அன்புள்ள வலைப்பூவிற்கு,
பாடல்கள் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவை என் காதுகளில் விழவே இல்லை. கண்கள் காஜலை பார்த்துக்கொண்டிருக்கும்போது காதுகள் ஏனோ வேலைநிறுத்தம் செய்துவிட்டன. காஜல் காட்டிய கவர்ச்சி போதாதென்று கேமராமேன் வேறு ஆ...ஊன்னா டாப் ஆங்கிளுக்கு போய்விடுகிறார். ம்ம்ம்... மொத்தத்தில் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை.
இசுலாமிய மன்னன், "நான் சிவன்டா..." என்று சொல்லுவதாக வசனம் எழுதி மதநல்லினக்கத்தை வாழ வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். கூடவே, ஷேர் கானை மறுஜென்மத்தில் சாலமனாக பிறக்க வைத்து இயக்குனரும் அவரது பங்கிற்கு இந்திய இறையாண்மையை நிலைநாட்டியிருக்கிறார். சும்மாக்காட்டி "இவன் என் டவுசரை கிழிச்சிட்டான்...", "அவன் என் கோவணத்தை உருவிட்டான்..." என்று டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்யும் மத இயக்கங்கள் எங்கே போனதென்று தெரியவில்லை. (ஒருவேளை திருந்திவிட்டார்களோ... இருக்காதே...).
படத்தின் பிளஸ்:
- காஜலும் கவர்ச்சியும்.
- சரித்திர பின்னணி.
படத்தின் மைனஸ்:
- மட்டமான கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள்.
- அரைத்த மாவு வகையறா காட்சிகள். (ஹீரோயின் விரல் பட்டதும் ஹீரோ சிலிர்ப்பதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்).
எனக்குப் பிடித்த காட்சி:
கிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா...? இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் போத்தல்கள் இருந்தாலும் இந்த ஒரு காட்சி மட்டும் கொஞ்சம் மெய்மரக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைத்தது.
பொதுவாக நான் டப்பிங் படங்கள் பார்ப்பதில்லை. அதிலும் தெலுங்கு டப்பிங் படங்கள் என்றால் கண்டிப்பாக உவ்வே. இருந்தாலும் மாவீரன் படத்தினை பார்க்க முடிவு செய்ததற்கு மூன்று காரணங்கள்.
1. சமீப காலமாக பீரியட் படங்களின் மீது ஏற்பட்டுள்ள அதீத ஆர்வம்.
2. இந்த படத்துடைய தமிழ் ரீ-மேக்கில் "தல" அஜித் நடிக்க இருப்பதாக ஒருகாலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
3. மிகவும் முக்கியமாக, என்னுடைய செல்லக்குட்டி, வெல்லக்கட்டி காஜல் அகர்வால் இரு வேடங்களில் நடித்த படம்.
சில வருடங்களுக்குப்பின் (புதிப்பிக்கப்பட்டபின்பு முதல்முறையாக) தேவி திரையரங்கம் சென்றிருந்தேன். ப்ளாக் டிக்கெட் விற்கும் ஆயாக்களை காணவில்லை. டிக்கெட் கவுண்டர் நவீன மயமாக்கப்பட்டிருந்தது. திரையரங்கின் உள்ளே படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையின் போதும் சாக்ஸபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. ஹை-கிளாஸ் தியேட்டர் ஆக்கிட்டாங்களாமாம்.
கதைச்சுருக்கம்:
ஏற்கனவே பெரும்பாலானோர் பார்த்த மகதீரா டப்பிங் என்றாலும் சம்பிரதாயத்திற்காக சில வரிகளில் கதை. நானூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜ பரம்பரையை சேர்ந்த காஜல் அகர்வாலுக்கும் போர்வீரன் ராம் சரணுக்கும் காதல். சந்தர்ப்ப சூழ்நிலைகள், சதி வேலைகள் காரணமாக இருவரும் இறக்க நேரிடுகிறது. அப்போது சேராமல் போனவர்கள் கலியுகத்தில் மீண்டும் பிறந்து காதலிக்கிறார்கள். கூடவே வில்லனும் மறுபடி பிறந்து தொலைக்கிறார். இந்தமுறையாவது காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.
கதாநாயகனாக சிரஞ்சீவி மகன் ராம்சரண். முதல்காட்சியிலேயே டாகுடரை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு பைக் ஜம்ப் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார். விடுங்க, அதெல்லாம் தெலுங்கு சினிமாவின் தலைவிதி. ராம்சரணிடம் அழகு, திறமை எல்லாம் இருந்தாலும் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஜொலிக்க மாட்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மென்டாலிட்டி அப்படி.
காஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். (அதற்காக க்ளீவேஜ் தெரியும் ஸ்டில்லை பேனரில் போட்டது டூ மச்). காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத்தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துக்கொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். அமலா பால்களும் ஓவியாக்களும் ஓடி வந்தாலும் காஜல்ன்னா காஜல்தான்.
வேட்டைக்காரனில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, சுறாவில் வில்லனாக நடித்த தேவ் கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.
முமைத் கானும் கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் "கெளரவத்தோற்றம்" அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் கிளைமாக்ஸுக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.
கதைச்சுருக்கம்:
ஏற்கனவே பெரும்பாலானோர் பார்த்த மகதீரா டப்பிங் என்றாலும் சம்பிரதாயத்திற்காக சில வரிகளில் கதை. நானூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜ பரம்பரையை சேர்ந்த காஜல் அகர்வாலுக்கும் போர்வீரன் ராம் சரணுக்கும் காதல். சந்தர்ப்ப சூழ்நிலைகள், சதி வேலைகள் காரணமாக இருவரும் இறக்க நேரிடுகிறது. அப்போது சேராமல் போனவர்கள் கலியுகத்தில் மீண்டும் பிறந்து காதலிக்கிறார்கள். கூடவே வில்லனும் மறுபடி பிறந்து தொலைக்கிறார். இந்தமுறையாவது காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.
கதாநாயகனாக சிரஞ்சீவி மகன் ராம்சரண். முதல்காட்சியிலேயே டாகுடரை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு பைக் ஜம்ப் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார். விடுங்க, அதெல்லாம் தெலுங்கு சினிமாவின் தலைவிதி. ராம்சரணிடம் அழகு, திறமை எல்லாம் இருந்தாலும் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஜொலிக்க மாட்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மென்டாலிட்டி அப்படி.
காஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். (அதற்காக க்ளீவேஜ் தெரியும் ஸ்டில்லை பேனரில் போட்டது டூ மச்). காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத்தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துக்கொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். அமலா பால்களும் ஓவியாக்களும் ஓடி வந்தாலும் காஜல்ன்னா காஜல்தான்.
வேட்டைக்காரனில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, சுறாவில் வில்லனாக நடித்த தேவ் கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.
முமைத் கானும் கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் "கெளரவத்தோற்றம்" அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் கிளைமாக்ஸுக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.
கிராபிக்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறலாம். ஒவ்வொன்றும் ஒருவித காமெடி. ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவதை எல்லாம் குஞ்சுமோன் காலத்திற்குப்பிறகு மீண்டும் பார்க்க முடிந்தது.
பாடல்கள் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவை என் காதுகளில் விழவே இல்லை. கண்கள் காஜலை பார்த்துக்கொண்டிருக்கும்போது காதுகள் ஏனோ வேலைநிறுத்தம் செய்துவிட்டன. காஜல் காட்டிய கவர்ச்சி போதாதென்று கேமராமேன் வேறு ஆ...ஊன்னா டாப் ஆங்கிளுக்கு போய்விடுகிறார். ம்ம்ம்... மொத்தத்தில் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை.
இசுலாமிய மன்னன், "நான் சிவன்டா..." என்று சொல்லுவதாக வசனம் எழுதி மதநல்லினக்கத்தை வாழ வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். கூடவே, ஷேர் கானை மறுஜென்மத்தில் சாலமனாக பிறக்க வைத்து இயக்குனரும் அவரது பங்கிற்கு இந்திய இறையாண்மையை நிலைநாட்டியிருக்கிறார். சும்மாக்காட்டி "இவன் என் டவுசரை கிழிச்சிட்டான்...", "அவன் என் கோவணத்தை உருவிட்டான்..." என்று டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்யும் மத இயக்கங்கள் எங்கே போனதென்று தெரியவில்லை. (ஒருவேளை திருந்திவிட்டார்களோ... இருக்காதே...).
படத்தின் பிளஸ்:
- காஜலும் கவர்ச்சியும்.
- சரித்திர பின்னணி.
படத்தின் மைனஸ்:
- மட்டமான கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள்.
- அரைத்த மாவு வகையறா காட்சிகள். (ஹீரோயின் விரல் பட்டதும் ஹீரோ சிலிர்ப்பதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்).
எனக்குப் பிடித்த காட்சி:
கிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா...? இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் போத்தல்கள் இருந்தாலும் இந்த ஒரு காட்சி மட்டும் கொஞ்சம் மெய்மரக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைத்தது.
வெர்டிக்ட்:
இந்தப்படத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. சரித்திர பெருமை வாய்ந்த அம்மியில் அரைத்திருந்தாலும் அதே தெலுங்கு மசாலாதான். நிச்சயமாக படம் ஓடாது. ஒருவேளை ஆட்சி மாறாமல் இருந்து, உதயநிதி ஸ்டாலினே படத்தை வெளியிட்டிருந்தால் படத்தை ஓட்டியிருக்கலாம்.
ஆனால் ஒன்று காஜலுக்காக கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்.
இந்தப்படத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. சரித்திர பெருமை வாய்ந்த அம்மியில் அரைத்திருந்தாலும் அதே தெலுங்கு மசாலாதான். நிச்சயமாக படம் ஓடாது. ஒருவேளை ஆட்சி மாறாமல் இருந்து, உதயநிதி ஸ்டாலினே படத்தை வெளியிட்டிருந்தால் படத்தை ஓட்டியிருக்கலாம்.
ஆனால் ஒன்று காஜலுக்காக கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|