ரொம்ப நல்லவங்க...!

March 19, 2012

பிரபா ஒயின்ஷாப் – 19032012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம். ஒரு மேட்ச்சில் இந்தியா தோற்றுவிட்டால் உடனே டுபாக்கூர் பசங்க என்ன விளையாடுறாங்க என்றும், அடுத்த ஆட்டத்தில் ஜெயித்துவிட்டால் எதிர் டீம்காரங்க காசு வாங்கிட்டாங்க என்றும் கூசாமல் பேசுகிறார்கள். இதெல்லாம் ஃபிராடு. பூரா பயலுவளும் காசை வாங்கிட்டு ஆடுறாங்க. ஒரே மேட்ச் பிக்ஸிங் என்று புலம்புபவர்களும் கள்ளத்தனமாக கிரிக்கெட் பார்க்கத்தான் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட். அவர்கள் உண்மையாக விளையாடுகிறார்களா மேட்ச் ஃபிக்ஸிங்கா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எனக்குத் தேவையில்லை.

கடந்த வாரத்தை ஒரு Nostalgia வாரம் என்று சொல்லலாம். நேற்று மாலை நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படத்தை சாந்தி திரையரங்கில் அவரது ரசிகர்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சனிக்கிழமை மாலை நண்பர் சிவகுமார் தயவில் எஸ்.வி.சேகர் நடித்த ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகம் பார்த்தேன். விவரம் அறியாத வயதில் ஒருமுறை எஸ்.வி.சேகரின் பெரியப்பா நாடகம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு நோ நாடகம்ஸ். சமீப காலமாக அடிக்கடி காமராஜர் அரங்கத்தை தாண்டி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, நாடகம் பார்க்கும் ஆசை தோன்றியது. அதுவும் எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் (!!!) என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

விடாப்பிடியாக நிற்பவர்களை உடும்புப்புடி புடிச்சிட்டான்யா என்று சொல்வது வழக்கம். அதாவது உடும்பு செங்குத்தாக இருக்கும் இடத்தில் கூட கீழே விழாமல் பேலன்ஸ் செய்ய வல்லது. பல்லி கூட இதேபோல பேலன்ஸ் செய்யும் திறன் வாய்ந்தது. ஆனால் இவை தம்முடைய எடையை மட்டுமே தாங்கி நிற்குமே தவிர முதுகில் ஒருவரை உப்புமூட்டை தூக்கிக் கொண்டேல்லாம் நிற்க முடியாது. சமீபத்தில் வெளிவந்த ஒரு சூரமொக்கைப்படத்தில் ஹீரோ அல்லது களவாணிப்பய வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார். அதே போல உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. வேண்டுமானால், சில வகையறா உடும்புகள் மட்டும் உண்ணத்தகாததாக இருக்கலாம்.

listverse என்ற இணையதளம், ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் தினம் தினம் ஏதாவதொரு தலைப்பில் டாப் 10 பட்டியலை வெளியிடுவது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. சாம்பிளுக்கு டாப் 10 ஹாரர் படங்கள் லிஸ்ட்:
10. Ringu (1998)
9. Jaws (1975)
8. Poltergeist (1982)
7. The Texas Chainsaw Massacre (2003)
6. Carrie (1976)
5. Les Diaboliques (1955)
4. Rosemary’s Baby (1968)
3. Pshycho (1960)
2. The Exorcist (1973)
1. The Shining (1980)

ஜொள்ளு:
ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...!
ட்வீட் எடு கொண்டாடு:
எல்லாரும் கண்ணாடி தொட்டிக்குள் மீன்களை வளர்ப்பார்கள், நீ என்ன கண்ணாடிக்கு பின் வளர்க்கிறாய்? # தபூசங்கர் எஃபக்ட் :)

செக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....

மறுக்க படும் காதல் தேவலாம்.. ஆனால் மறக்கப்படும் காதலே கொடுமையானது.. #அடிடா அவள ஒதடா அவள

தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு

கமலும் தமிழும்
கமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தவகையில் கமல் தமிழைப்பற்றி சொன்ன பேட்டியின் ஒரு பகுதி.
பகிர்ந்துக்கொண்ட நண்பர் ராஜ நடராஜனுக்கு நன்றி.

