4 January 2013

THE MAN FROM THE DEEP RIVER

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கேணிபல் படங்களின் தந்தை என்று கருதப்படும் ருஜ்ஜெரோ தியோதாதோ (Ruggero Deodato) ஜங்கிள் ஹோலோகொஸ்ட் படத்தினை 1975ல் வெளியிட்டார். அதற்கும் முன்பே உம்பெர்தோ லென்சி (Umberto Lenzi) 1972ல் இயக்கிய படம்தான் The Man From The Deep River. எனினும் இதனை நேரடி கேணிபல் படமாக கருத இயலாது. படத்தில் காட்டப்படும் பிரதான காட்டுவாசி இனத்தினர் நரமாமிசம் உண்பதில்லை. நரமாமிசம் சாப்பிடும் அவர்களின் எதிரணியினரை மையப்படுத்தி கதை நகரவில்லை. மற்றபடி கேணிபல் என்ற பதத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்திய படம் என்று இதனை எடுத்துக்கொள்ளலாம்.



Il paese del sesso selvaggio என்ற இத்தாலிய தலைப்பு கொண்ட திரைப்படம் Deep River Savages, Sacrifice, Mondo Cannibale என்கிற பெயர்களாலும் அறியப்படுகிறது. அதிகப்படியான வன்முறைக்காட்சிகள் நிறைந்திருந்தாலும் ஒரு மெல்லிய காதல் கதையுடன் பயணிக்கிறது.

தாய்லாந்து - பர்மா எல்லைப்பகுதியில் இன்னமும் நாகரிக உலகுடன் தொடர்பில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காட்டுவாசிகளின் வாழ்வியல். படத்தின் கதை உண்மையல்ல எனினும் அம்மக்களின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் அத்தனையும் உண்மையே என்ற செய்தியுடன் படம் துவங்குகிறது.

ப்ராட்லி, ப்ரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக்கலைஞர். தன் பணியின் பகுதியாக தாய்லாந்துக்கு வருகை தந்திருக்கிறான். சிறிய படகொன்றில் தன்னுடைய வழிகாட்டியுடன் தாய்லாந்து மழைக்காடுகளுக்குள் பயணிக்கிறான். இரு நாட்கள் பயணம் தொடர்கிறது. இனியும் தொடர்வது ஆபத்து என்று வழிகாட்டி எச்சரிக்கிறான். ப்ராட்லியும் இசைந்து மறுநாள் காலை திரும்பிவிட முடிவெடுக்கிறார்கள்.

காலையில் வழிகாட்டி பிணமாக ஒதுங்கியிருக்கிறான். அவனருகில் நெருங்கும் ப்ராட்லி காட்டுவாசிகளால் சிறைபிடிக்கப்படுகிறான். அவர்கள் அவனை ஏதோ கடல்வாழ் உயிரினம் என்றே பாவிக்கிறார்கள். காட்டுவாசி பிரிவினருக்கும் கேணிபல் பிரிவினருக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. தலைவர் மகள் மராயா ப்ராட்லியின் பால் ஈர்க்கப்படுகிறாள். அவன் மராயா குடும்பத்தின் அடிமையாக நடத்தப்படுகிறான். மராயாவின் தாய் தைமாவிற்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. சில நாட்களில் கேரன் - மராயா திருமணம் நடைபெறவிருக்கிறது அதன்பிறகு உன்னை விடுவித்துவிடுவார்கள் என்று நம்பிக்கையூட்டுகிறாள். எனினும் காட்டுவாசிகள் அசந்த சமயம் தப்பிக்க முயல்கிறான் ப்ராட்லி. அப்போது நடைபெறும் மோதலில் கேரனை கொன்றுவிடுகிறான் ப்ராட்லி.

அதன்பிறகு ப்ராட்லிக்கு ஒரு வெற்றியாளனுக்குரிய மரியாதை கிடைக்கிறது. அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயார்படுத்தி தங்களுள் ஒருவனாக இணைத்துக்கொள்கிறார்கள். மராயாவின் மனம் கவர்ந்து மணம் கொள்கிறான். மராயா கருவுருகிறாள். இந்நிலையில் அவளது உடல்நிலை மோசமாகி, கண்பார்வை பறிபோகிறது. அவளை காப்பாற்றும் நோக்கில் நாகரிக உலகிற்கு அழைத்துவர முற்படுகிறான் ப்ராட்லி. எனினும் காட்டுவாசி குழுவினர் அனுமதிக்கவில்லை. மராயா ஆண்குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மறைகிறாள். ப்ராட்லி முற்றிலும் காட்டுவாசியாக மாறி,அவர்களை கேணிபல்களிடம் இருந்து பாதுகாத்து வாழ்வதோடு படம் நிறைவடைகிறது.

பிற்காலத்தில் மேலும் சில கேணிபல் படங்களில் தோன்றிய இவான் ரசிமோவ், பர்மிய நடிகை மீ மீ லாய் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மற்ற கேணிபல் படங்கள் போலில்லாமல் மீ மீ லாய், மிக அழகாக தோன்றி பரவசமூட்டுகிறார்.



குறிப்பிட்ட அந்த தாய்லாந்து - பர்மா காட்டுவாசி இனத்தினரின் வாழ்க்கைமுறைகளை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார்கள். கணவன் இறந்து இறுதிசடங்குகள் முடிந்ததும், சிதை எரிந்துமுடிந்த இடத்தில் மனைவியை படுக்கவைத்து வேண்டியவர்கள் புணர்ந்துக்கொள்ளலாம் என்பது ஒரு சான்று. அதேபோல திருமண வயதை அடைந்த பெண், துளையிடப்பட்ட ஒலைக்குடிசையினுள் அமர்த்தப்படுகிறாள். திருமணத்திற்கு தயாராய் இருக்கும் ஆண்கள் ஒவ்வொருவராக துளைக்குள் கையை நுழைத்து மணமகளை தொடலாம். யாருடைய தொடுதல் அவளுக்கு பிடித்திருக்கிறதோ அவனே மணமகன். பாம்பின் விஷம் தொய்த்த அம்புகளை தயார் செய்வது போன்ற நல்ல உதாரனங்களும் இருக்கின்றன.

கேணிபல் படங்கள் என்றாலே கீறி - பாம்பு சண்டையை கட்டாயம் காட்ட வேண்டுமென்ற செண்டிமெண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. பன்றி, முதலை, உடும்பு வேட்
டைகளும் வழக்கம் போல தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன.

கேணிபல் படங்களை பார்க்க விரும்பும், அதே சமயம் இளகிய மனமுடையவர்கள் இந்த படத்தை ஓர் ஆரம்பமாக கருதி பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர்:



தொடர்புடைய சுட்டிகள்:
Cannibal Holocaust
Cannibal Ferox
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

21 comments:

  1. // கேணிபல் படங்கள் என்றாலே கீறி - பாம்பு சண்டையை கட்டாயம் காட்ட வேண்டுமென்ற செண்டிமெண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. பன்றி, முதலை, உடும்பு வேட்டைகளும் வழக்கம் போல தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன. //

    செண்டிமெண்ட் என்பதை தாண்டி இது மாதிரியான படங்களில், குழுக்களுக்கு இடையே நடக்கும் அதிகப்படியான வன்முறை வெறியாட்டங்கள் காட்டுவதற்கு பதில் அதில் கொஞ்சம் குறைத்து அதன் வீரியத்தை கோடிட்டு காட்ட அல்லது சிந்திக்கும் செயல்திரன் இருந்தும், பகுத்து அறியும் பக்குவம் இருந்தும், இந்த மிருகங்கள் போடும் சண்டையபோன்றே அந்த குழுக்கள் போடுகின்றன என்று ஒப்பீட்டுக்கான காட்சியாக வைக்கிரார்களோ என்னவோ!

    ReplyDelete
  2. அடப்பாவி எந்த மொழி படமா இருந்தாலும் விடுறதில்லையா....

    நைசா ஒரு கில்மா படத்தை வேற இடைசெருகலா நுழைச்சிருக்கே!!...சரி விடு கலைக் கண்ணோடு பார்த்து தொலைக்கிறேன் :-)))

    என்னமோ போப்பா... வீட்ல பயமத்துப்போச்சி... உன்னை சொல்லி குத்தமில்லை.... வேர ஒருத்தங்களை சொல்லனும் :-)))))))))))

    ReplyDelete
  3. படம் ஒரே நெத்தமா இருக்குனு சொன்னதால ட்ரைலர் கூட கிளிக் பண்ணாம மீ அப்பீட்டு :-)

    ReplyDelete
  4. பட்டிக்ஸ்... உங்களுடைய குறியீட்டு சிந்தனை வியக்க வைக்கிறது... உங்களுக்குள் ஒரு இலக்கியவியாதி உருவாகிக்கொண்டிருக்கிறான்...

    அப்புறம், அந்த புகைப்படம் என் கண்ணுக்கு சத்தியமாக கில்மாவாக தெரியவில்லை... கீழே இருக்கும் பத்தியின் புரிதலுக்காக இணைக்கப்பட்ட படம் அது...

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்.. கதையின் முதல் பாதி நம்ம “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்” மாதிரி இருக்கிறதே?!?!? நம்ம பயலுக திருந்த மாட்டாய்ங்க..

    ReplyDelete
  6. //அதேபோல திருமண வயதை அடைந்த பெண், துளையிடப்பட்ட ஒலைக்குடிசையினுள் அமர்த்தப்படுகிறாள். திருமணத்திற்கு தயாராய் இருக்கும் ஆண்கள் ஒவ்வொருவராக துளைக்குள் கையை நுழைத்து //

    அய்யய்யோ நான் முதல்ல பயந்துட்டேன்! :-)

    ReplyDelete
  7. Waiting for the winter season to end.

    ReplyDelete
  8. வன்முறை வாந்தி வர்ற அளவுக்கு இருக்குமா பாஸ்? ஏற்கனவே அனுபவம் இருக்கு!

    ReplyDelete
  9. ராம்... இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் கவ்பாய் படங்களை கிண்டலடித்து அதன் சாயலில் எடுக்கப்பட்ட திரைப்படம்... தவிர இ.கோ.மு.சியில் சமகால அரசியல் நிகழ்வுகளை பேசியிருப்பார்கள்... எனவே அதனை இதனோடு ஒப்பிடுவது அபத்தம்...

    தவிர, The man from the deep river அதற்கு முன்பே வெளிவந்த The man like a horse என்ற படத்தின் உல்டா என்று அறிகிறேன்...

    ReplyDelete
  10. யோவ் சிவா.... என்னய்யா சொல்ல வர்ற... பட்டிக்ஸ் கூட சேராதன்னு சொன்னேனே கேட்டியா ?

    ReplyDelete
  11. ஜி... அது ஒவ்வொருவருடைய மனநிலையை பொறுத்தது... நாங்களெல்லாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடு கட்டி வாழ்ந்தவர்கள்...

    மற்றபடி, Cannibal Holocaust உடன் ஒப்பிடும்போது இது எவ்வளவோ பரவாயில்லை...

    ReplyDelete

  12. //Philosophy Prabhakaran said...
    யோவ் சிவா.... என்னய்யா சொல்ல வர்ற... பட்டிக்ஸ் கூட சேராதன்னு சொன்னேனே கேட்டியா ?//

    அதுவும் ஒரு படத்தோட டைட்டில் தான். :)))

    ReplyDelete
  13. குடும்ப பதிவர்களின் கணிசமான ஆதரவை இழக்க போகிறாய் தம்ப்ரீ. பக் பக்!!

    ReplyDelete
  14. நயவஞ்சக நரி சிவாவின் பேச்சை கேட்காதே....பிரபா..! கேட்காதே...!கில்மா,படங்களை பார்த்து.....பார்த்து விமர்சனம் போடு...! நான் ஒரு குடும்ப பதிவர்...!பட்டிஸ் ஒரு குடும்ப பதிவர் திருமணம் ஆகாத சிவாவிற்கு என்ன தெரியும் கில்மா படங்களைப் பற்றி.....!வெட்கம்...!வேதனை..!

    இப்படிக்கு

    ஷகிலா பேரவை

    ReplyDelete
  15. அந்த கலை(கில்மா) படம் புரிதலுக்காக இணைக்கப்பட்டிருந்தாலும் ஏனோ அலுவலகத்தில் இருந்து கொண்டு படிக்கும் போது கூச்சம் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை .................

    தம்பி குறுந்தகடு இருந்தால் பகிரவும் .........அந்த கலை காவியத்தை காண ஆவலாக இருக்கிறேன் ..........

    ReplyDelete
  16. வீடு மாம்ஸ்... இது கில்மா படமே இல்லை...

    ReplyDelete
  17. பொன் மகேஸ்... அலுவலக கூச்சம் பலருக்கும் நீண்டநாளாக இருந்துவருவது தான்... மாற்றுவழி என்னவென்று தெரியவில்லை...

    குறுந்தகடு இல்லை... படம் யூடியூபிலேயே பத்து பாகங்களாக கிடைக்கிறது... டோரன்ட் லிங்காகவும் கிடைக்கிறது...

    ReplyDelete
  18. நல்லா கைய வெக்கிறாங்கய்யா......

    ReplyDelete
  19. பட்டிக்ஸ் என்ன எலக்கிய தரத்துல பொங்கி இருக்காரு..... அவர் ப்ளஸ் ஓப்பன் ஆகலியா?

    ReplyDelete
  20. நானும் கலைக் கண்ணோட பாத்துக்கிட்டேம்பா......

    ReplyDelete
  21. /////! சிவகுமார் ! said...
    குடும்ப பதிவர்களின் கணிசமான ஆதரவை இழக்க போகிறாய் தம்ப்ரீ. பக் பக்!!//////

    அதெல்லாம் பட்டிக்ச வெச்சி கரெக்ட் பண்ணிக்கிடலாம்......

    ReplyDelete