5 February 2010

அசல் - திவ்யதரிசனம்

வணக்கம் மக்களே...

கடந்த பதிவிற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்த நண்பர்களுக்கு mercy. என்ன புரியலையா...? அதாங்க french பாஷைல thanks. அசல் படம் பார்த்தா உங்களுக்கும் புரியும். வழக்கம்போல தல படத்தை FDFS பார்த்துவிட்டேன். என் மனதில் தோன்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். OK இனி பதிவிற்கு போவோம். டொட்டொடொய்ங்க்...!

பி.கு: இது ஒரு தல ரசிகனின் விமர்சனம்

அசல் - பெயர்க்காரணம்
அப்பா அஜித்தின் மனைவி வழியாக பிறந்தவர்கள் சம்பத்தும் ராஜீவ் கிருஷ்ணாவும். ஆனால் சிங்கத்தின் சிறுவயது சேட்டையில் பிறந்தவர் மகன் அஜித். சட்டப்படி பார்த்தால் மனைவி மூலமாக பிறந்தவர்களே அசல் வாரிசுகள். ஆனால் தந்தையாரின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் அஜித்தே அசல் வாரிசு என்று இயக்குனர் உணர்த்துகிறார்.

திரைக்கு முன்
வழக்கமாக கிடைப்பதைப் போல idreamsல் ticket கிடைக்கவில்லை. எப்படியோ எதிர்பாரா விதமாக அம்பத்தூர் முருகனில் ticket கிடைக்க பயணமானேன். திரையரங்கம் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. அசல் அஜித்தைப்போலவே கடா மீசையுடன் ரசிகர்கள் பலர் உலவிக்கொண்டிருந்தனர். banner, ஆரத்தி, பாலாபிஷேகம் போன்ற முட்டாள்த்தனங்கள் வழக்கம்போல வேடிக்கையாகவே இருந்தன. தல banner முன்பு தோப்புக்கரணம் போட்ட ஜென்மத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த அறியாமைக்கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது.

கதைச்சுருக்கம்
கதை franceல் ஆரம்பிக்கிறது. ஜீவானந்தம் (அப்பா அஜித்) france அரசாங்கத்திற்கே ஆயுதம் சப்ளை செய்யக்கூடிய டீலர். அவருடைய அசல் வாரிசுகளாக சாம் (சம்பத்), விக்கி (ராஜீவ் கிருஷ்ணா) மற்றும் ஸ்டெப்சன் சிவா (அஜித்). (இன்னும் எத்தனை காலத்திற்கு கதாநாயகனின் பெயரை சிவா, ஜீவா என்று வைப்பார்கள் என்று புரியவில்லை). அசல் வாரிசுகளுக்கு ஸ்டெப்சன்னை கண்டாலே வெறுப்பு. தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் சப்ளை செய்து பெரிய அளவில் பணம் புரட்ட வேண்டுமென்பது அசல் வாரிசுகளின் விருப்பம். அதை எதிர்க்கும் அப்பாவை கமுக்கமாக தீர்த்துகட்டிவிட்டு களத்தில் குதிக்கின்றனர். இதனால் ஏற்கனவே அந்த பிசினெஸில் இருக்கும் மும்பை டான் ஷெட்டி (கெல்லி டார்ஜி) ஆத்திரமடைந்து அசல் வாரிசுகளில் இளையவரை கடத்துகிறார். தகவலறிந்து கொந்தளிக்கும் கதாநாயகன் மும்பைக்கு பறந்து ஷெட்டி குருப்பை துவம்சம் செய்து தம்பியை காப்பாற்றுகிறார். அசல் வாரிசுகள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கும் கட்டத்தில் கதாநாயகனை சுட்டு கடலில் வீசுகிறார்கள். இந்த இடத்தில் intermission. கதாநாயகன் சாகமாட்டான் என்பது கடைக்கோடி தமிழ்ரசிகனுக்கும் தெரிந்த விஷயம். உயிர்த்தெழுந்து வரும் நாயகன் அசல் வாரிசுகளை பழி வாங்குவதே பின் பாதி.

AJITH
டைட்டிலில் வெறுமனே அஜித் குமார் என்று போடும்போது தல ரசிகன் என்ற முறையில் வருத்தமடைந்தேன். பின்னர், கதை - திரைக்கதை - வசனம் என்று தல பெயரையும் சேர்த்ததால் படத்திற்கு சேர்ந்த தெய்வதொஷம் கழிந்தது. தலையின் ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப் சூப்பர். தல cigar பிடிக்கும் ஸ்டைல் சூப்பரோ சூப்பர். அந்த மாதிரி cigar எங்கே கிடைக்கும்னு யாராவது கேட்டு சொல்லுங்களேன். மற்றபடி நடிப்பு, சண்டைக்காட்சி, car chasing என்று எல்லாமே கலக்கல். ஆனா தலைக்கு dance மட்டும் யாராவது சொல்லிக்கொடுக்கணும்.

SAMEERA - BHAVANA
சாராவாக சமீரா, சுலபாவாக பாவனா. இருவரில் இவர் கதாநாயகி, இவர் இரண்டாம் கதாநாயகி என்று தரம் பிரிக்க முடியவில்லை. வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகளைப்போல 100% waste என்று சொல்லமுடியாது. ஆனால் 50% waste தான். சமீரா முந்தய படத்தைவிட கொஞ்சம் பொலிவாக தெரிகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். பாவனா ஆரம்பத்தில் லூசுப்பென்னாக காட்டப்பட்டாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நடித்திருக்கிறார். இருவரும் தல மீது தாங்கள் கொண்ட possessivenessஐ பகிர்ந்துக்கொள்ளும் அந்த காட்சி அருமை. படத்தின் முடிவில் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் பாவனாவை அஜித்தின் ஜோடியாக்குவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை அப்பா அஜித்தைப்போல திருமனத்திற்க்குப்பின் சமீராவை ஸ்டெப்னீயாக வைத்துக்கொள்வார் போல.

VILLANS
சம்பத், ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ், கெல்லி டோர்ஜி, பிரதீப் ரவாத் என்று ஏகப்பட்ட வில்லன்கள். இவர்களில் பிரதீப் ரவாத் வழக்கமான டம்மி பீஸ் தமிழ் சினிமா வில்லன். ராஜீவ் கிருஷ்ணாவும் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே அல்லக்கையாக்கபடுகிறார். சம்பத் கஷ்டப்பட்டு பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். சுரேஷ், ஜெமினி படத்தில் வரும் கலாபவன் மணியைப்போல் வித்தியாசமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பின்னர் தொலைந்துபோகிறார். கெல்லி டோர்ஜி மட்டும் மனதில் நிற்கிறார். ஆனால் பாவம் மனிதர் முதல் பாதியிலேயே மர்கயா.

மற்றும் பலர்
டான் சமோசா என்ற நகைச்சுவை பாத்திரத்தில் யூகி சேது. வடிவேலு, விவேக் போல சிரிப்பு டானாக வந்து சென்றாலும் யூகி பேசும் வசனங்கள் எல்லாமே கலக்கல். யூகி இன்னும் கூட பேசியிருக்கலாம்.
சிறப்பு தோற்றத்தில் பிரபு. சந்திரமுகியில் ரஜினிக்கும், வசூல்ராஜாவில் கமலுக்கும் செய்ததை இந்த படத்தில் தலைக்கு செய்திருக்கிறார்.
இவர்களைத் தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை.

பாடல்கள்
பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தன. ஆனால் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. சிங்கம் என்றால்... என்று தொடங்கக்கூடிய பாடல் நீண்ட காலம் நிலைக்கும். துஷ்யந்தா... பாடலில் வைரமுத்துவின் வரிகள் காமக்களியாட்டம் போட்டிருக்கிறது. எங்கே எங்கே... பாடல் திரையில் வராதது ஏமாற்றத்தை தந்தது.

மற்றபடி editing, cinematography, art direction, BGM இதைப்பற்றியெல்லாம் எழுதும் திறமை என்னிடம் இல்லை.

RESULT
விஜய் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கிறார் என்றால் அஜித் இந்தியாவில் இருந்து கிளம்பி பன்னாடுகளில் உள்ள பன்னாடை டான்களை அழிக்கிறார். பரமசிவனில் பாகிஸ்தான், பில்லாவில் மலேசியா, ஏகனில் ஹாங்காங், இப்போது அசலில் பிரான்ஸ். தல இனியாவது முழிச்சுக்கோங்க, இல்லன்னா சன்ரைஸ வேற யாராவது குடிச்சிடுவாங்க.

ajith fans இந்த படத்தை ஒருமுறை ரசிக்கலாம் மற்றவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.


அசல் - ???

படத்திற்கு என்ன one line punch கொடுக்கலாம் என்று நீண்ட நேரம் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. நீங்களே சொல்லுங்களேன்.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

23 January 2010

குழம்பியதும் கிறுக்கியதும்

வணக்கம் மக்களே...

காலம் கடந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் pon magesh, dinesh, ramalingam, MJ, thulukkaanam, pavithran, siddharth, sweet prabhakaran, e prabhakaran ஆகியோருக்கு நன்றி. குறிப்பாக thulukkkanam மற்றும் MJ எழுதிய comments சிறப்பாக இருந்தன. முதன்முறையாக எனது பதிவுகளுக்கு எதிர்மறையான கருத்துக்கள் தெரிவித்து என்னை உற்சாகமூட்டிய MADHUMATHY MUMMYக்கு நன்றி (எதிர்ப்பு கிளம்பினால் இந்த வார்த்தை சில நாட்களுக்குப்பின் mam என்று edit செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்).

என்னுடைய வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்துவரும் pon magesh, dinesh, sweet prabhakaran, ramalingam நால்வரில் ஒருவர் கூட இதுவரை "be a follower" பகுதியின் அங்கமாகவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். உங்களுக்காக மீண்டும் அதற்கான நேரடி link: கீழே இருக்கும் படத்தை click செய்யுங்கள்.

நண்பர்கள் சிலரிடம் இருந்து கிளம்பிய பலத்த எதிர்ப்பின் காரணமாக "எனக்கான பரமனைத் தேடி" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் நான் எதிர்பார்த்ததைப்போலவே TOP 10 FRIENDS என்ற கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிடைத்தது.

ம்ம்ம் சரி... வேறு எதைத்தான் எழுதுவது என்று சிந்தித்தபோது ஏராளமான கருத்துக்கள் முளைத்தன. அவற்றில் passmark வாங்கிய சில கருத்துக்கள் இதோ:

"ரோஸி மிஸ்ஸும் நாய்க்குட்டியும்" என்ற பெயரில் என்மீது தாயன்பு கொண்ட ஒருவருடனான உறவைப் பற்றி அவருடைய அனுமதியுடன் எழுதலாமென்று நினைத்தேன். ஆனால் அது வெண்ணை திரண்டு வரும் நேரத்திலே பானையை உடைத்த கதையாகி விடும். anyhow இப்போது இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் நான் இந்த பதிவை வெளியிடப்போவது உறுதி.

"கனா காணும் காலங்கள்" என்ற பெயரில் பள்ளிப்பருவத்தில் சிறகடித்த அந்த பச்சைக்கிளியை (முருக தனுஷ்கோடி ஸ்கூல் யுனிபார்ம் கலர்) பற்றி எழுதலாமென்று யோசித்தேன். ஆனால் அதில் பல காட்சிகளை censor செய்ய வேண்டியிருக்கும் என்ற காரணத்தினால் தவிர்த்தேன்.

"உலக நாயகி" என்ற பெயரில் ORKUT மூலம் எனக்கு கிடைத்த brazil தோழி zilma de sousa duarte பற்றியும் நாங்கள் பரிமாறிக்கொண்ட எங்கள் நாட்டு கலாச்சாரங்களை பற்றியும் எழுதலாமென்று எண்ணினேன். ஆனால் அந்த பதிவிற்கான முழு தகவல்களை நான் இன்னமும் சேகரிக்கவில்லை.

"சிகப்பு ரோஜாக்கள்" என்ற பெயரில் சிறு வயது முதல் இன்று வரை நான் போட்ட, போட்டுக்கொண்டிருக்கும் காமக் களியாட்டங்களை பற்றி எழுதலாமா என்று எண்ணினேன். ஆனால் அவற்றை இந்த சமுதாயம் கலாச்சார சீரழிவாக கருதி என்னை கைதியாக பார்க்கும். எனவே அந்த எண்ணமும் கைவிடப்பட்டது. (அநேகமாக இந்தப் பதிவு எனது மரண வாக்குமூலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்).

இவற்றையெல்லாம் தாண்டி சில சில்லறைத்தனமான சிந்தனைகளும் வந்தன. எனினும் எனது கடந்த பதிவிற்கும் இந்த பதிவிற்கும் இடையில் நடந்த சம்பவங்களை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஸ்டைலில் எழுதலாமென்று முடிவெடுத்தேன்.

என் கரங்களில் கரம்
குறிப்பு: இது புத்தாண்டிற்கு முன்பு நடந்த சம்பவம்
இது வரை kings ஒன்றே "கெளரவமான" cigarette என்று கருதிக்கொண்டிருந்த நான் சில வாரங்களுக்கு முன்பு நீலகண்டனின் உபயத்தில் black பழகினேன். இந்த வாரம் அதன் குழுவை சேர்ந்த "garam" பழக்கமானது. சில நாட்கள் தொடர்ந்து கரமை ஊதித்தள்ளியபின் ஒரு நாள் பொருளாதார நெருக்கடி காரணமாக kings புகைத்தேன். ச்சீ... எப்படித்தான் அந்த கருமத்தை பிடிக்கிறாங்களோ....

கற்பனைக் கோடுகள்
கல்லூரிகளில் நடக்கும் cultural events பாணியில் எங்கள் கால் சென்டரில் புத்தாண்டையொட்டி NUZZLE என்ற பெயரில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றில் கற்பனைக் கோடுகள் என்ற பெயரில் tamil creative writing competition நடந்தது. உற்சாகத்துடன் அவற்றில் கலந்துக்கொன்டாலும் தலைப்பு என் கற்பனைக்கு தீனி போடும் விதமாக அமையவில்லை. எனினும் தட்டுதடுமாறி இரண்டாவது பரிசை தட்டி வந்தேன்.

ஆசாமியாக மாறிய சாமி
சில வாரங்களாக கழுத்தில் கருப்புத்துண்டை போட்டுக்கொண்டு சாமிகளாக சுற்றித்திரிந்த சிலர் மீண்டும் ஆசாமிகளாக மாறும் நேரம் வந்தது. team leader சுரேஷும் ஆறு நாள் பயணமாக சபரிமலை செல்லத் தயாரானார். அணியை பாதுகாக்கும் பணி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் நான் கொஞ்சம் அதிகமாகவே பொறுப்பேற்றுக்கொண்டேன். team leader இருக்கையில் உட்காராதது மட்டும்தான் குறை.

மீண்டும் புத்தக சந்தை
வழக்கம் போல புத்தகங்களை பார்வையிட முதல் வாரமும் அவற்றை வாங்க இரண்டாவது வாரமும் ஆக இரண்டு முறை புத்தக சந்தைக்கு பயணமானேன். இரண்டாவது முறை செல்லும்போது என் சார்பு விருந்தினராக "சினிக்கூத்து சித்தன்" நூர்கான் கலந்துக்கொண்டான். ஆட்டோ சங்கர், M.R.ராதா, ரத்தன் டாடா போன்ற உன்னத மனிதர்களின் வரலாற்றையும், ஒ பக்கங்கள், படித்ததும் கிழித்ததும் போன்ற கருத்துக்குத்து புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.

ஊசிப்போன பொங்கல்
வழக்கமாக வேட்டி - சட்டை கட்டி அலப்பறையை போடும் பொங்கல் பண்டிகை இந்த முறை black out day ஆகிப்போனது. எனினும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து பொங்கல் வாழ்த்துக்கள் கிடைத்தது. பல மாதங்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியாகியும் பார்க்க முடியாத சூழ்நிலை.

வேட்டைக்காரன் படத்தை இரண்டாவது நாளே பார்த்தவன் ஆயிரத்தில் ஒருவனை இரண்டு வாரம் ஆகியும் பார்க்காதது மிகப்பெரிய வரலாற்றுப்பிழையாகிப்போனது. எப்படியும் அடுத்த வாரத்திற்குள் பார்த்துவிட்டு கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் என் மனதை விடு "எனக்கான பரமனைத் தேடி" அகலவில்லை. தங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment