25 June 2013

கடையேழு வள்ளல்கள் – அதியமான்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரே முடியுடை வேந்தர்கள். அவர்களைத் தவிர சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் மூவேந்தர்களிடம் பரிசாகப் பெற்ற நாடுகளை ஆண்ட அரசர்களும், அரிய ஆற்றல் கொண்டு தாமே புதிதாக நாடுகோலியோ, வேறு நாட்டைக் கைப்பற்றி ஆண்ட வேந்தர்களும் வீற்றிருந்தார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சேரநாட்டில் அதியை எனும் சிற்றூர் இருந்தது. அவ்வூரை ‘அஞ்சி’ என்பவன் ஆண்டு வந்தான். அவனை எழினி என்றும் கூறுவர். அக்காலத்தில் சேர நாட்டை சூழ்ந்து, சிறு நாடுகள் பல இருந்தன. அவற்றுள் குதிரைமலைக்கு அருகே அமைந்துள்ள தகடூரும் ஒன்று. அச்சமயம் தகடூர் நாட்டை ஆண்டுவந்த சிற்றரசன் இறந்துவிட்டான். உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அமைதியகன்றது. தாமே அரசன் என்று ஆளாளுக்கு பறை சாற்றினர். தகவல் எழினிக்கு சென்றடைந்து, அவன் சேனைகளுடன் தகடூரை அடைந்தான். கலகத்தலைவர்களை அடக்கினான். அடங்காதவர்களைக் கொன்றான். எழினி அந்நாட்டிற்கு முடிமன்னன் ஆனான். எழினி, அதியை என்ற ஊரிலிருந்து வந்திருந்தமையால் தகடூர் மக்கள் அவனை அதியமான் என்று வழங்கினர்.

அதியமான் உடல்நலம், தேகப்பயிற்சியில் ஈடுபாடு கொண்டவன் என்ற செய்தி புறநானூற்றில் பதியப்பட்டுள்ளது. விற்பயிற்சி, வாட்பயிற்சி பயின்றிருந்தான். நல்ல பலசாலியாகவும், வீரனாகவும் விளங்கினான்.

அதியமானின் உடல் வலிமை பற்றி அவ்வையார் பாடியது :-

‘போற்றுமின் மறவீர் ! சாற்றதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தான்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளைமன் என்றிகழின் பெறலரிது ஆடே !

(புறம் – 104)

விளக்கம்: அதியமான் முழவெனப் பருத்த தோள்களை உடையவன். எட்டுத் தேர்களை ஒரே நாளில் செய்ய வல்ல ஒருவர், முப்பது நாட்கள் முயன்று திட்டமிட்டு ஒரு திண்ணிய தேர்க்காலை மட்டும் செய்தால் அது எந்த அளவிற்கு வலிமை கொண்டதாக இருக்குமோ அதுபோன்று உரமும் உருவமும் கொண்டவன். போர் என்றால் காலம், இடம், மாற்றார் வலிமை போன்றவற்றை நன்கு அறிந்து செயல்படும் திறன் பெற்றவன். ஆற்றல் மிகுந்த கடாவால் போகமுடியாத துறையும் உளதோ ? அதுபோல நீ களம் புகுந்தால் எதிர்ப்பாரும் இருக்கிறார்களா ?

எல்லோரிடத்தும் சாலப்பரிவோடு நடந்துக்கொள்ளும் நற்பண்பு அதியமானிடம் இயல்பிலேயே அமைந்திருந்தது. அதனால் அவன் குடிமக்களிடமும் மிக்க அன்புடன் நடந்துக்கொண்டான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அச்சமற்று களிப்புற்று வாழ்ந்தனர். தன்னிடத்தில் யார் எச்சமயத்தில் வந்து எப்பொருள் கேட்பினும் இல்லை என்றுரையாமல் ஈந்துவந்தான். அவன் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னிடம் வரும் புலவர் பெருமக்களிடம் அளவிலா அன்புடன் அளவளாவி வரைவிலாப் பொருளளிப்பான். அப்புலவர்களும் அவனை பாடி அவனுடைய புகழை நாடெங்கும் பரப்பினர். அதியமான் சிற்றரசனாயினும் அவனுடைய அரசியல் முறையை பேரரசர்களும் கண்டு வியந்தனர். எனினும் நாடெங்கும் பரவியிருந்த அதியமானின் புகழ் அவர்களை பொறாமை கொள்ள வைத்தது.