ஸ்ருதியும் குரலும்
இந்தப்பாட்டு என்னவோ பண்ணுது கேளேன்... கேளேன்... என்று தங்க்ஸ் தந்த அன்புத்தொல்லை காரணமாக 3 படத்தின் கண்ணழகா பாடலை கேட்டேன். பாடலின் 1:50 நேரத்தில் ஆரம்பிக்கும் ரம்மியமான பெண் குரல் எனக்குள் ஏதோ செய்து திரும்பத் திரும்ப கேட்க வைத்தது.
யாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...!

மீண்டும் Nostalgia
தலைவருடைய அரிய புகைப்படம்
தத்துவம்
Loneliness adds beauty to life. It puts a special burn on sunsets and makes night air smell better – Henry Rollins

தத்துபித்துவம்
கடல் – எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை – உதிர்த்தவர் சர்ச்சை பதிவர் சிராஜுதீன்

அடுத்து வருவது...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

March 12, 2012

பிரபா ஒயின்ஷாப் – 12032012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கேரமை கண்டுபிடித்தவர் யார்...?
“கேக்குறவன் கேனையா இருந்தா கேரம் போர்டை கண்டுபுடிச்சது கே.எஸ்.ரவிகுமாருன்னு சொல்லுவியே...” – இந்த வசனத்தை கேட்டதும் யாருக்கு என்ன ஃபீலிங் வந்ததோ, எனக்கு ஆமால்ல, கேரம் போர்டை கண்டுபிடிச்சது யாருன்னு கேள்வி வந்தது. தேடலில் இறங்கினேன். இன்னார் தான் கண்டுபிடித்தார் என்று கேரம் போர்டு பற்றிய உறுதியான குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பண்டைய இந்திய அரசர்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும், ஆளவந்த மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும், இன்னும் சிலர் பிரிட்டிஷ் மக்களின் கைங்கரியம் என்றும் பிட்டு பிட்டாக தகவல் கிடைக்கின்றன. 1935ல் முதன்முதலில் இலங்கையில் சர்வதேச கேரம் போட்டிகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் கேரம் போன்ற பல விளையாட்டுகள் (உதாரணம்: பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர்) பரவிக்கிடந்தாலும் கேரம் போர்டு தெற்காசியாவில் மட்டுமே பிரசித்தி பெற்றது.

சம்பிரதாயங்கள் சரியா...?
இத்துப்போன இந்துமத சம்பிரதாயங்களையும், அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் அறிவிலிகளையும் நினைத்தால் சிரிப்பும், கோபமும் கலந்து வருகிறது. சில சடங்குகள் சின்னப்பசங்க சொப்பு சாமான் விளையாடுவதை விட செம காமெடியாக இருக்கின்றன. இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு விவரமாக ஒரு கேள்வி கேட்டால், “நீ சின்னப்பைய பேயாம இருக்கணும்...!” என்றோ, “எளந்தாரிப் பயலுவளுக்கு எடக்கு மடக்கா பேசுறதே வேலையா போச்சு...!” என்றோ, அதுவுமில்லை என்றால் “அவங்கப்பா அவரை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சாரு தெரியுமா...? அவரைப் போய் கிண்டலடிக்கிறியே...!” (டேய்... நான் என்ன கேக்குறேன்... நீ என்ன சொல்ற...) என்று சம்பந்தமே இல்லாமல் செண்டிமெண்ட் ஜூஸைப் பிழிந்து நம் வாயை அடக்க முயற்சி செய்கிறார்களே தவிர பதில் மட்டும் வருவதே இல்லை.

கோழிக்கறியில் ஜனாதிபதி...!
நம்மூரில் அடிக்கடி இதய வடிவிலான கேரட், ஏசுநாதர் முக அமைப்பை கொண்ட கத்திரிக்காய் வகையறா விசித்திரங்களை தினத்தந்தி பெட்டிச்செய்திகளில் படித்திருப்பீர்கள். பெரும்பாலும் அவை இதய வடிவிற்கோ, ஏசுநாதர் முகத்திற்கோ சம்பந்தமே இல்லாமல் இருக்கும் என்பது வேறு விஷயம். அதுமாதிரி அமெரிக்காவில் ஒரு பெண் வாங்கிய கோழிக்கறி வறுவல் மறைந்த ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் போலவே இருக்க, அவர் அதை பத்திரமாக வீட்டுக்கு கொண்டுவந்து குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கிறார். சம்பவம் நடந்தது மூன்றாண்டுகளுக்கு முன்பு. அன்றிலிருந்து அதனை வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தவர், சமீபத்தில் அதனை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டிருக்கிறார். ஏலம் போன தொகை - $8100. ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4 லட்சம்.

கண்டதும் காதல்...!
அடர் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இளம் பெண்ணொருத்தி “ஹேய்ய்ய்ய்ய்ய்ய்....” என பெருங்குரலெடுத்து ஆரவாரமாக இரு கைகளையும் விரித்து, அண்ணாந்து பார்த்தபடி மழையை ரசித்து நனைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது மழையில் ஒரு நாய்க்குட்டி நனைய, இளம்பெண் நாயை கையில் எடுத்துக்கொண்டு, “ஜூஜூஜூஜூஜூ குளிருதாடா... ஓரமா போயிடலாமா டா...” என்று கொஞ்சிக்கொண்டே மெய்மறந்து நடந்து வருகிறாள். ரோட்டோர குழியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது. இளைஞன் நிமிர்ந்து பார்க்கிறான். பூம்...! Love at First Sight...! தமிழ் சினிமாவே பார்த்திராத இப்படியொரு அரிய காட்சியை தாங்கி வெளிவந்திருக்கும் ஒலகப்படம் – காதல் பாதை.

ஜொள்ளு:
நெருங்கிவந்து பார்த்தேன்... நீ நெஞ்சழுத்தக்காரி...!
ட்வீட் எடு கொண்டாடு:
நல்ல வேளை எஸ்.ரா கம்பியூட்டர் புக்கெல்லாம் எழுதல..பெரும் இரையை முழுங்கிய சர்பம் போல இருக்கிறது இந்த சீ++ பிரோக்ராம்"

எவ்வளவு டீசண்ட்டா இருக்கவறாலயும் பப்ஸ் சாப்புடும்போது அத மெய்ண்டைன் பண்ண முடியறதில்லை... #யுரேகா!!! 

படிக்கிறப்போ 'எனக்கு ஆள் இருக்கு மச்சி'னு சொன்னா கெத்தா பார்ப்பாய்ங்க..இப்போ பரிதாபமா பார்க்கிறாய்ங்க ! #அடிங்கொய்யால

அறிவான பெண்ணை அழகென்று புகழ்;அழகான பெண்ணை அறிவென்று புகழ்;2ம் இருக்கிற பெண்ணை பத்தி கவலைப்படாதே,அவங்க நம்ம கிட்ட பேசமாட்டாங்க

என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...

பார்த்தேன்...! ரசித்தேன்...!!
புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட நண்பர் சவுக்கத் ராஜா தளத்தில் ரசித்த புகைப்படம். நண்பர் சவுக்கத் ராஜா ஒரு ரியல் லைப் கார்த்திக் சுவாமிநாதன். பறவைகள் மீதான இவருடைய புகைப்படக்கலை பார்ப்பதற்கு ஆரவாரமில்லாமல் எளிதாக இருந்தாலும் அதை அவர் எவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருப்பார் என்று நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.


கத்துக்குட்டிகள் கோப்பை
வருகிற செப்டம்பர் மாதம் இலங்கையில் நடக்க உள்ள T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பத்து அணிகளுடன் சேர்த்து பன்னிரண்டு அணிகள் விளையாட உள்ளன. இப்போது மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு கத்துக்குட்டி அணிகள் கலந்துக்கொள்ளும் Qualifier Cup நாளை ஷார்ஜாவில் துவங்குகிறது. இந்த தொடரில் நாம் ஏற்கனவே அறிந்த கென்யா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுடன் ஓமன், நேபால், உகாண்டா, இத்தாலி உட்பட பதினாறு அணிகள் கலந்துக்கொள்கின்றன. சமபலம் (!) பொருந்திய அணிகள் விளையாடும் போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு கியாரண்டி.

தக்காளி... இதை மட்டும் Mark Zuckerberg பார்த்தா... போடாங் ஒங் ஒங் ஒங் ஒங்...!

திருத்தம் & வருத்தம்
படுவா...! தங்க்ஸ்ன்னு எழுதுறதுக்கு பதிலா ரங்க்ஸ்ன்னு எழுதி வச்சிருக்கேன்... இதெல்லாம் நீ சொல்ல மாட்டியா... எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னைப் பத்தி என்னடா நினைப்பான்...! செய்யறதையும் செஞ்சிட்டு நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி நிக்கிறான் பாரு...!

அறிவிப்பு
உங்கள் அபிமான (!!!) பிரபாகரனின் தத்துபித்துவங்கள் வலைப்பூ டாட் காமாக, அதாவது www.philosophyprabhakaran.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை மாற்றித்தந்து உதவிய தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment