30 January 2012

பிரபா ஒயின்ஷாப் – 30012012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நேற்றைய அழுகாச்சி பதிவை மறந்துவிட்டு ஜாலி மூடோடு ஆரம்பியுங்க...!

கடந்த இரண்டு வாரமாக விரும்பியோ விரும்பாமலோ சேனல் மாற்றும்போது CCL எனப்படும் நட்சத்திர கிரிக்கெட்டை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தபோது ரஜினி, அமிதாப்பெல்லாம் விளையாடிய கிரிக்கெட்டோடு ஒப்பிடும்போது இது எவ்வளவோ தேவலை. IPL புண்ணியத்தில் ரொம்பவே ப்ரோபஷனலாக விளையாடுகிறார்கள் அல்லது விளையாடுவது போல நடிக்கிறார்கள். தமிழில் வர்ணனை செய்வதைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆங்கில வர்ணனைகளை அரைகுறையாக புரிந்துக்கொண்டு பார்ப்பதற்கு இது பெட்டர். ஆனால் அப்படியே ஆங்கில வர்ணனையாளர்களின் தொனியை காப்பி அடிப்பதும், அதிக பிரசங்கித்தனமாக பேசுவதும் (என்னைப் போல) சிரிப்பை வரவழைக்கிறது.

இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று ஃபின்லாந்தில் இருந்து இந்திய தலைநகரான டெல்லி நோக்கி பயணித்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. திடீரென வரிசையாக விமானத்திற்குள் நுழைந்த பணிப்பெண்கள் இந்திய குடியரசை போற்றும் (!!!) வண்ணம் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்கள். அதுவும் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் வரும் ஃபேமஸான பாடல், பாலிவுட் ஸ்டைல் நடனம். 

ஆப்பிளின் தமிழ்ப்பெயர் எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்க்கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பழம் ஆப்பிளாகத்தான் இருக்கும். ஆதாம் ஏவாள் சாப்பிட்ட பழமாச்சே. ஆனால் பெரும்பாலும் தமிழிலும் ஆப்பிள் என்றே குறிப்பிடுகின்றனர். தெரிந்துக்கொள்ளுங்கள், ஆப்பிளின் தமிழ்ப்பெயர் அரத்திப்பழம். இன்னும் சில பழங்கள்: ஆரஞ்சு - நரந்தம்பழம், ஸ்ட்ராபெர்ரி – செம்புற்றுப்பழம், WaterMelon – குமட்டிப்பழம் அல்லது தர்பூசணி. ஆங்... பதிவர்கள் முக்கியமா தெரிந்துக்கொள்ள வேண்டியது: லிச்சி – விளச்சிப்பழம்.
நன்றி: HIOX

சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் வேலாயுதம் என்ற ஒலகப்படத்திலிருந்து சில்லாக்ஸ் பாடலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஹீரோயினின் கும்மாங்குத்து ஆட்டத்தோடு பெண் பாடகியின் கிளாசிக் ஸ்டைல் பொருந்தவே இல்லை. நமக்கு அதுவா முக்கியம், ஹன்சிகாவின் வாளிப்பான தோற்றத்தை கண்களால் வாலிபால் ஆடிக்கொண்டிருந்தேன். அம்மணியின் கழுத்தை மட்டும் திருகி எடுத்து வேறு ஏதாவது லட்சணமான முகத்தை பொருத்தினால் சிறப்பாக இருக்குமென எண்ணிக்கொண்டேன். பாடலின் நடுவே ஏதோ ஒரு வரி மிஸ் ஆனது போல் தெரிய, ஆடியோவில் கேட்டுப் பார்த்தேன். “கட்டபொம்மன் பேரன்... கத்திமீசை வீரன்... முத்தம் வச்சு குத்திக்கொல்லு செத்துப்போறேன்...!” இதில் சிகப்பு வரிகள் மட்டும் நீக்கப்பட்டிருந்தன. ஒருவேளை கட்டபொம்மனை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று யாராவது கேஸ் போட்டிருப்பார்களோ...!

ஜொள்ளு:
பழைய கள்ளு...!
ட்வீட் எடு கொண்டாடு:
Siva_Says siva subramani
எப்போதும் மொக்கைபோடும் காதலியிடம் நாம் அவளைவிடக் குறைவாகவே மொக்குதல் நலம்! இதில் நாம் அவளை மிஞ்சினால்.. அவள் நம்மை மிஞ்சுவாள்! தேவையா??

ubaisaji உபைதுல்லா
மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி # நீங்க இப்ப சொன்னதே மோசமான கருத்துதான்.

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
புடவை விளம்பரத்தில் 'சாத்வீகம்',அருந்ததியில் 'பயானகம்',பாடல் காட்சிகளில் 'ப்ரஜோதகம்' #அனுஷ்கா

losangelesram கலக்கல் கபாலி
டெய்லி ராஜா-ரஹ்மான், வாழ்த்துக்கள்-வாழ்த்துகள் சண்டை, தாங்கல சாமிங்களா!

இந்த கடைசி ட்வீட் சொல்லுற மேட்டர்ல நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். ட்விட்டர், ஃபேஸ்புக், பிளஸ்ன்னு எங்கே போனாலும் விரட்டி விரட்டி அதே மொன்னையான ராஜா vs ரஹ்மான் விவாதம். அதிலும் சில பேர் எது(க்)கெடுத்தாலும் ராஜா ராஜா தான்னு மொக்கையா கமெண்ட் பண்றது கடுப்பை கிளப்புது. நாங்க மட்டும் என்ன ராஜா ராஜா இல்லை, கனிமொழின்னா சொன்னோம். அதேபோல தான் மொழிப்பிரச்சனையும் வாழ்த்துக்கள், வாழ்த்துகள், வாத்துக்கள் எப்படி இருந்தா என்ன, யாருக்கு சொல்றோமோ அவருக்கு புரிஞ்சா போதாதா...???

அறிமுகப்பதிவர்: பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்
அடல்ட்ஸ் ஒன்லி எச்சரிக்கை. அதையும் தாண்டி உள்ளேபோனால் பாக்யராஜ் புகைப்படம். அதற்கு கீழே “என் தலைவன் கே.பாக்யராஜ் வாழ்க பல நூற்றாண்டு” என்ற வாக்கியம். “ஒரு மாதிரியாகவே” இருந்தது அவரது வலைப்பூ. ஜொள்ளுவதெல்லாம் உண்மை பகுதியில் நடிகர், நடிகைகளை வைத்து மேலோட்டமான இரட்டை அர்த்த ஃபோட்டோ கமெண்ட்ஸ். இன்னொரு பதிவில் அதே மாதிரியான ஃபோட்டோ கமெண்ட்ஸ். இவை தவிர அடல்ட்ஸ் ஒன்லி என்று சொல்லும் அளவிற்கு மோசமாக எதுவும் இல்லை. காதல் கவிதைகள், ட்விட்டர் ஸ்டைல் கமெண்ட்ஸ் என்று எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு. 

நம்ம சென்னை:
நறுக்கென்று பத்து பத்து நொடிகளாய் ஆறு ட்ரைலரை எடுத்து வைத்துக்கொண்டு அருமையாய் மெரீனா படத்திற்கு மார்கெட்டிங் செய்கிறார்கள். கூடவே இந்தப்பாடலும்.

கேட்கவும் பார்க்கவும் சென்னைவாசிகளை சிலிர்க்க வைக்கிறது...!

நைஜீரியன் காதல்:
இந்த குறும்படம் சூப்பர் என்று சொல்லமுடியாது. ஆனா, இதுல வர்ற பொண்ணு செம ஃபிகர். சான்ஸே இல்லை.

வழக்கமா மூக்குத்தி போட்ட ஃபிகர்களை ரசிப்பதில்லை. சில சமயங்களில் மட்டும் Exception...!

தன்னுடைய ரசிகனுடன் பவர் ஸ்டார்:
போட்டோ கமெண்ட்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது
சி(ரி)றப்பு புதிர்ப்போட்டி:
பழம்பெரும் பதிவர் ஒருவரின் சிரிப்பு...! யாருன்னு கண்டுபிடிங்க...?

டிஸ்கி: கண்டுபிடிப்பவர்களுக்கு வெத்தலை பொட்டி ஒன்று பரிசாக வழக்கப்படும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2012

திருவொற்றியூர் – புலம்பல்கள்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எச்சரிக்கை: கொஞ்சமே கொஞ்சம் பொது விஷயங்களோடு நிறைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம்.

சென்னையின் பிரச்சனைகள் என்றால் வெளியூர்க்காரர்கள் வெயிலையும் உள்ளூர்க்காரர்கள் போக்குவரத்து நெரிசலையும் குற்றம் சாட்டுவார்கள். சென்னையை ஒட்டி அமைந்துள்ள திருவொற்றியூர் நகரத்தின் நிலை அதனினும் கொடிது. நகர்ப்புறங்களில் இருந்து திருவொற்றியூர் நோக்கி பயணிப்பவர்கள் ஊர் எல்லைக்குள் நுழைந்ததும் கரடு முரடான, எளிதாக போய்வர வழியில்லாத கொடுமையான சாலை வசதியை அனுபவிப்பார்கள். போகவும் வரவும் நாற்பதடிதான். மழைக்காலங்களில் இன்னும் கொடுமை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் திருவொற்றியூர் புகைப்படம் தினத்தந்தியில் தவறாமல் இடம்பெறும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்... கூடவே வலியும் பிறக்கும் போல...! திருவொற்றியூரின் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக என் தந்தையின் கடை, வீடு பாதிக்கு மேல் இடிபட போகிறது. இப்பொழுதே வீட்டில் அனைவரும் இடிந்துபோய் தான் இருக்கிறோம்.

அம்மாவின் டென்ஷன் பேசப் பேசத்தான் குறையும். அப்பாவின் டென்ஷன் பேசாமலிருந்தால் தான் குறையும். இருவரது கண்களில் எந்தவொரு சமயத்திலும் கண்ணீர் கசிந்துவிடக் கூடாதென்பது என்னுடைய கவலை. ஓரளவுக்கு பக்குவப்பட்ட (!!!) எனக்கே இப்படியென்றால் என் தங்கையின் மனநிலை எப்படி இருக்கும்..? அன்றாட வாழ்வாதாரத்திற்காக தன்னுடைய கடையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் கடைக்கோடி வியாபாரியின் மனநிலை...???

நீங்கள் பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த வீடோ, கடையோ சில நொடிகளில் பொக்லைன் இயந்திரத்தால் தரைமட்டமாக்கப்படும்போது எப்படி இருக்கும்...?

கடந்த வாரம் சனிக்கிழமை, எங்கள் மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக நகரம் நோக்கி பயணித்துவிட்டு மாலை வீடு திரும்பும்போது திருவொற்றியூர் ஒட்டுமொத்தமாக உருமாறியிருந்தது. காலையிலேயே மின்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் பொக்லைன் இயந்திரங்கள் ஆங்கிலப்பட டைனோசர்கள் போல ஊருக்குள்ளே நுழைந்தன. முந்தய நாள் இரவே தகவல் தெரிந்திருந்ததால் வியாபாரிகள் தத்தம் கடைகளை காலி செய்துக்கொண்டிருந்தனர். கலவரம் நடந்தாற்போல ஊர் முழுவதும் பரபரப்பு, காக்கிசட்டைகள். ஈவு இறக்கமில்லாமல் வீடுகளும் கடைகளும் இடித்து தள்ளப்பட்டன. ஒருசில கடைகளுக்கு முன்னெச்சரிக்கை கிடைக்காமல் போக பொருட்களோடு கடைகள் இடிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் திருவொற்றியூரை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, மெயின் ரோட்டோரம் சொந்தக்கடை அல்லது வீடு வைத்திருப்பவர்கள். இரண்டு, மெயின் ரோட்டோரம் வாடகை கடை / வீடு வைத்திருப்பவர்கள். (இந்த லிஸ்டில் நம்ம பதிவர் அஞ்சாசிங்கமும் இருக்கிறார். மனிதர், அவருடைய அலுவலகம் அடித்து நொறுக்கப்படும்போது கூட ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் மாதிரி சிரித்தபடி இருந்தார். கூலர்ஸ் வேறு). மூன்றாவது, வீதிகளில் அல்லது கடலோரச் சாலையில் வசிப்பவர்கள்.

மூன்றாவது பிரிவினர், நிறைய பேர் விஷயம் என்னவென்று தெரியாமல் இது என்னவோ முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான புரட்சி போராட்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஷங்கர் படத்தில் வரும் பொதுஜனம் ரேஞ்சுக்கு “வெச்சான் பார்யா ஆப்பு”, “இவ்ளோ நாள் ஆடுனீங்கல்ல... சாவுங்கடா” போன்ற கமெண்ட் அடிக்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் வேதனையாக இருக்கிறது. தனது கடையின் பெயர்பலகையை கழட்டிக்கொண்டிருந்த வியாபாரி ஒருவரைப் பார்த்து பொதுஜனம் அடித்த கமெண்ட் – “ங்கோத்தா... கடையே போயிடுச்சு லூசுக்கூதி போர்டை கழட்டிட்டு இருக்கான்...”

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி, விதிமுறைகளை மீறி, பொதுவழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலானவர்களிடம் பட்டா இருக்கிறது. ஆம் அரசாங்கம் பணம் தருகிறது. தற்போதைய நிலவரப்படி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு சதுர அடி 4000ரூ. ஆனால் அரசாங்கம் தருவதோ 910ரூ. (அன்பே சிவம்...!) அந்த தொள்ளாயிரத்து பத்தையும் நாயாக அலைந்து திரிந்து வாங்க வேண்டும். மேலே சொன்னது காலியிடத்தின் விலை மட்டுமே. அங்கே கட்டிய வீடு, அதற்காக செலவழிக்கப்பட்ட பணம் எல்லாம் காந்தி மகான் கணக்கு தான்.

இவ்வளவையும் செய்தால் உடனே திருவொற்றியூர் சிங்கப்பூராக ஆகிவிடுமா...? அதற்கு நிறைய தடைகள் உள்ளன. மரங்கள், மின் கம்பங்கள், தெரு விளக்குகள், ட்ரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதனினும் கொடிது, ஒவ்வொரு தெருமுனையிலும் தவறாமல் வீற்றிருக்கும் கோவில்களையும் இடித்துதள்ள வேண்டும். எங்கள் வீட்டிற்கு நேரெதிரே மசூதி ஒன்று உள்ளது. மசூதியை இடித்தால் என்ன நடக்குமென்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதற்கு சற்றே தள்ளி அமைந்திருக்கும் துலுக்கானத்தம்மன் கோவிலின் கோபுரம் கிட்டத்தட்ட நடுரோட்டில் இருக்கிறது. நல்லவேளையாக, தேவாலயங்களை முன்னெச்சரிக்கையாக உள்ளேதள்ளி கட்டியிருக்கிறார்கள். சொல்ல முடியாது, “ஹே... ஹே... பார்த்தீங்களா கோவில், மசூதியெல்லாம் இடிச்சிட்டாங்க... “சர்ச்சை” மட்டும் இடிக்கவில்லை... கர்த்தர் டீவிக்கிறார்...!” என்று சொல்லி ஆள்சேர்க்கப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.

எல்லாம் முடிந்து திருவொற்றியூர் விரிவடைந்த சாலையாகவும், வியாபாரிகள் விழுந்த அடியில் இருந்து மீண்டு வரவும் குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகலாம். இதுவும் கடந்துபோகும்...!

இன்னும் சில வாரங்களில் என்னுடைய வசிப்பிடமும் தகர்க்கப்படலாம். அதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் வருந்துகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 January 2012

ராமராஜனின் மேதை – இறங்கிடுச்சு போதை – திகில் கில்மா காமெடி கும்மி விமர்சனம்



மொக்கையா இருக்குற மாமா பொண்ணு எப்படா வயசுக்கு வருவான்னு முறைப்பையன் காத்திருப்பான். ஆனா சந்தர்ப்பம் அமையாது. அப்ப திடீர்ன்னு அம்சமா இருக்குற அத்தைப்பொண்ணு வயசுக்கு வந்து குத்தவச்சா எப்படி இருக்கும்? அப்படி ஆனந்ததொல்லைக்கு காத்திருக்கும் நேரத்தில் கிடைக்கும் ஜில்ஜில் மல்மல் சர்ப்ரைஸ் தான் மேதை.


அதிரடியான ஒன்பதுலைன் ஸ்டோரி, மாஸ் கலர் ஹீரோ, கிளாமர் குயின்ஸ் கட்டுடல் பன்னீஸ் 2 முத்தலான ஃபிகர்ஸ், ஏழு சூப்பர்அட் சாங்ஸ் இத்தனையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு இயக்குனர் சிக்ஸர் அடிப்பார் என்று பார்த்தால் அவர் கோல் போட்டுவிட்டார். (ஹி... ஹி... கிரிக்கெட் நஹி... ஃபுட்பால்...)

படத்தோட கதை என்ன? (ஹி... ஹி... படம் பார்த்தவன் நீதானேன்னு நீங்க சொல்றது புரியுது... நோ பேட் வேர்ட்ஸ்... நானே சொல்றேன்...) சென்னை புழல் ஜெயில்ல கைதியா இருக்குறாரு ராமராஜன் (பின்னே சென்ட்ரல் ஜெயில்ல டாக்டராவா இருப்பாங்க). அவரு ஜெயில்ல இருந்ததுக்காக நல்லாசிரியர் விருது கொடுக்குறாங்க. தண்டனைக்காலம் முடிஞ்சு அண்ணன் வெளியே வர்றாரு. ஆனாலும் ஒயிட் அண்ட் ஒய்ட்லையே சுத்திங். (இதுக்கு உள்ளேயே இருந்திருக்கலாம்). அப்பப்ப ஊர்ல நடக்குற, பறக்குற, ஓடுற அநியாயத்தை எல்லாம் தட்டி கேக்குறாரு. 

ஒருநாள் படத்தோட செகன்ட் வில்லனோட ஆளுங்க நாலு பேரை ஹீரோ அடிச்சுடுறாரு. உடனே அவங்க நாப்பது பேரை கூட்டிட்டு வர்றாங்க. (ஆல் ஜென்ட்ஸ்... நோ லேடீஸ்... மீ ஃபீலிங்...) அவங்களையும் ஹீரோ அடிச்சிடறாரு. (ரெண்டு ஃபைட்டிங் சீன் ஓவர்... கில்மா சீன் தான் வரலை...). அதுக்கு அப்புறம் செகன்ட் வில்லன் நேரடியா வர்றாரு. ஆனா ராமராஜனை பார்த்ததும் பயந்து ஓடிடுறாரு. (எனக்கே பயமா தான் இருந்துச்சு...). அவர் ஏன் பயந்து ஓடினாரு...? ஃபிளாஷ்பேக்.

ஹீரோ ஒரு பள்ளிக்கூட வாத்தியார் (கவிதை வீதி செளந்தர், வேடந்தாங்கல் கருண் மாதிரி). ஆனா இவரு ரொம்ப நல்லவர். (நோ காப்பி பேஸ்ட்). ஃபீஸ் கட்டமுடியாம இருக்குற ஏழை பசங்களுக்காக அறக்கட்டளை ஒன்னு ஆரம்பிச்சு ஹெல்ப் பண்றாரு. (சிவா, செல்வின் க்ரையிங்).

அந்த டைம்ல (அப்ப மணி 12:15... ஹி... ஹி...) ஹீரோயின் கபடி மேட்ச்ல ஜெயிக்கிறாங்க. மைனஸ் முப்பது மார்க் போடலாம். (மீ நோ லைக். சிவா ஒன்லி ஜொள்ளு). படத்துல கதை கம்மின்னாலும் ஹீரோயினுக்கு சதை அதிகம். (ஹி... ஹி... ஹீரோயின் குளிக்கும்போது மீ ஒளிஞ்சு நின்னு பாத்திஃபை). ஆனா பாருங்க ஹீரோயினோட அத்தைப் பையன்தான் ராமராஜன். (வயசாயிடுச்சுன்னு அத்தைப்பையன்னு சொல்லாம அத்தை அங்கிள்ன்னு சொல்லலாமா #டவுட்). 

ஹீரோயினை கதற கதற (ப்ச்... நோ ரேப் சீன்) ராமராஜனுக்கு கட்டி வச்சிடறாங்க. அவர் ஃபர்ஸ்ட் நைடப்ப மாணவர்களுக்கு பாடம் சொல்லி தர்றாரு. (இப்ப மீ க்ரையிங்... பிட் மிஸ்ஸிங்...). கல்யாணத்துக்கு அப்புறம் ஹீரோ லைப்ஸ்டைல் டோட்டலா சேஞ்ச் ஆகுது. அதுவரைக்கும் வேட்டி, சட்டை போட்டிருந்தவர் அதுக்கப்புறம் ஜீன்ஸ் போட ஆரம்பிக்கிறார். (ஜட்டி மட்டும் ஆல்வேஸ் மை குரு’ஸ் பிராண்ட்).

செகன்ட் ஹீரோயினா ஒரு கில்மா ஃபிகர் கம்மிங். மைனஸ் இருபது மார்க் தான் போட முடியும். (ஹி... ஹி... நவ் ஐயாம் ஆல்சோ வாத்தியார்). அவங்களுக்கும் செகன்ட் ஹீரோவுக்கும் லவ்வு. ஆனா அவரோட அண்ணன் வேற மாப்பிள்ளை சர்ச்சிங். பொண்ணு எஸ்கேப்பிங். ராமராஜன் சேவிங். (ஒய் நோண்டிங் நோண்டிங்). அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தியேட்டர்ல போயி பாருங்க... (ஏன்னா மீ பதிவு போட லேப்டாப் ஒப்பனிங்).

ராமராஜன் வழக்கமா கலர் சட்டைல வர்றவர் இந்தப்படத்துல கதர் சட்டைல வர்றாரு (பாலிடிக்ஸ்?). அவர் கதர் சட்டைல வந்தது பலமா? பலவீனமான்னு அடுத்த படத்துல தான் தெரியும்? (சப்போஸ் அடுத்த படம் வந்தா) 

ரெண்டு ஹீரோயின். (ஆனா ரெண்டுமே மொக்கை ஃபிகர்ஸ்). மை மணி வேஸ்ட். ஒரு ஹீரோயினுக்கு ரவுண்டு முகம். (அதனால ஒரு ரவுண்ட் வருவாரான்னு கேட்கக்கூடாது). இன்னொரு ஹீரோயின் காட்டு காட்டுன்னு காட்டுறார். (ஹி... ஹி... நடிப்பை தான்... மீ நல்லவன்...)
இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படம் நெடுக நரம்புகளை புடைக்கச் செய்யும் அதிரடியான வசனங்கள்... 36 தேறுச்சு... அதுல 22 நினைவுல இருக்கு, தனி பதிவு போடுறேன்.

2. படத்துல ராமராஜன்தான் ஹீரோ என்று உணர்த்துவதற்காக அவர் மாணவர்களுக்கு ஹீரோ பெண் தருவது போல காட்சியமைத்தது.

3. முதலிரவுக்கு லேட் ஆயிடுச்சு என்பதை பால் திரிஞ்சு தயிராயிடுச்சு என்ற காட்சி மூலமாக காட்டிய சாமர்த்தியம்.

4. ஹீரோவும் வில்லனும் சண்டை போடும்போது கிளாமருக்காக பின்னாடி ரெண்டு ஃபிகர்களை டான்ஸ் ஆட வைத்த சீன்.

5. கஞ்சா கருப்பு காமெடியை வைத்து ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

தயாரிப்பாளர் தர்ம அடி வாங்கிய இடங்கள்
சாந்தி, பேபி ஆல்பட், உதயம், மோட்சம், MM தியேட்டர், மாயாஜால், ரோகிணி, கிருஷ்ணவேணி, கோபிகிருஷ்ணா, மகாலட்சுமி மற்றும் உலகமெங்கும்.

இயக்குனரிடம் சில கேள்விகள்  
1. ஹீரோ ஹீரோயினை பார்த்து சேலையில் பூத்த பூவேன்னு பாடுறாரு. ஆனா அந்த சமயத்துல ஹீரோயின் மாடர்ன் டிரஸ்தான் போட்டிருக்காங்க. ஏன் ஹீரோயினுக்கு சேலை கட்ட தெரியாதா...? அல்லது ஹீரோவுக்கு சேலை கட்டிவிட தெரியாதா...?

2. மாணவர்களை வில்லன் கடத்திட்டு போற காட்சியில ஏற்கனவே ஸ்கார்பியோ வண்டியில நாலு பேரு இருக்காங்க. மாணவர்கள் மொத்தம் ஏழு பேரு. ஒரே ஸ்கார்பியோவுல மொத்தம் பதினோரு பேருக்கு எப்படி இடம் பத்துச்சு...? 

3. வில்லனுக்கு எப்படி பார்த்தாலும் குறைஞ்சது அம்பது வயசு இருக்கும். ஆனா வில்லனோட தங்கச்சிக்கு மட்டும் இருபது வயசுதான் ஆகுது. ஒருவேளை ரெண்டாம் தாரத்து பொண்ணா...? அப்படின்னா அதை ஏன் படத்தில் சொல்லவில்லை...?

4. ஹீரோயின் நடுராத்திரியில எழுந்து மூஞ்சிக்கு தண்ணியடிக்கிற மாதிரி காட்டுறாங்க. அந்த சீன் பெண்களை கொச்சைப் படுத்துற மாதிரி இருக்கே...? பெண்களை கிண்டலடித்த இயக்குனருக்கு எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

5. ஹீரோ ஒரு காட்சியில் பெண் கொடுத்தா உறவு முடிஞ்சிடும்ன்னு சொல்றார். அது எப்படி பெண் கொடுத்தா சம்மந்தி உறவு வருதே...? ஒரு எட்டாம் கிளாஸ் வரை படித்த இயக்குனருக்கு இதுகூட தெரியாதா...?

6. கதைப்படி ஒரு செகன்ட் ஹீரோ, ஒரு செகன்ட் ஹீரோயின் ஆனா அவங்க ரெண்டு பேருமே படத்துல ஒரு செகண்டுக்கு மேலேயே வர்றாங்க. அது ஏன்...? ஒருவேளை இயக்குனருக்கு மணி பார்க்க தெரியாதா...?

காபி கமெண்ட்: படத்தோட போஸ்டரை கூட பார்த்துடாதீங்க...

எதிர்பார்க்கப்படும் சரோஜா தேவி மார்க்: 7.5

எதிர்பார்க்கப்படும் எதிர்வீட்டு ஃபிகர்: சூப்பர்

சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்தேன்...

பஸ்கி 1: படத்துல ராமராஜன் கலர் சட்டைல வரக்கூடாதுன்னு யாரும் கேட்டுட கூடாதுன்னு ஒரே ஒரு பாட்டுல கலர் சட்டை போட்டுட்டு ஆடுறாரு.

பஸ்கி 2: நம்பர் ஒன் பதிவர் ஸ்டைலில் பதிவு போடச் சொல்லி அஞ்சாசிங்கம் செல்வின் தான் ஐடியா கொடுத்தார்.

பஸ்கி 3: மேலே இருக்கும் பஸ்கியை போடச் சொல்லி போன் போட்டு சொன்னவர் மெட்ராஸ் பவன் சிவகுமார்.

பஸ்கி 4:

பஸ்கி 5:

Post Comment