அவ்வையார் என்ற சரித்திரப்புகழ் வாய்ந்த மூதாட்டியார் அதியமானின் காலத்தில் தான் வாழ்ந்து வந்தார். அவர் அதியமானின் பெருங்குணத்தை அறிந்து, காண விழைந்தார். தகடூரை நோக்கி பயணித்தார். வாகன வசதிகளற்ற காலம். எங்கே செல்வதென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். செல்வந்தர்களிடம் மட்டும் மாட்டுவண்டி இருக்கும். அவ்வையிடம் அது இல்லாததால் நடந்தே தகடூரை சென்றடைந்தார். அதியமான் ஒவ்வொரு வேளை புசிப்பதற்கு முன்பும் தன் மாளிகைக்கு வெளியே வந்து ஏழை எளிய மக்கள் யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று சுற்றிப்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பார்க்கும்போது அவனுடைய கண்களுக்கு அவ்வையாரின் வருகை தென்பட்டது. அதுதான் அவ்வையாருக்கும் அதியமானுக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பு. எவர் தன்னிடம் வரினும் வரவேற்று உபசரிக்கும் உத்தம குணம் வாய்த்த அதியமான், வந்திருப்பது அவ்வையார் என்பதை அறியாமலே, அவருக்கு உணவளித்து, உபசரித்து, உண்ட களைப்பில் உறங்க இடம்கொடுத்துவிட்டு பின் தானும் புசிக்கச் சென்றான். பின்னர், அவ்வையாரை அறிந்துக்கொண்டபின் அவரை அங்கேயே தங்கிவிடும்படி அதியமான் வலியுறுத்தினான். அதியமானின் விருந்தோம்பும் பண்பு அவ்வையை கவர்ந்துவிட்டது. ஆயினும் அதியமானின் பெருங்குணத்தை மென்மேலும் பரப்ப வேண்டும் என்று விரும்பிய அவ்வை, அடிக்கடி வருவதாக கூறிவிட்டு அதியமானிடம் இருந்து புறப்பட்டார்.

கூறியதை போலவே அவ்வையார் பலநாட்கள் பரிவுடன் வந்து அதியமானிடம் தங்கியிருந்தார். அதனைப் பற்றிய புறநானூற்றுப் பாடல் :-

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விரும்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே;
யருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்கவன்றாளே !

(புறம் - 101)

விளக்கம்: அழகிய பூனணிந்த யானையையும் ஒழுங்காயமைந்த தேரையும் உடைய அதியமானிடம் யாம் ஒருநாளன்று, இருநாளன்று, பலநாள் பலரோடு சென்று தங்கினோம். அங்ஙனம் சென்றபோதும் அவன் எம்மை முதல்நாள் கண்டபோது காட்டிய அன்பையே என்றும் காட்டி உபசரித்தான். அதியமானிடம் பரிசில் பெறும் காலம் நீண்டாலும் அது யானை தன் தந்தங்களுக்கிடையே வைத்துள்ள கவளம் போன்று தம் கைக்குரிய தப்பாததாகும். ஆகையால், அதனை உண்ண விரும்பும் நெஞ்சே நீ வருந்த வேண்டாம். அவன் தாள் வாழ்க !

ஒருமுறை மூதறிஞர் ஒருவர் அதியமானை நாடி வந்திருந்தார். அதியமானும் வழக்கம்போல அவர் மனம் மகிழும்படி உபசரித்தார். அதியமானின் உபசரிப்பில் மயங்கிய மூதறிஞர் அவருக்கு குதிரைமலை ரகசியத்தை கூறினார். அதாவது, குதிரைமலையின் மீது பெரிய சரிந்த பிளவு ஒன்று உண்டு. அப்பிளவில் ஒரு நெல்லிமரம் உண்டு. அதில் பல்லாண்டுக்கொருமுறை இரண்டொரு கனிகள் உண்டாகும். அம்மரத்திற்கு அருகில் அத்தனை எளிதாக யாரும் செல்ல முடியாது. அரிய பெரிய முயற்சி எடுத்து அம்மரத்திலிருந்து நெல்லிக்கனியை பறித்து உண்டால் நீண்ட நாட்கள் வாழலாம். நீ தக்கபடி முயன்றால் அதனைப் பெறுவாய் என்று அதியமானிடம் கூறிவிட்டுச் சென்றார். அதியமான் அன்றிலிருந்து அந்த நெல்லிமரத்தை கண்டுபிடிக்க முயன்றான். ஒருநாள் ஆபத்தான பெரும்பிளவை கண்டான். அச்சரிவில் தவறி விழுந்தவன் பாதாளம் புக்கொழிவான். இடையிடையே முட்புதர்கள் கொண்ட அப்பிளவில் சிக்குண்டால் உடல் சல்லடைக்கண்கள் ஆகிவிடும். அப்பிளவில் தன் ஏவலாளரை இயக்கினால் ஆபத்து என்றெண்ணிய அதியமான் தானே பக்குவமாய் இறங்கி மரத்திலிருந்த ஒரே கனியை பறித்துக்கொண்டு தனது மாளிகையை நோக்கி திரும்பினான்.

வழக்கப்படி அன்று அதியமானைக் காண வந்திருந்த அவ்வையார், அதியமானின் வருகைக்காக காத்திருந்தார். அச்சமயம் அங்கே வந்த அதியமான் முகமலர்ந்து இன்சொல் பகர்ந்தான். அவ்வையாருடைய முகவாட்டத்தைக் கண்டான். அவர் பசியினால் களைத்திருக்கிறார் என்று உணர்ந்துக்கொண்டான். உடனே தான் கொண்டுவந்த நெல்லிக்கனியை அவ்வையிடம் கொடுத்து உண்ணும்படி வேண்டினான். அவ்வையாரும் அவ்வண்ணமே உண்டு களைப்பையோட்டினார். கனியின் சுவையை வியந்த அவ்வை அதியமானிடம் அதைப்பற்றி வினவினார். அதியமான் அக்கனியின் வரலாற்றைக் கூறினான். அக்கனியை தான் உண்ணுவதைக் காட்டிலும் அவ்வை உண்டால் அது அவர் உலகிற்கு பல நற்போதனைகளை செய்ய உதவும் என்று உரைத்தான். அதியமானின் மேன்மை கண்டு அவ்வையார் உவகையுற்றார்.

அதுகுறித்து அவ்வையார் பாடிய புறநானூற்றுப் பாடல் :-

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான் !
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும ! நீயே தொன்னிலைப்
பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே

(புறம் - 91)

விளக்கம்: வெற்றி தரும் கூரிய வாளேந்திப் போர்க்களத்தில் பகைவர் இறந்துபட வெட்டி வீழ்த்தி, கழலணிந்த வீரனே ! வீரவளை அணிந்த பெரிய கையினையும் மிகுந்த ஆரவாரத்தைச் செய்யும் முரசினையும் உடைய அதியர்களுக்குத் தலைவனே ! பகைவரை வெல்லும் வீரச்செல்வத்தை விளக்கும் பொன்னால் செய்யப்பட்ட வாகைப்பூ மாலையை சூடிய அஞ்சியே ! தொன்றுதொட்டு புகழப்பட்டு வரும் நன்னிலைமையை உடைய பெரிய மலையின்மேல் உள்ள ஆழ்ந்த பிளவில் வளர்ந்த சிறிய இலைகளையுடைய கரிய நெல்லிமரத்தினது இனிய கனியை, மீண்டும் அத்தகைய கனியைக் பெறுவதற்கு அரிதென்று கருதாமலும், அதனால் பெறும் பெரும்பயனை அரிதென்று கருதாமலும், அதன் பெரும்பயனை எமக்கு முன்னதாகக் கூறாமலும் உன்னுள்ளத்துள் அடக்கிக்கொண்டு எமது சாதலை ஒழிக்க அளித்தாய். ஆதலால் பெருமையோனே, நீ பால்போன்ற வெண்மையான பிறைமதியையும், நெற்றிக்கு அழகாக பொலிவுறும் திருமுடியினையும், நீலமணி போலும் கரிய திருக்கண்டத்தையும் உடைய ஒப்பற்ற பரமசிவனைப் போல நிலைபெறுவாயாக.

அதியமான், அவ்வையாருக்கு அருங்கனியளித்த செய்தி நாடெங்கும் பரவியது. அது மூவேந்தர்களுக்கும் எட்டிற்று. அதனால், அவர்கள் முன்னையினும் மிகுந்த பொறாமையுற்றார்கள். அவர்கள் கூடி அதியமானை ஒழிக்க முடிவுசெய்து, அதற்கேற்ற நேரம் கருதி காத்திருந்தார்கள். குறுநில மன்னர்கள் சிலரும் அதியமானிடம் பொறாமை கொண்டிருந்தார்கள். அவர்களில் கடையேழு வள்ளல்களில் இன்னொருவரான மலையமான் திருமுடிக்காரியும் ஒருவர். காரி, அதியமானுக்கு எதிராக வேற்றரசரிடம் மித்திரபேதம் செய்துவந்தான். அச்செயலை அறிந்த அதியமான் தன் சேனைகளை மலையமாநாட்டுக்கு அனுப்பி பயமுறுத்தி அவன் கொட்டத்தை அடக்கினான். மேலும், காஞ்சிமாபுரியை ஆண்டுவந்த தொண்டைமான் என்கிற வேந்தன் அதியமானிடம் மாற்றெண்ணம் கொண்டு போர்புரியக் கருதினான். அதனை அறிந்த அதியமான் அவ்வையாரை தூது அனுப்பி தொண்டைமானின் பிள்ளைப்புத்தியை போதித்து போக்கும்படி பணித்தான். தொண்டைமானும் அவ்வையாரின் வேண்டுகோளை அங்ஙனமே ஆகுக என்று ஏற்றுக்கொண்டான்.

அடுத்த ஆபத்து இரும்பொறை வடிவத்தில் வந்தது. அப்போது சேரநாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பேரரசன் ஆண்டுவந்தான். அதியமானுக்கு அவ்வை போல இரும்பொறைக்கு அரிசில்கிழார் என்னும் புலவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தை பாடியிருக்கிறார், தம் முரசுக்கட்டிலில் களைத்து உறங்கிக்கொண்டிருந்த மோசிக்கீரனார் எனும் செந்நாப்புலவருக்கு (அப்படி உறங்குபவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனை) அருகில் நின்று சாமரம் வீசிய பெருமை இரும்பொறைக்கு உண்டு. இரும்பொறை அக்காலத்தில் சோழனையும் பாண்டியனையும் வென்றவன். மற்றொரு வள்ளலான வல்வில் ஓரியை வென்று கொல்லிமலையைக் கொண்டவன். அவனுடைய ஆட்சி எல்லை தகடூரை நெருங்கிவிடவே அதியமானுக்கு அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. அதியமான் இரும்பொறையை எதிர்க்க தயாரானான். அப்போது அரிசில்கிழார் அதியமானுடைய நலன்கருதி, இரும்பொறையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அதியமானிடம் சென்று போரிடாமல் இருப்பதே அவனுக்கும் தகடூர் மக்களுக்கும் நல்லது என்று எடுத்துரைத்தான். அவருடைய அறிவுரையை அதியமான் மறுத்துவிட்டான். அரிசில்கிழார் சென்ற தூது அற்பத்தனமாகி விட்டதால் பெருஞ்சினம் கொண்ட இரும்பொறை தகடூர் மீது போர் தொடுத்தான்.

ஒரு சமயம் அதியமானால் பாதிக்கப்பட்ட மலையமான் திருமுடிக்காரியும் தன் படைகளுடன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இணைந்துக்கொண்டான். இரு படைகள் இணைந்து போரிட்டதால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்க ஆரம்பித்தது. முடிவில் அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் வாள் பாய்ந்து வீரமரணம் அடைந்தான். தன்னால் கொலையுண்ட அதியமான் நெடுமானஞ்சிக்கு இறுதியாகச் செய்யும் கடன்களை சேரமானே முன்னின்று செய்தான். உண்மையிலேயே வீரத்திலும் ஈரத்திலும் சிறந்த அதியமானின் மனம் எதிரியே ஆனாலும் அவனது ஏற்றமிகு ஆற்றலைப் போற்றும் மாற்றுக்குறையாப் பண்பாளனான சேரமானின் நெஞ்சில் கழிவிரக்கத்தைச் சுரக்கச் செய்தது போலும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

28 comments:

  1. நல்ல முயற்சி நண்பா... அழகான படைப்பு, மிகுந்த சிரமம் கொண்டு தேடியுள்ளீர்கள்...வாழ்த்துகள். மேலும் தொடர வேண்டும் தங்கள் இந்த முயற்சி...

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. thozha, mikka nandri... P.SENTHIL/ NELLAI.

    ReplyDelete
  3. ரொம்பவும் மெனகெட்டு இப்பதிவை எழுதி இருக்கீங்க.. தமிழின் பெருமையை சொல்லி செல்லும் இந்த பதிவு.., பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  4. Nalla muyarchi , Ithu pondra katturaikalilavathu varthaippizhaigal illamal irukkalame...

    ReplyDelete
  5. அதியமான் நெடுமான் அஞ்சி பற்றி சிறுவயதில் சிறிது படித்து உள்ளேன்! புறநானூற்று தகவல்களுடன் சிறப்பாக பகிர்ந்தமை சிறப்பு! மேலும் தொடரவாழ்த்துக்கள்!நன்றி!

    ReplyDelete
  6. நீங்கள் இத்தகைய பதிவும் எழுதுவீங்களா? மிக அருமை, சங்கப் பாடல்கள், வரலாற்றுத் தகவல்களோடு சிறப்பித்துள்ளீர்கள். அதியமான் வட தமிழகத்தில் பல இடங்களை வென்று ஆண்டவன். அவனை அசோகர் கல்வெட்டு சதியபுதோ அதாவது சத்தியப்புத்திரன் எனக் குறிப்பிட்டுள்ளது. பிற்கால களப்பிரகள் அதியனின் அடி வந்தோர் என்றக் கருத்துமுள. நன்றிகள்.

    ReplyDelete
  7. எவலாளரை இயக்கினால்-ஏவலாளரை இறக்கினாலா?

    அல்லது எனக்கு புரியவில்லையா தெரியவில்லை.

    ReplyDelete
  8. //அவன் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னிடம் வரும் புலவர் பெருமக்களிடம் அளவிலா அன்புடன் அளவளாவி வரைவிலாப் பொருலளிப்பான்.
    பொருளளிப்பானா இல்லை பொருலளிப்பானா???????????????????

    அப்பிளவில் தன் எவலாளரை இயக்கினால் ஆபத்து என்றெண்ணிய அதியமான் தானே பக்குவமாய் இறங்கி மரத்திலிருந்த ஒரே கனியை பறித்துக்கொண்டு தனது மாளிகையை நோக்கி திரும்பினான்.


    ஏவலாளரா இல்லை எவலாளரா ???????????????

    எல்லாம் நல்லா இருக்கு ..என்ன ...கொஞ்சம் நீளமா இருக்கு...எப்பவும் இருக்கிற நக்கல் நையாண்டி இல்லவே இல்ல ...ஒரு வேளை வரலாற்று இலக்கிய பதிவு என்பதால்....இந்த அடக்கமோ என்று தெரியவில்லை ?

    ReplyDelete
  9. சிறப்பான தொகுப்பு..

    ReplyDelete
  10. திருமணம் ஆனதும் ஏதும் மனமாற்றமா?

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  12. இன்னொரு இலக்கிய வாதி....
    மத்த இலக்கியத்துடன் சண்டை வருமா.....???????????

    வரணும்....வரணும்.....பிரபா...விமாசகர் வட்டம் ஆரம்பிக்கணும்.....!!!!!!!!!!!!!

    ReplyDelete
  13. போற்றுமின் மரவீர் => போற்றுமின் மறவீர்
    முழவேன => முழவென

    நீங்க எழுதுறது எப்படியாவது எழதுங்க , ஆனா அடுத்தவங்க எழுத்த சிதைக்காதிங்க.
    "மரவீர்" சின்ன எழுத்துப்பிழை தான் என்றாலும் பொருள் எவ்ளோ கேவலமா மாறுது பாருங்க

    ReplyDelete
  14. பிழை திருத்தியவர்களுக்கு நன்றி... நாம் எழுதியதை நாமே படித்துப்பார்க்கும்போது பிழைகள் அவ்வளவு எளிதாக புலப்படுவதில்லை...

    ReplyDelete
  15. சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  16. Philosophy Prabhakaran said...

    பிழை திருத்தியவர்களுக்கு நன்றி... நாம் எழுதியதை நாமே படித்துப்பார்க்கும்போது பிழைகள் அவ்வளவு எளிதாக புலப்படுவதில்லை...//

    உண்மைதான் பிரபா!!!

    ReplyDelete
  17. Enjoyed it. Nalla muyarchi.... thodaravum

    ReplyDelete
  18. அதியமானின் முடிவை அறிந்ததில்லை.நிறைய தகவல்கள் திரட்டி இருப்பதும் பாடல்களை மேற்கோள் காட்டியதும் நன்று பிரபாகரனிடமிருந்து வித்தியாசமான பதிவு. பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. வரலாற்றில் மலையமான்கள், (நா. முரளி நாயக்கர்)
    =================================================


    சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:-

    "நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
    பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
    அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
    வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

    எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர்.

    வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னித் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-

    "திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
    பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
    பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"

    (பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).

    (Cont'd.......)

    ReplyDelete
  20. மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :

    "ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
    பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
    பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
    பெரும்பள்ளியாழ்வார்க்கு "

    என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :-

    "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.

    திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.

    மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.

    மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.

    --------------- x --------------- x ---------------

    ReplyDelete
  21. வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?
    Posted on மே9, 2013 by வே.மதிமாறன்
    social

    ‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

    ‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

    ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

    ReplyDelete
  22. பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதி. தற்போது அவர்கள் க்ஷத்ரிய உயர் சாதியாக சொல்லுகிறார்கள்.
    இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
    பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.

    பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.

    பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி” என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.

    A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807

    பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
    பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
    பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இன்றி தொடர்பு வைத்து கொள்ளலாம்.

    ReplyDelete
  23. பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

    பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
    ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
    என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

    சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

    மலைபடுகடாம் செய்யுள்(451)
    ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
    என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

    எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
    "பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

    சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

    ".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
    வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
    னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
    பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
    வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85

    தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
    வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
    ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
    மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
    ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90

    ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
    லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
    யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
    நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
    பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."

    ReplyDelete
  24. பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் நாற்றுநடுகைப் பகுதி, பள்ளு நு}லாசிரியர்களால் திட்டமிட்டு அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. வயலில் நாற்றுநடும் பள்ளர், பள்ளியரின் உறவுகள் அப்பகுதிகளில் விரசமான முறையிற் கூறப்படுகின்றன. பள்ளு நு}லாசிரியர்கள் அடிநிலைப் பாத்திரங்களைத் தமது இலக்கியத்திற் பயன்படுத்திய போதிலும், சந்தர்ப்பம் ஏற்படும் வேளைகளில் அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதை அவதானிக்கலாம். கோ. கேசவன் குறிப்பிடுவது போன்று, “பள்ளுப் பாடல்களில் வரும் நாற்று நடுகைப் பகுதி பள்ளரின் பால் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்”

    இவ்விலக்கியத்தின் தனித்துவம் மிக்க மையக் கூறாக விளங்குவது. சக்களத்திப் போராட்டமாகும். பள்ளர் தலைவனின் (குடும்பன்) இரு மனைவியரான மூத்தபள்ளி, இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான இச்சக்களத்திப் போராட்டம். பள்ளு இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இப்போராட்டம் இவ்விலக்கியத்தின் முதன்மைக் கூறாக அமைவதற்குச் சில தேவைகள்நு}லாசிரியர்களுக்கு இருந்திருக்க வேண்டும். பலதார மணத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை இனங்காட்டுவதும், அதன் அடிப்படையிற் சுவையாகக் கதை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்கலாம். இத்தகைய சக்களத்திப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சமயரீதியான தெய்வரீதியான பூசல்களைச் சுட்டிக்காட்டி ஈற்றில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதும் பள்ளு நு}லாசிரியர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

    பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் இன்னொரு தனித்துவக் கூறாக விளங்குவது. பொருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாடுகள் பற்றிய செய்தியாகும். பள்ளு நு}லாசிரியர்கள் தாம் படைத்த பாத்திரங்கள் வாயிலாக, தாம் அறிவு முறையில் நம்பிக்கை கொண்ட சமய உண்மைகளையும் தெய்வங்களின் சிறப்புக்களையும் குறிப்பிடுகின்றனர். அதேவேளையில், பள்ளர் சமூகத்தவரை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டமையால், அவர்கள் கடைப்பிடிக்கும் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் நு}லிற் பயன்படுத்த வேண்டிய தேவை அந்நு}லாசிரியர்களுக்கு ஏற்பட்டது எனலாம். பெருந்தெய்வ வழிபாட்டு அம்சங்களோடு சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்களும் பள்ளு நு}ல்களில் இடம்பெறுவது, அவற்றுக்குப் புதிய பொலிவை ஏற்படுத்துகின்றன. நு}லாசிரியர் போற்றும் பெருந்தெய்வங்களான சிவன், திருமால், விநாயகர், முருகன் போன்றோரும், பள்ளர் சமூகத்தவர் வழிபடும் சிறுதெய்வங்களும் இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு ஏற்பவே வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன.

    பள்ளு இலக்கியத்திற் பாத்திரப் படைப்பு

    பள்ளு இலக்கியத்தில் பள்ளன் (குடும்பன்) அவனின் மனைவியரான மூத்தபள்ளி, இளையபள்ளி, அவர்கள் மீது மேலாண்மை செலுத்தும் பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன. குடும்பத் தலைவனான பள்ளன் சமயப்பற்றுள்ளவனாகவும், பாட்டுடைத்தலைவர் மீது பற்றும் மதிப்பும் மிகுந்தவனாகவும், தனது மனைவியரில் இளையபள்ளி மீது மையல் கொண்டவனாகவும், மூத்தபள்ளியை அலட்சியப்படுத்துவனாகவும், பண்ணை வேலைகளில் அக்கறையில்லாதவனாகவும், பண்ணைக்காரனால் தண்டிக்கப்பட்ட பின்னர் தன் தொழிலைச் செவ்வனே செய்பவனாகவும் வார்க்கப்;பட்டுள்ளான்.

    மூத்தபள்ளி குணநலன்கள், வாய்க்கப்பெற்றவளாகவும், பண்ணைக்காரனின் நம்பிக்கைக்கு உரியவளாகவும் படைக்கப்பட்டுள்ள அதேவேளை, தன் கணவனால் வஞ்சிக்கப்படும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவும் விளங்குகின்றாள். இளையபள்ளி தன் கணவனின் அன்பை முழுமையாகப் பெற்றவள் என்ற வகையிலே தற்பெருமை கொண்டவளாகவும் பள்ளன் பண்ணை வேலைகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பதற்குக் காரணமானவளாகவும், தன் சக்களத்தியோடு பூசல் இடுபவளாகவும் காணப்படுகின்றாள்.

    பண்ணைக்காரன் இம்மூவரின் தொழில், குடும்பம் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்பவனாகவும், பரிகசிப்பதற்குரிய தோற்றமும் நடத்தையும் கொண்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பண்ணைக்காரன் குறிப்பிட்டவாறு பண்ணையின் மேற்பார்வையாளனேயன்றி, அதன் உரிமையாளன் அல்லன், பண்ணை வேலைகளில் ஈடுபடும் பள்ளர் தவறு செய்தால், அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கு இருந்தது.



    Book: Classified collection of tamil proverbs – 1897

    தமிழில் வெள்ளைகார பாதிரியார்கள் தொகுத்த அன்றைய பழமொழிகளில் பள்ளிகள் பற்றிய குறிப்புக்களை காண்போம். தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் கீழே மொழிபெயர்த்து திரும்ப அதற்க்கு விளக்கத்தை சில தகவல்க ளோடு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். விளக்கம் மட்டும் இங்கே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

    இந்த பழமொழிக்கு பெரிய விளக்கம் இல்லை.

    ReplyDelete
  25. வன்னியன் – பள்ளியின் பொருள். இப்பெயர் மேலும் அம்பலக்காரன், வலியன் சாதிகளின் உட்பிரிவு. சில மறவர்களும் வன்னியன் எனவும் வன்னி குட்டி எனவும் அறியப்படுகிறார்கள். தேன் வன்னியன் என்ற பேரை தென்னாற்காடு மாவட்ட இருளர்கள் கொண்டுள்ளனர்.

    வெள்ளைக்காரன் ஆவணப்படுத்திய செய்திகள் போதாது என, சுதந்திரத்திற்கு பின்னரும் 1961 இல், பள்ளி சாதியினர் தங்கள் கிராமம் முழுவதும் உள்ள பள்ளி சாதிகளை தாங்கள் முன்னர் பள்ளி என்று அழைக்கப்பட்ட சாதிப்பெயரை தூர எறிந்துவிட்டு கவுண்டர் என்ற பெயரை தத்தெடுத்துக்கொண்டதையும், இப்படி அடுத்தவன் பட்டத்தை திருடுவது தங்களின் பொருளாதார மேம்பாடிற்க்கும், கல்வியறிவை வளர்த்துக்கொள்வதற்கும் பள்ளி சாதியினர் மேகொள்ளும் வழக்கமான உக்தியே என்பதையும், தாங்கள் அடுத்தவன் பட்டத்தை தத்தெடுத்து / திருடி மேற்கொள்ளும் இந்த ஈன செயலை நியாயப்படுத்த தாங்கள் உருவாக்கிக்கொண்ட பழமொழிதான்
    பள்ளி முத்தினால் படையாச்சி,
    படையாச்சி முத்தினால் கவுண்டர்,
    கவுண்டர் முத்தினால் நாயக்கர்
    என்பதையும் Census of India - 1961 இல் பதிவாகியுள்ளது.


    All the Pallis of this village have adopted the title of Gounder and they resent their being referred to as the Pallis. It has been a common phenomenon to change their title with the improvement in the economic status and the spread of literacy. This process of adopting more horrific titles is very well brought out in a tamil proverb as follows:
    பள்ளி முத்தினால் படையாச்சி
    படையாச்சி முத்தினால் கவுண்டர்
    கவுண்டர் முத்தினால் நாயக்கர்...
    https://www.google.co.in/search?safe=off&es_sm=93&biw=1366&bih=623&tbm=bks&q=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&oq=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&gs_l=serp.12...10503.10503.0.12479.1.1.0.0.0.0.0.0..0.0.msedr...0...1c.1.64.serp..1.0.0.x3IJfhrNh40
    இவ்வாறாக இவர்கள் பள்ளிகளில் இருந்து சிலரை பிரித்து தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட பிரிவுதான் வன்னிய கவுண்டர் என்று இன்று வளம் வரும் பள்ளி சாதியினர்.

    ReplyDelete
  26. The Encounter Never Ends: A Return to the Field of Tamil ...
    https://books.google.co.in/books?isbn... - மொழிபெயர்
    Isabelle Clark-Deces - 2008 - ‎Religion
    British censuses registered the Gounders — known then as Pallis — as Sudras or low caste agricultural laborers. The Gounders must have resented this ... முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
    பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
    "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)

    மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்
    மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

    மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது

    ReplyDelete
  27. பிராமணர்களுக்கு சோழனும் பல்லவனும் பாண்டியனும் பிரம்மதேயங்களாக வழங்கிய நிலத்தில் பிராமணர்களுக்கு காலங்காலமாக ஊழியஞ்செய்யும் கூலிகளாக பள்ளி சாதியினர்கள் இருந்தனர்.
    ---It is often supposed that Brahmins, out of caste considerations, kept only caste laborers such as Vanniyars, whereas untouchables were employed by non-Brahmins.---
    https://books.google.co.in/books?id=QnbeAwAAQBAJ&pg=PA273&dq=palli+vanniyar&hl=en&sa=X&ei=FnniVJffIJPSoASysILYCQ&redir_esc=y#v=onepage&q=palli%20vanniyar&f=false

    The Pallis or Vanniyas worked as serfs under Brahmin landlords while the Pallas and Paraiyas served the other non-Brahmin caste masters like the Vellalas. They were mostly landless people and were not allowed to own any property. They owned nothing but poverty, dirt and disease, sorrows and suffering and lived under perennial distress.
    http://jhss.org/printartical.php?artid=216
    https://www.academia.edu/5815817/Editor_Pushpa_Tiwari_AGRARIAN_SERVITUDE_DURING_THE_MEDIEVAL_PERIOD_OF_TAMIL_COUNTRY

    The lands of Brahmins and Vellalans are generally cultivated by farm servants, either Pallis or Paraiyahs
    https://books.google.co.in/books?id=KYj8qxhG2R0C&pg=PA34&lpg=PA34&dq=pallis+brahmins&source=bl&ots=vsYCUuFJGx&sig=xf38Dd7SqE0grEVt8K868PsnED8&hl=en&sa=X&ei=GaAXVc23E9OIuAS8g4HQDg&ved=0CDkQ6AEwBQ#v=onepage&q=pallis%20brahmins&f=false

    Ellis states that the Pallis were the slaves of the Brahmins

    https://books.google.co.in/books?id=mVqyAAAAQBAJ&pg=PA58&lpg=PA58&dq=Ellis+states+that+the+Pallis+were+the+slaves+of+the+Brahmins+and+that+the+other+two&source=bl&ots=r_9tXP2PUi&sig=DGpg1s90_FTu9q7Zw66k372akNQ&hl=en&sa=X&ei=a6IXVcCaDYiiugTyhYDIDg&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=Ellis%20states%20that%20the%20Pallis%20were%20the%20slaves%20of%20the%20Brahmins%20and%20that%20the%20other%20two&f=false


    http://books.google.co.in/books?id=7guY1ut-0lwC&pg=PA51&redir_esc=y#v=onepage&q&f=false

    நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
    இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர்.
    http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2a/

    சமூக ஆய்வாளர் வீ. அரசு எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட "பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதி - நிலா உறவுகள்" எனும் நூலில் பள்ளி சாதியினர் பிராமணருக்கும் வெள்ளாளருக்கும் வேளாண் அடிமைகளாக பரம்பரை பரம்பரையாக பிழைத்ததையும், நிலா உரிமைக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத பாயக்காரிகளாக (வந்தேறி வேளாண் கூலி & வந்தேறி குத்தகைக்காரர்) இருந்த பள்ளிகள் நிலா கிழார்களான மிராசுதார்களான வெள்ளாளர்களிடம் காழ்ப்புகொண்டு வெங்கடாசல நாயகர் என்ற பள்ளி சாதிக்காரர் ஒருவர் "பள்ளிகள் பிராமணர் &வெள்ளாளரின் அடிமைகள்" என்று கள-ஆய்வில் கண்டறிந்து ஆவணப்படுத்திய collector இடம் வாதிட கீழ்க்கண்ட வாசகங்களை சொல்கிறார்...
    பாராம்பரியமாக ஊரில் வசிப்பவர்கள் என்பதாலும், மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்கள் என்பதாலும், அந்த நிலங்கள் பிராமணர் & மிராசுதார்களதாக கொள்ள முடியாது. அந்த நிலத்தில் பரம்பரை பரம்பரையாக அடிமையாக வேலை பார்க்கும் கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    தொண்டை மண்டலம் உருவான பொழுது, மன்னனால் மிராசுகளுக்கு ஆட்சி செய்ய அளிக்கப்பட காணியாட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    வெள்ளாளர், அகமுடையார், பிராமணர் இவர்களின் அடிமைகளே நிலத்துக்கு உரியவர்கள்.

    ReplyDelete