27 August 2013

பதிவர் சந்திப்பு: சில கேள்விகளும் பதில்களும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில், வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி (01.09.2013) பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அதுகுறித்த ஒரு கேள்வி – பதில் பகுதி. (புதியவர்களுக்கானது).

பதிவர் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெறுகிறது ?
01.09.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை சென்னை, வடபழனி கமலா திரையரங்கத்திற்கு அருகிலுள்ள இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது.

யாரெல்லாம் கலந்துக்கொள்ளலாம் ?
வலைப்பதிவர்கள், ஃபேஸ்புக் பயனாளர்கள், ட்விட்டர்கள், ப்ளஸ்ஸர்கள், வேறு ஏதேனும் சமூக வலைத்தளம் விட்டுப் போயிருந்தால் அதனுடைய பயனாளர்கள், வாசகர்கள். சுருங்கச் சொல்வதென்றால் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.

பதிவர் சந்திப்பில் அப்படி என்னதான் நடக்கும் ?
வழக்கம் போல, பதிவர்கள் சுய அறிமுகப்படலம். சிறப்பு விருந்தினர்களின் (எழுத்தாளர்கள் திரு.பாமரன் மற்றும் திரு.கண்மணி குணசேகரன்) உரை. சில புத்தக வெளியீடுகள். நிறைய அரட்டை.

என்னென்ன புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன ?
மொட்டைத் தலையும் முழங்காலும் – சேட்டைக்காரன்
இதழில் எழுதிய கவிதைகள் – சதீஸ் சங்கவி
வெற்றிக் கோடு – மோகன்குமார்
அவன் ஆண் தேவதை – யாமிதாஷா

சாப்பாடு உண்டா ?
நிச்சயமாக. சைவம், அசைவம் இரண்டும் கொண்ட மதிய உணவு உண்டு. அதுபோக இடையிடையே டீ, சூஸ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், உணவு ஏற்பாட்டிற்காக முன்பே வருகையை உறுதிப்படுத்திவிடுவது நல்லது.

யாரிடம் உறுதிப்படுத்த வேண்டும் ?
வரவேற்புக் குழுவில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சா சிங்கம் செல்வின், காணாமல் போன கனவுகள் ராஜி, தென்றல் சசிகலா, ஆரூர் மூனா செந்தில் ஆகியோரில் யாராவது ஒருவரிடம் மெயில் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

மொத்தம் எத்தனை பேர் வருவார்கள் ?
இதுவரையில் கிட்டத்தட்ட 250 பேர் தங்களுடைய வருகையை உறுதி செய்திருப்பதாக தகவல். இன்னமும் கூடலாம். வருகையை உறுதி செய்தவர்கள் லிஸ்ட்.

இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது ?
விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான பணம் வசூலாகும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் பணத்தில் ஏதேனும் நற்செயல்கள் செய்யலாம் என்பது திட்டம்.

பதிவர் சந்திப்பை யார் ஏற்பாடு செய்கிறார்கள் ? இதனால் அவர்களுக்கென்ன லாபம் ?
இதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று இயங்குகிறது. அதன் விவரங்களை இந்த சுட்டியில்  காணலாம். இதுபோன்ற சந்திப்புகளால் அவர்களுக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.

அப்ப யாருக்குத்தான் லாபம் ?
லாபம், நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை, இது நம் உணர்வு, ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம்.

புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
இருக்கலாம். அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

எல்லாம் சரி, சும்மா பதிவு போட்டா ஆச்சா ? எனக்கான அழைப்பிதழ் எங்கே ?
மன்னிச்சிக்கோங்க பாஸ். இதோ உங்களுக்கான அழைப்பிதழ்.

மேலதிக தகவல்களுக்கு:
மதுமதி kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

Anonymous said...

இந்த பதிவர் சந்திப்புக்கும் போன தடவை எந்த பிரச்சினையையும் கிளப்ப வேண்டாம் என்று சம்மந்தபட்டவர்களை "மனிதாபிமானத்துடன் " கேட்டு கொள்கின்றோம்

CS. Mohan Kumar said...

Nice post Prabha in your style...

Yaathoramani.blogspot.com said...

அனைத்துத் தகவல்களையும்
சுருக்கமாகவும் சுவையாகவும்
சொல்லிச் செல்லும் பதிவு
அருமையிலும் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

Ponmahes said...

சந்திப்பு சிறப்பாக நடைபெற

வாழ்த்துக்கள்..........

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தகவல்கள்! வாழ்த்துக்கள்!

Unknown said...

கேள்வியும் பதிலும் அருமை! அனைவரும் அறிந்திட ஆவனச் செய்தீர்!

r.v.saravanan said...

அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய கேள்வி பதில் தொகுப்பு நல்லாருக்கு

Shankar said...

Good FAQ and answers.
I participated last year. I am out of the country.
All the best for the success of the meet.