21 May 2010

அன்புள்ள அம்மாவுக்கு,

(இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே எழுதப்பட்டது.)

அன்புள்ள அம்மாவுக்கு,

சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் சொல்லாமலிருக்க முடியவில்லை என் சோகத்தை.

சுமார் நான்காண்டு காலத்திற்கு முன்னால் கல்லூரி விரிவுரையாளராக என் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தீர்கள். அக்கரையில் நின்றிருந்த என்மீது அக்கறை காட்டினீர்கள். அவ்வப்போது அருள்வாக்கு சொல்லும் பங்காரு அடிகளார் போல ஏதேதோ புத்திமதி சொன்னீர்கள். மதி சொன்ன புத்திமதிகளை எல்லாம் நானும் கேட்க ஆரம்பித்தேன். புகைப்பதை பகைக்கச் சொன்னீர்கள். நானும் சிகரெட் துண்டுகளை சிதறடித்தேன். மதுவின் பிடியில் இருப்பவர்களை மதுவிற்குப் பிடிக்காதென்று கூறியதால் எனக்கு ஆறுதலாக இருந்து வந்த நெப்போலியன் மாமா அவர்களின் உறவையும் முற்றிலுமாக துறந்துவிட்டேன். என் பிறந்தநாளன்று வாழ்த்துச்செய்தி அனுப்பிவிட்டு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாய் இருப்பேனென்று வாக்கு கொடுத்தீர்கள்.

பிறிதொரு மாலைப் பொழுதில் அலைபேசியில் அழைத்து, "என்னை அம்மா என்று கூப்பிடுவாயா..." என்று ஏக்கத்துடன் கேட்டீர்கள். உங்கள் வார்த்தையில் இருந்த வலியை உணர்ந்த நான் மறுகணமே உங்கள் மகனானேன். தேர்வு நடந்துக்கொண்டிருந்தது. எல்லோரும் பாடத்தை படித்துக்கொண்டிருந்தார்கள். நான் உங்களிடம் பாசத்தை படித்துக்கொண்டிருந்தேன். உங்கள் பர்சனல் பக்கங்களை எல்லாம் என்னிடம் பகிர்ந்துக்கொண்டீர்கள். சில நேரங்களில் நான் சேயாகவும் நீங்கள் தாயாகவும் இருந்துவந்தோம். பல நேரங்களில் நான் தாயாகவும் நீங்கள் சேயாகவும் இருக்க வேண்டியிருந்தது. என்னிடம் பேசும்போது உங்கள் கவலைகளை எல்லாம் மறப்பதாக கூறினீர்கள்.

என்னை ஏதோ இரண்டரை வயது குழந்தையைப்போல பாவித்து என்னிடம் பாசத்தை கொட்டினீர்கள். நானும் ஒரு எல்.கே.ஜி சிறுவனைப்போல மம்மி மம்மி என்று உருகினேன். என் தந்தையாரும் தந்தை பெரியாரும் கற்றுத்தந்த பகுத்தறிவை எல்லாம் படுக்க வைத்துவிட்டு கோவில் கொடிமரம் முன்பு விழுந்து வணங்கினேன். தன்மானத்தை எல்லாம் இழந்து தட்சிணாமூர்த்தி கோவிலில் வாராவாரம் விளக்கேற்றி வைத்திருக்கிறேன். பின்னர் ஒருநாள் கெளலீஸ்வரர் சன்னதியில் கெளரவம் பறிபோனது. இவ்வாறாக நான் மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்தபோது கூட உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டியிருக்கிறேனே தவிர எனக்காக ஒருபோதும் வேண்டியதில்லை.

தங்களைப் பற்றி தவறாக பேசிய சில நண்பர்களைத் தவிர்த்தேன். உற்றார் உறவினர்களையெல்லாம் கூட உதறித்தள்ளினேன். பிறிதொரு நாளில் என்னைப் பெற்ற தாயை எதிர்க்கும் நிலை வந்தது. தாயையும் எதிர்த்தேன், தந்தையையும் எதிர்த்தேன். கடைசி வரை உங்களை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. என்னை பெற்றெடுத்தவள் பெயரோ வளர்மதி. உங்கள் பெயரும் அவரது பெயரைப் போலவே மதியென்று முடிவதாகச் சொல்லி சிலாகித்தேன். தாய்க்கு மட்டுமே தரவேண்டிய தரத்தை உங்களுக்கும் சேர்ந்து பகிர்ந்தளித்தேன். உங்களது கவலைகளை எல்லாம் என்னுடையதாக நினைத்ததால் "மரணவேதனை" என்ற வார்த்தையை அவ்வப்போது என் டைரிக்குறிப்புகளில் எழுத நேர்ந்தது.

இரவு பகல் பார்க்காமல் பேப்பர் ப்ரெசன்டேஷன் தயார் செய்தது, இரண்டொரு நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு உங்களது மேற்படிப்பிற்கான ப்ராஜெக்ட் ரிபோர்டை தயார் செய்தேன். இப்படியாக தாயாரான உங்களுக்காக நான் தயார் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல. பின்னர் ஒருநாள் வெயிலோடு விளையாடி காலை முதல் மாலைவரை சென்னை பல்கலைகழகத்தில் தேர்வுப்பணம் கட்டியது என்று எதையெதையோ செய்திருக்கிறேன். எல்லாம் கடந்தபின்பு ஒருநாள், "என்னை அம்மா என்று கூப்பிடாதே..." என்று கூறினீர்கள். உங்களை அம்மா என்று கூப்பிட்டதற்கு பதிலாக வோடபோன் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரலையாவது அம்மா என்று கூப்பிட்டிருக்கலாம். அவளாவது நாளொரு வண்ணம் பேசமாட்டாள். இந்த கடிதத்தை படித்தபின்பு கூட ஏதோ நான் உங்களை முதுகில் குத்திவிட்டதாக நீங்கள் பிதற்றலாம். ஆனால் உங்களால் நான் தினந்தோறும் நெஞ்சில் சுமந்துவரும் வலி எனக்கு மட்டும்தான் தெரியும். எப்படியெல்லாமோ உங்களை மறக்க முயற்சி செய்தேன், ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை பெற்றவளை அம்மா... என்றழைக்கும்போது உங்கள் நினைவுகளும் சேர்ந்துதான் வருகிறது.

(இந்தக் கடிதத்தை எழுத முடிவெடுத்தபோது சில வரலாற்று சம்பவங்களை ஆராயும் நோக்கில் என் பழைய டைரியை புரட்ட நேர்ந்தது. ஓராயிரம் இடங்களுக்கு மேலாக அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தேன். அவற்றில் எவை என் தாயைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது, எவை உங்களை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது என்று பிரித்தறியக்கூட முடியவில்லை)
உங்கள் அன்புமகன்,
N R PRABHAKARAN

Post Comment

19 May 2010

அடடா மழைடா...! அட மழைடா...!!

ஊட்டியிலிருந்து கோயம்புத்தூர் மழை...!

Post Comment

15 May 2010

விஜய்யும், ரசிகனொருவனின் நாகரிகமும்

வணக்கம் மக்களே...

முன் குறிப்பு: திரு.விஜய் அவர்களது ரசிகர்களுள் எத்தனையோ நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள். அத்தகைய அன்பர்கள் இந்தப் பதிவை படிக்கும்போது தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

திரும்பத் திரும்ப விஜய்யை விமர்சனம் செய்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. நான் ஒன்றும் விஜய்யை எதிர்ப்பவனும் இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை மறுபடியும் விஜய் பற்றிய பதிவொன்றினை வெளியிட செய்திருக்கிறது.

கடந்த வாரம் "பட்டாப்பட்டி" அண்ணன் "அனானியும், பிரபல பதிவர்களும்" என்ற பெயரில் அனானிகளின் அநாகரிகங்களை அரங்கேற்றியிருந்தார். மேற்படி பதிவை படித்த பின்பும் கூட எனது வலைப்பூவில் நான் அனானி ஆப்ஷனை எடுக்கவில்லை. ஏன்...? "comments visible after blogger approval" ஆப்ஷனை கூட வைக்கவில்லை. எனது பதிவையும் மதித்து படித்து பின்னூட்டம் போடுபவர்களை பெயர் என்ன...? ஐடி என்ன...? என்றெல்லாம் கேட்டு அலைக்கழிக்க நான் விரும்பவில்லை. ஆனால் இதற்கான பலனை நான் சில நாட்களுக்கு முன்பு அனுபவித்தேன்.

வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை எந்தவொரு பின்னூட்டத்தையும் நீக்கியதில்லை. என்னை கண்டபடி திட்டி எழுதிய அனானிகளுக்குக் கூட பதிலளித்துள்ளேன். ஆனால் முதல் முறையாக ஒரு அநாகரிக அனானியின் பின்னூட்டத்தை நீக்க வேண்டிய நிலைக்கு ஆளானதை நினைத்து வருந்துகிறேன்.

"சுறா - புட்டு புட்டு வச்சிருக்கேன்...!" என்ற பெயரில் "இளைய தளபதி" நடிப்பில் (!!!) வெளிவந்த சுறா படத்தினை பற்றி எனது கருத்துக்களை எழுதியிருந்தேன். எதிர்க்கருத்து எழுத எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. விண்ணரசன் கூட மாற்றுக்கருத்து கூறியிருந்தார். அவரது கருத்தில் ஒரு நியாயம் இருந்தது, அவர் சொன்ன விதத்தில் நாகரிகம் இருந்தது. மற்றவர்களின் கருத்தை நான் மனமார மதிக்கிறேன். ஆனால் பதினான்காவதாக ஒருவன் அனானியாக பின்னூட்டம் இட்டிருந்தான். கண்டிப்பாக விஜய்யின் ரசிகனாகவே இருக்கக் கூடும். அவன் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாமே படு மட்டமான வார்த்தைகள், பிரசுரிக்க முடியாத வார்த்தைகள். என் குடும்பத்து பெண்களை எல்லாம் நடுத்தெருவுக்கு இழுத்திருந்தார். ஒரு வகையில் இது எனது எழுத்துகளுக்கு கிடைத்த வெற்றி என்று எடுத்துக்கொண்டாலும் அன்னார் பயன்படுத்திய வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. இனியாவது அனானிகள் திருந்துங்கள். திட்ட நினைத்தால் பதிவைப் பற்றி மட்டும் திட்டுங்கள், பந்தங்களை பற்றியெல்லாம் திட்ட வேண்டாமென தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

அஜித்தை பற்றி கூட சிலமுறை இதே வலைப்பூவில் விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதுகூட சிலர் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் அனானிகள் பெயரில் எதிர்த்ததில்லை, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை, முதுகில் குத்தியதில்லை. ஒருவேளை இதுதான் உங்கள் இளையதளபதி உங்களுக்கு கற்றுக்கொடுத்த நாகரிகமோ...? என்னவோ...?

கடைசியாக நான் சுறா விமர்சனத்தில் குறிப்பிட்ட சில வரிகளை மீண்டும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். எல்லோரும் சரியாக கதை கேட்பதில்லை என்று விஜய்க்கு அட்வைஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கவலை, அட்வைஸ் எல்லாமே விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அறியாமைக்கூட்டத்திற்குத்தான். உங்கள் தறுதளபதியின் போதைக்கு நீங்கள் ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறீர்கள். உங்களை உசுப்பேற்றி அந்த உஷ்ணத்தில் உங்கள் தலைவர் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். இதை நீங்களெல்லாம் உணர்ந்துக்கொள்ளும் வரை உங்கள் தலைவன் திரையில் சொன்னது போல தமிழன் சுயமரியாதை இல்லாமல்தான் இருப்பான்.

பின் குறிப்பு: இதற்கும் அனானியாகத் தான் பின்னோட்டம் போடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு கதவு திறந்துதான் இருக்கிறது வாருங்கள். தயாராக இருக்கிறேன்.
 என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

சரவெடி சதீஷின் ஆலோசனைப்படி இந்தப் பதிவிற்கு அவரிட்ட பின்னூட்டத்தினையும் அதற்கு நானளித்த பதிலையும் கீழ் குறிப்பாக இணைத்திருக்கிறேன்...

அண்ணே உங்கள் இரண்டு பதிவையும் படித்தேன் என் கருத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன். முதலில் நானும் ஒரு விஜய் ரசிகன்தான். நீங்கள் சொன்ன விமர்சனத்தை ஏற்கின்றேன் காரணம் விஜயின் அண்மைய சொதப்பல் படங்கள் ரசிகர்கள் ங்களை தலை குனிய வைத்துள்ளன. ஆனால் இதில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எல்லோருக்கும் எந்த துறையிலும் சறுக்கல் வருவது இயல்பு, திரைக்கதியிலும் கதையிலும் கவனம் செலுத்தினாலே விஜய்க்கு போதும். உங்கள் வழியிலேயே வந்தால் நீங்கள் அந்த பதிவில் குறிப்பிட்டது போல // ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.// இதில் தான் எனக்கு நீங்கள் எல்லை மீறி விட்டீர்களோ என தோன்றுகின்றது. அவர்களை நீங்கள் ஏன் அப்படி அழைத்தீர்கள். விஜய் ரசிகர்கள் என்ற காரணத்திலா? அல்லது வேறு ஏதும் தவறாக நடந்தார்களா என நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் நண்பரே. இன்னுமொருவரை பற்றி இப்படி பேச உங்களுக்கு உரிமை இருக்கென்றால் உங்கள் கருத்தை அவர் எதிர்த்தது தப்பில்லை. அதற்காக நான் வக்காலத்து வாங்குகின்றேன் என நினைக்காதீர்கள். மற்றது இன்னொரு விடயம் அவர் விஜய் ரசிகர் தானா என்பது கூட உங்களுக்கு தெரியாது அதை அவரும் குறிப்பிட்டாரா என்றும் நீங்கள் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் உங்கள் தலைப்பின் அர்த்தம் என்ன. விஜய் என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணமா? எனக்கு இது சரியென்று தோன்றவில்லை. //அஜித்தை பற்றி கூட சிலமுறை இதே வலைப்பூவில் விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதுகூட சிலர் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் அனானிகள் பெயரில் எதிர்த்ததில்லை, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை, முதுகில் குத்தியதில்லை. ஒருவேளை இதுதான் உங்கள் இளையதளபதி உங்களுக்கு கற்றுக்கொடுத்த நாகரிகமோ...? என்னவோ...?// இப்படிப்பட்ட என்னத்தை நீங்கள் மாற்ற வேண்டும் அப்படி என்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் எல்லாம் நடத்தை சரியிலாதவர்கள் விஜய் கூட அப்படி என்று நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அஜித் ரச்கர்கள் என்றால் அப்படி செய்ய மாட்டார்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அப்படித்தான் என்பது போல இருக்கின்றது உங்கள் கருத்து ஐயா சாமி ரஜினியாக இருக்கட்டும் கமலாக இருக்க்கட்டும் விசாக இருக்கட்டும் விக்ரமாக இருக்கட்டும் இல்லை வையாபுரியின் ரசிகனாக இருக்கட்டும் யாராக இருப்பினும் அவர் அவராக திருந்தி நடந்தாலே ஒழிய எந்த ஒரு நடிகனாலும் ஒருவனை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது. நடிகன் என்பவன் நாங்கள் ரசிக்கவே. நான் அனானியாக வரவில்லை என் சொந்த பெயரில் வந்துள்ளேன். என் கருத்தை சொல்ல நான் தயங்கமாட்டேன். உங்கள் கருத்தோடு ஒன்றிப் போகாவிட்டாலும் உங்களை காயப்படுத்தி இருந்தாலும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். கடைசியாக ஒரு விடயம் உங்களுக்கு அனானியாக பிநூடமிட்ட அந்த நபர் வேறு ஒரு நடிகரின் ரசிகராக கூட இருக்கலாம் யாரறிவார்?

முதலில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. பிரபல பதிவரான தாங்கள் என் எழுத்துக்களை படித்து பின்னோட்டம் இட்டதிலிருந்தே உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்குமென உணர்ந்துக்கொள்ள முடிகிறது. // ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.// இந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் என்று குறிப்பிட்டேன். விஜய் ரசிகர்கள் என்ற கழிசடைகள் என்று குறிப்பிடவில்லை. பதின்வயது பாலிடெக்னிக் மாணவர்களான அவர்கள் தொடர்ந்து "த்தா... ங்கொம்மால..." என்று தவறான மொழி பேசி வந்ததால் மட்டுமே அப்படி குறிப்பிட்டேன். // அவர் விஜய் ரசிகர் தானா என்பது கூட உங்களுக்கு தெரியாது அதை அவரும் குறிப்பிட்டாரா என்றும் நீங்கள் சொல்லவில்லை // எழுதியவர் நான் விஜய் ரசிகர் என்று சொல்லிவிட்டு எழுதவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர் எழுதியிருந்த ஒரு அரைப்பக்க கடுகுதாளிப்பில் ஆங்காங்கே விஜய்யை உயர்வாக குறிப்பிட முனைந்ததால் அவர் விஜய் ரசிகாராக இருக்கவேண்டுமென கணித்துக்கொண்டேன். // விஜய் என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணமா? // ஹிட்டடிக்கும் எண்ணமில்லை. உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் இந்தப் பதிவை படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான். // இப்படிப்பட்ட என்னத்தை நீங்கள் மாற்ற வேண்டும் அப்படி என்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் எல்லாம் நடத்தை சரியிலாதவர்கள் விஜய் கூட அப்படி என்று நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?// இந்த இடத்தில் நீங்கள் சொன்னதுபோல நான் தவறு செய்துவிட்டேன் என்றே தோன்றுகிறது. ஆனால் என் மனதில் உள்ள கருத்து இல்லை, வரிவடிவம் கொடுக்கும்போது அர்த்தம் பிசகிவிட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். அவர் அனானியாக வந்ததெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. எதிர்க்கருத்து குறிப்பிட்டதையும் வரவேற்கிறேன். முற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் என்னை காயப்படுத்திவிட்டது அண்ணா. 

Post Comment

9 May 2010

அம்மா... (அன்னையர் தின கவிதை)

எனக்கு
ஆட்டோ வரும் முன்பே
உனக்கு
பேருந்து வந்துவிடுகிறதே
அம்மா...
ஒவ்வொரு நாளும்...!

பள்ளியிலிருந்து
வீடு திரும்புகையில்
யாருமே இல்லாத வீட்டை
பார்க்கையில்
எதுவுமே இல்லாததுபோல்
தோன்றுகிறது
எனக்கு.

இரவு ஒன்பது மணிக்குள்
எப்படியும் வந்துவிடும்
உன்னையும்
பதினோரு மணிக்குள்
வந்துவிட முயற்சிக்கும்
அப்பாவையும்
பள்ளிக்கூடத்தில்
நினைக்கையில்
மங்கலாய்த்தான்
ஞாபகம் வருகிறது.

இப்போதெல்லாம்
டாம் அண்ட் ஜெர்ரியும்,
போகோ டிவியும்
புளித்துவிட்டது.
ப்ரிஜ்ஜில் ஸ்நாக்சும்,
செல்போனில் உன் குரலும்,
அலுத்துவிட்டது.

வரவேற்பறையினை
அலங்கரிக்கத் தெரிந்த 
உனக்கு,
உன் ஸ்பரிசங்களுக்கு
ஏங்கும் என்னை
ஏனம்மா
புரிந்துக்கொள்ள
இயலவில்லை...?

வீட்டுவேலைகளை 
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
தள்ளிப்போடும்
உன்னைப்போலவே,
ஏக்கங்களை 
தள்ளிப்போட
எனக்கும் தெரிந்துவிட்டது...

அன்பான 
வார்த்தைகளால்
தற்காலிக தாயாகிவிடுகிறாள்
வேலைக்கார ஆயா...
அப்போதெல்லாம் 
தோன்றுகிறது எனக்கு...
"அவளுக்கே - நான் 
பிள்ளையாகியிருக்கலாம்..."

உன் பிள்ளையென 
உணர்த்த - நான்
நன்றாக படிப்பதாய்
மார்தட்டுகிறாய்...
என் அம்மாவென
உணர்த்த
என்ன செய்யப்போகிறாய் 
நீ...?
- சூர்யா சுரேஷ்

Post Comment

2 May 2010

திரையைக் கிழித்த சுறா...!

வணக்கம் மக்களே...

தல வாழ்த்து
மே 1 அன்று பிறந்தநாளை கொண்டாடிய (கொண்டாடவே இல்லை) எங்கள் அண்ணன் அஜித் குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். ஏற்கனவே தல தரப்பில் இருந்து இருந்து வெளியான செய்திக்குறிப்பில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாமென அன்புக்கட்டளை இட்டிருந்தார் தல. எனவே, தலைவர் திருநாள் எந்தவித ஆரவாரமும் இல்லாமலே கழிந்துவிட்டது.
சில தொலைக்காட்சி சேனல்கள் தலையைப் பற்றி துண்டுச்செய்தி கூட வெளியிடாத நிலையில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் விஜய் டிவிக்கும் ஜெயா டிவிக்கும் கோடானு கோடி நன்றிகள். அதிலும் குறிப்பாக நாள் முழுவதும் தலப்பாடல்களை ஒளிப்பரப்பி ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி அரும்பணி ஆற்றியது. இங்கு நிலை இப்படியிருக்க மொரோக்கோவில் நடந்துவரும் பார்முலா-2 பந்தயத்தில் கலந்துவரும் அஜித் தனது பிறந்தநாளன்று நடந்த ரேஸில் 21வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். தல தொடர்ந்து தடம் பதிக்க வாழ்த்துக்கள்.

பதிவர்கள் கவனத்திற்கு 
அங்காடித் தெரு படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். விமர்சனங்கள் எழுதியிருக்கலாம். அவ்வாறு உங்கள் மனதில் படத்தினைப் பற்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அவற்றி நீங்கள் என்னோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று அந்தப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார்.
பேஸ்புக்கில் அங்காடித் தெரு படம் பற்றிய உங்கள் எண்ணங்களை பேசிக்கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
பேஸ்புக் கணக்கு இல்லாத பதிவர்கள் "vasantabalan@yahoo.co.in" என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ரசிகர்கள் ரகளை
"இளையதளபதி" விஜயின் அபாரமான நடிப்பில் (!!!) "சுறா" திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக (!!!) ஓடிக்கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்ததே.
இந்நிலையில் திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோட்டில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் பேன், டியுப்லைட் (விஜய்யை குறிப்பிடவில்லை) ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு நில்லாமல் திரையைக் கிழித்து ரகளையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். படத்தின்போது ஏற்பட்ட ஒளிப்பரப்பு கோளாறினால் தான் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக வெளியில் பேசிக்கொண்டாலும் விஷயம் வேறுமாதிரியாக இருந்ததால் திண்டுக்கல் போலீசாரை ரகசியமாக சந்தித்தோம். "படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒவ்வொருவருக்கும் மறை கழன்டுபோக ஆரம்பித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பரவச நிலை அடைந்த ரசிகர்கள் திரையை கிழித்திருக்கிறார்கள்". இவ்வாறு திண்டுக்கல் போலீசார் நம்மிடம் தெரிவித்தனர்.

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது
நீங்கள் நினைப்பது போல ஆஸ்திரேலிய வீரருக்கோ இந்திய வீரருக்கோ லலித் மோடிக்கோ சசி தரூருக்கோ அல்லாமல் ஒரு நேபாள வீரனை சென்றடைகிறது. செய்தி இதுதான். நேற்று முன்தினம் இரவு சென்னையில் பெய்த மழையில் சென்னை மேடவாக்கத்தில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. விவரம் தெரியாமல் தேங்கிய மழை நீரில் காளை வைத்திருக்கிறார் ஒரு தாய்க்குலம். தாயும் சேயும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கூர்க்கா "வீராஜ் குமார்" இரண்டு போரையும் கிரிக்கெட் மட்டையால் அடித்து காப்பாற்றியிருக்கிறார். இப்போது வீராஜ் குமார் தான் "மேன் ஆப் மேடவாக்கம்"


இந்த வார கவிதை 
தேநீர்க் கடையில்
இரட்டைக் குவளை - அதே
கடையில் ஒரே
கல்லாப்பெட்டி...
- வெங்கட. ராசா, ம.பொடையூர்


இந்த வாரப் பூச்செண்டு
லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எதிர்த்து நூதன பிரச்சாரம் செய்த இளைஞர்களுக்கு. சில நாட்களுக்கு முன் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், "லஞ்சம் கொடுக்கவும் செய்யாதீர்கள், வாங்கவும் செய்யாதீர்கள் ப்ளீஸ்" என்று கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்த அந்த இளைஞர்கள், இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பொதுமக்கள் கால்களில் விழுந்து மன்றாடியிருக்கிறார்கள். தங்களது இயக்கத்தின் பெயர் சத்தியாகிரக இயக்கம் என்றும் இதுவரை 26 லட்சம் மக்கள் காலில் விழுந்திருப்பதாக கூறிய அந்த இளைஞர்களை மனமார பாராட்டுவோம்.


இந்த வார வலைப்பூ
அயராத எழுத்துப்பணி (!!!) காரணமாக அடுத்தவர்களது வலைப்பூக்களை தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் வாரம் ஒரு விடுமுறை நாளை ஒதுக்கி விடிய விடிய வலைப்பூக்களை மொய்ப்பதுண்டு. அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு ஓரிரவில் "சேட்டைக்காரன்" வலைப்பூவை படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
நகைச்சுவையாக பதிவிடுவார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த சேட்டையின் மறுப்பக்கத்தை அன்றுதான் உணர்ந்துக்கொண்டேன். அதிலும் சேட்டை சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகள் என்னை கடுமையாக பாதித்தது. ஒன்று, பராசக்தி கோர்ட் வசனக்காட்சியை அவர் உல்டா செய்து எழுதியிருந்த பதிவு. இந்தப் பதிவு ஒரு வரலாற்று பதிவு என்றுகூட சொல்லலாம். எல்லோரும் படித்தே ஆகவேண்டிய இந்தப் பதிவை நீங்கள் படிக்க இந்த இணைப்பை (பராசக்தி ரிப்பீட்டேய்...!) சொடுக்கி படிக்கலாம். "அவிய்ங்க" ராசா, "தேவடியா பசங்க..." என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அதே கருத்தை சேட்டை இன்னும் உருக்கமாகவும் நாகரீகமாகவும் எழுதியிருந்தார் மற்றுமொரு பதிவில். அந்தப் பதிவை படிக்க விரும்புவோர் இந்த இணைப்பை (பயணத்தில் ஒரு நாள்...!) சொடுக்கி படிக்கலாம். சேட்டை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.


படம் சொல்லும் செய்தி என்ன...?
இதோட பன்னிரண்டு வருஷமாச்சு.

என்ன ஒன்னும் புரியலையா...?

மேற்படி அம்மணி வயசுக்கு வந்து பன்னிரண்டு வருஷமாச்சு...
எப்படி நம்ம பினிஷிங் டச். சும்மா தமாசுங்க சீரியஸா எடுத்துக்காதீங்க.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment