28 February 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...? இழப்பா...?

நான் ஏன் சார் இந்த படத்த பாத்தேன்...???

வழக்கமாக திரையில் காட்டப்படும் காதல்களை நான் என்றுமே விரும்பியதில்லை. infact, (மதன் ஸ்டைலில் படிக்கவும்) காதல் என்பது புனிதமானது, புளிப்பானது என்றெல்லாம் இன்றுவரை மக்களை ஏமாற்றி வருவதே சினிமா தான். இருப்பினும் இந்த பதிவை வெளியிடுவதற்காகவும் கேட்காமலே டிக்கட் கிடைத்தது என்பதாலும் நேற்று மாலை iDreams திரையரங்கம் சென்றேன். மீசைக்கார நண்பனும் ரோஷக்கார நண்பனும் போட்டுக்கொண்ட சண்டையில் "ஹோசன்னா..." பாடல் உட்பட இருபது நிமிட படம் முடிந்திருந்தது.
கதைச்சுருக்கம்
(நான் பார்த்த காட்சியில் இருந்து)
த்ரிஷாவை பார்த்ததும் காதல் வசமாகிவிடுகிறார் சிம்பு (!!!). த்ரிஷாவை துரத்திக்கொண்டு ஆலப்புழை வரை சென்று கொக்கி போடுகிறார். த்ரிஷா வழக்கமான பெண்களைப் போல புரிந்தும் புரியாமலும் பேசி சிம்புவை குழப்புகிறார். ஒரு காட்சியில் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார், மறுகாட்சியிலேயே நாம friendsa இருப்போம் என்று சாலமன் பாப்பைய்யா மாதிரி சொல்கிறார். ஒரு வழியாக அவர்கள் OK ஆவதற்குள் விஷயம் த்ரிஷாவின் குடும்பத்திற்கு தெரிய வந்து த்ரிஷாவிற்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். மணக்கோலத்தில் இருக்கும் த்ரிஷா திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்வதோடு இடைவேளை.

இடைவேளைக்குப்பின் த்ரிஷா காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே சிம்புவை பிரிகிறார். சிம்பு தனது லட்சிய சினிமாவை எடுக்கிறார். த்ரிஷா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கிறார். படம் நிறைவடைகிறது.

படத்தில் உள்ள பல காட்சிகள் என்னுடைய நிஜ வாழ்க்கையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சம்பவங்கள் அச்சுபிசகாமல் பிரதிபலித்தது. (அது பற்றிய ஓர் தொடர்பதிவு கூடிய விரைவில் வெளிவரும்). ஆனாலும் படத்தைப் பார்த்தபோது எந்த உணர்வும் தோன்றவில்லை.
SIMBHU
டைட்டிலில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டதாக கேள்விப்பட்டேன். நல்லவேளையாக நான் அந்த கொடுமையை பார்க்கவில்லை. சினிமாவில் அசிஸ்டென்ட் டைரக்டராக முயற்சி செய்யும் கார்த்திக் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் கணக்கு பண்ணுவதில் சிறப்பாக விளங்கும் சிம்பு இந்த படத்தில் கணக்கு போடுவதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். எனக்கு 80 வயதாகும்போது உனக்கு 81 ஆகியிருக்கும், உனக்கு 50 வயதாகும்போது எனக்கு 49 வயது ஆகியிருக்கும் என்றெல்லாம் அவ்வப்போது புள்ளிவிவரங்களை சொல்லி கேப்டனோடு போட்டி போடுகிறார். இவர் த்ரிஷாவை உஷார் செய்வதற்காக பயன்படுத்தும் வசனங்கள் அனைத்தும் கவிதை. உச்சகட்ட காட்சியில் த்ரிஷாவுடன் பேசும் இரண்டு நிமிடங்களில் சிம்புவை ரசிக்கலாம்.
THRISHA
ஆயுத எழுத்து, சர்வம் படங்களுக்கு பிறகு த்ரிஷா இந்த படத்தில் இன்னும் அழகாக இருக்கிறார். இருப்பினும் அவ்வப்போது யதார்த்த காதலியை நினைவூட்டுவதால் ரசிக்க முடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெஸ்ஸி பாத்திரத்தில் மலையாள கப்பகிழங்காக நடித்திருக்கிறார். குடும்பத்திற்கும் காதலுக்கும் இடையே ஆல்லாடும் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வசீகரிக்கிறார். 

SIMBHU - THRISHA CHEMISTRY
இத நான் சொல்லியே ஆகணும். படத்தில் இரண்டு பேருடைய வேதியியல் (அதாங்க கெமிஸ்ட்ரி...!!!) சிறப்பாக உள்ளது. ஆனால் படத்தில் இருவரும் காதலிக்கும் காட்சிகளை விட சண்டை போடும் காட்சிகளே அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மேலோட்டமாக சில முத்தக்காட்சிகள் தென்படுவது ஆறுதல். 

மற்றும் பலர் 
சிம்பு, த்ரிஷா தவிர்த்து படத்தில் மனதில் நிற்கும் ஒரே கதாபாத்திரம் முதல் பாதியில் கேமரா மேனாக சிம்பு கூடவே வரும் நபர். மனிதர் டைமிங் காமடியில் பின்னி எடுக்கிறார். முதல் பாதியை தூக்கி நிறுத்தியிருப்பதே இவர் பேசும் வசனங்கள் தான். கே எஸ் ரவிக்குமார், இயக்குனராகவே சில காட்சிகளில் வந்து சென்றாலும் மனதில் நிற்கிறார். காதலுக்கு காதலர்களே சூனியம் வைத்துக்கொள்வதால் இருவரின் பெற்றோருக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. த்ரிஷாவின் அப்பா மட்டும் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசி கடுப்பேத்துகிறார்.

பாடல்கள் 
படத்தில் சிறப்பான பாடலான "ஹோசன்னா..." பாடலை தவற விட்டதால் மற்ற பாடல்கள் அதிகம் மனதை கவரவில்லை. சில பாடல்களில் சிம்புவை சுற்றி முக்கால் பேன்ட் போட்ட RAP கூட்டம் ஆடுவதை ரசிக்க முடியவில்லை. மற்றபடி பாடல்கள் அனைத்தும் மென்மையாக இருக்கிறது. 

RESULT
காதலை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் எதார்த்தமாக காட்டியிருந்தால் முதல்பாதியில் த்ரிஷா திருமணம் செய்து கொள்வதோடு படம் முடிந்திருக்கும். படத்தில் சிம்புவாவது வேறு ஏதாவது ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கலாம். டென்ட் கொட்டாயில் மண்ணை குமித்து வைத்து பார்ப்பவர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சி புரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடிய விரைவில் கிளைமாக்ஸ் மாற்றப்படுமென நம்புகிறேன். ஆனால் அது சினிமாத்தனமாகவே இருக்கும். 

காதலர்கள் அவர்களின் இணையோடு பார்த்தால் ரசிக்கலாம். காதலித்தவர்கள் படத்தை பார்க்கலாம். காதலுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர்கள் படத்தை பார்ப்பது வேஸ்ட்.

விண்ணைத் தாண்டி வருவாயா...? - இல்லை இழப்புதான் 

டிக்கட் எடுத்த 70 ரூபாய் இழப்புதான்.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

24 February 2010

அவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 1

வணக்கம் மக்களே...

(மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது...)

followers எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடன் இணைந்த உண்மைத்தமிழன், SUREஷ், சேட்டைக்காரன் (நல்லவேளை... வேட்டைக்காரன் இல்லை) ஆகியோருக்கு நன்றி. சிலை வைக்கவில்லை என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். பின்னூட்டம் எழுதிய நண்பர்களுக்கு அங்கேயே பதிலளித்துள்ளேன்.


தேடித்தேடி ஓட்டளிப்பு பட்டைகள் சிலவற்றை இணைத்துள்ளேன். இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.
 
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில் அடுத்த பதிவுக்கான அக்கினிக்குஞ்சு (spark) கிடைத்தது. ஆனால் எவ்வளவோ சிந்தித்தும் தலைப்பை தாண்டி எதுவும் பிடிபடவில்லை. பிப்ரவரி முப்பதாம் தேதி வந்தாலும் எனக்கு கவிதை வராது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. எனவே துளியும் தாமதப்படுத்தாமல் பரணில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆனந்த விகடன்களையும் தபூ சங்கரையும் புரட்டினேன். இரண்டு பதிவுகளுக்கான matter ஒற்றை இரவிலேயே கிடைத்தது.

குறிப்பு: இது sweet பிரபாவின் கவிதைப்பதிவுக்கு போட்டியாக எழுதப்பட்டதல்ல...

அந்த நேரத்தில், அந்தி நேரத்தில் முன்னூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை ரசித்தாலும் அனைத்தையும் copy, paste செய்துவிடவில்லை. முத்தான முப்பது கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை இரண்டாக பிரித்தேன். அதென்ன முத்தான கவிதைகள்...

எனது பட்டாம்பூச்சி மீதான என் உணர்வுகளைச் சொல்லும் கவிதைகள் மட்டும் இங்கே : -

முன் குறிப்பு: பதிவைப் படிக்கும் நண்பர்கள் யாரும் யாரந்த பட்டாம்பூச்சி
என்றோ, பட்டாம்பூச்சி பெயர்க்காரணம் குறித்தோ வினவ வேண்டாம்.

இந்த இரவையே
உனக்கு கடிதமாக அனுப்புகிறேன்...
அஞ்சல்தலையாய் அந்த நிலா...!
*****
எத்தனை குதிரைச் சக்தி கொண்டதோ...?
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும் 
உன் குதிரை வால் கூந்தல்...!
*****
நான் கிளையானபோது பூவானாய்...
கிடாரானபோது கம்பியானாய்...
காதலானபோது ஏன் மௌனமானாய்...?
***** 
இன்னும் அதிகம் ரசிப்பதுண்டு...
என்னை அடித்துவிட்டு 
நீ அழுத நிமிடங்களை...!
*****
நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...
நான் நேசிக்கும்படி இருப்பது...!
*****
பொம்மையை நீ கொஞ்சாதே...
அதற்கு உயிர் வந்துவிட்டால் 
யார் வளர்ப்பது...?
*****
வீட்டுக்கு ஒரு
மரம்தானே வளர்ப்பார்கள்...?
உன் வீட்டில் மட்டும்
ஏன் மயில் வளர்க்கிறார்கள்...?
*****
கனிவானதொரு சொல்லோ...
நேசம் துளிர்க்குமொரு பார்வையோ...
சில்லரையற்ற பொழுதில் 
நீயெடுக்கும் பயனச்சீட்டோ...
போதுமானதாயிருக்கிறது
உன்னை நேசிக்க...!
*****
துடிப்பதைவிட 
உன்னை நினைப்பதற்கே 
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு...!
*****
நீ இரவுகளில் தூங்குவதே இல்லை...
என் கனவுகளில் அல்லவா இருக்கிறாய்....?
நானோ காலையிலும் எழுவதே இல்லை...
கனவுகள் கலையப் பிடிக்காமல்...!
*****
ஏற்கனவே பூத்த பூ தான் 
எனினும் நீ சூடும்போது 
மறுபடியும் பூக்கிறதே...!
***** 
என்னை நினைத்துக்கொண்டு உறங்கு 
என்றாய்...
அதற்குப் பதிலாய் 
கண்ணைத் திறந்துக்கொண்டு உறங்கு
என்று சொல்லியிருக்கலாம்...!
***** 
சிற்பம்...
கவிதை...
ஓவியம்...
இசை...
நான்கு முனைச் சந்திப்பு நீ...!
***** 
எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் கோலம் 
போடுகிறாய்...?
பேசாமல் 
வாசலிலேயே 
சிறிது நேரம் உட்கார்ந்திரு 
போதும்...!
***** 
என்னை நல்லவன் என்று 
நினைத்துக் கொண்டிருந்தேன்...
அந்த நினைப்பில் 
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்...!
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை ஆட்டையைப் போடச்சொல்லி 
நச்சரிக்கிறதே மனசு...!
*****
எல்லாச் சொற்களும் தீர்ந்துவிட்டன...
உன் புன்னகையின் வரி வடிவம் கொடேன்...
கொஞ்சம் கவிதை செய்கிறேன்...!
*****
அப்பாடா இப்போதான் மனதில் உள்ள பாரமே கொஞ்சம் குறைஞ்சிருக்கு... இப்போ ஒரு situation still... சும்மா சாப்பிடுங்க...
ம்ம்ம்... இது சும்மா sample தான். பலமான கவிதைகளை அடுத்த பதிவிற்காக பதுக்கியிருக்கிறேன். பிடித்திருந்தால் பின்னூட்டம் போடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment