Showing posts with label ஜொள்ளு. Show all posts
Showing posts with label ஜொள்ளு. Show all posts

19 October 2016

மியா கலிஃபா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடக்கத்தில் ஏதோ குமாஸ்தா வேலைக்கான நேர்முகத்தேர்வு போலத்தான் இருக்கிறது. ஆனால் தேர்வாளரின் கேள்விகள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றன. “வயதென்ன ?” என்கிறார். “பாய்ஃபரெண்ட் இருக்கா ?” என்கிறார். “உறவு வைத்துக்கொள்வீர்களா ?” என்கிறார். எல்லா கேள்விகளுக்கும் ‘மனம் நிறைந்த’ தன்னம்பிக்கையுடன், புன்னகை பூத்தபடி பதிலுரைக்கிறார் அந்த இருபத்தியொரு வயது யுவதி. அங்கே இங்கே சுற்றி கடைசியில் மேலாடையை விலக்கும்படி கேட்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் !

மேலே விவரித்துள்ள காட்சிதான் பிரபல நீலப்பட நடிகை மியா கலிஃபாவின் ஆடிஷன் என்று இணையம் சொல்கிறது. மியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் 1993ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஏழு வயது இருக்கும்போதே குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பெயர்ந்துவிட்டனர். பள்ளிப் பருவத்தில் மியாவுக்கு லாக்ராஸ் விளையாட்டு என்றால் பிரியம். லாக்ராஸ் என்பது வடகிழக்கு அமெரிக்காவில் பிரபலமான களவிளையாட்டு. கிட்டத்தட்ட நம் ஹாக்கி போன்றது. சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடக்கூடியது. பள்ளிப்படிப்பு முடித்ததும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றார். மியாவுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

அப்போது மியாவுக்கு 21 வயது. 'வாட்டபர்கர்' என்ற அமெரிக்காவின் பிரபலமான உணவகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். ஸ்கோர் என்ற வயது வந்தோருக்கான இதழின் ஆசிரியர் டேவும் அவரது நண்பர்கள் மூவரும் மதிய உணவிற்காக தொடர்ந்து சில நாட்கள் அவ்வுணவகத்திற்கு செல்ல நேர்கிறது. அப்போது மியா பரிமாறிய பர்கர்களின் சுவையோ என்னவோ அவர்களை ஹெவியாக ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய போர்னோ இணையதளமான ஸ்கோர்லேண்டின் சேவைகளுக்காக மியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஸ்கோர்லேண்ட் என்பது பிரம்மாண்ட மார்பகங்கள் கொண்ட மாடல்களின் படங்கள் / காணொளிகளை மட்டும் பிரத்யேகமாக வெளியிடும் தளம். உணவகம் என்பதால் மியாவிடம் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஒரு துண்டுச்சீட்டில் தங்கள் விருப்பத்தையும், இணையதள முகவரியையும் எழுதி மியாவிடம் கொடுக்கின்றனர். அதனை உணவக கழிப்பறைக்குச் சென்று பிரித்துப் பார்த்த மியா, தனக்கு கிடைத்த வாய்ப்பை புளியங்கொம்பாய் கைப்பற்றுகிறார்.

மியாவின் கலைப்பயணம் இங்கிருந்துதான் துவங்குகிறது. 2014 அக்டோபரில் மியாவின் முதல் நீலப்படம் வெளியாகிறது. மியாவின் கோதுமை நிறமும், கூடைப்பந்து அளவுள்ள அங்கங்களும் அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பிட்டுப்பட ரசிகர்களை ஈர்த்துவிட்டது. குறிப்பாக நீலப்படங்களில் வரும் BJ என்ற வித்தையில் மியா கை தேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். “நீ பார்த்தாயா?” என்று கேட்காதீர்கள். பார்த்தவர்களை பார்த்தேன். இரண்டு மாதங்களிலேயே 'போர்ன் ஹப்' என்கிற பிரபல இணையதளம், பலான இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை மியா என்று அறிவிக்கிறது, கூடவே நம்பர் 1 நீலப்பட நடிகை என்றும் அறிவிக்கிறது.

பிரபலமானாலே பிராப்ளம்களும் பின்னாடியே வருமல்லவா ? தன்னுடைய காணொளி ஒன்றில் பர்தா அணிந்து தோன்றியதால் தன் தாய்நாடான லெபானானில் இருந்தும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை சந்திக்கிறார் மியா. இது குறித்து வாஷிங்க்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், அக்காணொளியை பகடியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் மேலும் ஹாலிவுட் படங்களில் இஸ்லாமிய மதம் இதைவிட பன்மடங்கு இழிவுபடுத்தப்படுகிறது என்று கூறுகிறார். எதிர்ப்புக்குரல்கள் குறைந்தபாடில்லை. மியாவின் குடும்பத்தினரே கூட அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால் இணையத்தில் மியாவை தேடியவர்கள் எண்ணிக்கை மட்டும் ஐந்தாக உயருகிறது. பியர் நிறுவனம் ஒன்று மியாவின் கண்ணாடியை மட்டும் வைத்து குறும்பாக ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. டைம்ஃப்ளைஸ் எனும் இசைக்குழு மியாவுக்காகவே பிரத்யேக பாடலை வெளியிடுகிறது. 

மியாவின் கண்ணாடியுடன் பியர் விளம்பரம்
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் திரைக்குப் பின்னால் என்னதான் நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு பயந்து பணிந்துவிட்டாரா ? தெரியவில்லை, இருக்கலாம். கடந்த ஜூலையில் அதே வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தான் போர்னோ துறையில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கிறார். மியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் கூட பிப்ரவரி 2015க்கு பிறகு புதிய காணொளிகள் இல்லை. ஆறுதலளிக்கும் வகையில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் அவ்வப்போது தன் படங்களை பதிவேற்றி சாஃப்ட்போர்ன் சேவையாற்றி வருகிறார் மியா.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். மியாவைப் போலவே இன்னொரு நீலப்பட நடிகை சன்னியை அரவணைத்துக் கொண்டது போல மியாவையும் ஏன் பாலிவுட் அரவணைக்கக்கூடாது ? சன்னி ‘பிக் பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சமயத்தில், மியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக பேச்சு அடிப்பட்டது. அப்போது ‘இந்தியாவில் காலடி எடுத்து கூட வைக்கமாட்டேன்’ ஒரேயொரு ட்வீட் போட்டு இந்திய இதயங்களை நொறுக்கிவிட்டார் மியா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 June 2016

மாண்ட்யா ராணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2002. சிம்பு ஹீரோவாக அறிமுகமாகியிருந்த சமயம். அப்போது அவர் நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் ‘சாணக்யா’ பாடல் சூப்பர்ஹிட் ஆகியிருந்தது. சொல்லப்போனால் சிம்புவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய ரசிகைகளை தேடிக்கொடுத்த பாடல் அது. ரொமாண்டிக்கான கடற்கரை, சிம்புவும் கதாநாயகி ரக்ஷிதாவும் செய்யும் சில்மிஷங்கள், சாதனா சர்கமின் கிறங்கடிக்கும் குரல் எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தமிழகத்தை கலங்கடித்தது அந்தப்பாடல். தம் படத்தை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'குத்து' படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஏ.வெங்கடேஷ் சாணக்யாவை போலவே ஒரு சூப்பர்ஹிட் பாடல் தர நினைத்திருக்கக்கூடும். அதே சிம்பு, அதே போன்றதொரு கடற்கரை, அதே சாதனா சர்கம், கதாநாயகி மட்டும் ரக்ஷிதாவுக்கு பதில் ரம்யா. நிபுணா நிபுணா என்று தொடங்கும் அந்தப்பாடல் சாணக்யாவை பிரதி எடுத்தது போலவே இருந்தது. ஆனால் இந்தமுறை ரசிகைகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. காரணம் ரம்யாவும் அவருடைய செக்ஸியான எக்ஸ்பிரஷன்களும் தான். அதிலிருந்து தமிழில் அந்த கதாநாயகியின் பெயரே ‘குத்து’ ரம்யா என்றாகிவிட்டது. அந்தப் பெயரில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு, ‘என்னை குத்து ரம்யா என்று அழைக்காதீர்கள்’ என்று பேட்டிகளில் பலமுறை சொல்லியும் அந்தப் பெயரை மீடியாவோ ரசிகர்களோ மாற்றிக்கொள்ளவே இல்லை. ஆம், ரம்யா என்பது ஒரு பெயர். ‘குத்து’ ரம்யா என்பது ஒரு உணர்வு !

ரம்யா பிறக்கும்போதே ரம்யா இல்லை. அவருடைய இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. 1982 நவம்பர் 29ம் தேதி கன்னட தேசத்தில் அவதரித்தார். பெங்களூரில் பிறந்திருந்தாலும் ரம்யாவின் பூர்விகம் பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே உள்ள மாண்ட்யாதான். ஜெயலலிதா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பிரபல அரசியல்வாதிகளை ஈன்றெடுத்த மாவட்டம். ரம்யாவுக்கும் அரசியல்ரீதியான பின்புலம் உண்டு. ரம்யாவின் தாத்தா போரேகவுடா மாண்ட்யாவின் நகராட்சி தலைவராக இருந்திருக்கிறார். ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸில் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். வளர்ப்புத்தந்தை நாராயணன் நேரடியாக அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா வரையில் செல்வாக்குள்ளவர். கர்நாடக டென்னிஸ் சங்கத்தில் பெரும் பங்காற்றியவர்.

ரம்யா தன்னுடைய பள்ளிப்பருவம் முழுவதையும் தமிழகத்தில்தான் கழித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை ஊட்டி புனித ஹில்டா பள்ளியில் படித்த ரம்யா படிப்பு தவிர்த்து கலை, விளையாட்டுத்துறையில் படுசுட்டி. மேடை நாடகங்களிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் விரும்பிப் பங்கேற்கும் ரம்யா பள்ளி ஆண்டுவிழாவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த துணை நடிகைக்கான பரிசைப் பெற்றிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தடகளத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கும் ரம்யா, ஆறாம் வகுப்பு படிக்கும்போது இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முப்பதே நொடியில் ஓடி சாதனை படைத்ததை பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரம்யா ஒரு கவிதாயினியாக இருந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை பற்றிய அவருடைய கவிதையொன்று அவருடைய ஸ்கூல் மேகஸினில் பிரசுரமாயிருக்கிறது. ரம்யா தன்னுடைய மேல்நிலை கல்வியை பயின்றது வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை சர்ச் பார்க் பள்ளியில்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ரம்யாவுக்கு முதன்முதலில் கிடைக்க இருந்த ‘நினக்காகி’ கன்னட படவாய்ப்பு எதிர்பாராவிதமாக ‘குட்டி’ ராதிகா வசம் போய்விட்டது. அடுத்து கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிய அப்பு படத்தில் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்தபிறகு அந்த வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறித்தார். அப்படி பறித்தது வேறு யாருமில்லை, நிபுணா நிபுணாவுக்கு முன்னோடியாக சாணக்யாவில் ஆட்டம் போட்ட ரக்ஷிதாதான். ரம்யா துவண்டுவிடவில்லை. புனித் ராஜ்குமாரின் இரண்டாவது படமான ‘அபி’யில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சுமாரான காதல் கதைதான். ஆனால் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து ரம்யா நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைய, ஒரு கட்டத்தில் ‘கன்னட சினிமாவின் தங்கமகள்’ என்று அழைக்கப்பட்டார் ரம்யா.

இதற்கிடையே தான் தமிழில் சிம்புவுடன் குத்துவில் அறிமுகம். தமிழில் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும் தனுஷுடன் ரம்யா நடித்த பொல்லாதவன் படம் சக்கை போடு போட்டது. படத்தைப் பார்த்த தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினர். தன்னுடைய ‘குத்து’ ரம்யா என்ற தமிழ் சினிமா பெயரை அடியோடு வெறுத்த ரம்யா கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் திவ்யா ஸ்பந்தனாவாக மறு-அறிமுகமானார். பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றளவும் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம் என்கிறார் ரம்யா. அதில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி என்ற பாடலை ரசிகர்களாலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவிற்கும் ரம்யா ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காட்டிய தாராள கவர்ச்சியை அவர் கன்னட சினிமாக்களில் நாசூக்காக தவிர்த்திருக்கிறார். இது குறித்து பேட்டிகளில் கேட்டபோது கூட, கன்னடத்தில் அப்படியான வாய்ப்புகள் வருவதில்லை என்று மட்டும் நைச்சியமாக சொல்லி தப்பித்திருக்கிறார். கன்னட, தமிழ் சினிமாக்களில் ரம்யாவின் சொந்தக்குரலை பயன்படுத்துவதில்லை. ஆனால் நான்கு தென்னிந்திய மொழிகளோடு, ஹிந்தி, ஆங்கிலம் ஆறு மொழிகளை எழுத, படிக்க, பேசவும் தெரியுமாம் ரம்யாவுக்கு. இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கிறார். சஞ்சு வெட்ஸ் கீதா படத்திற்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார்.

சினிமாவில் ஒரு சுற்று வந்த ரம்யா அடுத்த அதிரடியாக அரசியலில் குதிக்க ஆயத்தமானார். அதன் துவக்கமாக ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்த ரம்யா 2011ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். இந்த தகவல் கர்நாடக காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கெல்லாம் ஒரு புது எழுச்சியை உண்டாக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 2013 மாண்ட்யா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ரம்யாவுக்கு சீட் கிடைத்தது. ரம்யா வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களில் அவருடைய வளர்ப்புத்தந்தை மாரடைப்பில் காலமானார். ரம்யா தளர்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் ரம்யாவின் உண்மையான தந்தை குறித்து கேள்வி எழுப்பின. ரம்யாவை டெஸ்ட் ட்யூப் பேபி என்று விமர்சித்தனர். அதற்கெல்லாம் அசரவில்லை ரம்யா. கடைசியில், வாக்காளர்கள் குத்து குத்து என குத்திய குத்தில் நாற்பத்தி ஏழாயிர சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினரானார் ரம்யா.

வெறும் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினராக இராமல் சபையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது, கேன்சர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சார்பாக நாற்பத்தைந்து கோடி நிதியுதவி பெற்றுத்தந்தது உள்ளிட்ட பலப்பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தாலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மாண்ட்யாவில் போட்டியிட்ட ரம்யா ஐயாயிரத்து சொச்ச வாக்குகளில் தோல்வியுற்றார். தோல்வி நிரந்தரமில்லை என்றாலும் இடைவெளியை பூர்த்தி செய்ய மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ரம்யா. ரம்யா சமீபத்தில் நடித்த நாகரஹாவு அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. 2019 ரம்யாவுக்காக காத்திருக்கிறது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 December 2014

கவர்ச்சி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்கிற திரைப்பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஆடிக்கொண்டிருந்த நடிகையின் முகத்தை பார்த்தால் ஒரு வாரத்திற்கு சோறு இறங்காது. ஏனய்யா ஐட்டம் சாங்கில் ஆட வைக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா ? முதிர்ச்சி பெற்ற அந்த அம்மணியின் பெயர் அஷ்மிதா. This is my first film என்று ஒரு பேட்டியில் திருவாய் மலர்ந்திருக்கிறார். அஷ்மிதாவின் திருமுகத்தை ஏதோ ஒரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஒன்றிரண்டு பார்த்திருந்தால் தானே ? கூகுள் செய்தேன். அஷ்மிதா இதுவரை (கூகுளுக்கு தெரிந்து) நடித்திருக்கும் பி-கிரேடு படங்களின் பட்டியல் –
  • கலப்படம்
  • இயக்குநர் (சமீபத்தில் மறைந்த சுருளி மனோகர் இயக்கியது)
  • உனது விழியில்
  • காணும் கனவுகள்
  • என்னைப் பிரியாதே
  • தேள் 
  • காதல் வலி (தெலுங்கில்: இந்த்லோ ராமுடு வீதிலோ மன்மதுடு)
  • கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

மஸ்காரா பாடலை தொடர்ந்து பார்த்தபோது தொலைக்காட்சி திரையில் குறுக்க மறுக்க ஒரு உருவம் அசந்தர்ப்பமாக நடனமாடிக்கொண்டிருந்தது. பற்றாத குறைக்கு அடிக்கடி பாடலின் வரிகள் திரையில் எழுத்துகளாக தோன்றியது. கராவோக்கேவாம். கருமம் டா. லைட்டிங் வேறு ஏடாகூடமாக இருந்தது. பாடலில் ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்து யூடியூபில் தேடினால் அதில் இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லாமல் காட்சிகள் பளிச்சிடுகின்றன. விஷயம் என்னவென்றால் தொலைக்காட்சிக்காக பாடலை சென்ஸார் செய்திருக்கிறார்களாம்.

முன்னொரு காலத்தில், ஜில்லா படத்தில் ஜிங்குனமணி ஜிங்குனமணி என்று ஒரு பாடல். அதனை சென்ஸார் அதிகாரிகள் கதறக் கதற கற்பழித்திருந்தார்கள். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் போங்கய்யா உங்க பூசாரித்தனமும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்று விரக்தியுற்றார்கள். ரசிகர்களை விடுங்கள். எங்கேயோ ஆங்கில மண்ணில் பிறந்து நமக்காக கலைச்சேவையாற்ற வந்த அந்த இரண்டு அம்மாள்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் ? 

அதேபோல சிங்கம் படத்தில் அனுஷ்கா திறந்த மனதுடன் நடித்த ஒரு பாடல். அதை ஒருமுறை தொலைக்காட்சியில் பார்த்தபோது திரையில் யாரோ வனஸ்பதியையோ டால்டாவையோ ஈஷியிருக்கிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக ஒரு துணியை கொண்டுவந்து துடைக்கலானேன். அப்புறம் தான் தெரிந்தது அதுவும் சென்ஸார் ஆசாமிகளின் வேலை என்று. அந்தப் பாடலை அப்படியே விட்டிருந்தால் கூட அதிலிருந்த விஷயத்தை அனேகர் கவனித்திருக்க மாட்டார்கள். அதன் மீது வானவில்லில் உள்ள அத்தனை வண்ணங்களையும் பூசி அனைவரது பார்வையையும் பதிய வைத்துவிட்டீர்களே அய்யா. ஆமாம் உங்களுக்கு ஏனிந்த அக்கறை ? அனுஷ்காவுக்கு இல்லாத அக்கறை ? சென்ஸே இல்லாதவர்களுக்கு சார் போடுவது தான் சென்ஸார் என்று அன்றே சொன்னார் எஸ்.ஜே.சூர்யா.

சென்ஸார் கூத்துகள் ஒரு பக்கம் என்றால் அதற்கு நேர் மாறாக ஒரு சிக்கல். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் இடையே ஒரு மெல்லிசான கோடு என்று நடிகைகள் பேட்டியில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த கோட்டினை பற்றியது தான். ப்ரியா ஆனந்தை எனக்கு பிடிக்கும். எதிர்நீச்சலில் அந்தமான் கடற்கரையில் காட்சியாக்கப்பட்ட ஒரு பாடலில் இருந்து பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மெல்லிசான கோடு சமாச்சாரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் அந்த பாடல். ஆனால் சமீப படத்தில் ப்ரியா ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள். கவர்ச்சி என்றால் அரைகுறையாக உடுத்திக்கொண்டு தங்கு புங்கென்று குதிப்பது என்று ப்ரியாவுக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உடன் ஆடுவது யாரென்று பார்த்தால் தமிழ் சினிமாவின் தற்போதைய தலைசிறந்த நடிகர் விமல். அன்னாருடைய கைகளை எடுத்து தம்முடைய இடுப்பில் வைத்துக்கொள்கிறார், யாருக்காகவோ புட்டத்தை வெடுக் வெடுக்கென ஆட்டுகிறார் (பார்க்க 3:18). இது தற்காலிகமாக கொஞ்சம் கிளுகிளுப்பூட்டுகிறது என்றாலும் கூட ப்ரியாவின் கேரியருக்கு நல்லதல்ல. இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் (அதுவும் விமல் போன்ற மகாநடிகர்களுடன்) கூடிய விரைவில் அஞ்சலி லிஸ்டில் நீங்களும் சேர வேண்டியது வரும் ப்ரியா ஆனந்த் !

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

5 March 2014

வா நீ கபூர் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வட பாவ் நடிகைகள் தோன்றுவதுண்டு. ஏன் உலக அழகிகளையும், பிரபஞ்ச அழகிகளைக் கூட தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அவர்களில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் தவிர்த்து வேறு யாரும் தமிழர்களை அவ்வளவாக ஈர்த்ததில்லை. லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் விஜய் நடிப்பில் தமிழன் என்ற படம் வெளிவந்திருந்தது. எனது சமூக அறிவியல் ஆசிரியை என்ன காரணத்திற்காகவோ அதனை பார்த்திருக்கிறார். மறுநாள் வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். யாரு அவளையெல்லாம் உலக அழகியாக தேர்ந்தெடுத்தது என்று அறச்சீற்றம் கொண்டவரை அமைதிப்படுத்தவே சிரமப்பட்டுவிட்டோம். அந்த நடிகையின் பெயர் ப்ரியங்கா சோப்ரா. எனக்கு ப்ரியங்கா சோப்ராவின் மேல் உதடுகளை பார்க்கும் போதெல்லாம் மேற்கிந்திய தீவு பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் நினைவுக்கு வருவார். ஆனால் பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் சக்கை போடு போட்டார். அவருடைய கோரமான பல்வரிசையை நீயா நானா ஆசாமிகள் வர்ணிக்கிறார்கள். அதுபோல வித்யா பாலன் என்று தமிழில் அக்கா, அண்ணி கதாபாத்திர முக அமைப்பு கொண்ட ஒருவர் அங்கே சென்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஹிந்திவாலாக்களின் ரசனையை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படி அவ்வப்போது பாலிவுட் சீமாட்டிகள் தமிழில் தலை காட்டுகிறார்கள் இல்லையா...? பாட்டியாவையும், அகர்வால்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்களெல்லாம் தமிழர்களாக இனம் மாறிவிட்டார்கள். அவர்கள் தவிர்த்து, மாற்றான் படத்தில் இஷா ஷெர்வானி வந்து ஒரு ஆட்டம் போட்டு பார்த்தார். பில்லாவில் ப்ரூனா அப்துல்லா வந்தார். ம்ஹூம் யாரும் தேறவில்லை. திடீரென தற்சமயம் யாரோ வாணி கபூராம். சில வாரங்களாகவே அவரைப் பற்றிய விளம்பரங்கள் தூள் பரத்துகின்றன. பண்பலையில் வந்து பேசுகிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், தமிழ் கற்றுக்கொள்ள போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார். என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..? ஒருநாள் கூத்துக்கு ஏனய்யா வேக்ஸிங் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். பின்னே, ஏதோ ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அடுத்து குட்டிக்கர்ணம் அடித்தாலும் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காது. ஏன் சிரமப்பட்டு தமிழெல்லாம் கற்றுக்கொள்கிறார் என்று வருத்தப்பட்டேன்.

என் எண்ணம் அவ்வாறாக இருந்தமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வாணி கபூரின் கன்னங்கள். உட்புறமாக ஒடுங்கியிருந்த கன்னங்கள். தாமரைக் கன்னங்கள் என்று கதாநாயகியை வருணித்து மகிழ்ச்சியுறும் மக்கள் எப்படி வாணி கபூரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே என் ஐயப்பாடு. எனினும், பிற்பாடு ஒரு விஷயத்தை தெரிந்துக்கொண்டேன். வாணியிடம் உள்ள பாகங்களில் கன்னங்களை தவிர வேறெதுவும் ஒடுங்கியிருக்கவில்லை.

வாணி கபூருடைய தாயார் கருவுற்றிருந்த சமயம் குங்குமப்பூவை கிலோ கணக்கில் சாப்பிட்டிருக்கக்கூடும். சும்மா செக்கச் செவேலென கோயமுத்தூர் கொய்யா போல இருக்கிறார். உயரத்தில் அனுஷ்காவை விட ரெண்டு இன்ச் தான் குறைவாக இருப்பார். தலப்பாக்கட்டியை நினைவூட்டுகிறது வாணியுடைய வாளிப்பான கால்கள். டெல்லியில் பிறந்து, வளர்ந்து, இந்திரா காந்தி பல்கலையில் சுற்றுலா மேலாண்மை படித்த வாணி, தன்னைப் பற்றி தமிழகத்திலுள்ள உள்ள ஒரு வலைப்பதிவர் வர்ணித்து எழுதுவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். யாஷ் சோப்ரா என்று மும்பையில் ஒரு பெருந்தலை. தமிழ் சினிமாவில் ஏ.வி.மெய்யப்பர் போல ஒரு மரியாதைக்குரிய பெரியவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய மகனான ஆதித்யா சோப்ரா தான் வாணி முத்துவை தமிழ் சினிமாவிற்கு கொணர்ந்திருக்கிறார். மொத்தமாக மூன்று படங்கள் நடித்துத்தர வேண்டுமென வாணியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ஆதித்யா. அந்த சமயமாக பார்த்து கோலிவுட்டில் கால் பதிக்க ஆதித்யா சோப்ரா விரும்பியது நம்முடைய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் படங்களில் அதிகபட்சமாக எத்தனை உதட்டு முத்த காட்சிகளை பார்த்திருப்பீர்கள்...? அவற்றில் பெரும்பாலானவை பொடனியில் கேமரா வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படியெல்லாம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற முத்தத்தை பார்த்திருக்கிறீர்களா...? நியாயமாக தமிழ் சினிமா நடிகைகள் வாணிக்கு பாத பூஜை செய்துவிட வேண்டும். சிலர் ஆஹா கல்யாணத்தில் இடம்பெற்ற உதட்டு முத்த காட்சியையே ஆஹா ஓஹோ என்கிறார்கள். அவர்கள் அம்மணி ஷுத் தேசியில் சுஷாந்த் சிங்கிற்கு அடித்த கிஸ்ஸை பார்த்திருக்க வேண்டும். ஆஹா கல்யாணத்தில் பன்ச் சாங் என்று ஒன்று வருகிறது பாருங்கள். பஞ்சு நெஞ்சு கொண்டவர்கள் தாங்க மாட்டார்கள். இடுப்பு விஷயத்தில் தமிழர்களுக்கு நன்றாகவே இறக்கம் காட்டியிருக்கிறார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பாக ஏதோ மூன்று பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். ம்ஹூம். அடுத்து தமிழ் சினிமா நாயகர்களுடன் ஒரு வலம் வந்து கடைசியாக கமலுடன் ஜோடி சேருவது வரை வாணியை நாங்கள் விடுவதாக இல்லை. வேண்டுமானால் ஆதித்யா சோப்ராவை தமிழில் படம் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்.

தொடர்புடைய சுட்டி: தன்வி வியாஸ்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 December 2013

கனவுக்கன்னி 2013 - பாகம் 2

05. காஜல் அகர்வால்
ன்னுக்குட்டி காஜலுக்கு தமிழில் அழகுராஜா மட்டும் தான் வெளிவந்திருக்கிறது. அதிலும் மகா மட்டமான கேரக்டர். பாடல் காட்சியில் கூட சேலையை கட்டிக்கொண்டு தங்கு புங்கு'ன்னு குதிக்க விட்டிருக்கிறார்கள். கன்னுக்குட்டியின் குத்தமில்லை என்றாலும் வருந்தக்கூடிய விஷயம். மற்றபடி தெலுங்கில் காஜல் நடித்து வெளிவந்த பாட்ஷா, நாயக் இரண்டும் விஷுவல் விருந்து. ஜில்லாவில் மறுபடி துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல சீறணும்...!

04. நஸ்ரியா
ல்ல நேரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மீண்டுமொரு கேரள வரவு. தமிழ் சினிமாவில் துரிதமாக பிரபலமாகி அதைவிட துரிதமாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி என அடுத்தடுத்து படங்கள். ஜெனிலியா ரக குறும்புத்தனம் நஸ்ரியாவின் சிறப்பம்சம். சிலருடைய முகவெட்டு புகைப்படங்களுக்கு பொருந்தாது. அதுபோல நஸ்ரியாவின் முகவெட்டு புகைப்படங்களிலும், குறும்புத்தனம் காட்டும்போதும் மட்டுமே ஈர்க்கிறது. தொப்புள் சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் உயரத்தை எட்டியிருப்பார்.
03. டிம்பிள் சொபேட்
ராத்திய மண்ணில் பிறந்த மல்லிகைப்பூ. நல்லவேளையாக மராத்தி சினிமாவில் டிம்பிளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலிவுட்டிலும் வத வத'ன்னு வந்து போகும் நடிகைகள் போல ஒரே படத்தில் காணாமல் போய்விடுவார் போல டிம்பிள். துரதிர்ஷ்ட வசமாக டிம்பிளின் நடிப்பில் வெளிவந்த யாருடா மகேஷும் கவனிக்கப் படவில்லை. எடுப்பான முகம், அளவான உடல், தாராள கவர்ச்சி என எல்லாம் இருந்தபோதும் கூட டிம்பிளை கண்டு கொண்டாரில்லை. இதுபோல கைவிடப்பட்டவர்கள் தெலுங்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வருவது வழக்கம். பார்க்கலாம். பிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்கணும்.

02. மனிஷா யாதவ்
ழக்கு எண்ணில் கவனித்து, பேசப்படக்கூடிய வேடம் இல்லை என்றாலும் மனிஷா தனக்கென சில வாய்ப்புகளுடன் தமிழ் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார். மனிஷா நடிப்பில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் வருடத்தின் சிறந்த படங்களுள் ஒன்று மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் என் மனம் கவர்ந்த படமும் கூட. ஜன்னல் ஓரம் பார்க்கவில்லை. தோற்றம் காரணமாக இவரைத் தேடி ஒரு மாதிரி சின்னப்பெண் கேரக்டரே கிடைக்கிறது போல. தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டு படங்களுக்கென நேர்ந்து விடப்பட்ட நடிகையாக மாறிவிடும் அபாயம் வேறு இருக்கிறது. பட்டைய கெளப்பணும் மனிஷா...!

01. பார்வதி
ரு படம். அவரா இவர் என்று எல்லோரையும் தோற்ற மாற்றம் காரணமாக மிரள வைத்துவிட்டார். என்னதான் பூ நல்ல படம் தான் என்றாலும், பார்வதி அவார்டுகளை அள்ளினார் என்றாலும் அப்படி ஒன்றும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தற்போது சில பல டிங்கரிங் வேலைகள் செய்து சிக்கென திரும்பி வந்திருக்கிறார். அவருடைய நடிப்பில் வெளிவந்த மரியான் தோல்வியடைந்தாலும் அவர் தோல்வி அடையவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன ? என்று கேட்ட குத்தத்திற்காக மனதில் டெண்ட் அடித்துவிட்டார்.

Post Comment

28 December 2013

கனவுக்கன்னி 2013 – பாகம் 1

10. லக்ஷ்மி ப்ரியா
ங்கர் சிமெண்ட், ஏர்செல் விளம்பரங்கள் மூலம் யாரு சாமீ இவ ? என்று தேட வைத்தவர். சுட்டகதை படத்தில் சினிமா அறிமுகம். ஆறு வயது பையனின் அம்மா, புதிதாய் திருமணமான மணப்பெண், மலைவாழ் இனப்பெண் என எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தபடி தோற்றம் தரக்கூடியது லக்ஷ்மியின் ஸ்பெஷாலிட்டி. தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நடிப்பும் கைவருகிறது. கிரிக்கெட், ஃப்ரிஸ்பீ விளையாட்டுகளில் ஆர்வமுள்ள லக்ஷ்மி இந்திய 'B' அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
09. ஸ்ரீ திவ்யா
ஸ்ரீ திவ்யாவின் எழுச்சி என்று ஒரு கட்டுரையே எழுதலாமா எனக் கருதும் அளவிற்கு ஒரே படத்தில் பிரபலம் ஆகியிருக்கிறார். ஆந்திர வரவு. குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நடிகை போன்ற பரிமாணங்களை கடந்து, கதாநாயகியாக சில தெலுங்கு படங்களில் நடித்தவர். தற்போது வ.வா.ச வெற்றியின் காரணமாக ஜி.வி.பிரகாஷ் படம் உட்பட நான்கைந்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாவாடை தாவணி திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி. பாக்காத பாடலில் முடிவில் காட்டுவது போல சின்னச் சின்ன முகபாவனைகளில் மனதை அள்ளிவிடுகிறார்.
08. விஷாகா
ல் திவ்யா தூள் இப்ப திவ்யா ஆயிட்டா என்பதுதான் க.ல.தி.ஆ பார்த்தவர்களின் ஒருமித்த குரல். பார்த்தால் தமிழ் பொண்ணு மாதிரி தெரியும் விஷாகா அபுதாபியில் பிறந்த பஞ்சாபி. க.ல.தி.ஆ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு போய்விட்டார். அது மட்டுமில்லாமல் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டு மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜாவில் நடிக்க இருக்கிறார். கொஞ்சம் கோதுமை நிறத்தில் ஜொலித்தாலும் Dark is Beautiful என்கிற கேம்பெயினில் பங்கெடுத்திருக்கிறார்.
07. ரெஜினா
ண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்காவின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் ரெஜினா. அதிகம் கவனிக்கப்படாத நிர்ணயம் என்ற லோ பட்ஜெட் படத்திலும் நடித்தார். நிர்ணயம் படத்தைப் போலவே ரெஜினாவின் மீள் வருகையும் கவனிக்கப்படாமல் போனது வருத்தம். தற்சமயம் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் மும்மொழியில் தயாராகும் என் சமையல் அறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா பாப்பா.
06. மிர்த்திகா
செதுக்கி வைத்த சிலை போல் தோற்றமளிக்கும் மிர்த்திகா 555 படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் கேரளத்து பைங்கிளி. நதியா, ஷாலினி போல திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பட்சியின்  லட்சியம். இயல்பில் மிர்த்திகா ஒரு பாடகி மற்றும் நடனப்பிரியை. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரை இயக்குநர் சசி கண்டுபிடித்து நடிப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார். சசி ரசனைக்காரர். மற்ற கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை மிர்த்திகா மீது படாதது அவர்களுடைய துரதிர்ஷ்டம்.

Post Comment

28 July 2013

நஷா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தியாவில் காந்திக்கு பிறகு அரை ஆடை மனிதர் என்று குறிப்பிடக்கூடிய தகுதி உள்ள ஒரே ஆள் – பூனம் பாண்டே ! இந்தியா கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றால் நிர்வாண நடை போடுவேன் என்று அறிக்கை விட்டு பலரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியவர். சொன்னபடி நடக்கவில்லை என்பது வேறு விஷயம், எனினும் அப்படிச் சொல்வதற்கே ஒரு ‘பெரிய மனது’ வேண்டும். (யாருப்பா அது ? இரண்டு வேண்டுமென்று கூட்டத்திலிருந்து சத்தம் போடுவது). அதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தா அடுத்த பதினஞ்சு நிமிஷத்துல குளிக்கப் போறேன்’, ‘இதோ இன்னொரு அரை மணி நேரத்தில் டவுசரை கழட்டப் போறேன்’ என்று சொல்லிச் சொல்லி போட்டோக்களை போட்டுத்தள்ளிய ஸ்ட்ரிப்டீஸிங் ராட்சசி. நிறைய இளைஞர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கியதே அம்மணியை பின்தொடரத்தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பூனம் பாண்டே குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிடப்போவதாக ட்வீட் போட்டால் போதும். டைம்லைனில் இருப்பவர்களுக்கெல்லாம் கை தேயத்தேய வேலை பார்ப்பார்கள் – வேறென்ன, கைகடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதற்கு தான் ! அப்படியெல்லாம் சமகால இளைஞர்களின் மத்தியில் எழுச்சி சிந்தனையை தூண்டிய பூனம் பாண்டேயின் முதல் (மற்றும் கடைசி ?) முழுநீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – நஷா !

நஷாவை பார்க்க முற்பட்டபோது முதலில் எனக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமே மிஞ்சியது. ஆதாகப்பட்ட சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்கில் மட்டுமே நஷா வெளியாகியிருக்கிறது என்றால் கோபம் வராதா என்ன ? அதுவும் ஒவ்வொரு காட்சி மட்டும் ! என்ன மாதிரியான சம்முவத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ? வெளியிட்ட திரையரங்குகளில் ஒன்று AGS, மற்றொன்று PVR. ஏஜிஎஸ்ஸில் சமயங்களில் ஆள் சேரவில்லை என்றால் காட்சியை ரத்து செய்துவிடுவார்கள். அதாவது நாம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வில்லிவாக்கம் வரை லொங்கு லொங்கென்று ஓடவேண்டும். அவர்கள் சுலபமாக காட்சியை ரத்து செய்துவிட்டு புக்கிங் சார்ஜ் போக டிக்கெட் விலையை மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். எனவே அமிஞ்சிக்கரைக்கு பயணித்தேன். டிக்கெட் கிடைப்பதில் பெரிய தள்ளு முல்லு எல்லாம் கிடையாது. அரங்கம் முழுக்க ஹிந்திவாலாக்கள். பாலின பேதமின்றி கூட்டம் சேர்ந்திருந்தது. இனி நஷா !

பூனம் பாண்டே சோப்பு நுரைகளை மட்டும் அணிந்தபடி குளிக்கும் காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. ஒருவேளை செண்டிமெண்டாக இருக்கலாம். கதை என்றால் பல்லாண்டுகளாக சீன் படங்களுக்கே உரித்தான ரதி நிர்வேத கதைதான். மேனிலை பள்ளியில் பயிலும் சில பதின்பருவ மாணவ / மாணவியரைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவன் தான் நம் நாயகன். அவருக்கு ஏற்கனவே ஒரு காதலியும் இருக்கிறாள். அச்சமயம் மாணவர்களை எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸில் ஈடுபடுத்தும் பொருட்டு பணியேற்கிறார் பூ.பா. பூ.பா.வைக் கண்டதும் மாணவர்கள் ஜொள்ளு வடிக்கின்றனர். மாணவிகள் பொறமை கொள்கின்றனர். நாயகன் மட்டும் இரவில் பூ.பா.வை நினைத்து சுயமைதுனம் செய்கிறார். கள்ளங்கபடமில்லாத பூ.பா மாணவர்களிடம் வெகு இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்றனர். இது எல்லா பயல்களுக்குள்ளும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாயகன் மட்டும் ஒருபடி மேலே போய் பூ.பா.வை காதலிப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

படத்தில் ட்விஸ்ட் என்பதால் புதிய பத்தியில் எழுதுகிறேன். பூ.பாவின் அஜானபாகுவான காதலர் கதையிலும் பூ.பாவின் சதையிலும் என்ட்ரி கொடுக்கிறார். சூடு பிடிக்கிறது ! பூ.பாவின் காதலருக்கும் நம்ம ஹீரோ பயலுக்கும் அடிக்கடி பனிப்போர் நடக்கிறது. ஒருநாள் இரவில் பூ.பாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து கட்டிலறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நாயகன். உள்ளே பூ.பா. அவருடைய காதலருடன் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருக்கிறார். வெளியில் சத்தம் கேட்டதும் உடலில் துணியை சுற்றிக்கொண்டு கையில் விளக்குடன் வருகிறார். துணி அருகிலிருக்கும் டேபிளில் சிக்கி அவிழ்ந்துக்கொள்ள நாயகன் முன்பு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறார். உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு புறமுதுகு தரிசனம் மட்டும் தான் ! இடைவேளை.

அடுத்தடுத்த டுவிஸ்டுகள். பூ.பாவின் காதலர் மாணவியர்களுள் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பூ.பாவிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். ப்ரேக் அப். அதேபோல நாயகனும் தன்னுடைய காதலிக்கு முன்பு ‘பழைய’ என்ற முன்வையை சேர்த்துவிடுகிறார். ஏற்கனவே தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால் நாயகன் மீது கோபமாக இருக்கிறார் பூ.பா. இருப்பினும் காதலரை பிரிந்துவாடும் அவருக்கு ஆறுதல் தேவை இல்லையா ? நாயகன் தோள் கொடுக்கிறார். முன்பைவிட நெருக்கமாக பழக துவங்குகின்றனர் – இருவரும் ஒன்றிணைந்து சரக்கடிக்கும் அளவிற்கு. நிற்க. பூ.பா இன்னமும் கள்ளங்கபடமில்லாமல் தான் பழகுகிறார். நாயகன் தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் பூ.பா வேலையை துறந்துவிட்டு ஊருக்கு செல்லத் தயாராகுகிறார். எஸ், நீங்கள் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பிட்டு வருகிறது – பூ.பாவின் வீட்டுக்குச் சென்று போக வேண்டாமென இறைந்து மன்றாடுகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் பூ.பாவுக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துவிடுகிறது. எனினும் இது தவறு என்றுணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் அடுத்த கட்டத்திலேயே உடைந்து உருகிவிடுகிறார். உதடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. உடல்கள் பினைந்துக்கொள்கின்றன. நாயகன் பூ.பாவுக்குள் ஊடுருவுகிறார். அடுத்த காட்சியில் பூ.பாவின் வீட்டு வாசலில் பூட்டு தொங்குகிறது. அவருடைய குரலில் ஒரு நீண்ட வாய்ஸ் ஓவர். ஹிந்தியில் என்பதால் எனக்கு புரியவில்லை. நாயகன் தன் பழைய நண்பர்களுடனும், காதலியுடனும் இணைவதுடன் திரை இருள்கிறது.

பூனம் பாண்டே படத்தையே “தூக்கி நிறுத்தியிருக்கிறார்” என்றுதான் சொல்லவேண்டும். சர்வசாதாரணமாக உள்ளாடை மட்டும் அணிந்து ஜாக்கிங் போகிறார். காதலருடன் நிமிடத்திற்கு நான்குமுறை உதட்டுமுத்தம் பரிமாறிக்கொள்கிறார். போதாத குறைக்கு நாயகனின் கனவில் வேறு அடிக்கடி வந்து தொலைக்கிறார். என்ன ஒன்று, கடைசி வரைக்கும் பெரிதாக எதையும் காட்டவில்லை என்பதுதான் வருத்தம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 July 2013

அந்தப்பக்கம் போயிட்டுவா நீ


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இருவருமே மும்பையில் பிறந்தவர்கள், வெண்ணெய்க்கட்டி நிறம், கொழுக் மொழுக் உடல்வாகு, கொஞ்சம் ஒரே மாதிரியான முக அமைப்பு. கவனிக்க: கொஞ்சம் தான். இவ்வளவுதான் குஷ்பூவுக்கும் ஹன்சிகாவுக்கும் உள்ள ஒற்றுமைகள். அதற்காக எல்லாம் ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பூ’ என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷ்பூவுடன் ஒப்பிடும்போது மன்னிக்க அந்த வார்த்தையை பயன்படுத்த என் மனம் ஒப்பவில்லை. உடல் வாகிற்காக வேண்டுமானால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்லலாம். அதில் கூட கூடிய விரைவில் குஷ்பூவை சின்ன ஹன்சிகா என்று அழைக்கும் நிலை ஏற்படலாம். குஷ்பூ ஆரம்பத்திலிருந்தே அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் நடிப்புத்திறனையும் பெற்றிருந்தார். உடல் வனப்புடன் கூடிய வசீகரமான முக லட்சணமும் அவரிடம் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் விட குஷ்பூவிடம் ஒரு ஆளுமை இருந்தது. அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரதான அம்சம். அத்தகைய குஷ்பூவின் சிறப்புத்தன்மைகள் அனைத்திலும் ஹன்சிகா சுமார் என்று கூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று அழைப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா ? வேண்டுமென்றால் கொஞ்சூண்டு குஷ்பூ என்று அழைத்துக்கொள்ளலாம். சரி குஷ்பூவுடனான ஒப்பிடலை ஒதுக்கிவிடலாம். பொதுவாக ஹன்சிகாவிடம் அப்படியென்ன தான் இருக்கிறது.

ஹன்சிகா தமிழில் நடித்த முதல் படமான “மாப்பிள்ளை” பார்த்திருக்கிறீர்களா ? சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப்பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா ? மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் உதட்டசைவை பார்த்தால் ஓங்கி சுவற்றில் போய் முட்டிக்கொள்ள தோன்றும். உதாரணத்திற்கு, ‘திருவண்ணாமலை’ என்ற சொல்லுக்கு ஹன்சிகா உதடசைத்தால் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவது போல தெரியக்கூடும். பாடல்காட்சிகளில் அதைவிட மோசம். ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ ?

சச்சின் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். “...ஓசியில கிடைக்குதுன்னு சீஸ் பர்கர், சீஸ் பீட்சால்லாம் தின்னு தின்னு தின்னு இப்படி அஞ்சரையடி பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு...” என்று போகிற வசனம். நியாயமாக ஸ்லிம் ஜெனிலியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத வசனம் அது. இருப்பினும் நடைமுறையில் ஹன்சிகாவிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். வெண்ணையினால் செய்யப்பட்ட ஐந்தரையடி உருவமாகத்தான் ஹன்சிகா என் கண்களுக்கு தோன்றுகிறார். கெளதம் மேனன் படப்பாடல்களின் இடையிடையே மேலைநாட்டு பெண்கள் வந்து சம்மர்சால்டெல்லாம் அடிப்பார்களே, அவர்களில் ஒருவராக வேண்டுமென்றால் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்ளலாம். “இவ்வளவு பேசுகிறாயே... ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால் என்ன செய்வாய் ?” என்றொரு குரூர மனப்பான்மையுடைய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், சாரி பாஸ் அப்போதைக்கு சுப்பையா என்கிற மானஸ்தன் உங்கள் கண்களுக்கு அகப்பட மாட்டான். நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுமார்மூஞ்சிகளோடு ஒப்பிடும்போது, ஆமாம் ஹன்சிகா அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் சினிமா நடிகை என்ற தளத்தில் யோசித்துப்பார்க்கும்போது தான் சிக்கல் துவங்குகிறது.

தமிழன் எப்போது ஹன்சிகாவிடம் தன்னை ஒப்புவித்தான் என்று சிந்தித்துப் பார்க்கும்போது மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஏன் வேலாயுதம் வெளிவந்தபோது கூட தமிழன் தடுமாறாமல் தான் இருந்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி என்றொரு பாழாய்ப்போன சினிமா வந்து தொலைத்தது. அதில் இடம்பெற்ற அழகே அழகே என்ற பாடலில் இறுக்கமான மஞ்சள்நிற உடையணிந்து பாலைவனத்தில் ஓடிவந்து தமிழர்களுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. “பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.” – ஒ.க.ஒ.க.வில் ஹன்சிகாவைக் கண்டு மயங்கிய ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி எழுதியிருக்கிறார். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பார்ப்பதற்கு மெத்து மெத்து என்றால் என்ன அர்த்தம் ? “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா ? ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ? ம்ம்ம்... அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். சரி, மறுபடியும் கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். ஆமாம், ஒ.க.ஒ.க படப்பாடலில் ஹன்சிகாவின் கழுத்துக்கு கீழே பகுதிகள் கிறங்கடிக்கத்தான் செய்தன. ஆனால் முகலட்சணம் என்று ஒன்று இருக்கிறதே.

அதே ஒ.க.ஒ.க படத்தில் ஒரு கதாபாத்திரம் ஹன்சிகாவின் BMI, உடையலங்கார உணர்வு, பல் தெரிகிற சிரிப்பையெல்லாம் பார்த்து அலறுகிறது. ஹன்சிகா தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு என்றி எள்ளி நகையாடுகிறது. நாம் BMI லெவலுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...!”

திடீரென எனக்கு ஹன்சிகாவின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ? சமீபத்தில் வெளிவந்த தீ.வே.செ.கு திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மென்பொருள் நிறுவனம். அங்கே பணிபுரியும் ஆண் ஊழியர்கள் யாரும் அழகான பெண்களையே பார்த்திருக்க மாட்டார்கள் போலும். ஹன்சிகாவை கண்டதும் கிலோலிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கிறார்கள். லிப்ட் திறந்துவிடுவது தொடங்கி வாகனத்தில் லிப்ட் கொடுப்பது வரை விழுந்தடித்து ஊழியம் செய்கிறார்கள். ஐ.டி இளைஞர்கள் என்ன அப்படியா காய்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கென்னவோ தீ.வே.செ.கு ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் அவமானப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஹன்சிகாவைப் போன்ற வட இந்திய மைதாநிற அழகிகளை ரசிப்பதைவிட திராவிட பாரம்பரியத்தில் வந்த கோதுமை நிற தன்ஷிகாவை ரசிக்கலாம்.

ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ !

தொடர்புடைய சுட்டி: அமலா பால்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment