27 August 2012

பதிவர் சந்திப்பு – பரபரப்பான பத்து தலைப்புகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

1. பதிவர் சந்திப்பை நடத்திய பொறுக்கிகள்
பதிவர் சந்திப்பு குழுவினரைப் பற்றி ஒருத்தருக்கு ஒரு பத்தி என்ற விகிதத்தில் மொக்கை போட வேண்டும். இறுதியாக பதிவர் சந்திப்பு முடிந்ததும் விருந்தினர்கள் பயன்படுத்திய பேப்பர் கப், ப்ளேட் போன்ற வஸ்துக்களை விழாக்குழுவினர் “பொறுக்கி” கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.

2. பதிவர் சந்திப்பையும் மதுவையும் பிரிக்க முடியுமா ???
பதிவர் சந்திப்பை பற்றி இரண்டு பத்திகள் மொக்கை, பதிவர் மதுமதியை பற்றி இரண்டு மொக்கை பத்திகள். பின்னர் பதிவர் மதுமதியை நாங்கள் செல்லமாக மது என்றுதான் அழைப்போம். அவரையும் பதிவர் சந்திப்பையும் பிரிக்க முடியுமா என்று கேள்விக்குறியோடு முடிக்க வேண்டும்.

ஒளியூடுருவும் உற்சாக பானத்தை வாட்டர் பாட்டிலில் ஒளித்துவைத்து அருந்தும் மெட்ராஸ் பவனார்...!
3. உற்சாக பானம் அருந்திய மெட்ராஸ் பவனார்...!
முதலில் சிவகுமார் பற்றி இரண்டு பத்திகள். பின்னர் அவருடைய குணத்தைப் பற்றி, அன்னார் ரொம்ப நல்லவர், வல்லவர், பொதுவுடமைவாதி, சீரிய பேச்சாளர், ஒழுக்க சீலர், எச்சச்ச கச்சச்ச. அப்புறம் பதிவர் சந்திப்பன்று காலையிலிருந்து ஓடியாடி உழைத்து சிவகுமார் அயர்வானார். சில மில்லி உற்சாக பானம் குடித்ததும் மீண்டும் தெம்பானார். அந்த உற்சாக பானத்தின் பெயர் H20 என்று முடிக்க வேண்டும்.

4. பதிவர் சந்திப்பிற்கு ஊறுகாயான இஸ்லாமிய பதிவர்கள்...!
பதிவர் சந்திப்பை பற்றியும், மது சர்ச்சைகள் பற்றியும் சில பத்திகள். பின்னர் விழிப்புணர்வு, நடுநிலை, மதநல்லிணக்க (!!!) ஜல்லிகள். அப்புறம் பதிவர் சந்திப்பிற்கு இஸ்லாமிய சகோக்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மதிய உணவின் போது அன்போடு உணவு பரிமாறினார்கள். சகோ. மனிதாபிமானி தான் நண்பர்கள் அனைவர் இலையிலும் ஊறுகாய் வைத்தார் என்று முடிக்க வேண்டும்.

5. தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி யார்...?
முதலில் உங்களுக்கு தெரிந்த பிரபல / பிராப்ள பதிவர்களான கேபிள், ஜாக்கி, லக்கி, கே.ஆர்.பி பற்றி எழுதி மொக்கை போட வேண்டும். பின்னர் கூகுள்காரன் தான் நமக்கு ஓசியில் வலைப்பூ கொடுக்கிறான், அதனால் அவன்தான் தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி என்று கோல் போட வேண்டும். பின்னூட்டத்தில் யாராவது வந்து, “வாத்தா... எவன்டா அது என்னைப்பத்தி எழுதினது...” ன்னு கேட்டா, “அண்ணே... ஆக்குசன் நடிகர் ஜாக்கி சான் என்னுடைய வசாகார்... அவரைப்பற்றி தான் சொன்னேன்... நீங்கங்கங்க யாருன்னே எனக்கு தெரியாது...” என்று பல்டியடிக்க வேண்டும்.

மொட்டைமாடியில் கொட்டை அடிக்கப்பட்ட ஜோடிபுட்டிகள்...!
6. பதிவர் சந்திப்பில் ஆபாசம் காட்டிய பதிவர்...!
முதலில் விழாக்குழுவில் உள்ள “அந்த” சம்பந்தப்பட்ட பதிவரைப் பற்றி சில பத்திகள். அப்புறம் பதிவர் சந்திப்பின் கண்ணியம் பற்றியும், இந்திய இறையான்மை பற்றியும் சில பத்திகள். பின்னர் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த விருந்தினர்கள் “ஆ...!” என்று ஆச்சர்யப்படும் வகையில் நண்பர் “பாசம்” காட்டினார். அதைத்தான் ஆ...பாசம் என்று சொன்னேன் என்று முடிக்க வேண்டும்.

7. தேசிய கீதத்தை அவமதித்த தமிழ்ப்பதிவர்கள் மாநாடு...!
மறுபடியும் இந்திய இறையான்மை, மகாத்மா (!!!) காந்தி பற்றி சில பத்திகள். முடிந்தால் ராபிந்திரநாத் தாகூர் பற்றியும், அவரது புலமை பற்றியும் சில மொக்கைகள். அப்புறம் தமிழ் பதிவர்கள் தேசிய கீதத்தை தமிழில் தானே பாடியிருக்க வேண்டும். ஏன் வங்காள மொழியில் பாடினார்கள் ??? என்ற வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை முன்வைக்க வேண்டும்.

8. உனா தானா அண்ணாச்சியை அவமதித்த பதிவர் குழுமம்...!
உண்மைத் தமிழன் அண்ணாச்சி உண்மையிலேயே எம்புட்டு நல்லவர் என்று விளக்கிச் சொல்லி சில பத்திகள். நடுநடுவே முருகா, செந்திலாண்டவா இதெல்லாம் போட்டுக்கணும். அப்புறம் அறுபது வயதை கடந்த பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு தந்து மரியாதை செய்தார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அறுபதைக் கடந்த எங்கள் சித்தப்பு உனா.தானாவை மறந்துவிட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.

பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது)
9. தமிழை மறந்த தமிழ்பதிவர்கள்...!
முதலில் தமிழனின் ஒரிஜினல் பெருமை, போதி தருமர், திருவள்ளுவர், கான்ஸ்டான்டியுஸ் ஜோசப் பெஸ்கி பற்றியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டும். பின்னர் பதிவர் சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது மேடையில் வீற்றிருந்த பதிவர் பாடலை மறந்துவிட்டதாகவும், அதை சமாளிக்க கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் கொடுத்ததாகவும் அடித்துவிட வேண்டும். நான் பார்த்தேனே... அப்படியெல்லாம் நடக்கலையே...” என்று மடக்கும் பின்னூட்டவாதிகளுக்கு போலி தமிழ் தேசியவாதிகள், நட்ட நடு சென்டர்கள் போன்ற பட்டங்களை தரவேண்டும்.

10. பதிவர்களில் யார் யார் எந்தெந்த க்ரூப்....? ஒரு நடுநிலை ஆய்(வு)...!
மறுபடியும் பதிவுலகில் மூத்த / பீத்த பதிவர்கள் பற்றி சில பத்திகள். பதிவுலகை நாங்கள் தான் கண்காணித்து, கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற வார்த்தைகள் கொண்ட பத்தி. பின்னர் பதிவர் சந்திப்பின் போது யார் யார் எந்தெந்த ப்ளட் க்ரூப் என்று பேசிக்கொண்டிருந்தோம். கேபிள் ஓ பாசிடிவ் க்ரூப், ஜாக்கி ஓத்தா நெகடிவ் க்ரூப் என்று அடித்துவிட வேண்டும். 

மேற்படி பதிவுகள் போடும்போது பின்னூட்ட மட்டறுத்தல் வைத்துக்கொண்டால் மற்றவர்கள் / உற்றவர்கள் காறி உமிழும்போது உங்கள் முகத்தில் படாமல் தப்பிக்கலாம். முடிந்தால் பின்னூட்டப்பெட்டியை மூடிக்கொண்டு இருக்கலாம்.

யாராவது வந்து இப்படி கெட்டவார்த்தையெல்லாம் போட்டு பதிவு எழுதியிருக்கீங்களே தம்பின்னு கேள்வி கேட்டா, யார் சொன்னது இது பெண்களெல்லாம் படிக்கும் கண்ணியமான வலைப்பூ...! அதனால் “ம” வில் ஆரம்பித்து “ரு” வில் முடியும், நடுவில் “யி” அல்லது “சு” வரக்கூடிய, தலைமுடியை குறிக்கக்கூடிய “அந்த” கெட்டவார்த்தையை எங்கம்மா சத்தியமா நான் பயன்படுத்தவே மாட்டேன் என்று அடித்துக்கூற வேண்டும்.

திருவள்ளூர் “வாசி”கள் மட்டும் தங்களுடைய பதிவின் தலைப்பில், ”அந்த”, “அது”, அதேதான்” போன்ற சங்கேத வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்ள பெசல் அனுமதி உண்டு...!


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 August 2012

உலகத் தமிழ்ப்பதிவர்கள் மாநாடு...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொதுவாக சென்னையில் பதிவர் சந்திப்பு எப்படி இருக்கும் ? 

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருக்கும். நாலே முக்கால், ஐந்து மணிவாக்கில் ஒன்றிரண்டு தலைகள் டீக்கடையில் தென்படும். சுமார் அரைமணிநேரம் கழித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக குழு விவாதம் செய்துக்கொண்டிருப்பார்கள். ஆறு மணிக்கு அதே டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கும். சுரேகா அல்லது கேபிள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். காவேரி கணேஷ் முதல் வரிசையில் அமர்ந்து தொகுப்பாளருக்கு தொடுப்பு எடுத்துக்கொண்டிருப்பார். கார்க்கி நடுவில் எங்கேயாவது அமர்ந்துக்கொண்டு வரிக்கு வரி கலாய்த்துக்கொண்டிருப்பார். வரிசையாக எல்லோரும் எழுந்துநின்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது “ம்ஹூம் நான் எழுந்து நிற்க மாட்டேன்... இது என்ன ஸ்கூலா” என்று முரண்டு பிடிப்பார் ஒரு பி.ப. பின்வரிசையில் இலக்கிய அணி தனியாவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கும். எழரையை கூட்டிவிட்டு எட்டரை மணிக்கு மறுபடியும் தனித்தனி குழுவாக டாஸ்மாக் நோக்கி நகரும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் வரலாறு...!

அப்படியெல்லாம் இல்லாமல் துல்லியமாக திட்டமிடப்பட்டு படு ப்ரோபஷனலாக சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு... தப்பு தப்பு வாயில அடி... உலகத் தமிழ்ப்பதிவர்கள் மாநாடு (!) நடக்க இருக்கிறது. துள்ளி விளையாடும் மழலையின் உற்சாகத்தோடு நடைபெறவிருக்கும் நம்முடைய மாநாட்டிற்கு அடிக்கோலிட்டது முதியோரணி என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். புலவர் சா.ராமானுசம், சென்னை பித்தன் மற்றும் மின்னல் வரிகள் கணேஷ் மூவரும் சங்கமித்த ஒரு பொன்மாலைப்பொழுதில் பதிவர் சந்திப்பிற்கான பொறி தட்டியிருக்கிறது. அது ஒவ்வொரு வாரமும் டிஸ்கவரி புக் பேலஸில் கொஞ்சம் கொஞ்சமாக மூப்படைந்து தற்போது காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு பதிவர் சந்திப்பு குறித்து ஆலோசனைகள் கேட்க அடிமட்ட குழுவை அழைப்பதாக எனக்கு ஒரு தகவல் வந்தது. சம்பவ இடம் – டிஸ்கவரி புக் பேலஸ். வட்டமேசை மாநாடு துவங்கியதும் ஒருவர் எழுந்து யாராவது “Minutes of Meeting” எடுக்குறீங்களா ? என்றார். எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்தது. இது எந்தமாதிரியான பதிவர் சந்திப்பு என்று ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள முடிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து, கவியரங்கம், மூத்த பதிவர்களுக்கு நினைவுப்பரிசு போன்ற பதங்களை கேட்டதும் இது நமக்கான இடம் இல்லை என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டு டாக்டர் நாராயண ரெட்டி எழுதிய ஒரு சமாச்சார புத்தகத்திற்குள் என்னை புதைத்துக்கொண்டேன்.

அப்படியிருந்தும் என்னையும் நடக்கவிருக்கிற வரலாற்று சிறப்புமிக்க பதிவர் மாநாட்டின் விழாக்குழுவினர்களுள் ஒருவராக இணைத்துக்கொண்ட நல்ல உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. வருகிற 26ம் தேதி, உலகின் பல மூலைகளில் இருந்தும் பதிவர்கள் சென்னைக்கு வந்து குவியப்போகிறார்கள், பல பிசிராந்தயார்களும் கோப்பெருஞ்சோழர்களும் சந்தித்துக்கொள்ள போகிறார்கள், உற்சாக வெள்ளம் (!!) கரைபுரண்டு ஓடப்போகிறது...! என்ன ஒன்று, உலகம் என்ற சிறு உருண்டையில் பதிவர் மாநாட்டை குறுக்கிவிட்டதால் ஜூபிடர், நெப்ட்யூன், ப்ளுட்டோ வாழ் பதிவர்கள் வருத்தப்படுவார்களோ என்றுதான் அச்சப்படவேண்டியிருக்கிறது...!

மாநாடு அழைப்பிதழ்
மேலும் விவரங்களுக்கும் உங்களுடைய வருகையை உறுதி செய்வதற்கும் கீழ்காணும் பெரியவர்களுள் யாரையாவது தொடர்பு கொள்ளலாம் :-
சென்னை பித்தன் - 94445 12938
புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

இளைஞரணியிடம் மட்டுமே பேசுவேன் என்பவர்கள் 8015899828 என்ற எண்ணில் என்னை அழைக்கலாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 August 2012

அட்டகத்தி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜனவரி ரிலீஸ் என்று விளம்பரப்படுத்திய படம், தட்டுத்தடுமாறி சுதந்திரம் பிறந்து வெளிவந்திருக்கிறது. ஹிட் பாடல்கள் நச் ட்ரைலர் என எதிர்பார்ப்பை எகிற வைத்த அட்டகத்தி, சமீப நாட்களாக பண்பலை, செய்தித்தாள், தொலைக்காட்சி என்று தொடர் மார்கெட்டிங் செய்து ஒருவழியாக திரையரங்கு நுழைய வைத்துவிட்டார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா...???

டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொன்னை காதலி’ன்னுற ஒருவரி கமலுத்துவத்தை நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்...!

“இவருதாங்க நம்ம ஹீரோ” – என்ற வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கும்போதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு நமக்குள் இருந்து நம்மையறியாமல் காற்று பிரிகிறது. எத்தனை பேருடா இதேமாதிரி ஆரம்பிப்பீங்க...!

ஹீரோ பெரும்பான்மை தமிழ் சினிமாக்களில் வருவது போன்ற பொறம்போக்கு பொறுக்கி. ஆனால் நிஜத்தில் சரியான அம்மாஞ்சியாக இருப்பார் போல. அவருடைய தோற்றம் கலைக்கல்லூரி மாணவருக்கு பொருத்தமாக இருப்பினும் டயலாக் டெலிவரி, அசால்ட், கெத்து, சீன் போன்ற அம்சங்களில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. வடசென்னையிலுள்ள மேற்படி பொறுக்கிகள் நான்கு நிமிட பேச்சினூடே நாற்பது ங்கோத்தா போடுவார்கள். அதையெல்லாம் சினிமாவில் காட்டுவது சாத்தியமில்லையே...!

அரை டஜன் ஹீரோயின்கள் அத்தனையும் அடுக்கி வைத்த அல்வாதுண்டூஸ், உருட்டி வைத்த லட்டூஸ். ஆனால் சமயங்களில் எது யாரென்று புரியமாட்டேங்குது. இருக்கட்டுமே அதனாலென்ன...! அத்தனை ஃபிகரிலும் அத்தைப்பெண் அமுதாவாக வருபவர் அட்டகாசமான தேர்வு. கலையான முகம் இன்னமும் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. கடைசி காட்சியில் சிறப்புத்தோற்றம் தருகிறார் மதுபானகடை புகழ் நேற்று பூத்த ரோஜா மொட்டு ஐசுவர்யா. 

அமுதா மட்டுமில்லாமல் ஹீரோவுடைய அம்மா, அப்பா என்று நடிகர் – நடிகையர் தேர்வு கச்சிதம். 

“ரூட்டு தல” பற்றிய பதத்தை விவரிக்கும் பொருட்டு பச்சையப்பாஸ், நந்தனம் கல்லூரி மாணவர்களை பேட்டி எடுத்து ஒரு மினி டாக்குமெண்டரியை படத்தில் சொருகியிருக்கிறார்கள். மாணவர்களுடைய கொண்டாட்ட மனப்பான்மை, ஒற்றுமை ஆகியவற்றை படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர், அவர்கள் செய்யும் பாலியல் சீண்டல்கள், பப்ளிக் நியூசன்ஸ் போன்றவற்றை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்.

எடிட்டிங் என்ற யுக்தி சரியில்லையெனில் படம் எந்த அளவிற்கு மொக்கையாக இருக்குமென்பதற்கு அட்டகத்தி மிகச்சரியான உதா”ரணம்”. ஹீரோவுக்கு டான்ஸ் தெரியும் / வடசென்னை வாழ்க்கை பற்றிய எதார்த்தமான படம் என்று காட்டுவதற்காக திடீரென ஒரு மரண நடனம், அதைத் தொடர்ந்து குடும்ப கானா...! ஹீரோவுடைய நண்பர் போண்டா சாப்பிட்டு முடிக்கும்வரை அடுத்த காட்சி காத்திருப்பது கொடுமை.

தனித்தனி காட்சியாக பார்க்கும்போது அட்டகத்தி பளபளப்பாக இருப்பது போல தோற்றமளிக்கிறது. ஆனால் முழுப்படமாக பார்க்கும்போது டல்லடிக்கிறது...! மொத்தத்தில் படத்தினுடைய டைட்டிலையே அதற்குரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 August 2012

அதிசய உலகம் 3D


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழின் முதல் டைனோசர் 3D படம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஜுராஸிக் பார்க் மாதிரி நம்மாளுங்க படமெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க டோய்’ன்னு போய் தியேட்டர்ல உட்காருபவர்களை கக்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி கடித்து துப்பியிருக்கிறார்கள். இயக்குனர் ஷக்தி ஸ்காட் சர்வ நிச்சயமாக ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு விட்ட சகோதரராகத்தான் இருக்க முடியும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மட்டும் அதிசய உலகத்தை பார்த்தால் அவமானம் தாங்க முடியாமல் முகத்தை முதுகு பக்கம் திருப்பி வைத்துக்கொள்வார்.

லிவிங்ஸ்டன் கண்ணாடி, குறுந்தாடி அப்புறம் ஆண்டாள் அழகர் கல்லூரி மாணவர்களிடம் இரவல் வாங்கிய லேப் கோட் சகிதம் வந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்கிறார். எஸ், அவர் ஒரு சயின்டிஸ்ட். அதுவும் “காலையில யார் மூஞ்சியில முழிச்சேன்னே தெரியல”, “கடவுளே எல்லாரையும் பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடுப்பா” போன்ற கருத்தாழம் மிக்க வசனங்கள் பேசும் பகுத்தறிவு பொங்கி வழியும் சயின்டிஸ்ட். அவர் மெமரி கார்டில் பாட்டு ஏற்றுவது மாதிரி மனிதர்களை சல்லிசாக காலக்கடத்தல் செய்யும் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். பேரக்குழந்தைகள் தெரியாத்தனமாக இவருடைய காலச்சக்கரத்தில் கால் வைக்க, அது ஏதோ ஒரு எட்டு இலக்க கிறிஸ்துவுக்கு முன் ஆண்டுக்கு இட்டுச்செல்கிறது. தாத்தாகளுக்கெல்லாம் பேரப்பிள்ளைகள் மீது பாசம் அதிகமாயிற்றே...! அவர்களை காப்பாற்ற இவரும் காலம் கடக்கிறார். பலசரக்கு டைனோசர்கள் நிறைந்த அந்த அதிசய உலகில் இருந்து மீண்டு வந்தார்களா என்பதை திரையரங்கு சென்று மாண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

லிவிங்ஸ்டன் ஒரு காலத்தில் ரம்பா, குஷ்பூவிற்கெல்லாம் ஜோடியாக நடித்தவர். அவருக்கு போய் எந்திரன் ரஜினி கெட்டப் போட்டு, இரு பேரக்குழந்தைகள் என்று காட்டியதோடு நில்லாமல் லதாராவுக்கு மாமனாராக வேறு காட்டியிருப்பது காலம் செய்த கேவலம்.

3D படத்தில் சீரியல் ஆண்ட்டி லதா ராவை சிங்கிள் ஃப்ளீட் சேலையுடன் நடமாட விட்டிருக்கும் இயக்குனரின் சூட்சுமத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது. லதா ராவ் தோன்றும் சில காட்சிகளில் நம்மால் திரையின் மேல்பாதியில் கவனம் செலுத்த முடியவில்லை. 3D படமென்பதால் பொருட்கள் மிக அருகாமையில் தெரிந்து நம் நெஞ்சை புடைக்கச்செய்கிறது. டைனோசர்களை உலவவிட்டதற்கு பதிலாக லதாவை ஒன்றரை மணிநேரத்திற்கு செய்தி வாசிக்கவாவது விட்டிருக்கலாம். BTW, இது சிறுவர்களுக்கான படம்...!

ஆனந்தகண்ணனை உண்மையிலேயே யாராவது டைம் மிஷினிலோ வாஷிங் மிஷினிலோ வைத்து கற்காலத்திற்கு கடத்திவிட்டார்களோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. படம் முடிந்து வெளியே போகும்போது பல குழந்தைகளும் சில பெரியவர்களும் “பூபூ பூபூ” என்று கத்திக்கொண்டு சென்றதே இவருடைய நடிப்பிற்கு கிடைத்த வெற்றி.

மாயா மாதிரியான ஏதோ ஒரு அனிமேஷன் மென்பொருளை வைத்துக்கொண்டு முக்கால்வாசி படத்திற்கு மேல் எடுத்திருக்கிறார்கள். அதையாவது உருப்படியாக செய்திருக்கிறார்களா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இதில் பதினைந்து வகையான டைனோசர்களை ஜுராஸிக் பார்க்கில் கூட பார்த்திருக்க மாட்டீர்கள் என்று பெருமை வேறு. பிரம்மாண்டமான ராஜசாரஸ் என்னும் டைனோசரை ஒரு ஷாட்டில் பெரிய சைஸில் காட்டுகிறார்கள், அடுத்த ஷாட்டிலேயே எருமைமாடு சைஸில் காட்டுகிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் ஆத்திச்சூடி, நர்சரி ரைம்ஸ் சிடி பார்த்த உணர்வையே தருகிறது. நல்லவேளையாக பாடல்கள் எதுவும் படத்தில் இல்லை. இறுதிக்காட்சியில் டைம் மிஷினை ஆஃப் செய்யாமல் போக, டைனோசர் அதனை நெருங்கி வருவதோடு முடித்திருந்தால் இரண்டாம் பாகத்திற்கு லீட் கிடைத்திருக்கும். அந்த சாமர்த்தியம் இயக்குனருக்கு இல்லாதது நம்முடைய அதிர்ஷ்டம்.

குழந்தைகளை டார்கெட் செய்து எடுத்திருக்கிறார்கள். அதேபோல 3Dயில் அடிக்கடி பொருட்களை கண்ணுக்கு அருகாமையில் கொண்டு வந்து (இந்தமுறை லதா ராவை சொல்லவில்லை) பயம் காட்டுகிறார்கள் என்பதால் சில குழந்தைகளுக்கு பிடிக்கலாம். GTA, Age of Empire என்று பயணிக்கும் சமகால குழந்தைகள் “மூடிட்டு படுங்கடா நொன்னைகளா...” என்று சொல்லிவிட்டு போகவும் வாய்ப்பிருக்கிறது.

டைனோசர்களுக்கும் நன்றியுணர்ச்சி இருக்கிறது, தற்கால மனிதனுக்கு கற்காலம் அதிசய உலகம் என்றால் கற்கால மனிதனுக்கு தற்காலம் அதிசய உலகம் தான் போன்ற கருத்துகளை உலக மக்களுக்கு எடுத்துச்சொல்லிவிட்டு திரை இருள்கிறது.

படம் முடிந்ததும் “திரைக்கு அப்பால்” காட்சிகள் காட்டினார்கள். அடப்பாவிகளா உங்க பட பட்ஜெட்டே ஒரு பச்சை கலர் ஸ்க்ரீன் மட்டும்தானா...???

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 August 2012

மதுபான கடை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப காலமாக பொல்லாங்கு, அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் என்று விளம்பர யுக்தியில் புதியவர்கள் அசத்துகிறார்கள். அந்தவரிசையில் மதுபான கடை பேப்பர் விளம்பரம் மட்டுமே என்னை தியேட்டர் வரைக்கும் அழைத்துச்சென்றது. ட்ரைலர் கூட பார்க்கவில்லை. படமே மொக்கையாக இருந்தாலும் கூட, புத்திசாலித்தனமான விளம்பர யுக்திக்கு சன்மானமாக ஒருமுறை பார்க்கலாம் என்பது என் எண்ணம்.

கதை என்று எதுவுமே படத்தில் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டதால் நாம் குய்யோ முறையோ என்று புலம்ப வேண்டிய அவசியமில்லை. காந்தி ஜெயந்திக்கு முந்தய நாளன்று அரசு மதுபான கடையொன்றில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு என்று கொள்ளலாம்.

கேரக்டரைசேஷன் தான் படத்தினுடைய நாயகன். 

கோவை வீதிகளில் குடித்துக்கழித்த ஜான் ஆபிரஹாம் என்று யாரோ ஒரு தோழருக்கு சமர்ப்பித்து படம் ஆரம்பமானபோதே அவர் யாரென்ற ஆர்வம் எனக்குள் தொற்றிக்கொண்டது. நேற்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அவரைப்பற்றிய புத்தகம் ஒன்றினை பார்த்தபோதும் கூட தோழர், கலகக்காரன் போன்ற வார்த்தைகள் ஏற்படுத்திய சலிப்பால் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

ரபீக்கை திரையில் பார்த்தபோது நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த என்னையே பார்த்தது போல இருந்தது, அவ்வளவு நீளம். நடிப்பில் கனா காணும் காலங்கள் வினீத்தின் சாயல்.

ரபீக்கின் காதலியாக வரும் ஐஸ்வர்யா நேற்று பூத்த ரோஜா மொட்டு போல ஃபிரஷாக இருக்கிறார். மழலையின் சிணுங்கலை போல ரசிக்க வைக்கிறார். இத்தனைக்கும் ஐஸுக்கு இரண்டே காட்சிகள் தான். ஆனால் முத்தத்திற்காக ஏங்கும் முகபாவனைக்காகவே பாஸ்மார்க் போடலாம். 

ஏனைய கேரக்டர்கள் அனைத்துமே அநேகமாக டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் அனைவருமே பார்த்திருக்கக்கூடிய எதார்த்த பாத்திரங்கள்.

பெட்டிஷன் மணி தண்ணியடித்து அலப்பறை கொடுத்து அவ்வப்போது தத்துபித்துவங்கள் உதிர்க்கும் மூத்த குடிமகன், வாடிக்கையாளர்களிடம் பாட்டு பாடி ஓசிக்குடி குடிப்பவர், பர்ஸை தொலைத்துவிட்டேன் என்று ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு ஏமாற்றி கட்டிங் குடிப்பவர், ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்டு பிச்சை எடுத்து குடிப்பவர்கள், மனநலம் தவறிய பார் இடத்தின் முன்னாள் உரிமையாளர், கடை திறக்க காத்திருந்து முதல் ஆளாக உள்ளே நுழைபவர், காதல் தோல்வி ஆர்வக்கோளாறுகள், முதல்முறை குடிக்கும் இளசுகள், அரவாணிகள், தொழிலாளிகள் இவர்கள் தவிர்த்து பார் ஓனர், சப்ளையர்கள், பெட்டிக்கடைக்காரர் அத்தனையும் நிஜ முகங்கள். ஒரே ஒரு நாளுடைய சம்பவங்களை மட்டும் திரையில் காட்டிவிட்டு பாத்திரங்களின் குணாதிசயம், முன்கதை ஆகியவற்றை விளங்க வைத்திருக்கும் இயக்குனருடைய திறமையை மெச்சலாம். 

நடிகர்கள் அனைவருமே அத்துனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒருவேளை காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததும் ஆளுக்கொரு ஆஃப் ஊற்றிக்கொடுப்பார்களோ என்னவோ...?

கூலித்தொழிலாளிகள் வலி மறப்பதற்கு குடிக்கிறோம் என்பது, அரவாணிகள் எங்களை கிண்டல் பண்றாங்க என்பது போன்ற நியாயப்படுத்தல்களை ஏனோ என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்படி பார்த்தால் எல்லோருமே நியாயமானவர்கள் தான்.

ஒரு பாடல்காட்சியின் இடையே திடீரென இசை நின்று, பெரியவர் ஒருவர் அழிந்துபோன கூத்துக்கலையை பற்றி ஃபீல் பண்ணி பாடுகிறார். அதன்பின் பத்து நொடிகள் அமைதி. எல்லோரும் பெரியவரையே வெறித்துப்பார்க்கிறார்கள். பெரியவர் சுதாரித்துக்கொண்டு குத்தாட்டம் போட, இசை ஆரம்பிக்கிறது. மேற்படி காட்சி போல மசாலா பிசிறுகள் ஆங்காங்கே தென்படவும் செய்கின்றன.

போலீஸ்காரராக வரும் நபரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்தால்... அடடே, சாதனைத்தமிழர் யோகநாதன்.

சினிமாவாக பார்க்கும்போது பெட்டிஷன் மணி பேசும் சில காட்சிகள் சூரமொக்கையாக இருந்தாலும் கூட, நாமும் ஒரு டாஸ்மாக்கில் அமர்ந்து பகார்டி அருந்திக்கொண்டே வேடிக்கை பார்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. 

இயக்குனர் ஒரு “தோழர்” என்பதால் ஆங்காங்கே தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் குடிகாரர்களையும் தொழிலாளிகள் லிஸ்டில் சேர்த்தது என்ன எழவென்று புரியவில்லை.

மூன்று பாடல்களுமே குடி வாழ்த்து வகையறா. “கோடிக்கால் பூதமடா தொழிலாளி...” பாடல் ஓகே.  ஒரு TASMAC Anthem எப்படி இருந்திருக்க வேண்டும்...? அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா...? ஆனால் மேற்கத்திய இசையை ரொப்பி மொக்கை செய்திருக்கிறார்கள்.

7D கேமராவை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யாவின் மூக்குக்கும் உதடுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தென்படும் பூனைமுடியை கூட துல்லியமாக படம் பிடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் கதை வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் வெறுமனே சம்பவங்களையும், மனிதர்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம், மாறாக கதை சொல்லியாவது சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். இரண்டுகட்டானாக ஃப்ளாட்டாக ஆரம்பம் முடிவு கருத்து கத்தரிக்காய் என்று எதுவுமே இல்லாமல் படமெடுத்திருக்கிறார்கள்.

நில அபகரிப்பு, குழந்தை தொழிலாளிகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், தொழிலாளர் நலன் என்ற பல சமூக அவலங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டாலும் கூட, படம் முடிந்தபிறகும் கூட “ம்ம்ம் சரி அப்புறம்... இதனால் தாங்கள் கூற விரும்புவது...?” என்று இயக்குனரை நோக்கி கேள்விக்கணை தொடுக்க தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நிற்க, அதான் கதை இல்லையென்று அவர்களே சொல்லிவிட்டார்களே என்று கேட்கலாம். ஆனால் நிறைய கருத்துகளை சொல்ல வாய்ப்பிருக்கும் அருமையான கதைக்களனை வீணடித்துவிட்டார்களே என்று ஒரு சினிமா ரசிகனாக என்னுடைய வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment