26 December 2009

எனக்கான பரமனைத் தேடி...! - ஒரு முன்னோட்டம்

வணக்கம் மக்களே...

கடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் sujai narendar, sp vijay, ramalingam, raghavendar, eee karthi, c (??? - யாரென்றே கண்டுபிடிக்க இயலவில்லை), dinesh, pon magesh, pavithran, sweetline preethi ஆகியோருக்கு நன்றி. இதற்கும் ஒரு படி மேலே சென்று "மனோரஞ்சிதம்" என்ற கவிதைத்தொகுப்பை பரிசளித்த பட்டுகோட்டை பிரபாகரனுக்கும் நேரடி வார்த்தைகளில் என்னை புகழ்ந்து கூசிப்போக வைத்த அருள் குமரனுக்கும் ஒரு SPECIAL THANKS.

பட்டுகோட்டை பிரபாகரன் பரிசளித்த மனோரஞ்சிதம் கவிதைத்தொகுப்பில் இருந்து ஒரு சூழ்நிலைக் கவிதை... அதாங்க situation song... sorry poem...


என்
எண்ணத்தில்,
புதிய அலை தோன்றி,
என்னை அறியாமல்
எழுதத் தூண்டியது.
எதை எழுதுவது எழுது கோலால்,
எதையாவது எழுது என,
என் கரங்களுக்கு
எண்ணம் கட்டளை இட்டது.
எழுத நினைத்த நொடி முதல்,
எழுதுகிறேன், எழுதுவேன்.
எக்காளமிட்டு அவற்றை
எதிர்ப்போர் எதிர்க்கட்டும்.
ஏன் எனக்காகத் தான்
எழுதுகிறேன் நான்.
என் எழுத்துக்கு,
என்றும் முதல் வாசகன் நானே.
அனைத்தையும் படைத்தவன்
அவற்றை ஏன் படைத்தான்,
அனைத்தும் பார்த்து வியக்க.
அதனால் நானும் படைக்கிறேன்,
அறிவில் உதித்தவற்றை.

எது எப்படியோ... இதுவரைக்கும் எனது வலைப்பூவிற்கு ஒரு FOLLOWER கூட சேரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். உங்களது வசதிக்காகவும் எனது வாய்ப்பிற்காகவும் இந்த வலைப்பூவின் "be a follower" பகுதிக்கான நேரடி இணைப்பு இது:

விருப்பமுள்ளவர்கள் இணையலாம்.

மேலும் என்னுடைய பதிவுகளைப் பற்றிய உடனடியான தகவல்களையும் sms மூலமாக எனது கருத்துகுத்துக்களையும் பெற விரும்புவோர் கீழுள்ள படத்தை கிளிக்கி பதிவு செய்துக்கொள்ளலாம்.

கட்டுரைக்குள் குதிப்பதற்கு முன்னால் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பும் சில கருத்துத்துளிகள்...

எனது கடந்த இரண்டு பதிவுகளை படித்தவர்கள் சிலர், எனது நலம்விரும்பிகள் சிலர், சுற்றம், நட்பு, தாய் - தந்தை உட்பட பலரும் என்னிடம் கேட்கும் million dollar question: "BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்கிறாயே...?". கேள்வி கேட்பவர்களிடம் வறுமையின் நிறம் சிகப்பு கமல் ஸ்டைலில் "bio chemistry படிச்சிட்டு accounts officeல குமாஸ்தா வேலை பாக்குறானே, அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் சம்மந்தம் இருக்கா என்ன...?" என்று குதர்க்கம் பேசியதுண்டு. இருந்தாலும் இதுபற்றி கழிவறையில் அமர்ந்து கன நேரம் சிந்தித்தேன். BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்வது தவறா...? தவறுதான்... BPOவில் பணிபுரிவது அல்ல... BE படித்தது...

கடந்த வாரம் செய்தித்தாளை மேய்ந்துக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்ட ஒரு செய்தி, "கோவில் கருவறைக்குள் வைத்து என்னை கற்பழித்தார்; அர்ச்சகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்". சின்னச்சின்ன தப்புக்கெல்லாம் கூட கண்ணைக் குத்தும் சாமி இதற்கு என்ன செய்தது...?, எதை குத்தியது...? பக்தகேடிகள் யாரவது இதற்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.

சென்ற வாரமே எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. ஆனால் வேட்டைக்காரன் வெளியான அதே துயர நாளில் நமது பதிவையும் வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பலத்த உயிர்சேதம் ஏற்படும் எனக் கருதினேன்.

நண்பர்களைப் பற்றி எழுத முடிவு செய்துவிட்டேன். ஆனால் யாரைப் பற்றி எழுதுவது...? மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை எத்தனையோ நண்பர்களை கடந்திருக்கிறேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது இரட்டைக் குடுமி போட்டுவரும் நிர்மலா இன்னும் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையில் என்னருகில் அமரும் மோனிஷா இன்றளவும் என் நினைவில் இருக்கிறாள். அட பொண்ணுங்க மட்டும் இல்லைங்க பசங்களும்தான். ஓட்டைப்பல் அருண், u.satish, ganesh, raghavan, v.pradeep, c.harish, gopinath, murali rajan etc etc இவ்வாறாக எந்த ஒரு நண்பனையும் நான் மறந்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுத முடியுமா...? கண்டிப்பாக முடியும். ஆனால் அது ஓரிரவில் சாத்தியப்படாத ஒன்று.

எனவே, நண்பர்களுள் சிறந்த நண்பர்கள் சிலரைப் பற்றி மட்டும் எழுதலாமா என்று எண்ணினேன். அது என்ன "சிறந்த நண்பர்கள்" நண்பர்கள் என்றாலே சிறந்தவர்கள் தானே. எனினும் எனது மனத்தைக் கவர்ந்த நண்பர்கள், மனதை பாதித்த நண்பர்கள் பத்து பேரை மட்டும் தேர்வு செய்து TOP 10 பாணியில் கட்டுரை எழுதலாமென்ற எண்ணம் கொண்டு பத்து பேர் கொண்ட அந்த பட்டியலை தயார் செய்தேன்.

தற்போது எனது மனக்குழப்பம் என்னவென்றால் என்னுடைய வலைப்பதிவை படிக்கும், படித்துவிட்டு comments எழுதும் நண்பர்கள் பலரும் அந்த பட்டியலில் கிடையாது. அது மட்டுமில்லாமல் பட்டியலில் இருக்கும் நண்பர்களில் பலரும் எனது வலைப்பதிவை படித்தது கிடையாது.

இத்தகைய சூழ்நிலையில் அந்த பட்டியலை வெளியிட்டால் comments எழுதக்கூடிய அன்பு நண்பர்கள் மனம் புண்படுமே. எனவே அத்தகைய comments எழுதும் நண்பர்களிடம் இருந்து "no objection" கிடைத்தால் மட்டுமே இந்தப் பதிவை எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.

மீண்டும் ஓர் புத்தாண்டு பிறக்கப்போகிறது. வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் என்னென்ன resolutions எடுத்துக்கொள்ளலாம். நான் எடுத்துக்கொள்ளப்போகும் சில resolutions...
1. கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய் படங்களை திரையரங்குகளில் பார்க்கக்கூடாது.
2. யாருடைய பேச்சையுமே கண்மூடித்தனமாக கேட்க கூடாது. (குறிப்பாக பெண்களின் பேச்சை)
3. பெண்ணாசையை அறவே துறக்க வேண்டும்.
4. எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் கடிந்து பேசக்கூடாது, அழைப்பை துண்டிக்க கூடாது.

மேற்கண்ட resolutionகளில் மூன்றாவதை மட்டும் மனஉறுதி கொண்டவர்கள் யாராவது முயற்சி செய்து பாருங்கள். இப்படி உங்களுக்கு ஏதாவது resolutions இருந்தால் அதைப்பற்றி எழுதுங்களேன்.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

28 November 2009

நைட் ஷிப்டில் நாத்திகம்

வணக்கம் மக்களே...

தயவு செய்து என்னை மன்னிக்கவும். என்னுடைய அடுத்த கட்டுரை எனது நண்பர்களுக்காக நண்பர்களை பற்றியதாக இருக்க வேண்டுமெனக் கருதினேன். ஆனால் அதற்குள் எனக்குள் இருக்கும் night shift நினைவுகள் மறைந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாக அவசர அவசரமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.


கடந்த கட்டுரைக்கு தங்களது விலைமதிப்பற்ற கருத்துக்களை தந்த pon mahesh, tyagu மற்றும் சில நண்பர்களுக்கு கோடி நன்றிகள். இந்த முறையும்உங்கள் மேலான ஆதரவையும் பொன்னான கருத்துக்களையும் கொடுக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.
இனி உள்ளே...

september மாதம்... மார்கழி மாதத்தை மன்மத மாதம் என்று சொல்வதுபோல என்னைப்பொறுத்தவரையில் september மாதம் நாத்திக மாதம். இது தந்தைபெரியார் பிறந்த மாதம். இதே மாதத்தில் தான் நானும் பிறந்தேன். ஆனால் நானொரு சிறியார் தான். சில மாதங்கள் முன்பு வரை நான் சிலகாரணங்களுக்காக எனக்குள் நாத்திகத்தை (மன்னிக்கவும்... பகுத்தறிவை) மறைத்து வைத்துக்கொண்டு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திகோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்து வந்தது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது நான் மீண்டும் நானாக...

september 3 2009 - முதன்முறையாக night shift வேலைக்கு கிளம்பினேன். எங்களது batchல் உள்ள trouser boys சிலரும் seniors 8 பேர் மட்டுமே அணியில்இருந்ததால் நான் தனித்தீவாகவே இருந்தேன். சில நாட்கள் வரை seniors அந்நியர்களாகவும் team leader நண்பராகவும் தெரிந்தது. ஆனால் ஓரிருநாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. நானும் பாலும் தயங்கிதயங்கி seniors கூட்டணியில் இணைந்தோம். பின்னர் paul விஷனின் நக்கல்ஸ் தாங்க முடியாமல் கூட்டணியில் இருந்து விலகி மலையாளக்கரையோரம் ஒதுங்கினான்.
இனி நானும் சீனியர்சும்...

seniors என்பதால் சில காலம் வரை அணியில் ஊமையாக மட்டுமே இருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி டீக்கடையில் meeting போடுமளவிற்கு ஒன்றுகூடினோம். ஆனால் அவர்கள் முன்னிலையில் புகை நமக்கு பகை என்றே காட்டிக்கொண்டேன். தினமும் பின்னிரவில் யாருக்கும்தெரியாமல் smoking loungeல் ஒளிந்து ஒளிந்து புகைத்துவிட்டு வருவேன்.

night shift என்பதால் நாங்கள் தூங்கிக்கொண்டோ மந்தமாகவோஇருந்ததில்லை. எப்போதும் அரட்டை தான். இதில் wanted fellows - saravanan and vishan. sense of humourல் சரவணன் வடிவேலுவைப் போலவும் விஷன்விவேக்கை போலவும் செயல்படுவார்கள். சரவணன் அவ்வப்போது உள்ளே புகுந்து வடிவேலு வசனங்களை சொல்லி சிரிக்க வைப்பார். விஷனின் பேச்சு வித்தியாசமானது. அதில் நகைச்சுவையை விட சமூகக்கருத்துகள் அதிகம் அடங்கியிருக்கும்.

காலம் உருண்டோட அவர்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர். அவர்களுக்கருகில் login செய்வதையே விரும்புவேன். sunday அவர்கள்இருவருக்கும் OFF என்பதால் அன்று அலுவலகம் செல்வதையே வெறுப்பேன். குறிப்பாக விஷன் என்னை அதிகம் கவர்ந்தார். அவருக்குள் இருக்கும் நெருப்பை நான் சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.

vishan - அவரை vision என்று கூட சொல்லலாம். பெரியார்த்தொண்டர், அதற்கும் மேலாக கமல் பக்தர். விஷனின் பேச்சை கேட்பதற்காகவே தினமும் அலுவலகம் சென்றேன். கமல் படங்களின் வசனங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு அவ்வப்போது timing comedy அடிப்பார். (இந்த கட்டுரையை எழுதும் இந்த நாளில் vision பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதை மன மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்)

இப்படியாக அரட்டை அரங்கம் போல செயல்பட்டு வந்த night shift, team leader சுரேஷின் அக்கப்போரால் சலனமடைந்தது. இதன் காரணமாக
மாதக்கடைசியில் pilot batch உறுப்பினர்கள் சிலர் பணியை துறக்க முடிவு செய்தனர். இதை ஒரு பிரிவு உபசார தினமாக கடைபிடிக்க திட்டமிட்டோம். october 7 மாலை t.nagar eagle barல் farewell நடத்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த ஓராண்டுகாலமாக மதுவின் பிடியில் இருந்த நான் இப்போது மதுவை
நாட முடிவு செய்தேன் (பொருள் வேற்றுமையை உணர்ந்து கொள்க). நாங்கள் barல் cheers சொன்னபோது எனக்குள் இருந்த senior - junior வேற்றுமை தொலைந்தது. முதன்முறையாக அவர்கள் முன்னிலையில் புகை பிடித்தேன். உற்சாகம் பொங்கி 5 round தாண்டியபின் அங்கே என்ன நடந்ததென்றே நினைவில்லை. (இந்த இடத்தில் அன்றிரவு என்னை பாதுக்காப்பாக அழைத்துச் சென்ற நண்பர்கள் pon mahesh, ashokக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்).

சரிபாதி seniors கழண்டுகொள்ள vignesh, velan, vivek ஆகியோரை எங்கள்
கூட்டணியில் இணைத்துக்கொண்டோம். எப்படி கூட்டணி கலைந்து மாறினாலும் விஷன் தான் center of attraction. team leader சுரேஷ் அவ்வப்போது எங்கள் கூட்டணிக்கு அலப்பரைகள் கொடுத்ததால் team manager தலைமையில் பஞ்சாயத்தை கூட்டினோம். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சட்டம் அவரை தண்டிக்கவில்லை.

இத்தகைய கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் காரணமாக manager எங்களை day shift
க்கு மாற்ற திட்டம் வகுத்தார். november 1 முதல் day shift என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. night shiftஐ பிரிவதற்கு வருத்தமாக இருந்தாலும் day shiftல் பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று தெரிந்ததும், காய்ந்த மாடுகளாக கம்பங்கொல்லையை மேய தயாரானோம்.

அடுத்த கட்டுரை நிச்சயமாக கண்டிப்பாக எனது நெருங்கிய பள்ளி, கல்லூரி
நண்பர்களை பற்றியது. அதற்கான முன்னோட்டம் தான் தற்போதைய polls.

தலைப்பு: எனக்கான பரமனைத் தேடி...!


என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

14 November 2009

கால் சென்டரில் கம்யூனிசம்

வணக்கம் மக்களே...

நீண்ட யோசனைக்குப்பிறகு பல நாட்களின் சிந்தனைக்குப் பிறகு நான் எனது கருத்துக்களை இந்த கட்டுரையின் மூலம் தொடங்குகிறேன். எனக்கு உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்து உதவ வேண்டுகிறேன். அது மட்டுமில்லாமல்...
WHATEVER U THINK ABOUT MY POST, MY BLOG PLEASE POST UR COMMENTS HERE OR SMS ME @ 9840279581 OR ELSE SIMPLY SCRAP ME....
ரொம்ப THANKS...!


call center, communism இரண்டும் முற்றிலும் முரண்பாடான ஒன்று என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால் அவை இரண்டும் எனக்குள் அடங்கியிருக்கிறது. வேலையில்லாத விரக்தியில் இருந்த எனக்கு வாழ்வளித்தது, allsec technologies எனும் call center. ஆனால் எனக்குள் ஒரு "கற்றது தமிழ்" பிரபாகர் ஒளிந்திருப்பது என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்கள் சிலரும் நானும் மட்டுமே அறிந்த ரகசியம். தலைப்பிற்கேற்றபடி அழுத்தமான, ஆழமான கருத்துக்கள் இந்த கட்டுரையில் இடம் பெறவில்லை என்றாலும் எனது allsec அனுபவங்களை சில கருத்துக்களோடு கலந்து தெளித்திருக்கிறேன், தெரிவித்திருக்கிறேன்.

june, july 2009 - "வறுமையின் நிறம் சிவப்பு" கமலை போல கம்யூனிச கருத்துக்களுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம். HCL, HOV services, e4e business solutions உட்பட சிலபல BPO interviewக்களில் வெளியேறிய விரக்தி எனக்குள் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் july 24 2009 முழு மனதின்றி allsec technologies interviewக்கு சென்றிருந்தேன். கட்டிடத்தை பார்த்தவுடனேயே எனக்குள் கொஞ்சமாக சூழ்ந்திருந்த நம்பிக்கையும் பறிபோனது. ஆனால் எதிர்பாராவிதமாக allsecன் தேவை காரணமாக நானும் தேர்வு செய்யப்பட்டேன்.

ALLSEC TECHNOLOGIES - unity in diversity என்பார்களே அது போல பல விதமான domestic மற்றும் international process அடங்கிய call center. என்னுடன் வேலைக்கு சேர்ந்தவர்களில் பலரும் "யாரடி நீ மோகினி" தனுஷை போல english பேசக்கூடியவர்கள் என்பதால் எனக்கு எந்தவித அச்சமும் கூச்சமும் ஏற்படவில்லை. எனக்கு மேலும் தெம்பூட்டும் விதமாக "assault" ராமும் allsecல் இணைந்திருந்தான். நான், ராம், வெங்கடேஷ் பெருமாள், தியாகு நால்வரும் இணைந்து புதுக்கூட்டணி அமைத்தோம். சேர்ந்த முதல் ஒரு வாரத்தில் international முகங்களே அதிகம் தென்பட்டது. இது தவிர mavis beacon, lemon tea etc etc....


ஒரு வாரம் கழிந்தபின் எங்கள் நால்வர் கூட்டணி இரண்டாக உடைக்கப்பட்டது. நானும் ராமும் trainer பாலாஜிக்கு கீழே இணைந்தோம். trainer பாலாஜிக்குள் ஒரு communist இருப்பதை நான் முதல் நாளே கண்டுக்கொண்டேன். ஓரிரு நாட்கள் வரை நானும் ராமும் தனியாக இருந்தோம். பின்னர் நான், ராம், பிரதீப் சீலன், ஷாஜகான், ராஜேஷ், முரளி, முரளி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 7 பேர் கூட்டணி உருவானது. எங்களுடைய கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாக இணைந்திருந்தோம். training session முடியும் வரை பெண்கள் வாசனையே இல்லாமல் இருந்தது கொடுமையிலும் கொடுமை.


budding process ஆரம்பமானபோது எங்களது ஏழு பேர் கூட்டணி மூன்றாக சிதறி நானும் சீலனும் இணைந்தோம். நானும் சீலனும் நெருக்கமான நண்பர்களானோம். இருவரும் ஒன்றாகவே பெண்கள் அருகில் budding உட்கார்ந்தோம். ஒன்றாகவே sight அடித்தோம். நானும் அவனுடன் சேர்ந்து புகை பிடிக்க ஆரம்பித்தேன்.


இவ்வாறாக எங்களுக்குள் நாங்கள் வேறுபாடின்றி இருந்தபோதும், international call center culture என்ற ஒன்று இருந்தது. இறுக்கமான T-shirt (வாசகங்கள் பொறிக்கப்பட்ட), அவிழ்ந்து விழும் நிலையில் jeans அணிந்த பெண்கள் எங்களை ஏளனமாக பார்த்த சம்பவங்களும் நடந்தது. காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு தலையில் காரக்குழம்பை கொட்டிக்கொண்ட international fuckers எங்களை வித்தியாசமாக பார்த்தனர்.


இத்தகைய சர்வதேச call center கலாச்சாரத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆண் - பெண் நட்பு. எப்படிப்பட்ட நட்பு இது...? smoking loungeல் மூன்று ஆண்கள் சுற்றி நின்றுக்கொண்டு நடுவில் நிற்கும் பெண்ணின் முகத்தில் புகையை ஊதுவார்கள். பின்னர் நால்வரும் சேர்ந்து கலகலவென சிரிப்பார்கள். liftக்குள் அவ்வப்போது முத்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். sense of humour என்ற பெயரில் உடன் வேலைபார்க்கும் பெண்ணைப் பற்றி கொச்சையாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் கூட்டமும் உண்டு.


இது போன்ற வேடிக்கை, வேற்றுமைகளை கடந்தபின் நாங்கள் docomo என்னும் domestic processக்குள் நுழைந்தோம். script, mock calls, avaya, aux என்று சிலபல technical terms கடந்தோம். சில நாட்கள் 3 to 12 shiftல் அனைவரும் ஒன்றாக இருந்தோம். august மாத இறுதிநாளில் யாரும் எதிர்பாரா வண்ணம் shift timings தாறுமாறாக மாற்றப்பட்டது. எனக்கும் சீலனுக்கும் night shift கிடைத்தது. தகவல் அறிந்ததும் நானும் சீலனும் அலறிக்கொண்டு team leader சுரேஷை சந்தித்து shift மாற்றித்தரும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் எதிர்பாரா விதமாக சீலன் மட்டும் வேறு shiftக்கு மாற்றப்பட்டான். எனவே september மாதம் ஆரம்பமானதும் நான் night shiftக்கு செல்ல தயாரானேன் . . . .

மற்றவை விரைவில்......

தலைப்பு: NIGHT SHIFTIL NAATHIGAM - நைட் ஷிப்டில் நாத்திகம்

FRIENDS AGAIN IM TELLING PLEASE POST UR COMMENTS HERE OR SEND IT TO 9840279581 OR ELSE SCRAP ME...! BUT PLEASE GIVE UR VALUABLE COMMENTS.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

21 February 2009

என் கடவுள்...!

வணக்கம் மக்களே...


[25.2.2009 தேதியிட்ட ஆனந்த விகடனில் "ப்போ... பொய் சொல்றே...!" என்றபெயரில் தாமிரா எழுதிய இந்த சிறுகதை எனக்கும் கடவுளுக்குமான உறவைபற்றி தெளிவாக சொல்வது மட்டுமில்லாமல் என் நிஜவாழ்க்கையை உரசிச்செல்வதால் இதனை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.]


"என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்" என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது.



"ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ...? இருக்கிற கடவுள்களுக்குள் நடக்கற எழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. "சரக்கப் போடுறா... சரக்கப்போடு!" என்றபடி மீண்டும் குடிக்கத் துவங்கினான்.



"எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் நான் நாத்திகனும் இல்லை. ஆனாலும், எனக்குள்ள இருக்கிற பக்தியைச் செலவழிக்க ஒரு கடவுள் வேணும்." - தீர்க்கமாக இதைச் சொன்னபடி, மிச்சமிருந்த சரக்கை ஒரே மடக்காக எடுத்துக் குடித்தேன்.



"நாட்ல எத்தனை கடவுள், அதுல எத்தனை சப் டிவிஷன்ஸ், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன், ஆல்கஹால், நான் ஆல்கஹால்னு."



"எந்தக் கடவுளையும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு கம்பர்ட்டபிளா ஒருகடவுள் வேணும்."



"எப்படிப்பட்ட கடவுள். புரியலடா...?"



"பிரெண்ட்லியா இருக்கணும்."



"அப்ப என்னைக் கடவுளா ஏத்துக்க. டெய்லி ரெண்டு பீர் பாட்டில் படையல் சாத்து. அருள் பாலிக்கிறேன்" என்றபடி சைட் டிஷ்ஷுக்காக டேபிளைத் தடவினான். இனி, இவனிடம் பேசினால் எனக்குள் இருக்கும் கடவுளைக் கருக்கலைத்துவிடுவான். நான் எழுந்துக்கொண்டேன்.



அறைக்குத் திரும்பியபோது என்னுள் கடவுளின் தேவை அதிகரித்திருந்தது. ராகவனின் கேள்வி உள்ளே முட்டித் திரிந்தது.



"எப்படிப்பட்ட கடவுள் வேணும்...?"



அந்தக் கேள்வியில் பயணமானேன். 'என் கடவுளின் பெயர் என்ன...? நிறம்என்ன...? அதன் சக்தி என்ன...? என் கடவுள் ஆணா... பெண்ணா...?' - கேள்விகள் சங்கிலித் தொடராக நீண்டன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.



காலையில் டீப்பாய் மீது கடவுள் அமர்ந்து இருந்தாள். பச்சை நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். கறுப்பென்றாலும் களையான முகம். குட்டிக்குட்டிக் கை விரல்கள். அதில் சின்னதாக சோம்பலில் வளர்ந்த நகம். எண்ணெய் வாராத ஒற்றைக் கூந்தல். சிரித்தால் பளீரெனத் தெரியும் பல்வரிசை. இவள் யார் என்கிற குழப்பத்தையும் மீறி, அவளை எனக்குப் பிடித்திருந்தது.



நான் அவளைக் குழப்பமாகப் பார்த்தேன். அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்தாள். என் கடவுள் ஒரு பெண் என்று நான் தீர்மானித்திருக்கவில்லை. ஆனாலும், அவள் பெண்ணாக வந்தது நன்றாகத் தான் இருந்தது.



"முகம் கழுவிட்டு வா... டீ சாப்பிடலாம்" - அது கடவுள் எனக்கிட்ட முதல்கட்டளை. நான் அவசரமாகப் புறப்பட்டேன்.



இருவரும் சாலையில் இறங்கி நடந்தபோது, இரவு பெய்த மழையால் சாலை ஈரமாக இருந்தது. இருவரும் அமைதியாக நடந்துகொண்டு இருந்தோம். அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என் கடவுள் எப்படி இருக்குமென நானே தீர்மானிக்குமுன் வந்து நிற்பவளிடம் என்ன பேசுவது?



அவள் பேசினாள். "நான் வேணும்னு ஏன் நெனைச்சே...?"



"எனக்கே எனக்குன்னு ஒரு கடவுள். அது என் பிரார்த்தனையை மட்டும்தான் கேக்கணும். என் வழிபாட்டை மட்டும்தான் ஏத்துக்கணும். பாரதி, காளியைக் கொண்டாடின மாதிரி, கண்ணம்மாவைக் கொண்டாடின மாதிரி நானும் கொண்டாடனும்."



அவள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.



நான் தயக்கமாக, "இப்ப இப்படித் தோணுது. கடவுள் வேணும்னு நினைச்சப்போ இதெல்லாம் யோசிக்கலை" என்றேன்.



அவள் சிரித்தாள். அதில் தெய்வீகம் இருந்தது. இருவரும் டீ சாப்பிட்டோம். நான் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.



"எனக்கும் ஒன்னு குடு" என்றாள்.



"ஐயையோ! கடவுள் சிகரெட் பிடிக்கலாமா?"



"அப்ப நீயும் பிடிக்காத" என்றபடி என் உதட்டில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி எடுத்துப்போட்டாள். எனக்கு அந்த இயல்பு சினேகமாக இருந்தது. பிடித்திருந்தது. அவள் கடவுள் என்கிற நம்பிக்கை வந்தது.



"சந்நிதி ஏதும் அவளுக்கில்லை - அவள்
சாத்திரம் பேசும் கடவுளில்லை.
ஐம்பெரும் பூதப் பெருங்கலவை - இந்த
அவனியில் அவள் போல் தெய்வமில்லை"

என நான் கவிதை சொன்னதும், அவள் "என்ன இது?" எனக் கேட்டாள். நான்முதல் முறையாக அவள் முன் சிரித்தேன்.



"கடவுள்னா ஒரு துதிப் பாடல் வேணும்ல" என்றேன்.



அவள் ஒரு முறை அந்தக் கவிதையை முணுமுணுப்பாகச் சொல்லிப்பார்த்துவிட்டு, "எனக்குப் பிடிக்கலை" என்றபடி வேகமாக நடக்கத் துவங்கினாள். கடவுளுக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் முரண் அது.



"ஏன் பிடிக்கலை?"



"உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கலைன்னாபிடிக்கலை. அவ்ளோதான்" என்றபடி போய்க்கொண்டே இருந்தாள்.



அந்தக் கோபம் எனக்குப் பிடித்திருந்தது. அன்று மாலை வரை இருவரும்எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில் அவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தாள். கன்னத்தில் கை வைத்து உதடு சுழித்து அவள் படித்த விதம் அழகாக இருந்தது.



"இந்த போஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே" என்றேன். சட்டெனத் திரும்பிஎன்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, "நான் தேவதையா... கடவுளா...?" என்றாள்.



அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒருசின்னத் தடுமாற்றம் எழுந்தது. கடவுளை உருவாக்குவதில் ஏதோ தவறு நேர்ந்து, தேவதையை உருவாக்கிவிட்டேனோ என்ற சந்தேகம் எழுந்தது.



"என்ன முழிக்கிறே...? சொல்லு, தேவதையா... கடவுளா?



"தேவதைக் கடவுள்!"



"ப்போ... பொய் சொல்றே" என்றாள். ப்போ எனக் கண் சிமிட்டித் தலைசாய்த்துச் சொன்னபோது அவள் மீது பேரன்பும் பெருங்காதலும் ஏற்ப்பட்டது.



அந்தக் கணத்திலிருந்து நான் ஆண் ஆண்டாளாக மாறி இருந்தேன். சட்டெனஅனிச்சையாக அவள் பாதம் தொட்டேன். விசுக்கேனக் காலைஇழுத்துக்கொண்டாள்.



"இது எனக்குப் பிடிக்கலை... ப்ளீஸ்!"



"ஏன்? கடவுள்னா பாதம் தொட்டுக் கும்பிடணும்ல?"



"இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி இல்லேன்னு தோணுது."



"இருக்கு. நீ கடவுள்.!"



அவள் மெளனமானாள். அந்த மெளனம் ஆழமானதாக இருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகு, "அந்தக் கவிதை நல்ல கவிதை... சந்நிதி ஏதும் அவளுக்கில்லை... அவள் சாத்திரம் பேசும்... திரும்பச் சொல்லேன்" என்றாள்.



நான் கவிதை சொன்னதும் அவள் என் விரல்களை கோத்துக்கொண்டாள்.கடவுளின் முதல் ஸ்பரிசம். மெல்லத் தோள் சாய்த்து அரவணைத்துக்கொண்டாள். கடவுளின் முதல் அரவணைப்பு.



அதன்பின் கடவுளுக்கும் எனக்கும் இணக்கமான சூழல் ஏற்ப்பட்டது. நான் எங்கு சென்றாலும் கடவுளோடு தான் சென்றேன். எதைத் துவங்கினாலும், அவள் பாதம் தொட்டுத்தான் துவங்கினேன். அடுத்து வந்த பெருமழைக்காலம் முழுவதும் நானும் அவளும் சேர்ந்தே இருந்தோம். அது தாய்மையும் கருணையும் பெருகிப் பெய்த காலம்.



மழை பெய்யும்போதெல்லாம் ஒரு பறவையின் சிறகுகள் அவள் விலாப்புறத்தில் முளைக்கும். ஏகாந்தமாக கைகளை அகல விரித்து நனைவாள். ஒவ்வொரு துளியும் அவளுக்கு ஒவ்வொரு மழை. துளித்துளியாய் தொட்டு நனைவாள். மழை அழகு. அவள் நனையப் பெய்கிற மழை பேரழகு. ஈரம் சொட்டச் சொட்ட அவள் வந்து அமர்கையில், அவள் கூந்தலிலிருந்து மழை பொழியும். அந்த தண்ணீர்த் தருணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை.



நனைந்து திரும்பும்போதெல்லாம் அவளுக்கு ஒரு கறுப்புத் தேநீர் தேவைப்படும். நான் ஊற்றிக் கொடுக்க, அந்தக் கோப்பையை மழையில்ஏந்தி இரண்டொரு துளிகளோடுதான் தேநீர் அருந்துவாள். "இதென்ன பழக்கம்?" எனக் கேட்டேன்.



"மழைத் தேநீர்டா!" என்பாள்.



இந்தக் கேள்வியும் பதிலும் எங்களுக்குள் நிலையானது. "மழை பற்றிஏதாவது சொல்லேன்" என்றாள் ஒரு நாள். அது மழையற்ற நாள். சூரியன் உச்சியில் எரித்த நேரம்.



"இப்ப எதுக்கு மழைபற்றிச் சொல்லணும்?" எனக் கேட்டேன்.



"சொல்லேன்" என்றாள் என் ராக மனுஷி.



"உலர்ந்து போய்விட்டன



முன்னர் பெய்த மழை ஈரங்களும்



நம் முத்தங்களும்" என்றேன்.



சட்டெனக் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட்டாள். அது அவள் எனக்களித்த முதல் முத்தம். அந்த முத்த அதிர்ச்சியில் நான் உறைந்துபோயிருந்தேன். அவளது இரண்டாவது முத்தம் உயிர் கொடுத்தது.



"இந்த ஈரம் காயரதுக்குள்ள மழை பெய்யும் பாரு" என்றாள். பெய்தது. அது அவள் மழை. கடவுள் மழை.



கடவுளுக்கும் எனக்குமான ஸ்பரிச பந்தம் அன்றிலிருந்து துவங்கியதுதான். அடுத்து நான் எழுதிய கவிதை தொகுப்பு முழுக்க மழையாக இருந்தது. அவளாக இருந்தாள். மழை சகி, மழை ரட்சகி, மழை ராட்சசி என்று எழுதியதில் அவளுக்கு அநேக கோபம் எழுந்தது.



அந்த ராட்சச அன்புக்குக் கட்டுப்பட்டவனாக நான் இருந்தேன். எனக்கான நண்பர்கள் வட்டம், உறவுச் சங்கிலிகள் எல்லாம் அறுந்து, என் உலகம் ஒற்றை மனுஷியால் ஆனது என்றாகிவிட்டது. அவளைத் தவிர்த்து வேறுயாரிடமும் பேச எனக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. பெருநகர வீதிகளில்அவளோடு நடந்தால், அந்தச் சந்தடி சாலையில் நாங்கள் இருவர் மட்டும் இருப்போம்.



ஒரு நாள் கோயிலுக்குப் போகலாம் என அழைத்தான் ராகவன். "நான்தெய்வத்தோடுதான் இருக்கிறேன்" என்றேன். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. அவள் சிரித்தாள்.



"ஏன் சிரிச்சே?" என ராகவன் போனதும் கேட்டேன்.



"உன் கடவுள் உனக்குள்ள இருக்கிற ரகசியம். அவன்கிட்ட தெய்வத்தோடு இருக்கிறேன்னு சொன்னா உன்னைப் பைத்தியமாப் பார்ப்பான்" என்றாள்.



அவள் பேச்சின் உண்மை என்னை மெளனமாக்கியது. பகிர்ந்துகொள்ள இயலாத சந்தோஷங்களும் துயரங்களும் எத்தனை வலிமிக்கவை எனஉணர்ந்துகொண்டேன். யாரிடமாவது கடவுள் பற்றிச் சொல்ல வேண்டும்என்று தோன்றியது. நண்பர்களற்ற இன்றைய நிலையில் நான் யாரிடம் சொல்வது?



என் குழப்பத்தை அவள் ரசித்தாள். "நான் உனக்குப் பெரிய இம்சையா இருக்கிறேன்" என்றாள். இல்லையென வெளிப்படையாக மறுத்தாலும், இவள் ஓர் அவஸ்தை என உள்மனம் உணர்த்தியது. என்னுள் மெள்ளப்படர்ந்து என்னை ஆக்கிரமித்தவள், என் எழுத்துக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டாள். அவளைத் தவிர்த்து எழுத என்னுள் எதுவும் இல்லை. என் கடவுள் என்னை முடக்கிவிட்டது என்றே தோன்றியது. இதை அவளிடம் சொன்னபோது, "நான் போகிறேன்" என்றாள் மூர்க்கமாக.



பக்தர்களைக் கடவுள் நிராகரிக்கலாம். கடவுளை பக்தர்கள் நிராகரிக்க இயலுமா? நான் மீண்டும் அவளிடம் சரணடைந்தேன். கூப்பித் தொழுத என்கை விரல்களில் கூடக் கண்ணீர் கசிந்தது.



எதுவும் பொருட்டில்லை அவளுக்கு. எழுந்து நடந்தாள். ஒரு யாசகப்பயணமாக நான் அவளைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நடைக்குப் பின் சற்று நின்று திரும்பிப் பார்த்தவள்...



"கடவுள் கடவுள்னு கொண்டாடுறியே... எனக்கு ஒரு பேர் வெச்சியா?" என்றாள். நான் ஓடிச் சென்று அவள் எதிரே போய் நிற்க, அருகில் இருந்த மைல் கல் மேல் அமர்ந்தாள்.



"சரி வா, உனக்கு ஒரு பேரைக் கண்டுபிடிப்போம்."



"மாட்டேன் போ. எனக்கு பேர் வெச்சிட்டுக் கூப்பிடு. வர்றேன்." என்றாள்.



சாலையில் வாகனங்கள் இரைச்சலுடன் கடந்து சென்றுகொண்டு இருந்தன. வானம் கருமேகமாக திரண்டு மழைக்கான ஆயத்தங்களில் இருந்தது. மழைபெய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. மழைக்கு என் கடவுள்சாந்தமாகும்.



இவளுக்கு மழையைத்தான் படையல் சாத்த வேண்டும். மனசுக்குள் மழைப்பிரார்த்தனை தொடங்கியது. நான் கண்களை மூடிக்கொள்ள, அவள் பேசத்துவங்கினாள்.



"மழை பெய்யப்போகுது. என் மேல் முதல் துளி விழறதுக்குள்ள என் பேர்என்னன்னு சொல்லிரனும். இல்லன்னா போயிட்டே இருப்பேன்."



"பிரைடா காலா" என்றேன்.



"ஐய..."



"காலி, மாரி, அம்மான்னு ரொட்டீனா வேணாமேன்னு பார்த்தேன். பிரைடாகாலான்னா, ஒரு பெண் ஓவியரோட பேர்."



உதடு பிதுக்கிப் பிடிக்கவில்லை என மறுத்தாள். அவள் மேல் முதல் துளிவிழுந்த கணத்தில், "லிவ் உல்மன்" என்றேன். அவள் முகம் பிரகாசமாகியது. 'லிவ் உல்மன்' - ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.



"நல்லா இருக்குடா. யார் இவங்க?" என்றாள்.



"ஒரு பெரிய நடிகை" என்றேன்.



தலையைக் கம்பீரமாகச் சாய்த்து எழுந்து, "நானும் பெரிய நடிகை. எல்லாஉணர்ச்சிகளையும் எப்படி வெளிப்படுத்தறேன்னு பாரு" - சட்டென மாறிய பாவனைகள் அழகாக இருந்தன. அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு, "என் மேல கோபப்படாத. என்னைவிட்டுப் போயிடாத. உன்னைப் பிரியற மனசும் தெம்பும் எனக்கு இல்லை" என்றேன். இதைச் சொல்லும்போது நான் ஒரு குழந்தையாகி இருந்தேன்.



இருவரும் நனைந்தபடியே நடந்தோம்.



"என் பேரை ஒரு தடவி சொல்லு."



"லிவ் உல்மன்..."



"நீ என்னை எப்படிக் கூப்பிடுவே?"



"லிவ்னு கூப்பிடுறேன். ப்ளீஸ்! ஆல்வேஸ் லிவ் வித் மீ லிவ்" என்றுசொல்லவும் கலகலவெனச் சிரித்தாள். அவள் பற்களில் மழைத்துளிகள் பட்டுத் தெறித்தன.



அந்தக் கணத்தில் கடவுளை நான் ஒரு ரசனைமிக்க குழந்தையாக பார்த்தேன். அவள் விரல்கள் மழையில் தாளமிட்டபடி வந்தன. மழைச்சத்தத்தையும் மீறி அதில் ஓர் இசை தெறித்ததாக உணர்ந்தேன்.



நாங்கள் எங்கள் தேநீர்க் கடையைத் தாண்டினோம்.



"ஒரு மழைத் தேநீர் அருந்தலாமா?" கேட்டேன். அவள் அண்ணாந்து வாய்திறந்து மழை குடித்தபடி "மழையையே அருந்தலாம்" என்றாள்.



"லிவ்" என்றேன். ஆயிரம் வார்த்தைகளின் அழுத்தம் அந்த ஒற்றைஅழைப்பில் இருந்தது.



அவள் தலை கவிழ்த்து என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் சொல்லஇயலாத ஒரு தடுமாற்றத்தோடு நின்றேன். முகத்திலிருந்த மழை நீரை வழித்து துடைத்தாள். பறவைகள் சிறகு உலுப்புவது போல் உடலை ஒருமுறை உலுக்கிக்கொண்டாள்.



நான் அவளையே பார்த்தபடி இருந்தேன். என் அருகில் நேருக்கு நேராகப்பார்த்தபடி, "வாட் மேன்?" என்றாள். நான் அமைதியாக இருந்தேன்.



"இப்ப நீ எதுவும் பேச மாட்டே. எனக்குத் தெரியும்."



அவள் சொல்வது சரி. இப்போது நான் எதுவும் பேசமாட்டேன். என்னுள் வார்த்தைகள் பாறையாக உறைந்து போயிருந்தன. எங்கள்இருவருக்குமிடையே மழை பேசிக்கொண்டு இருந்தது.



நான் நிற்பதா... நடப்பதா என்ற கேள்வியோடு இருந்தேன். ஈரநடுக்கம் என் இதயம் வரை பரவி நின்றது. துளித் துளியாகப் பெய்தது துக்க மழை.



என்னை ஊடுருவிக் கடக்கும் பார்வையுடன் அவள் நின்றாள். அந்தப்பார்வை எனக்குள்ளிருந்த பக்தியையும் பேரன்பையும் வருடித்தான் சென்றிருக்கும்.



வலது கையை என் தோளில் வைத்தபடி பேசத் துவங்கினாள். "உனக்குத்தேவைப்பட்டது கடவுள் இல்லை... காதல். காதல் வேற, கடவுள் வேற. காதல், கடவுளாக முடியாது. கடவுள், காதலியாக முடியாது. ஒரு நல்ல பெண்ணாத் தேடிக்கோ" என்றபடி நடந்தாள்.



என் தேவை கடவுள்தான். நான் காதலைக் கடந்து வந்தவன் என்பதைஅவளுக்கு உணர்த்த முடியவில்லை. அல்லது, அவள் உணரவில்லை.



இப்போதும் என் எதிரிலேயே இருக்கிறாள். குறுக்கும் நெடுக்குமாக என்னைக் கடந்தும் செல்கிறாள். அவள் முகத்தில் பழைய ஒளி இல்லை. புன்னகை இல்லை. அவளுள் எதையோ பறிகொடுத்த துயரம் உறைந்துகிடக்கிறது. என்னை நோக்கி நகர யத்தனிக்காத வைராக்கியம் அவளுள் நிரம்பித் தளும்புகிறது. இன்னும் அவள் எனக்குக் கடவுளாக இருக்கிறாள். ஆயினும், நான் கடவுளற்ற மனிதனாக இருக்கிறேன்...!


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

2 February 2009

வரவேற்பறை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.


இது என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பல்வேறு நாளேடுகளிலும், வாரமலர்களிலும் நான் படித்த நல்ல கருத்துக்களையும் அன்றாட உலகில் நான் கற்ற நல்ல விஷயங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

அரசியல், சினிமா, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தகவல்களும் கருத்துகளும் இங்கே இடம் பெறும்.

என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment