3 November 2010

கட்டழகி கிளியோபாட்ரா

வணக்கம் மக்களே...!

வரலாற்று சிறப்பு கொண்ட மக்களுள் கிளியோபாட்ரா மீது எப்போதுமே என் மனதில் தனி மரியாதையும் பிரியமும் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் அதிமுக்கியமான காரணம் என்னவென்றால் கிளியோபாட்ராவின் கறுப்பு நிறம் தான். அது என்னவோ விவரம் தெரிந்த வயதிலிருந்தே (நாங்கள்லாம் மூணாம் கிளாஸ்லயே முத்தினவங்க...!) கார்வண்ண பெண்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்துவேன். (சைட் அடிப்பேன்னுங்கறத தான் கொஞ்சம் டீஜண்டா சொன்னேன்). பொதுவாக பசங்க பொண்ணுங்கள கலர்னு சொல்லுவாங்க. என்னைப்பொறுத்தவரையில் கறுப்பு தான் கலர். (கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு). "ஏம்லே அந்த கருவாச்சி பின்னாடியே சுத்துத..." என்பவர்களிடம் கிளியோபாட்ராவை சான்றுகாட்டி மொக்கை போடுவேன். இப்படியெல்லாம் என்னைப் பாடாய்படுத்திய கனவுக்கன்னி கட்டழகி கிளியோபாட்ராவின் வரலாற்று பக்கங்களை ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பொதுவாக மன்னராட்சி காலத்தில் ஒரே பெயரையே எல்லா வாரிசுகளுக்கும் வைத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பெயருடன் ஒரு நம்பரை மட்டும் இணைத்துவிடுவார்கள். (நம்ம இம்சை அரசன் 23ம் புலிகேசி போல). அதுபோல நமது கிளியோபாட்ரா வம்சத்தில் ஏற்கனவே ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்ததினால் இவருக்கு ஏழாம் கிளியோபாட்ரா என்று பெயர். கிளியோபாட்ரா குடும்பத்தில் ஆண்களாக பிறந்தாலே ப்ளாடெமி என்றும் பெண்களாக பிறந்தாலே கிளியோபாட்ரா என்றும் பெயர் வைத்துவிடுவார்களாம். நம்பர் மட்டும்தான் வேற வேற. எகிப்து நாட்டில் கி.மு 69ம் ஆண்டில் பிறந்த இவரது முழு பெயர் Cleopatra VII Philapator (சத்தியமா தமிழ்ல டைப் பண்ண முடியல).

அறிவாற்றலும் பேரழகும் கொண்ட கிளிக்கு (இனிமே இப்படியே எழுதுறேன்... ஒவ்வொரு முறையும் கிளியோபாட்ரான்னு டைப் பண்ண கை வலிக்குது) ஒன்பது மொழிகள் தெரியுமாம். (தமிழ் தெரிந்தால் வந்து பின்னூட்டம் போடச் சொல்லலாம்). கிளி ஒரு கணித மேதை. கணக்கு பண்ணுவதிலும்தான் என்பதை பதிவின் பின்பாதியை படிக்கும்போது உணருவீர்கள். கிளியின் டாடி சீக்கிரமே இறந்துவிட்டதால், அப்போது பதினெட்டு வயதே ஆகியிருந்த கிளியும் அவரது பதினைந்து வயது தம்பியும் சேர்ந்து ஆட்சிப்பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் சிலகாலத்தில் அவரது தம்பி துரோகி ஆகி கிளியை கவிழ்த்துவிட்டார்.

இங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. ரோமப் பேரரசு (பேரரசுன்னு சொன்னதும் யாரும் பயப்படாதீங்க மக்கள்ஸ்... இவரு டைரக்டரு இல்ல) ஜூலியஸ் சீசர் உதவியுடன் போரில் வெற்றிப்பெற்று மீண்டும் எகிப்து ராணியாகிவிட்டார். ஆனால் எகிப்து நாட்டின் சட்டப்படி தனியாக ஆள முடியாததால் தனது பதினோரு வயது தம்பியை மணந்துக்கொண்டார். (பாலச்சந்தர் பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கே...) ஆயினும் தலைவனை பிரிந்து தலைவிக்கு இருக்க முடியாததால் மீண்டும் ரோமுக்கு சென்று ஜூலியஸ் சீசருடன் வாழ ஆரம்பித்தார். அவர்களுக்கு சிசேரியன் என்று ஒரு மகன் பிறந்தார். (சிசேரியனா நார்மல் டெலிவரியா என்று ஆராய்ந்து பார்த்தேன்... வரலாற்றுக்குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை). சில ஆண்டுகளில் ஜூலியஸ் மரணத்தை தழுவினார்.

ஜூலியஸின் மரணத்திற்குப்பின் அவரது ஆதரவாளரான மார்க் ஆண்டனி கிளியின் மீது காதலில் விழுந்தார். கிளியும் மார்க்குக்கு பாஸ்மார்க் போட, இருவரும் திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் இணைந்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் உறவை மையப்படுத்தி ஷேக்ஸ்பியர் பதினேழாம் நூற்றாண்டில் நாடகம் ஒன்றினை நடத்தினார். போரில் ஆண்டனி மரணமடிய அதன்பிறகு கிளிக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷப்பாம்புகளை தனது மார்பில் கடிக்கவிட்டு கிளியோபாட்ரா தனது 39வது வயதில் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு சொல்கிறது.

கிளியோபாட்ராவின் வரலாற்றை அவ்வப்போது திரைப்படமாக எடுத்தபோதிலும் 1963ம் ஆண்டில் எலிசபெத் டெய்லர் நடிப்பில் வெளிவந்த படமே இன்றளவும் பேசப்படுகிறது. நான்கு ஆஸ்கர் அவார்டுகளை வாங்கி குவித்துள்ளது. கிளியோபாட்ரா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் இந்தப் படத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

டாரண்ட் லிங்க்: Cleopatra (1963) DVD RIP
 நேரடி லிங்க்ஸ்: 

இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப் டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக வரலாறு பற்றிய பதிவினை எழுதியிருக்கிறேன். அதுபற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டால் எனது எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 November 2010

தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள்...!

வணக்கம் மக்களே... 

வேலையில்லாத வயிற்றெரிச்சலில் பதிவெழுத உட்கார்ந்தால் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுதத் தோன்றுகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோ கதாப்பாத்திரமே எனது இந்த சமூகக்கோபத்திற்கு காரணம். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாக்களில் ஹீரோவிற்கு இரண்டே விதமான கேரக்டர்கள் தான். ஒன்று, சிட்டியில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிவரும் கேரக்டர். இன்னொன்று, கிராமம்களில் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் கேரக்டர். இதற்கெல்லாம் விதிவிலக்காக அவ்வப்போது சில நல்ல திரைப்படங்களும் வருகிறது. ஆனால் நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அன்னப்பறவையை போன்ற மேன்மையான குணம் கொண்டவர்கள். சினிமாவில் இருந்து கெட்ட விஷயங்களை மட்டும் உறுஞ்சி எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை எல்லாம் தூக்கி கடாசிவிடுவார்கள்.


பொதுவாக ஹீரோவின் பாத்திர படைப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் :-
·          ஹீரோ ரொம்ப அசால்ட். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
·          ஹீரோவின் அப்பா எப்போதும் ஹீரோவை திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் ஹீரோ அவரையும் மதிக்காமல் வெறுப்பேற்றும் விதமாகவே செயல்படுவார்.
·          ஹீரோவின் அம்மா ரொம்ப பாசக்கார அம்மா கூடவே கொஞ்சம் லூசாகவும் இருப்பார். அப்பா கேரக்டர் ஹீரோவை அசிங்க அசிங்கமாக திட்டிக்கொண்டிருக்கும்போது சலனமே இல்லாமல் இடையில் புகுந்து ஹீரோவிற்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்.
·          ஹீரோவிற்கு தங்கை, தம்பி, அண்ணன், அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்கள் அவ்வப்போது காமெடிக்காகவும் பொழுதுப்போக்கவும் வந்துசெல்வார்கள்.
·          ஹீரோவை யாராவது இரும்புக்கம்பியால் இருபது முறை பின்மண்டையில் அடித்தால் கூட ஹீரோ எழுந்து வந்து வில்லன் கும்பலை புரட்டி எடுத்து புரோட்டா போடுவார்.
·          இரண்டரை மணிநேர படத்தில் கடைசி அரைமணிநேரம் இருக்கும்போது எப்படியோ ஹீரோவிற்கு பொறுப்பு வந்து ஒரே பாடலில் பணக்காரன் ஆகிவிடுவார்.

மேற்கூறிய கேரக்டரை சில ஆண்டுகளுக்கு முன்பு மருமகப்புள்ளை தனுஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவரது படங்கள் அனைத்திலுமே அப்பா மகனை சகட்டுமேனிக்கு திட்டுவதும் மகன் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அதைக்கேட்டு பல்லிளிப்பது போன்ற காட்சியொன்று நிச்சயம் இடம்பெறும். தற்போது சிலகாலமாக சிவக்குமாரின் தவப்புதல்வரும் சூர்யாவின் தம்பியாண்டானும் ஆகிய கார்த்தி இந்த கேரக்டரை கவ்வியிருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் ஹீரோவிற்கு இப்படியொரு மானங்கெட்ட கேரக்டர் தான். பாஸ் இயக்குனர் இதற்குமுன்பு எடுத்த சிவா மனசுல சக்தி படத்திற்கும் இதே அக்கப்போர் தான். ஹீரோ கேரக்டர் இப்படியென்றால் ஹீரோயின் கேரக்டர் அதற்கும் மேல. தேடிக்கண்டுபிடித்து வெட்டிப்பயலை தான் லவ்வுவார்களாம்.

பையா படத்தில் தமன்னாவும் கார்த்தியும் கட்டிப்பிடித்துக்கொள்வதோடு படம் நிறைவு பெறும். அதன்பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமன்னாவுடன் பன்னாடைப்பயல் கார்த்தி எப்படி குடும்பம் நடத்தினான் என்பதை யாரும் காட்டமாட்டார்கள் நாமும் யோசிக்க மாட்டோம். பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் முதல்பாதியில் ஹீரோ ஒரே பாடலில் பணக்காரன் ஆவதை ஒரு காட்சியில் கிண்டலடித்து இருப்பார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் அங்கேயும் அதே கதைதான். கொஞ்சம் கூட படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்கள் ஒரே பாடலில் மனம்திருந்தி படித்து பாசாகிவிடுவார்கள் படம் பார்ப்பவர்களை லூசாக்கிவிடுவார்கள்.

இத்தகைய செயல்களுக்கெல்லாம் திரைத்துறையினரை மட்டும் குறை சொல்லமுடியாது. குடும்பத்தோடு சினிமா பார்த்தவர்கள் எல்லாம் தற்போது மலிவு விலை தகடுகளில் முடங்கிவிட திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முன் இருக்கையில் கால்களை போட்டுக்கொண்டு பான்பராக்கை வாயில் குதப்பிக்கொண்டு திரியும் சைனா மொபைல் கும்பல்தான். இவர்களால் தான் நல்ல படங்களெல்லாம் வந்த வேகத்தில் திரும்பிவிடுகின்றன. மிஷ்கினின் நந்தலாலா இதுவரை ரிலீஸ் ஆகாதது கூட இதுபோன்ற கலரிங் ம(ண்)டையர்களால்தான்.

யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமா திருந்தப் போவதில்லை. இனி திருந்த வேண்டியது நாம் தான். இனியாவது வெட்டி ஆபிசர் ஹீரோக்களை ரசிப்பதை நிறுத்திவிட்டு போய் அவங்கவங்க புள்ளக்குட்டிங்களை படிக்க வைப்போம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment