அன்புள்ள வலைப்பூவிற்கு,
பெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம். ஒரு மேட்ச்சில் இந்தியா தோற்றுவிட்டால் உடனே டுபாக்கூர் பசங்க என்ன விளையாடுறாங்க என்றும், அடுத்த ஆட்டத்தில் ஜெயித்துவிட்டால் எதிர் டீம்காரங்க காசு வாங்கிட்டாங்க என்றும் கூசாமல் பேசுகிறார்கள். இதெல்லாம் ஃபிராடு. பூரா பயலுவளும் காசை வாங்கிட்டு ஆடுறாங்க. ஒரே மேட்ச் பிக்ஸிங் என்று புலம்புபவர்களும் கள்ளத்தனமாக கிரிக்கெட் பார்க்கத்தான் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட். அவர்கள் உண்மையாக விளையாடுகிறார்களா மேட்ச் ஃபிக்ஸிங்கா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எனக்குத் தேவையில்லை.
கடந்த வாரத்தை ஒரு Nostalgia வாரம் என்று சொல்லலாம். நேற்று மாலை நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படத்தை சாந்தி திரையரங்கில் அவரது ரசிகர்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சனிக்கிழமை மாலை நண்பர் சிவகுமார் தயவில் எஸ்.வி.சேகர் நடித்த ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகம் பார்த்தேன். விவரம் அறியாத வயதில் ஒருமுறை எஸ்.வி.சேகரின் பெரியப்பா நாடகம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு நோ நாடகம்ஸ். சமீப காலமாக அடிக்கடி காமராஜர் அரங்கத்தை தாண்டி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, நாடகம் பார்க்கும் ஆசை தோன்றியது. அதுவும் எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் (!!!) என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
விடாப்பிடியாக நிற்பவர்களை உடும்புப்புடி புடிச்சிட்டான்யா என்று சொல்வது வழக்கம். அதாவது உடும்பு செங்குத்தாக இருக்கும் இடத்தில் கூட கீழே விழாமல் பேலன்ஸ் செய்ய வல்லது. பல்லி கூட இதேபோல பேலன்ஸ் செய்யும் திறன் வாய்ந்தது. ஆனால் இவை தம்முடைய எடையை மட்டுமே தாங்கி நிற்குமே தவிர முதுகில் ஒருவரை உப்புமூட்டை தூக்கிக் கொண்டேல்லாம் நிற்க முடியாது. சமீபத்தில் வெளிவந்த ஒரு சூரமொக்கைப்படத்தில் ஹீரோ அல்லது களவாணிப்பய வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார். அதே போல உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. வேண்டுமானால், சில வகையறா உடும்புகள் மட்டும் உண்ணத்தகாததாக இருக்கலாம்.
listverse என்ற இணையதளம், ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் தினம் தினம் ஏதாவதொரு தலைப்பில் டாப் 10 பட்டியலை வெளியிடுவது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. சாம்பிளுக்கு டாப் 10 ஹாரர் படங்கள் லிஸ்ட்:
10. Ringu (1998)
9. Jaws (1975)
8. Poltergeist (1982)
7. The Texas Chainsaw Massacre (2003)
6. Carrie (1976)
5. Les Diaboliques (1955)
4. Rosemary’s Baby (1968)
3. Pshycho (1960)
2. The Exorcist (1973)
1. The Shining (1980)
ஜொள்ளு:
![]() |
| ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...! |
ட்வீட் எடு கொண்டாடு:
எல்லாரும் கண்ணாடி தொட்டிக்குள் மீன்களை வளர்ப்பார்கள், நீ என்ன கண்ணாடிக்கு பின் வளர்க்கிறாய்? # தபூசங்கர் எஃபக்ட் :)
செக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....
மறுக்க படும் காதல் தேவலாம்.. ஆனால் மறக்கப்படும் காதலே கொடுமையானது.. #அடிடா அவள ஒதடா அவள
தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு
கமலும் தமிழும்
கமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தவகையில் கமல் தமிழைப்பற்றி சொன்ன பேட்டியின் ஒரு பகுதி.
பகிர்ந்துக்கொண்ட நண்பர் ராஜ நடராஜனுக்கு நன்றி.
ஸ்ருதியும் குரலும்
இந்தப்பாட்டு என்னவோ பண்ணுது கேளேன்... கேளேன்... என்று தங்க்ஸ் தந்த அன்புத்தொல்லை காரணமாக 3 படத்தின் கண்ணழகா பாடலை கேட்டேன். பாடலின் 1:50 நேரத்தில் ஆரம்பிக்கும் ரம்மியமான பெண் குரல் எனக்குள் ஏதோ செய்து திரும்பத் திரும்ப கேட்க வைத்தது.
யாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...!
யாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...!
தத்துவம்
Loneliness adds beauty to life. It puts a special burn on sunsets and makes night air smell better – Henry Rollins
தத்துபித்துவம்
கடல் – எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை – உதிர்த்தவர் சர்ச்சை பதிவர் சிராஜுதீன்
அடுத்து வருவது...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|





