்த வாரம் முழுக்க யூடியூப், ஃபேஸ்புக் என ரவுண்டு கட்டி கலக்கிய காணொளி இதுதான். இன்னும் பார்க்காதவர்கள் பார்த்து சிரித்து வைக்கவும்.

ரசித்த புகைப்படம்:
பிரியாணியில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக படுத்திருக்கும் கோழி – ஃபேஸ்புக்கில் சுட்டது
தத்துபித்துவம்:
வாழ்க்கை ஒரு புறா மாதிரி... இறுக்கி பிடிச்சா செத்துடும்... இலகுவா பிடிச்சா பறந்துடும்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

22 October 2011

Paranormal Activity 3 - புதுசு ஆனா பழசு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

படம் பார்க்க சில நண்பர்களை அழைத்தேன். பகலில் பார்ப்பதாக இருந்தால் நான் வருகிறேன் என்று சிலர் நட்புக்கரம் நீட்டினார்கள். போங்கடா நீங்களும் உங்க பகல் காட்சியும்ன்னு சொல்லிட்டு தன்னந்தனியாக புறப்பட்டேன். அபோகேலிப்டோ படத்திற்கு பிறகு இப்போதுதான் பிறமொழி படத்தை திரையரங்கில் பார்க்கிறேன். தேவி பாலா திரையரங்கம். அடித்தளத்தில் அமைந்திருந்த திரையரங்கிற்குள் சென்று அமர்வதற்கே திகிலாக இருந்தது. ஆரம்பத்தில் ஒரு இருபது பேர் இருந்தார்கள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் கிட்டத்தட்ட பாதி திரையரங்கம் நிறைந்துவிட்டது.

முதல், இரண்டாவது பாக கதைகளுக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள். முதல் பாகத்தில் வந்த கேட்டி, இரண்டாம் பாகத்தில் வந்த கிறிஸ்டி இருவரும் சிறுமிகளாக,. இவர்களுடைய பெற்றோர் ஜூலி – டென்னிஸ். சிறுமிகளுடன் invisible கதாப்பாத்திரம் டோபி. ஜூலியும் டென்னிஸும் தங்களது பலான காட்சியை படமெடுக்க நினைக்கிறார்கள். அப்போது நிலநடுக்கம் வந்து சீனை கெடுத்துவிடுகிறது. பதிவான வீடியோவை பின்னர் போட்டுப் பார்க்க, அதில் ஏதோ ஒரு உருவம் இருப்பதாக தெரிகிறது. வழக்கம் போல வீட்டில் கேமராக்கள் நிறுவப்படுகின்றன. தனியாக பேசுவது தூக்கத்தில் நடப்பது என சிறுமி கிரிஸ்டியின் நடவடிக்கைகள் விந்தையாக இருக்கின்றன. அதுபற்றி கேட்கும்போது தன் நண்பன் டோபியிடம் பேசியதாக கூறுகிறாள். தொடர்ந்து இன்னும் பல விசித்திர நிகழ்வுகள் நடக்க, அனைவரும் குடும்பத்துடன் பாட்டி வீட்டுக்கு (ஜூலியின் தாய்) செல்கின்றனர். அங்கேயும் கேமராக்கள். அங்கே நிலைமை இதைவிட மோசம், அதிலும் பாட்டியே பேயாக... இறுதியில் என்ன நடக்கிறது என்பதை கடைசி பத்து நிமிடங்களில் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கமெண்ட் அடிக்கும் கம்முனாட்டிகள் தொல்லை தாங்க முடியவில்லை. சத்யம் தியேட்டரில் பார்க்கலாம்ன்னு சொன்னேன் கேட்டியா... கேட்டியான்னு என்னை நானே திட்டிக்கொண்டேன். ஆமாம், தேவி தியேட்டர் ரசிகர்களுக்கும் சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் இன்றுதான் வித்தியாசம் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஓயாமால் கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தவர்களையும் கடைசி பத்து நிமிடங்கள் பொத்திக்கொண்டு படம் பார்க்க வைத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

படம் முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் சுமார். இரண்டாம் பாகத்துடன் ஒப்பிட்டால் சூப்பர். ஜாலியாக ஜல்லியடித்துக்கொண்டு படம் பார்க்க விரும்புபவர்கள் தேவி திரையரங்கிலும், படத்தின் திகிலை அனுபவித்து பார்க்க விரும்புபவர்கள் சத்யம் திரையரங்கிலும் பாருங்கள். இரண்டையும் விட பதிவிறக்கம் செய்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது சிறந்த ஆப்ஷன்.

நைட் ஷோ பார்த்துவிட்டு மவுண்ட் ரோடிலிருந்து திருவொற்றியூர் வரை தனியாக பயணம் செய்த அனுபவம் இருக்கே... ப்ச்... உடம்பில் கால் மட்டும் வெளியே தெரியும்படி முழுக்க போர்த்திப் படுத்திருக்கும் பிளாட்பார வாசி, மூர்க்கமான பார்வையுடன் குப்பை சேகரிக்கும் தொழிலாளி, குடித்துவிட்டு ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி சொறிந்துக்கொண்டே புலம்பும் தெருவோரக்குடிகாரன், சவாரிக்காக நம்மையே குறுகுறுவென்று பார்க்கும் ஆட்டோக்காரன், இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்கும் தொனியில் நம்மருகே வந்து முகர்ந்துபார்க்கும் நடுநிசி நாய்கள். இதையெல்லாம் விட வேறென்ன சார் த்ரில் வேணும்...???

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

21 October 2011

Paranormal Activity 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த மாதம் Paranormal Activity படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இந்தப்படம் அதன் prequel. அதாவது முந்தய படத்தின் கதைக்கு முன்பே நடந்த சம்பவங்களின் தொகுப்பு. கிறிஸ்டி – டேனியல் தம்பதிகள், அவர்களுடைய கைக்குழந்தை, டேனியலின் பதின்ம வயது மகள் (மூத்த தாரத்து வாரிசு போல), கூடவே ஒரு நாய் இவர்கள் ஒரு பங்களாவில் வசிக்கின்றனர். கிரிஸ்டியின் தங்கையாக முதல் பாகத்தில் வரும் கேட்டி அக்காளுக்காக ஆசையாக ஒரு நெக்லஸ் வாங்கித்தருகிறார். திடீரென வீட்டில் இருந்து அந்த நெக்லஸ் காணாமல் போய்விட கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திகில் ஸ்டார்ட்ஸ்....

முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது ரொம்பவே பொறுமையை சோதிக்கிறார்கள். ஆரம்பித்து இருபது நிமிடம் வரை ரொம்ப போர். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக விஜய் டிவி பாஷையில் அமானுஷ்ய சம்வங்கள் நிகழ்கின்றன. வேலைக்காரப்பெண் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துக்கொள்கிறார். ஆனால் டேனியல் அதை நம்ப மறுத்து அவளை வெளியேற்றுகிறார். முதல் பாகத்தைப் போலவே திகில் ஒவ்வொரு இரவிலும் கூடிக்கொண்டே போகிறது. இரவில் குழந்தைக்கு துணையாக இருக்கும் நாய் ஒருநாள் மூர்க்கமாக தாக்கப்படுகிறது. டேனியலும் அவரது மகளும் நாயை நள்ளிரவில் மருத்துவனைக்கு அழைத்துச்செல்ல, வீட்டில் கிறிஸ்டியும் கைக்குழந்தையும் தனியாக... இதற்கு மேல் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே சமயத்தில் வெளியான இந்தப்படம் வெறும் மூன்று மில்லியன் செலவில் தயாராகி நூற்றியைம்பது மில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் முதல் பாகம் அளவிற்கு மிரட்டவில்லை. ஒருவேளை வேறு இயக்குனர் இயக்கியது கூட காரணமாக இருக்கலாம். அல்லது அதிக கேரக்டர்களை உலவ விட்டதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இரவு தனியாக பார்த்தால் குறைந்தபட்ச பயம் தொற்றிக்கொள்ளும் என்பது உறுதி. 

படத்தின் இறுதியில் கதையை முதல் பாகத்தொடு முடிச்சு போட்டிருக்கிறார்கள். முந்தய பாகத்தின்படி October 9, 2006 இரவு பத்து மணிக்கே போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் பெண் அதே இரவு பன்னிரண்டு மணியருகில் உயிரோடு வருவதாகவும், குழந்தையை தூக்கிக்கொண்டு மறைவதாகவும் காட்டப்படுகிறது. அப்படியென்றால் வருவது உயிரற்ற பெண்ணா...? பேயா...? அவளும் அவள் எடுத்துச் சென்ற கைக்குழந்தையும் எங்கே...? இதுபோன்ற கேள்விகளுக்கு இன்று வெளியாகும் Paranormal Activity 3 பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

இன்று இரவு தேவி திரையரங்கில் Paranormal Activity 3 படம் பார்க்க இருக்கிறேன். பதிவர்கள் யாராவது (பயப்படாமல்) உடன் வர விரும்பினால் அழைக்கவும் – 80158 99828.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

20 October 2011

பால்கனி – 20102011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆறு மாதங்களுக்கு முன்பு துரை வில்லியம் – கேத் மிடில்டன் திருமணம் கோலாகலமாக நடந்தது அறிந்ததே. அந்த திருமணத்தின் ஹாட் டாபிக்ஸ் – ஒன்று கொழுந்தியாள் பிப்பா, மற்றொன்று கேத் அணிந்திருந்த திருமண உடை. இப்போது பிந்தைய சமாச்சாரத்தை ஏலத்தில் விடப்போகிறார்களாம். ஏற்கனவே கண்காட்சிக்காக வைக்கப்பட்ட அந்த ஆடை பத்தரை மில்லியன் யூரோக்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏலத்தில் பல மில்லியன் யூரோக்கள் குவியப்போவது உறுதி. இதில் கிடைக்கும் பணத்தை தர்ம காரியங்களுக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

ஒலக லெவல் ஜொள்ளு:
கிர்ர்ர்ரடிக்க வைக்கும் அழகி மிராண்டா கெர்
தக்காளி நாடாம் வியட்நாமில் நடந்த கொடுமை. சில வருடங்கள் முன்பு வரை இளமையும் அழகுமாய் பூத்துக்குலுங்கிய ஒரு இளம்பெண் இப்போது அறுபது வயது தோற்றத்தில் இருக்கிறார். அவருடைய உண்மையான வயதோ ஜஸ்ட் இருபத்தி ஆறு. முன்பொருமுறை கடல் உணவை உட்கொண்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டதாகவும், தனது ஏழ்மை நிலை காரணமாக மருத்துவ உதவியை நாடவில்லை என்றும் குறிப்பிடுகிறார். சில வருடங்களுக்கு பின்பு இப்போது மீடியாவிடம் உதவி கேட்க, சிலர் உதவ முன்வந்திருக்கிறார்கள். ஆனால் Lipodystrophy எனப்படும் இந்த அரிய நோயை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறது மருத்துவக்குழு. இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இவருடைய காதல் கணவர் இன்னமும் இவரிடம் அன்பு மாறாமல் உறுதுணையாக இருக்கிறார். 

மலைக்க வைத்த புகைப்படம்:
மின்னல்களை படம் பிடிப்பதை மட்டுமே ஹாபியாக வைத்திருக்கும் ஒரு தென்னாப்பிரிக்க புகைப்படக் கலைஞரின் கைவண்ணம்.

நமக்கெல்லாம் டைனோசர் என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்தவர் ஸ்பீல்பெர்க் தான். ஆனால் உலகின் பல மூலைகளிலும் இன்றுவரை டைனோசர் குறித்த ஆராய்ச்சிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்றில் டைனோசர்கள் இதுவரைக்கும் நாம் நினைத்திருந்ததை விட பல மடங்கு பெரியது, வலியது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக Tyrannosaurus எனப்படும் பறக்கும் டைனோசர்களின் இறக்கை மட்டுமே யானையை விட பெரிதாகவும், எடை கொண்டதாகவும் இருந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஜுராசிக் பார்க் அடுத்த பாகம் எப்போ ஸ்பீல்பெர்க் சார்...? 

சிந்திக்க வைத்த காணொளி:
பாம்புக்கறி சாப்பிட்டாலும் ஜப்பான்க்காரன் மூளையே மூளை

Smuggling விஷயத்தில் பல நாடுகள் நம்மைவிடவும் மோசமாக இருக்கிறது. பெரு, கொலம்பியா போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்றனவாம். கடந்த வாரத்தில் மட்டும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நாடுகளில் இருந்து டன் கணக்கில் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின் படி கொலம்பியா ஆண்டுக்கு 350 டன் கொக்கைன் உற்பத்தி செய்து முதலிடத்திலும் பெரு ஆண்டுக்கு 330 டன் கொக்கைன் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் மெக்சிகோ. இந்த நம்பர் விளையாட்டு பதிவுலக அரசியலை விட மோசமாக இருக்கும் போல.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN