31 March 2012

3 – கோடுகள் உங்கள் நெற்றியில்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தனுஷ் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த சமயம், பன்னிக்குட்டி மாதிரி அவருக்கு வதவதன்னு புதுப்பட வாய்ப்புகள் வந்து குவிந்துக்கொண்டிருந்தன. அப்போது “டாக்டர்ஸ்” என்ற பெயரில் தனுஷுடைய மருத்துவச்சி சகோதரிகளின் அனுபவத்தை வைத்து ஒரு படமெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி முடங்கிப்போனது. அதுவே இப்போது மூன்று என்ற பெயரில் கொலவெறித்தனமாக அவதாரமெடுத்திருக்கிறது. YES, ITS A MEDICAL MIRACLE...!

தனுஷுடைய இறுதிச்சடங்குடன் படம் தொடங்குகிறது. சோகத்தின் பிடியிலிருக்கும் தனுஷின் மனைவி ஸ்ருதியின் நினைவுகளில்... தனுஷ் வழக்கம் போலவே அப்பாவிடம் திட்டு வாங்கும் பொறுப்பில்லாத மகன். ஒருநாள் ச்சோன்னு மழை பெஞ்சிட்டு இருக்கும் போது தனுஷ் ஸ்ருதியை பார்க்கிறார். வேறென்ன.. கழுதை கெட்டா குட்டிச்சுவரு... காதல்...! சிலபல சிக்கல்களுக்கு பிறகு எக்கேடோ கெட்டு ஒழிங்க என்ற ரீதியில் தனுஷ் – ஸ்ருதி அவர்களுடைய பெற்றோரின் விருப்பமில்லாமல், அதே சமயம் எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துக்கொள்கின்றனர். 

இரண்டாம் பாதி... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், தினத்தந்தி பாணி உருக்கமான கடிதம், Bipolar Disordar... ஙேஙேஙேஙே... ஙேஙேஙேஙே...

தனுஷ் – கிக்கிக்கிக்கி எனக்கு அவரை பார்த்தா சிரிப்பா வருது... எனக்கு அவரை பார்த்தா சிரிப்பு வருது, உள்ள அழுகையா இருக்குது... அப்டியே ஓன்னு வாய் விட்டு அழுவனும் போல இருக்கு... ணா மணிண்ணா எனக்கு ஒரே ஒரு அருவா குடுண்ணா... அப்டியே எடுத்து ஒரே போடு...

ஸ்ருதி – அது என்னவோ தெரியல, அந்த புள்ளயோட மூக்கு சனியனை பார்த்தா மட்டும் நமக்கு மூடே வர மாட்டேங்குது. அதுவுமில்லாமல் அம்மணி அழுவதை பார்த்தால் நமக்கு ஏனோ கஞ்சா அடித்தமாதிரி சிரிப்பு வந்து தொலைக்கிறது. 

சிவகார்த்திகேயன் முதல் பாதியில் மனது விட்டு சிரிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியின் சீரியஸ்நெஸ் கருதி இயக்குனரால் சாமர்த்தியமாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மற்றொரு நண்பராக வரும் “மயக்கம் என்ன” சுந்தர் ராமு கேரக்டரில் நிறைய முரண்பாடுகள். ஒன்றும் விளங்கவில்லை...

பிரபு, பானுப்ரியா, ரோகிணி ஆகியோருடைய நடிப்பில் பாஸ்போர்ட்டை எரிக்கும் காட்சியில் ரோகிணியின் நடிப்பு முன்னிலை பெறுகிறது. ஸ்ருதியின் தங்கையாக நடிக்கும் சிறுமி இன்னொரு ஐந்து வருடங்களில் சூப்பர் ஃபிகரு. ஸ்ருதியின் தோழிகளாக வரும் கூர்க்கா பொண்ணு உட்பட அம்புட்டும் ஜூப்பரு...!

படம் நெடுக ஸ்பான்சர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஏர்செல், சூப்பர்மேக்ஸ் (அதே மொக்கை ப்ளேடு தான்), LawMan என்று விளம்பர பதாகைகளை காட்டி எரிச்சலூட்டுகிறார்கள். இன்னொரு காட்சியில் ஹீரோ வேண்டுமென்றே ஏர்செல் லோகோ பொறிக்கப்பட்டிருக்கும் தம்முடைய மொபைலை உயர்த்திக்காட்டுகிறார்.

ஐயகோ...! யூ சர்டிபிகேட்டை பார்த்ததும் பதறிப்போனேன். பனியன் கம்பெனி விளம்பரம் கணக்கா போஸ்டர் ஒட்டியதெல்லாம் சும்மாதானா. ம்க்கும் அடிக்கடி ஒருவர் மூக்கை ஒருவர் முத்தமிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். பாவம் அந்த தனுஷ் தம்பி அதுல போய் முத்தம் கொடுக்க விட்டுட்டாங்களே...!

கண்ணழகா பாடல் தனுஷ், ஸ்ருதி, கொஞ்சூண்டு ரொமான்ஸுடன் கண்களுக்கும் அழகாகவே இருக்கிறது. ஆடியோவில் பெரிய ஹிட்டடிக்கும் பாடல்கள் விஷுவலில் மொக்கையாகவே இருக்கும். அப்படியே அது நன்றாக இருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்ற நினைப்பு ஏற்படுவது மனித இயல்பு. அதையே கொலவெறி பாடலும் உணர்த்துகிறது. 

Actually, படம் நல்லாத்தான் ஆரம்பமாச்சு...! குறிப்பாக என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். சைக்கிள் வைத்திருந்தும் அதை வீடு வரைக்கும் தோழிகளுடன் பேசியபடி தள்ளிக்கொண்டே போகும் ஃபிகர்ஸ், டியூஷன் அனுபவங்கள், சிங்கிள் டிஜிட் விடைத்தாளை கொடுக்கும் போது வறுத்தெடுக்கும் வாத்தியார், பல மாதங்களாகனாலும் பார்வையில் மட்டுமே காதலிக்கும் மனோபாவம் போன்றவை யதார்த்தம். க்ளிஷேத்தனமான காட்சிகளின் போது சுய எள்ளல் செய்துக்கொள்ளும் வகையில் சிவகார்த்திகேயனுடைய கமெண்ட்ஸ் கலக்கல். ரசனையான வசனங்கள்... மூஞ்சைப் பாரு பழைய அஞ்சு காசு மாதிரி...! அப்படியே தனுஷ், ஸ்ருதி காதலுக்கு ஏற்படும் தடைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் அதெல்லாம் கூட ஓகேதான்.

அதற்குப்பின் ஒரு மருத்துவர் வருகிறார், அவருக்கு வந்திருக்குற வியாதியோட பெயர் Bipolar Disorder. அடப்பாவிகளா எத்தனை பேருடா இதே மொக்கையை போடுவீங்க என்று நாம் அலறும்போது, நோ நோ இது Split Personality Disorder இல்லை. அதே மாதிரி, ஆனா இது வேறயாக்கும் என்று அவசரஅவசரமாக மறுக்கிறார். படம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தனுஷுடைய காலில் மிதிபடும் ஹட்ச் நாயாக அவஸ்தைப்பட்டு சாகிறார்கள். அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... ஊஊஊஊஊ.... அது வந்து ஙேஙேஙேஙே... ஙேஙேஙேஙே... அதாவது.... ச்சே இந்த குட்டிப்பொண்ணும் பூசாரியும் பதிவெழுதவே விட மாட்டேங்குறாங்க...! தனுஷ் சாகப்போகிறார்... சாகப்போகிறார்... சாகப்போகிறார்... ங்கோத்தா செத்து ஒழியேன்டா என்று கடைக்கோடி ரசிகன் கலவரப்பட்டு கமென்ட் அடிக்கும் போது படம் செத்து ச்சே தனுஷ் செத்து படம் நிறைவடைந்து திரை இருள்கிறது...!

இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா...

மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 March 2012

பிரபா ஒயின்ஷாப் – 26032012

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தகுதிச்சுற்று போட்டிகளின் முடிவில் ஆப்கானிஸ்தானும், அயர்லாந்தும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் T20 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது. தகுதிச்சுற்று போட்டிகளின் தொடக்கத்தில் நேபாளமும் இத்தாலியும் சிறப்பாக செயல்பட்டு முன்னேறின. ஆனால் அடுத்தடுத்த தோல்விகளால் வெளியேற்றப்பட்டன. கென்யாவின் நிலை சற்றே மோசமாக அமைந்தது. .007 என்ற ரன் ரேட் கணக்கில் அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது அந்த அணி. இந்தியா தன்னுடைய முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோத வேண்டியிருக்கும்.

எம்.ஜி.ஆர், சிவாஜியை மட்டும் சிலாகிக்கும் சினிமாக்காரர்கள் அதற்கு முந்தய தலைமுறை சூப்பர்ஸ்டார்களை அறவே மறந்துவிட்டிருக்கிறார்கள். மூன்று திபாவளிகள் பார்த்த தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ், பி.யு.சின்னப்பா ஐந்து கெட்டப்பில் தோன்றிய ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களை இளைய தலைமுறையினர் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லையென்று தெரிகிறது. பி.யு.சின்னப்பா நடிப்பில் 1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படமே பின்னாளில் சிவாஜி நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் பி.யு.சின்னப்பாவின் உத்தமபுத்திரன் என்று டிவிடி கடைகளில் கேட்டால் அப்படி ஒரு படமே வரவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

போர் வீரனான மும்தாஜின் கணவரை கொன்றுவிட்டு ஷாஜகான் மும்தாஜை மணந்துக்கொண்டதாக ஒரு பார்வேர்டு மெயில் சுற்றிக்கொண்டு இருந்தது. நானும் கூட நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியான வரலாற்றை திரிக்கும் அயோக்கியத்தனங்களை யார், எதற்காக செய்கிறார்கள் என்று புரியவில்லை. அர்ஜுமான் பேகம் என்கிற இயற்பெயர் கொண்ட மும்தாஜ் ஷாஜஹானின் உறவுக்காரப்பெண் என்றும் அவர்களின் திருமணம் ஒரு லவ் கம் அரேஞ்டு மேரேஜ் என்று சொல்கிறார் ஹாய் மதன். ஆனால் திருமணத்தின் போது மும்தாஜின் வயது பதினான்கா பத்தொன்பதா...? மும்தாஜ் ஷாஜஹானுடைய முதல் மனைவியா மூன்றாவது மனைவியா...? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது.

நேற்றைய மாலைப்பொழுது இந்தியாவின் தேசிய விளையாட்டுடன் இனிதே கடந்தது. அம்மா கட்டிக்கொடுத்த ஸ்டேடியத்தில் பிள்ளைகள் சமத்தாக விளையாடினாலும் இறுதியில் சென்னை அணி 4-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. ஆனாலும் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் சாப்பிட்டுக்கொண்டே ஹாக்கி பார்த்தது இனிமை. மேட்சுக்கு என்னை ஓசியில் அழைத்துச்சென்ற நண்பர் சிவகுமாருக்கு என் நன்றிகால். சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஆடம் சிங்களரிடம் தொலைபேசினேன். நிறைய விஷயங்கள் சொன்னார். என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வசிப்பதாக சொன்னார். தக்காளி, அது என்னவோ தெரியல சாண்ட்வேஜ் சாப்பிட்டாலே இப்படியெல்லாம் எழுதத்தோணுது. இருடி வர்றேன்... பேச்சா பேசுற நீயி...!

என் விகடனில் என்னுடைய பெயரும் புகைப்படமும் வெளிவந்தது எல்லோருக்கும் போல இல்லாமல் ஒரு துக்க நிகழ்வாக அமைந்துவிட்டது. வாழ்த்து தெரிவித்தவர்களிடமெல்லாம் மாப்பிள்ளை நான்தான் ஆனா போட்டிருக்குற சட்டை என்னுதில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஜொள்ளு:

ட்வீட் எடு கொண்டாடு:
உள்ளாடைகள் கொடிகளில் நிர்வாணமாய் ....

அமெரிக்க தீர்மானம் சோடா கலந்த ரம் என்றால் இந்தியா அதில் தண்ணீரை மேலும் கலந்துவிட்டது - கேப்டன்

காதலியாகாமல் தோழியாய் மாத்திரம் இருப்பதும், இங்கிலீஷ் படத்துக்கு சப்-டைட்டில்ஸ் இல்லாம இருப்பதும் ஒண்ணுதான்!

அவர்கள் சைட்டடிக்கும் நபரோடு இணைத்து கிண்டல்செய்கையில், உள்ளூற சந்தோஷத்தோடு நண்பர்கள் பொய்கோபப்படும் அழகே தனி! #அட அட அட...

மானமுள்ள கணவன் - நீங்க வாய மூடுங்க என மனைவி கூறும் முன்பு வாயை மூடிக்கொள்பவன்..

ஓவியாவின் ஓரப்பார்வை
மன்மதராசா பாடல் வெளிவந்து பெரிய ஹிட் ஆகியிருந்த சமயம். அடுத்தடுத்து நிறைய பேர் அதே போல குத்துப்பாடல் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அதேமாதிரியான லொக்கேஷன், காஸ்டியூம் மட்டும் எடுத்துக்கொண்டு குறும்பு படத்திற்காக ஒரு மெலடி பாடலை கொடுத்தார் யுவன். மன்மதராசா காலத்தால் அழிந்துவிட்டாலும் ஓவியம் மட்டும் கரையவில்லை.

வேட்டி – கரைவேட்டி
ஏதோவொரு வார இதழில் வேட்டி – கரைவேட்டி என்று ஒருபக்க நகைச்சுவை படக்கதை வெளியிடுவார்கள். இந்த குறும்படமும் அதன் தலைப்பும் அதைத்தான் நினைவூட்டுகிறது. இதுக்கு மேல எதாவது எழுதினா குடும்பம் கெட்டுப்போகும். அதனால வீடியோவை பாருங்க...

இன்னுமா இந்த ஒலகம் நம்மள நம்புது
உண்மையான காமெடி பீஸ் இவரல்ல. இன்னமும் இவரை நம்பிக்கொண்டிருக்கும் பக்தர்கள் தான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2012

கண்கலங்க வைத்த வெங்காயம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏறிவந்த ஏனிப்படிகளை எட்டி உதைக்கும் சினிமாக்காரர்களுக்கு மத்தியில், தன்னைப்போலவே சிரமப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவொரு தோழரை கை கொடுத்து தூக்கியிருக்கும் சேரனுக்கு முதல் பொக்கே...!

ஏற்கனவே அரவான் படத்திற்கு அழைத்துச்சென்று பலி கொடுத்தமையால், சினிமாவுக்கு போகலாமா டாடி என்றவுடன் என் தந்தை பதறினார். வரவேமாட்டேன் என்று முரண்டு பிடித்தவரிடம் இயக்குனர் திராவிடர் கழக உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறாராம் என்று ஒரு பிட்டை போட்டதும் உற்சாகமாக கிளம்பினார். வழக்கமாக மாஸ் ஹீரோக்கள் படத்தை மட்டுமே திரையிடும் ஐட்ரீம்ஸ் திரையரங்கில் வெங்காயம் திரையிடப்பட்டிருந்தது ஆச்சர்யமான விஷயம்தான். டைட்டிலில் வீரத்தமிழன் சத்யராஜ், பாடல்கள் அறிவுமதி, சுப.வீரபாண்டியன் போன்றவற்றை பார்த்ததும் அப்பாவுக்கு இன்னும் நம்பிக்கை பிறந்திருக்கும்.

ஜோதிடர்கள், மந்திரவாதிகள், சாமியார்கள் செய்யும் அயோக்கியத்தனங்களால் சாமான்யர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே படத்தின் ஒன்லைன். அதையே கொஞ்சம் கமர்ஷியலாக தர விரும்பி காதல், கடத்தல் போன்ற மசாலாக்களை வெங்காயத்துடன் சேர்த்து வெங்காய சாம்பார் படைத்திருக்கிறார் இயக்குனர்.

இரு இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பி, ஜோதிடரிடம் செல்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றும் அவரை அண்டுபவர்கள் அழிந்துவிடுவார்கள் என்றும் ஜோதிடர் சொல்கிறார். நண்பர்களுக்குள் விரிசல் விழுந்து, விரக்தியடைந்த நேரம் சரியில்லாதவர் தற்கொலை செய்துகொள்கிறார். கூத்துக்கலைஞர் ஒருவர் தன்னுடைய தாயில்லாத மகனின் நோயை குணப்படுத்தும் பொருட்டு கடனை வாங்கி வெளியூருக்கு செல்கிறார். போன இடத்தில், அவருக்கு தெரியாமல் அவரது மகனை அழைத்துச்சென்று நரபலி கொடுத்துவிடுகிறார் ஒருவர். தன்னிடம் திருமண பொருத்தம் கேட்க வந்த பெண்ணை தோஷம் கழிக்கிறேன் என்று கற்பழிக்க முயற்சிக்கிறார் ஒரு மந்திரவாதி. இப்படியெல்லாம் எங்கேயாவது நடக்குமா என்று கேட்க முடியாதபடி, அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்கும் அபத்தமான செய்திகளை வைத்தே கதை பின்னப்பட்டிருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

நாயகன் – நாயகியாக அலெக்சாண்டர் – பவினா என்கிற புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் பகுத்தறிவே படத்தின் பிரதான நாயகனாக விளங்குகிறது. ஒரேயடியாக கடவுள் மறுப்பை கையில் எடுக்காமல் மூட நம்பிக்கைகளை மட்டும் சாடியிருப்பது இயக்குனருடைய சாமர்த்தியம்.

அலெக்சாண்டர் பவினா காதல் காட்சிகள் ஆரம்பத்தில் படத்திற்கு தேவையே இல்லாதது போல தெரிந்தாலும் பிற்பாதியில் அதுவே பிராதன கதையுடன் சென்று இணைந்துக்கொள்கிறது. ஹீரோயின் கூட அதே மாதிரி தான். பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் பார்க்க பார்க்க பிடிக்கிறது.

ஹீரோயினுடைய அம்மாவாக வருபவர், கூத்துக்கலைஞர், கூத்துக்கலைஞரின் மகள் போன்றவர்கள் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கூத்துக்கலைஞரின் மகளாக வருபவர் மனதில் தங்கையாகவே தோன்றி பரிதாபம் ஏற்படுத்துகிறார். கார் விபத்து காட்சி மைனா படத்தை நினைவூட்டினாலும் சில நிமிடங்கள் பதற வைக்கிறது. சத்யராஜ் தோன்றும் பாடலின் வரிகள் அறிவுமதி எழுதியதா, சுபவீ எழுதியதா என்று தெரியவில்லை. அற்புதம். 

கருத்து சொல்லும் / சொல்ல முனையும் படைப்புகள் மீது கல் வீசுவது என்னுடைய கொள்கையல்ல என்றாலும் ச்சே படத்தை வேறு மாதிரி இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை. தவிர, இயக்குனர் பதிவர்களின் நண்பர் என்பதால் சில தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். Take it as a constructive criticisation.

மிகப்பெரிய மைனஸ். படத்தில் மூடநம்பிக்கையை எதிர்க்கும் அனைவருமே ஏதோ ஒரு விரக்தியிலும் இழப்பின் காரணமாகவுமே எதிர்க்கிறார்கள், கடைசி காட்சியில் கதாநாயகன் உட்பட. குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் நடிப்பு பயங்கர மோசம். இதுபோன்ற படங்களில் வசனங்கள் ஷார்ப்பாக இருப்பது அவசியம். தேவடியா பசங்கன்னு திட்டுவதையெல்லாம் ரசிக்க முடியவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்துவதே பகுத்தறிவுக்கு புறம்பானது. கற்பழிப்பு முயற்சி காட்சியை தந்தைக்கு அருகிலிருந்து பார்க்க சிரமப்பட்டேன். மார்க்கெட்டிங்கை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் தினத்தந்தியிலாவது விளம்பரம் கொடுக்கவும். படம் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டால் கூட படம் எங்கே ஓடுகிறது என்று தெரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.

மற்றபடி உணர்ச்சிப்பூர்வமாக பார்த்தால் வெங்காயம் ஒரு காஸ்ட்லியான காவியமே...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 March 2012

கர்ணன் – கொண்டாட்டத் துளிகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் படத்தை சாந்தி திரையரங்கில் பார்ப்பது என்பது சிங்கத்தை அதனுடைய குகையில் சென்று சந்திப்பதை போன்றது. அப்படியொரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாமா அவர்களே... (இது பலே பாண்டியா ஸ்டைல்) உங்களுக்கு எனது நன்றிகள்.

ஆறரை மணிக்கு தொடங்க இருந்த காட்சிக்கு கிட்டத்தட்ட ஐந்து மணிக்கே அட்டன்டன்ஸ் போட்டாச்சு. மாமா அவர்கள் அதற்கு முன்பே அங்கே பூரித்துக்கொண்டிருந்தார். எனது மாமா மட்டுமல்லாமல் மற்றுமுள்ள உறவினர்கள் மத்தியில் நமக்கு ஒரு பத்திரிக்கையாளர் இமேஜ் இருப்பதால் அதை கட்டிக்காக்கும் விதமாக தம்மாத்தூண்டு மொபைல் கேமராவை வைத்துக்கொண்டு என்.டி.டி.வி. ரிப்போர்ட்டர் மாதிரி சுற்றிச்சுழன்று சீன் போட்டுக்கொண்டிருந்தேன். இனி...

ஒரு சாம்பிள் பேனர்
- சாந்தி திரையரங்க வளாகம் முழுவதும் பேனர்கள் குவிந்திருந்தது, சைஸ் வாரியாக இருந்த பேனர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஐம்பதை தாண்டும். “இதயராஜா சிவாஜி பித்தர்கள்”, “கலைத்தாயின் தெய்வமகன் சிவாஜி மன்றம்”, “சிவாஜியின் சித்தர்கள் கலைநிலா சிவாஜி மன்றம்”, “இதயவேந்தன் வாசகர் வட்டம்” என விதவிதமான பெயர்களில் மன்றங்கள்.

- இவை போதாதென்று சுவரெங்கும் சிவாஜி பற்றிய செய்தித்தாள் சேகரிப்புகள், “இதயராஜா”, “இதயவேந்தன்”, “தெய்வமகன்” போன்ற இதழ்களின் அட்டைப்படங்கள். செய்தித்தாள்களில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகள் ஒருசேர வந்திருக்கும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் பெயரை மட்டும் லாவகமாக மையிட்டு அழித்திருந்தார்கள்.

- நான் உள்ளே நுழைந்த சமயம் கம்பீரமாக பேண்டு வாத்தியங்கள் முழங்க, பிரம்மாண்டமாய் பிரம்மாண்டமாய் ஒரு மாலையை சிவாஜியின் மெகா பேனருக்கு சூட்டும்பொருட்டு உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் நின்றுக்கொண்டிருந்தார்கள் சில சிவாஜி ரசிகர்கள். இந்த பிரம்மாண்ட மாலையின் ஏற்பாட்டாளர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவாஜி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- அடுத்து நீளமானதொரு பத்தாயிரம் வாலா சரவெடியை வாசலில் இருந்து ரோடு வரைக்கும் சிவப்பு கம்பளமாக விரித்து பற்ற வைத்தார்கள். வெடியின் சத்தம் அடங்குவதற்கு மட்டுமே மூன்று நிமிடங்கள் ஆனது.

- சிறிது நேரத்தில் பரபரப்பாக ஒரு இன்னோவா உள்ளே நுழைய, யாரு யாருன்னு எல்லோரும் பதட்டத்துடன் பார்க்க உள்ளே இருந்து இறங்கியவர் ஜூனியர் சிவாஜி (!!!) துஷ்யந்த். அவரைச் சுற்றி சில ரசிகர்கள் சூழ்ந்துக்கொள்ள, மற்றசில ரசிகர்கள் “தாத்தா இடத்தை நீயில்லை... எவனாலயும் நெருங்க முடியாது...” என்று அவர் காதுபடவே கோஷமிட்டார்கள்.

ஜூனியர் சிவாஜி
- சரசரவென திரையரங்க வாயிலை நோக்கி விரைந்த துஷ்யந்த், அங்கே இதயரஜா சிவாஜி பித்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான விழாவை தன் கரங்களால் தொங்கிவைத்துவிட்டு சென்றார்.

- கோவில் திருவிழாக்களில் வீக்கான சிலருக்கு மட்டும் சாமி வருமே. அதேபோல ஒரு ரசிகருக்குள் சிவாஜி வந்துவிட அவர் தொடர்ந்து சிவாஜி பாடல்களை ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டே பாடிக்கொண்டிருந்தார். அதற்கும் பக்கத்திலிருந்த டாஸ்மாக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நம்புவோமாக...!

- இன்னொரு சிவாஜி ரசிகர் கரகாட்ட கலைஞரை போல தனது தலையில் டர்பன் ஒன்றினை வைத்து ஆடிக்கொண்டிருந்தார். ஆர்வமிகுதியில் அவர் தன் தலையில் சூடம் ஏற்ற முயற்சிக்க, அருகிலிருந்த கடமை தவறாத போலீஸ் அதிகாரி எஸ்.பி.செளத்ரி “வேண்டாம் சார்... ரிஸ்க்” என்று எச்சரித்து கலைஞரை தீக்குளிப்பிளிருந்து காப்பாற்றினார்.

- “உட்லண்ட்ஸ்ல குடியிருந்த கோயில் ரிலீஸ் பண்ணியிருக்காங்களாமே...” என்று சிவாஜி ரசிகர்கள் யாரையாவது சீண்டினால், “அது டுபாக்கூர் ப்ரிண்டுங்க”, “தியேட்டர்ல ஈ ஓட்டுறாங்களாம்”, “வேணும்னே தொப்பித்தலையன் படத்தை போட்டிக்கு ரிலீஸ் பண்ணியிருக்குறானுங்க” என்று ஏகத்துக்கும் பொங்குகிறார்கள்.

- படம் தொடங்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்த தருவாயில் மற்றொரு வி.ஐ,பி கார் வந்து நின்றது. உள்ளே இருந்து இறங்கியவர் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் மட்டுமே அன்றைய ஷோவிற்கு அறுபது டிக்கெட்டுகள் புக் செய்திருந்ததாக தகவல்.

- அவரைத் தொடர்ந்து வருகை தந்தவர் விவேக்கின் “சாத்தப்பன்” காமெடி நடிகர். சாத்தப்பன் மட்டும் வந்ததும் நேரே உள்ளே நுழையாமல் போட்டோ எடுக்க விரும்பியவர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

- வருவார், வருவார், வந்திருப்பார், வந்திருக்கார் என்று பலரும் பலவிதமாக சொல்லிக்கொண்டே இருந்த மற்றொரு வி.ஐ.பி. இயக்குனர் சேரன். அவர் வந்ததாகவும் ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.

- ஒவ்வொரு முறை சிவாஜியை க்ளோசப்பில் கட்டும்போது, சிவாஜி சிரிக்கும்போது, சிவாஜி கர்ஜனையாக வசனம் பேசும்போது, சிவாஜி வெட்கப்படும்போது என்று தொடர்ந்து திரையரங்கில் கை தட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன.

- படத்தில் ஜெயலலிதாவின் அம்மா, கனகாவின் அம்மா, வி.எஸ்.ராகவன், இடிச்சப்புளி செல்வராஜ், சண்முகசுந்தரம் என பல பழம்பெரும் நடிக, நடிகைகளை காண முடிந்தது.

- படத்தில் சிவாஜிக்கு எதிரான பத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் தொடர்ச்சியாக வசைமொழிகளை வாங்க வேண்டியிருந்தது. குறிப்பாக சிவாஜியின் மாமனார் கேரக்டரில் நடித்தவரை நாலைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து திட்டினார்கள்.

- இரண்டாம் பாதி தொடங்கி படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, படம் பார்க்க வந்த எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் எம்.ஜி.ஆரை உயர்வாக சொன்னதாலோ / சிவாஜியை தரக்குறைவாக பேசியதாலோ (என்னவென்று தெரியவில்லை) சுமார் இருபது பேர் கொண்ட குழுவால் சட்டை கிழிக்கப்பட்டு, அடித்து, உதைத்து, தரதரவென்று வெளியே இழுத்துச் செல்லப்பட்டார்.

- படத்தின் பழைய ப்ரின்ட்டை நான் பார்த்திராததால் அது பற்றிய வித்தியாசங்களை என்னால் கூற முடியவில்லை. ஆனால் சில இடங்களில் ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு மாறும்போது பிரிண்ட் வித்தியாசம் அப்பட்டமாக தெரிகிறது.

- பல வருடங்கள் கழித்து சிவாஜி படம் ஒன்றினை புதுபித்து ரிலீஸ் செய்ய நினைத்தவர்கள், சிவாஜி இறப்பது போன்ற கதையமைப்பை கொண்ட படத்தை தேர்ந்துடுக்காமல் இருந்திருக்கலாம் என்பது நிறைய ரசிகர்களின் வருத்தம்.

- இதனினை ஒரு நல்ல தொடக்கமாக வைத்துக்கொண்டு இனி சிவாஜி படங்களை மெருகேற்ற நினைப்பவர்கள் புராண படங்களை புறந்தள்ளி, பராசக்தி போன்ற சமூகப்படங்களையோ, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சரித்திர படங்களையோ அல்லது உத்தமபுத்திரன், பலே பாண்டியா போன்ற ஜாலி டைப் படங்களையோ புதுபித்தால் சிறப்பாக இருக்கும்.

- படத்தின் இறுதிக்காட்சியில் தன்னுடைய ஒரே மகனை பறிகொடுத்துவிட்டதாக தர்மத்தாய் அழுது புலம்புகிறார். நியாயப்படி கலைத்தாயும் தானே அழுதிருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 March 2012

பிரபா ஒயின்ஷாப் – 19032012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம். ஒரு மேட்ச்சில் இந்தியா தோற்றுவிட்டால் உடனே டுபாக்கூர் பசங்க என்ன விளையாடுறாங்க என்றும், அடுத்த ஆட்டத்தில் ஜெயித்துவிட்டால் எதிர் டீம்காரங்க காசு வாங்கிட்டாங்க என்றும் கூசாமல் பேசுகிறார்கள். இதெல்லாம் ஃபிராடு. பூரா பயலுவளும் காசை வாங்கிட்டு ஆடுறாங்க. ஒரே மேட்ச் பிக்ஸிங் என்று புலம்புபவர்களும் கள்ளத்தனமாக கிரிக்கெட் பார்க்கத்தான் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட். அவர்கள் உண்மையாக விளையாடுகிறார்களா மேட்ச் ஃபிக்ஸிங்கா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எனக்குத் தேவையில்லை.

கடந்த வாரத்தை ஒரு Nostalgia வாரம் என்று சொல்லலாம். நேற்று மாலை நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படத்தை சாந்தி திரையரங்கில் அவரது ரசிகர்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சனிக்கிழமை மாலை நண்பர் சிவகுமார் தயவில் எஸ்.வி.சேகர் நடித்த ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகம் பார்த்தேன். விவரம் அறியாத வயதில் ஒருமுறை எஸ்.வி.சேகரின் பெரியப்பா நாடகம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு நோ நாடகம்ஸ். சமீப காலமாக அடிக்கடி காமராஜர் அரங்கத்தை தாண்டி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, நாடகம் பார்க்கும் ஆசை தோன்றியது. அதுவும் எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் (!!!) என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

விடாப்பிடியாக நிற்பவர்களை உடும்புப்புடி புடிச்சிட்டான்யா என்று சொல்வது வழக்கம். அதாவது உடும்பு செங்குத்தாக இருக்கும் இடத்தில் கூட கீழே விழாமல் பேலன்ஸ் செய்ய வல்லது. பல்லி கூட இதேபோல பேலன்ஸ் செய்யும் திறன் வாய்ந்தது. ஆனால் இவை தம்முடைய எடையை மட்டுமே தாங்கி நிற்குமே தவிர முதுகில் ஒருவரை உப்புமூட்டை தூக்கிக் கொண்டேல்லாம் நிற்க முடியாது. சமீபத்தில் வெளிவந்த ஒரு சூரமொக்கைப்படத்தில் ஹீரோ அல்லது களவாணிப்பய வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார். அதே போல உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. வேண்டுமானால், சில வகையறா உடும்புகள் மட்டும் உண்ணத்தகாததாக இருக்கலாம்.

listverse என்ற இணையதளம், ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் தினம் தினம் ஏதாவதொரு தலைப்பில் டாப் 10 பட்டியலை வெளியிடுவது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. சாம்பிளுக்கு டாப் 10 ஹாரர் படங்கள் லிஸ்ட்:
10. Ringu (1998)
9. Jaws (1975)
8. Poltergeist (1982)
7. The Texas Chainsaw Massacre (2003)
6. Carrie (1976)
5. Les Diaboliques (1955)
4. Rosemary’s Baby (1968)
3. Pshycho (1960)
2. The Exorcist (1973)
1. The Shining (1980)

ஜொள்ளு:
ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...!
ட்வீட் எடு கொண்டாடு:
எல்லாரும் கண்ணாடி தொட்டிக்குள் மீன்களை வளர்ப்பார்கள், நீ என்ன கண்ணாடிக்கு பின் வளர்க்கிறாய்? # தபூசங்கர் எஃபக்ட் :)

செக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....

மறுக்க படும் காதல் தேவலாம்.. ஆனால் மறக்கப்படும் காதலே கொடுமையானது.. #அடிடா அவள ஒதடா அவள

தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு

கமலும் தமிழும்
கமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தவகையில் கமல் தமிழைப்பற்றி சொன்ன பேட்டியின் ஒரு பகுதி.
பகிர்ந்துக்கொண்ட நண்பர் ராஜ நடராஜனுக்கு நன்றி.

ஸ்ருதியும் குரலும்
இந்தப்பாட்டு என்னவோ பண்ணுது கேளேன்... கேளேன்... என்று தங்க்ஸ் தந்த அன்புத்தொல்லை காரணமாக 3 படத்தின் கண்ணழகா பாடலை கேட்டேன். பாடலின் 1:50 நேரத்தில் ஆரம்பிக்கும் ரம்மியமான பெண் குரல் எனக்குள் ஏதோ செய்து திரும்பத் திரும்ப கேட்க வைத்தது.
யாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...!

மீண்டும் Nostalgia
தலைவருடைய அரிய புகைப்படம்
தத்துவம்
Loneliness adds beauty to life. It puts a special burn on sunsets and makes night air smell better – Henry Rollins

தத்துபித்துவம்
கடல் – எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை – உதிர்த்தவர் சர்ச்சை பதிவர் சிராஜுதீன்

அடுத்து வருவது...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment