அன்புள்ள வலைப்பூவிற்கு,
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல புத்தகக் காட்சி ஆரம்பித்துவிட்டாலே கம்யூனிச சிந்தனை, சமூகக் கோபம், அறச்சீற்றம் எச்சச்ச கச்சச்ச இவையெல்லாம் எங்கிருந்தோ பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ புத்தகக் காட்சி ஆரம்பித்தவுடன் முதல்நாள் முதல்காட்சி சினிமா ரசிகன் போல முண்டியடித்துவிட வேண்டுமென்று எனக்கொரு கோட்பாடு. எனினும் அன்றாட அக்கப்போருகள். வாரநாட்களில் என்னுடைய இயந்திரம் என்னை எங்கேயும் அனுமதிப்பதில்லை.
இன்று காலை வெள்ளென வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டேன். கடந்த வாரம் ஏற்பட்ட சிறிய விபத்தொன்றின் காரணமாக அரை நிஜார் அணிந்து செல்ல வேண்டிய சூழல். (விபத்து என்றதும் வாசகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் :) ). பபாசியில் அரை நிஜாரை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. பச்சையப்பாஸ் எதிரே நடைபெற்ற வரையில் போக்குவரத்து சுமூகமாகவே இருந்தது. நந்தனம் என்றால் திருவொற்றியூரிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.கூகுள் மேப்ஸ் வேறு YMCA ராயப்பேட்டையில் இருக்கிறது என்று சொல்லி குழப்பி வைத்திருந்தது. பிறந்ததிலிருந்து சென்னையில் இருந்துக்கொண்டு YMCA மைதானம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால் மானக்கேடு. SIET வரை பயணிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதன்பிறகுதான் போக்குவரத்து நெரிசல் விழி பிதுங்கியது. முந்தய புத்தகக் காட்சிகளில் இடம்பெற்றது போல அரங்கு வாயிலில் பழைய புத்தகக்கடைகள் எதுவும் தென்படவில்லை. புறவழியில் வைத்திருக்கிறார்களோ என்னவோ ?
பதினொன்றரை மணிக்கு அரங்கை அடைந்துவிட்டேன். அரை நிஜாருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்ன, சில வயதுப்பெண்கள் ஏதோ சிக்கன் தொடைக்கறியை பார்ப்பதுபோல குறுகுறுவென்று பார்க்கும்போது கூச்சத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.
வழக்கமாக கடை எண் ஒன்றில் தொடங்கி அப்படியே ZIGZAG-ஆக ஒரு வலம் வருவேன். அதேபோல முதல்முறை செல்லும்போது எந்த புத்தகமும் வாங்க மாட்டேன். கடை எண்களை மட்டும் குறித்துக்கொண்டு புத்தகக் காட்சி நிறைவடைவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சென்று வாங்குவேன். இன்றும் அப்படித்தான் தொடங்கினேன். முதலிரண்டு வரிசைகளுமே சுவாரஸ்யக்குறைவாக இருந்தது போல ஒரு எண்ணம். 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி ?, கனவுகளும் பலன்களும், நீங்களும் ஜோசியர் ஆகலாம் போன்ற புத்தகங்களே கண்ணில் பட்டன. அதை விட்டால் இந்திரா செளந்திரராஜன் வகையறா குடும்ப நாவல்கள். சுமார் மூன்று வரிசைகள் கடந்தபின்னர் ஒரு கடையில் சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைத்தன. இந்தமுறை கடை எண்ணை குறித்து வைக்கவில்லை. நம் பதிவர்கள் இருக்கிறார்களே, எமகாதகர்கள். ஆளாளுக்கு ஒரு செட் புத்தகம் வாங்கினால் என்னவாம். சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள். சென்றமுறை அப்படித்தான் ஏமாந்தேன். அதனால் கையோடு புத்தகங்களை வாங்கிவிட்டேன்.
1. வடிவங்கள் (விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு)
2. 60 அமெரிக்க நாட்கள் (பயண அனுபவம்)
3. டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (நாடகம்)
4. விபரீதக் கோட்பாடு (நாவல்)
5. 24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)
6. படிப்பது எப்படி ?
7. சிறுகதை எழுதுவது எப்படி ?
ஏழு புத்தகங்கள் சேர்த்து நூற்றி ஐம்பது ரூபாய். தொடர்ந்து உலவினேன். ஏனோ கூட்டம் அதிகமில்லை. வி.ஐ.பிக்கள், சக பதிவர்கள் யாரும் தென்படவில்லை. கடந்த ஆண்டு, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் பில் கவுண்ட்டரில் சந்தித்த சுமாரான ஃபிகர் இன்னமும் என்னை நினைவில் வைத்து புன்னகைத்துவிட்டு செல்கிறாள்.
நான்கைந்து வரிசைகள் கடந்ததும் ரைம்ஸ் கடை அளப்பறைகள் ஆரம்பமானது. ஆளாளுக்கு ஒரு எல்.சி.டி தொலைகாட்சி வைத்துக்கொண்டு அதில் ஆத்திச்சூடியோ, ஆன்னா ஆவன்னாவோ, டோரா பூஜியோ அலறவிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ஒரு யுவதி தன்னுடைய குழந்தையை வாக்கரில் அமர்த்தியபடி அழைத்து வந்திருக்கிறாள். அது ‘வீல்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறது. எரிச்சல் அதிகமானது. அந்நேரம் பார்த்து கண்ணில் பட்ட லிச்சி ஜூஸ் சற்று தணியச் செய்தது.
3012ல் உலகம் அழியுமா ?, இஸ்லாம் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள் கண்ணில் படுகின்றன. இன்னொரு கடையில் பத்து, பதினைந்து ஆபீசர்ஸ் டை கட்டியபடி கிடைக்கிற பெற்றோர்களை பிடித்து மூளைச்சலவை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜ் டிவி கடையில் வைக்கப்பட்டிருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்' டிவிடிக்களையெல்லாம் அள்ளிக்கொண்டு செல்ல வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. அஜித் புகைப்படத்தை அட்டையில் பொறித்த ஐந்து RITZ சஞ்சிகைகளை வாங்கி பையில் சொருகிக்கொண்டேன். பசியெடுக்க ஆரம்பித்தது. ஏறத்தாழ கடைசி வரிசைக்கு வந்திருந்தேன். காட்சிப்பிழை சிற்றிதழில் தேர்ந்தெடுத்து நான்கை வாங்கினேன். சந்தா கட்டிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
வெளியே வந்ததும் குல்பி ஐஸ், ஸ்வீட் கார்ன், வாழைத்தண்டு சூப், ஐஸ்க்ரீம் என்று வரிசையாக கடைகள். சாப்பிட வாங்க என்ற பெரிய ஃபுட் கோர்ட் மாதிரி ஒன்று. உள்ளேயே நுழையவில்லை. மாலையில் சசிகுமார், சமுத்திரக்கனி வருவதாக பேசிக்கொண்டார்கள். அயர்ச்சியாக இருந்தது கிளம்பி வந்துவிட்டேன். மீண்டும் நாளை செல்ல வேண்டும்.
அடுத்து வருவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல புத்தகக் காட்சி ஆரம்பித்துவிட்டாலே கம்யூனிச சிந்தனை, சமூகக் கோபம், அறச்சீற்றம் எச்சச்ச கச்சச்ச இவையெல்லாம் எங்கிருந்தோ பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ புத்தகக் காட்சி ஆரம்பித்தவுடன் முதல்நாள் முதல்காட்சி சினிமா ரசிகன் போல முண்டியடித்துவிட வேண்டுமென்று எனக்கொரு கோட்பாடு. எனினும் அன்றாட அக்கப்போருகள். வாரநாட்களில் என்னுடைய இயந்திரம் என்னை எங்கேயும் அனுமதிப்பதில்லை.
இன்று காலை வெள்ளென வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டேன். கடந்த வாரம் ஏற்பட்ட சிறிய விபத்தொன்றின் காரணமாக அரை நிஜார் அணிந்து செல்ல வேண்டிய சூழல். (விபத்து என்றதும் வாசகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் :) ). பபாசியில் அரை நிஜாரை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. பச்சையப்பாஸ் எதிரே நடைபெற்ற வரையில் போக்குவரத்து சுமூகமாகவே இருந்தது. நந்தனம் என்றால் திருவொற்றியூரிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.கூகுள் மேப்ஸ் வேறு YMCA ராயப்பேட்டையில் இருக்கிறது என்று சொல்லி குழப்பி வைத்திருந்தது. பிறந்ததிலிருந்து சென்னையில் இருந்துக்கொண்டு YMCA மைதானம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால் மானக்கேடு. SIET வரை பயணிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதன்பிறகுதான் போக்குவரத்து நெரிசல் விழி பிதுங்கியது. முந்தய புத்தகக் காட்சிகளில் இடம்பெற்றது போல அரங்கு வாயிலில் பழைய புத்தகக்கடைகள் எதுவும் தென்படவில்லை. புறவழியில் வைத்திருக்கிறார்களோ என்னவோ ?
பதினொன்றரை மணிக்கு அரங்கை அடைந்துவிட்டேன். அரை நிஜாருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்ன, சில வயதுப்பெண்கள் ஏதோ சிக்கன் தொடைக்கறியை பார்ப்பதுபோல குறுகுறுவென்று பார்க்கும்போது கூச்சத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.
வழக்கமாக கடை எண் ஒன்றில் தொடங்கி அப்படியே ZIGZAG-ஆக ஒரு வலம் வருவேன். அதேபோல முதல்முறை செல்லும்போது எந்த புத்தகமும் வாங்க மாட்டேன். கடை எண்களை மட்டும் குறித்துக்கொண்டு புத்தகக் காட்சி நிறைவடைவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சென்று வாங்குவேன். இன்றும் அப்படித்தான் தொடங்கினேன். முதலிரண்டு வரிசைகளுமே சுவாரஸ்யக்குறைவாக இருந்தது போல ஒரு எண்ணம். 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி ?, கனவுகளும் பலன்களும், நீங்களும் ஜோசியர் ஆகலாம் போன்ற புத்தகங்களே கண்ணில் பட்டன. அதை விட்டால் இந்திரா செளந்திரராஜன் வகையறா குடும்ப நாவல்கள். சுமார் மூன்று வரிசைகள் கடந்தபின்னர் ஒரு கடையில் சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைத்தன. இந்தமுறை கடை எண்ணை குறித்து வைக்கவில்லை. நம் பதிவர்கள் இருக்கிறார்களே, எமகாதகர்கள். ஆளாளுக்கு ஒரு செட் புத்தகம் வாங்கினால் என்னவாம். சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள். சென்றமுறை அப்படித்தான் ஏமாந்தேன். அதனால் கையோடு புத்தகங்களை வாங்கிவிட்டேன்.
1. வடிவங்கள் (விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு)
2. 60 அமெரிக்க நாட்கள் (பயண அனுபவம்)
3. டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (நாடகம்)
4. விபரீதக் கோட்பாடு (நாவல்)
5. 24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)
6. படிப்பது எப்படி ?
7. சிறுகதை எழுதுவது எப்படி ?
ஏழு புத்தகங்கள் சேர்த்து நூற்றி ஐம்பது ரூபாய். தொடர்ந்து உலவினேன். ஏனோ கூட்டம் அதிகமில்லை. வி.ஐ.பிக்கள், சக பதிவர்கள் யாரும் தென்படவில்லை. கடந்த ஆண்டு, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் பில் கவுண்ட்டரில் சந்தித்த சுமாரான ஃபிகர் இன்னமும் என்னை நினைவில் வைத்து புன்னகைத்துவிட்டு செல்கிறாள்.
நான்கைந்து வரிசைகள் கடந்ததும் ரைம்ஸ் கடை அளப்பறைகள் ஆரம்பமானது. ஆளாளுக்கு ஒரு எல்.சி.டி தொலைகாட்சி வைத்துக்கொண்டு அதில் ஆத்திச்சூடியோ, ஆன்னா ஆவன்னாவோ, டோரா பூஜியோ அலறவிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ஒரு யுவதி தன்னுடைய குழந்தையை வாக்கரில் அமர்த்தியபடி அழைத்து வந்திருக்கிறாள். அது ‘வீல்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறது. எரிச்சல் அதிகமானது. அந்நேரம் பார்த்து கண்ணில் பட்ட லிச்சி ஜூஸ் சற்று தணியச் செய்தது.
3012ல் உலகம் அழியுமா ?, இஸ்லாம் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள் கண்ணில் படுகின்றன. இன்னொரு கடையில் பத்து, பதினைந்து ஆபீசர்ஸ் டை கட்டியபடி கிடைக்கிற பெற்றோர்களை பிடித்து மூளைச்சலவை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜ் டிவி கடையில் வைக்கப்பட்டிருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்' டிவிடிக்களையெல்லாம் அள்ளிக்கொண்டு செல்ல வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. அஜித் புகைப்படத்தை அட்டையில் பொறித்த ஐந்து RITZ சஞ்சிகைகளை வாங்கி பையில் சொருகிக்கொண்டேன். பசியெடுக்க ஆரம்பித்தது. ஏறத்தாழ கடைசி வரிசைக்கு வந்திருந்தேன். காட்சிப்பிழை சிற்றிதழில் தேர்ந்தெடுத்து நான்கை வாங்கினேன். சந்தா கட்டிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
வெளியே வந்ததும் குல்பி ஐஸ், ஸ்வீட் கார்ன், வாழைத்தண்டு சூப், ஐஸ்க்ரீம் என்று வரிசையாக கடைகள். சாப்பிட வாங்க என்ற பெரிய ஃபுட் கோர்ட் மாதிரி ஒன்று. உள்ளேயே நுழையவில்லை. மாலையில் சசிகுமார், சமுத்திரக்கனி வருவதாக பேசிக்கொண்டார்கள். அயர்ச்சியாக இருந்தது கிளம்பி வந்துவிட்டேன். மீண்டும் நாளை செல்ல வேண்டும்.
அடுத்து வருவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|