31 December 2010

புத்தாண்டு சபதங்கள்

வணக்கம் மக்களே...

ஒவ்வொரு புதுவருட பிறக்கும்போதும் இந்த சமுதாயம் நம் முன்பு ஒரு கேள்வியை வைக்கிறது. உங்களுடைய நியூ இயர் ரெசல்யூஷன் என்ன...? (ங்கொய்யால யாருங்க கண்டுபுடிச்சது இந்த மேட்டரை...) சரி, இதுவரை எடுத்த நியூ இயர் ரெசல்யூஷன்களில் ஒன்றையாவது காப்பாற்றியிருக்கிறேனா...?

-          பொண்ணுங்க பேச்சை கேட்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். நாசமாப் போச்சு.
-          சரக்கை மறக்க நினைத்தேன். நண்பர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.
-          மற்றவர்களை கலாய்க்கக் கூடாதென்று கருதினேன். பதிவுலக வாழ்க்கையில் அது சாத்தியமா என்ன...?

இதெல்லாம் முடியாதபோது ஒன்றை மட்டும் சாதித்திருக்கிறேன். (வேறு வழியில்லாமல்).
- தம்மடிக்க கூடாது என்று எண்ணினேன். எந்த நேரத்தில் நினைத்தேனோ நான் வழக்கமாக அடிக்கும் இந்தோனேஷியா சிகரெட் கிடைப்பதில்லை. கிங்க்ஸையும் பில்டரையும் பற்ற வைத்தால் வாய் குப்பைலாரி மாதிரி நாறுது. இப்போ வேற வழியில்லாமல் பழக்கத்தை கைவிட்டுவிட்டேன். மேலே படத்தில் இருக்கும் சிகரெட் பிராண்ட் சென்னையில் எங்கேயாவது கிடைக்கிறது என்றால் விவரம் சொல்லுங்கள்.

அப்படியே கொஞ்சம் சீரியஸா இந்த வருடம் எனக்கு என்னென்ன மாற்றங்களை கொடுத்திருக்கிறது என்று சிந்தித்தேன்.
-          வலைப்பூ. சென்ற வருடமே வைத்திருந்தாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் கண்ட வளர்ச்சி அபரிமிதமானது.
-          காதல். சிலபல வருடங்களாக ஒரு தலையாக ஓடிக்கொண்டிருந்த காதல் முற்றுப்புள்ளி என்று நினைத்திருந்த நேரத்தில் கமா போட்டு வேகமெடுத்திருக்கிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.
-          வேலை. ஏதோ எனக்கென்று ஒரு வேலையில் இருந்தேன். இப்போது நல்லவேலையை தேடுகிறேன் பேர்வழி என்று எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாக இருக்கிறேன்.

சரி, சொல்லவந்த மேட்டர் சின்னதாக இருந்ததால் முன்னாடி இப்படி மொக்கை போட வேண்டியதாகிவிட்டது. அதாகப்பட்டது, நம் வாசகர்கள் பலரது வேண்டுகோளின்படி டெம்ப்ளேட் மாற்றம் செய்ய இருப்பதால் நம்ம கடைக்கு ரெண்டு நாள் லீவு. (எல்லாருக்கும் சந்தோஷமா இருக்குமே). இதுக்கு எதுக்கு ரெண்டுநாள்ன்னு நீங்க கேக்கலாம். அது ஒரு சோகக்கதை. வலைப்பூ ஆரம்பித்த ஆர்வக்கோளாறில் எல்லாப் பதிவுகளிலும் ஏகப்பட்ட கலரிங், பார்மேட்டிங், டிங்கரிங் செய்திருந்தேன். இப்போ என்ன டெம்ப்ளேட்டை மாற்றினாலும் கருமம் பிண்ணனி எழுத்துக்கள் மட்டும் ஆரஞ்சு வண்ணத்திலேயே இருக்கிறது. இதை சரிசெய்ய ஒரே வழி மறுபடி எல்லா இடுகைகளிலும் டிங்கரிங் வேலை பார்ப்பது மட்டுமே என்பதால் இரண்டு நாட்கள் தேவைப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு நாட்கள் நண்பர்கள் வலைப்பூக்களில் பின்னூட்டமிட முடியாத நிலையிலும் இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் மேலும் சில மாற்றங்களோடு 2011ல் வருகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

30 December 2010

கனவுக்கன்னி 2010 – பாகம் 2

பதிவின் முதல் பகுதியை படிக்க (பார்க்க) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்:-

முன்னர் குறிப்பிட்டது போல இது முழுக்க முழுக்க ஒரு தனிநபர் ரசனையே நபருக்கு நபர மாறுபடலாம்.

5. வெள்ளைக்கார ஏஞ்சல் ஏமி ஜாக்சன்
மதராசப்பட்டினம் படத்தை பார்த்துவிட்டு ஏமியை பற்றி தனிப்பதிவு ஒன்றை எழுதலாமென்று ஓடி வந்தேன். அதற்குள் நண்பர் சேட்டை முந்திக்கொண்டார். தொடர்ந்து தமிழ் படங்களில் தலை காட்டுவது சந்தேகம் தான் என்பது ஏங்க வைக்கிறது.

4. களவாணிப் பொண்ணு ஓவியா
தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது தலையெடுக்கும் இயல்பான அழகிகளில் இவரும் ஒருவர். 2011ல் அம்மாவா அய்யாவா என்று தெரியவில்லை. ஆனால் கோலிவுட்டில் இந்த பட்சியின் ஆட்சிதான்.

3. மனம்கவர்ந்த மைனா அனாகா (எ) அமலா பால்
நடிகையின் இயற்பெயரை சொன்னால் கூட சிலருக்கு தெரிவதில்லை. ஆனால் மைனா என்றால் நம் மனக்கண் முன்பு பளிச்சென்று தெரிகிறார். முதல் இரு படங்களில் மேக்கப்புக்கு வேலை கொடுக்காததால் நடிகையின் அருமை இன்னும் பலருக்கு தெரியவில்லை.

2. சிரிப்பழகி காஜல் அகார்வால்
சினேகாவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை புன்னைகையால் கட்டிப்போட்டவர். ஆனாலும் அம்மணி ஆந்திராவில் மட்டும் அள்ளிக்கொடுத்துவிட்டு தமிழகத்தில் கிள்ளிக்கொடுப்பது கண்டிக்கத்தக்கது. இனிவரும் ஆண்டிலாவது அள்ளிக்கொடுப்பாரா என்று பார்ப்போம்.

1. துப்பாக்கிப் பெண் தன்ஷிகா
எதற்கு இந்த அடைமொழி என்று குழப்பமா...? நடிகை அறிமுகமான பேராண்மை படத்தில் துப்பாக்கிப் பெண்ணே... என்று ஒரு பாடல் இடம்பெற்றது. அந்தப்பாடலில் குட்டைப்பாவாடை அணிந்து அருவியில் ஆட்டம் போட்டதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. நிறைய நடிகைகளுக்கு தமிழ் டூமிலாக இருக்கும் நிலையில் இவர் சொந்தக்குரலில் பேசி நடிப்பது ப்ளஸ். அது மட்டுமில்லாமல் தன்ஷிகாவின் குரல் கிறங்கடிக்கும் காக்டெயில் குரல். பேராண்மையில் ஐந்து பேரில் ஒருவராக வந்ததால் அதிகம் கவனிக்கப்படவில்லை. பின்னர் நாயகியாக அறிமுகமான மாஞ்சா வேலு படமும் அதைத் தொடர்ந்து நடித்த நில் கவனி செல்லாதே படங்களும் தோல்வியடைந்த நிலையில் தன்ஷிகாவின் கலையுலக எதிர்காலம் கேள்விக்குறியே.

இது தொடர்பதிவு கிடையாது. இருப்பினும் வம்ப வெலைக்கு வாங்குவோம்ல... நா.மணிவண்ணன், பன்னிக்குட்டி ராம்சாமி இருவரையும் இந்தப் பதிவை தொடர்வதற்காக அன்போடு அழைக்கிறேன். (அவர்களுடைய ரசனையை தெரிந்துக்கொள்வதில் ஒரு ஆர்வம்). மேலும் என்னைப்போன்ற லொள்ளு + ஜொள்ளு பதிவர்கள் யாராவது தொடர விரும்பினால் தாராளமாக தொடரலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Post Comment

பதிவுலகிற்கு இரண்டு அறிவிப்புகள்

குத்துங்க எஜமான் குத்துங்க

தமிழ்மணம் விருதுகளுக்காக நகைச்சுவை, தமிழ்த்திரை விமர்சனங்கள், உலகப்பட விமர்சனங்கள் என்று மூன்று பிரிவுகளில் எனது பதிவுகளை அனுப்பி வைத்திருந்தேன். இப்போது அவற்றில் இரண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. சினிக்கூத்து சித்தனுக்கு மட்டும் தமிழ்மணம் அருள் பாலிக்கவில்லை. இருக்கட்டும். இப்போது சில நாட்களாக இன்ட்லியில் கூட எனது பதிவுகள் ஹிட்டடிப்பதில்லை. நம்ம பதிவர்கள், வாசகர்கள் கேட்டாத்தான் ஓட்டு போடுவோம்னு அடம் பிடிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது தமிழ்மணம் விருதுகள்ன்னா சும்மாவா. அது மட்டுமில்லை நான் முதல் கட்ட வாக்கெடுப்புல பதிவை எல்லாம் படிச்சு பாத்துட்டு நியாயமா ஓட்டு போடணும்னு நினச்சேன். ஆனால் அது எவ்வளவு பெரிய மடத்தனம்னு அங்கே போய் பார்த்தபோது தான் தெரிந்தது. ஒவ்வொரு பிரிவிலேயும் அறுபதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள். அப்புறம் கண்ணை மூடிக்கிட்டு நண்பர்கள் பெயரை டிக் அடிச்சேன். அதுலயும் சில இடங்களில் இரண்டு, மூன்று நண்பர்களின் பெயர்கள் வந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எப்படியும் யாரும் பதிவை படிச்சிட்டு ஓட்டு போடப்போவதில்லை. அதான் நானும் பிரச்சார களத்துல இறங்கிட்டேன். இப்போ என்னுடைய பரிந்துரைகளைப் பற்றி சிறுகுறிப்புகள்.

தலைப்பை பார்த்துவிட்டு நெகடிவ் விமர்சனம் என்று நினைத்துவிடாதீர்கள். கதைச்சுருக்கம், நாயகனின் நடிப்பு, நாயகியின் நடிப்பு, பிற நடிகர்களின் பங்களிப்பு, இசை, ஒளிப்பதிவு என்று ஒரு திரைவிமர்சனத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது (என்று நினைக்கிறேன்). சந்தேகம் இருந்தால் இந்த இணைப்பை சொடுக்கி படிச்சு பாருங்களேன்.

இது ஒரு கலைநுட்பம் வாய்ந்த ஸ்பானிஷ் திரைப்படத்தின் விமர்சனம். இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயதுப்பெண். இவர்களால் மூவரால் ஆன பயண அனுபவங்களே கதை. காதல், காமம், அரசியல் (மெக்சிகோ நாட்டின் உள்நாட்டு அரசியல்) போன்றவைகளின் கலவையான இந்தப் படத்தைப் பற்றி இங்கே விரிவாக எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். அது மட்டுமில்லாமல் பதிவிறக்க இணைப்புகளும் இணைத்திருக்கிறேன்.

ம்ம்ம்... இதுதான் ரொம்ப முக்கியம். கீழே கொடுத்திருக்குற இணைப்பை சொடுக்குங்க.

அங்கே இருபது பிரிவுகளில் கடைசி இரண்டு பிரிவுகளை கிளிக்குங்கள். மேலே குறிப்பிட்டுள்ள எனது இரண்டு இடுகைகளுக்கும் உங்கள் வாக்குகளை கண்டபடி குத்துங்க எஜமான் குத்துங்க.

களவாணி பயலுகளா


என்னுடைய பதிவு ஒன்று களவு போயிருக்கிறது.
என்னுடைய ஒரிஜினல் லிங்க்:
http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/blog-post_27.html
களவாடிய லிங்க்: 
http://ajith-vijay.blogspot.com/2010/12/blog-post_5295.html
(பயபுள்ளைங்க கடைசி வரியில் இருந்த என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN என்ற வரிகளைத் தவிர மற்ற அனைத்தையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்)

இதுகுறித்து எனக்கு பின்னூட்டம் மூலமாக தகவல் தெரிவித்த ரஹீம் கஸாலி, மெட்ராஸ் பவன் சிவா குமார் மற்றும் இன்னபிற அன்பு உள்ளங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.

என்னுடைய பதிவு திருடப்படுவது இதுவே முதல்முறை அதனால் எனக்கு இந்த சம்பவத்துக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று சத்தியமாக தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் இப்பல்லாம் எனக்கு எதிரா யாராவது ஏதாவது பண்ணாக்கூட கோபமே வரமாட்டேங்குது. என் மேல தப்பே இல்லைன்னாலும் அங்கபோய் மானங்கெட்டத்தனமா மன்னிப்பெல்லாம் கேக்குறேன். என்ன பண்றது குட்ட குட்ட குனியறது தமிழனோட குணமாச்சே. சரி இப்போ எதுக்கு அந்தக்கதை, பதிவுத்திருட்டு மேட்டருக்கே வருவோம். இதுகுறித்து வழக்கம்போல சாதுவாக அவரது தளத்திற்கு சென்று நாகரிகமாக ஒரு பின்னூட்டத்தின் மூலம் விஷயத்தை தெரிவித்தேன். ஆனால் அவர் நாசூக்காக எனது பின்னூட்டத்தை நீக்கிவிட்டு அவருடைய வேலையை பார்க்க போய்விட்டார். அவருக்கு என்னுடைய சார்பாக கடும் கண்டனங்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். என்னையும் ரெளத்திரம் பழக வைத்துவிடாதீர்கள் ப்ளீஸ். சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனியும் இதுபோல திருட்டு நடக்காமல் தற்காத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கிச்சொல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 December 2010

TOP 25 தமிழ்ப்படங்கள் – 2010

வணக்கம் மக்களே...

நடந்துமுடிய இருக்கும் ஆண்டில் எத்தனை தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறேன் என்று லிஸ்ட் எடுத்தேன். 25 படங்கள் லிஸ்டில் வந்தது. அவற்றை வரிசைப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அந்தப் படங்கள் குறித்த என்னுடைய ஒருவரி விமர்சனங்களை எழுதுகிறேன். அதற்கு முன்னதாக நான் பார்க்க நினைத்து தவறவிட்ட படங்கள்:-
-          நாணயம்
-          கோவா
-          சிந்து சமவெளி
-          சித்து +2
-          ஈசன்

இப்ப மெயின் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...

25. ஆனந்தபுரத்து வீடு இதெல்லாம் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய விட்டலாச்சார்யா டைப் படம்.

24. சிங்கம் ஓவர் இரைச்சல். ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த மசாலாக்கலவை.

23. கோரிப்பாளையம் போதையில் பார்த்த படம். சுப்ரமணியபுரம் + மாயாண்டி குடும்பத்தார் மிக்சிங் சூப்பர்.

22. கற்றது களவு ஆர்ப்பாட்டமில்லாத கமர்ஷியல் திரைப்படம் எனினும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எப்போதும் போல சலிப்பு.

21. குட்டி ஒருதலைக்காதலின் மகத்துவத்தை சொன்ன படம். ஆனால் தெலுங்கு வாடை கொஞ்சம் தூக்கல். க்ளைமாக்ஸ் இழுவை.

20. ராவணன் புரிந்துக்கொள்ள முடியாத மணிரத்னம் படங்களில் இதுவும் ஒன்று. எனக்கு புரிந்துக்கொள்ளும் ஞானம் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

19. இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் நல்லதொரு நகைச்சுவை திரைப்படம். எனினும் அதிகம் பரிட்சயமில்லாத கவ்பாய் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

18. மதராசப்பட்டினம் தமிழில் ஒரு டைட்டானிக். அதற்காக டைட்டானிக்கையே உல்டா பண்ணி எடுத்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

17. வ குவாட்டர் கட்டிங் மரணமொக்கை. எனினும் இயக்குனர் இணையின் கிரியேட்டிவிட்டி மற்றும் வசனங்கள் பிடித்திருந்தன.

16. நான் மகான் அல்ல இரண்டாம் பாதியில் காட்டியிருந்த புதுமையை முதல் பாதியில் காட்ட தவறியிருந்தார்கள்.

15. தமிழ் படம் வெள்ளித்திரையில் ஒரு லொள்ளு சபா. தமிழ் சினிமாவால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு இனிப்பு.

14. களவாணி வழமையான கிராமத்து காவியம் எனினும் ஏதோவொன்று படத்தை ரொம்பவே ரசிக்க வைத்தது.

13. வம்சம் சுனைனாவுக்காகவும் இயக்குனரின் கிரியேட்டிவிட்டிக்காகவும் பிடித்திருந்தது. மற்றபடி படத்தில் ஒன்றும் இல்லை.

12. மன்மதன் அம்பு கமலிடம் இருந்து மீண்டுமொரு நகைச்சுவை படைப்பு. இரண்டாம் பாதியில் கிரேசி மோகன் டைப் ஆள் மாறாட்ட காமெடிகள் கலக்கல்.

11. மந்திரப் புன்னகை மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனும் ஆவனது காதலும். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் தத்துவங்கள்.

10. பாஸ் (எ) பாஸ்கரன் மூன்று மணிநேரம் மனதுவிட்டு சிரிக்கவைத்த கமர்ஷியல் படம். வேலை கிடைக்கலைன்னா பொண்ணு கிடைக்காது என்று மெசேஜ் சொன்ன படம்.

9. அசல் படம் என்னவோ மொக்கைதான் என்றாலும் அஜித் ரசிகனாக ரசித்தேன்.

8. மைனா ஒரு கிராமத்து பயணக்காதல். தம்பி ராமையாவின் நடிப்பு பிடித்திருந்தது. அமலா பால் மனதை அள்ளிச் சென்றார்.

7. பையா வழமையான கமர்ஷியல் சினிமா எனினும் காதலியோடு தனியாக ஒரு டூர் போய்வந்தது போல ஒரு உன்னத அனுபாவம்.

6. அங்காடித் தெரு டி.நகர் ரெங்கநாதன் தெருவின் மறுப்பக்கத்தையும் முதலாளிகள் செய்யும் அநியாயங்களையும் வெளிச்சம் போட்டு காட்டிய கம்யூனிச திரைப்படம் கூடவே காதலும்.

5. சுறா என்னடா மொக்கை படத்திற்கு ஐந்தாவது இடம் என்று பார்க்கிறீர்களா. நீங்க எல்லாம் தமிழ் படத்தை எப்படி ரசித்தீர்களோ அதுபோல குலுங்கி சிரித்து ரசித்த படம்.

4. எந்திரன் தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல்கல். ஏகப்பட்ட பிரம்மாண்டங்கள். தொழில்நுட்ப அளவில் சிலிர்க்க வைத்த படம்.

3. நந்தலாலா உலகப்பட காப்பி என்பது குறை என்றாலும் தாய்ப்பாசத்தை வலியுறுத்தி என் மணம் கவர்ந்த படம்.

2. விண்ணைத்தாண்டி வருவாயா நெகடிவ் விமர்சனம் எழுதியதற்காக பின்னாளில் வருத்தப்பட்டேன். காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும்.

1. ஆயிரத்தில் ஒருவன் மூன்று மணிநேரத்திற்கு வேறொரு உலகிற்கு சென்று வந்ததுபோல இருந்தது. செல்வாவின் தற்போதைய பெஸ்ட். பீரியட் பிலிம், அட்வென்ச்சர் என்று பார்க்காத பல விஷயங்களை காட்டியது.

டிஸ்கி: வாசகர்கள் சும்மா படிச்சிட்டு போகாம  உங்களோட பார்வையில் குறைந்தபட்சம் TOP 5 சொல்லிவிட்டு சென்றால் விழா களைகட்டும்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 December 2010

கனவுக்கன்னி 2010 – பாகம் 1

முஸ்கி: இது முழுக்க முழுக்க என்னுடைய தனி நபர் ரசனையை வைத்து தயார் செய்யப்பட்ட லிஸ்ட். இது நபருக்கு நபர் மாறுபடலாம்.

மயிரிழையில் லிஸ்டில் இருந்து தவறிப்போன நடிகைகள்: (யாரென்று கண்டுபிடிங்கள் பார்ப்போம்):
-          கலைஞர் வீட்டு மருமகள் என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை
-          சிகரெட் வாசம் விரும்பும் நடிகை

சரி, இப்போ கவுண்டவுனுக்கு போவோமா...

10. தங்கதாரகை தமன்னா
அது எப்படி சுறாவிலும் தில்லாலங்கடியில் லூசுத்தனமாக வந்துப்போன நடிகை பையா படத்தில் மட்டும் அழகாக தெரிந்தார் என்று புரியவில்லை. எல்லாம் இயக்குனர் செய்த மாயமோ. இருப்பினும் மேடமோட சீசன் முடிஞ்சுபோச்சு என்றே எண்ணுகிறேன்.

9. மிஸ் மெட்ராஸ் த்ரிஷா
சிம்ரன், ஜோதிகா போல ஒரு ஆல்-டைம் பேவரிட் நடிகை. ஆடி அடங்கியிருந்தவரை கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வரவைத்திருக்கிறார். சிம்புவுடன் ஜோடி போட்டாலும் கமலுடன் ஜோடி போட்டாலும் பொருத்தமாகவே இருக்கும்.

8. வெளிப்படை + வெகுளித்தனம் அஞ்சலி
தமிழ் சினிமாவில் நடிக்கவும் தெரியும் கவர்ச்சி காட்டவும் தெரியும் என்று சொல்லப்படும் சிற்சில நடிகைகளில் இவரும் ஒருவர். அங்காடித் தெருவில் அலட்டல் இல்லாமல் நடித்தவர் மகிழ்ச்சி படத்தில் குளிர்ச்சி காட்டி நம்மை மகிழ்ச்சி ஆக்கியவர்.

7. சமத்துப் பொண்ணு சமந்தா
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பார்த்தபோதே யார் சார் இந்த பிகரு...? என்று கேட்க வைத்த நடிகை. நடிகையின் முதல் படமான மாஸ்கோவின் காவேரி தாமதமாக வந்து தோல்வியடைந்தது கசப்பு எனினும் அம்மையார் காட்டில் மழை.

6. ஆயிரத்தில் ஒருத்தி ஆண்ட்ரியா
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் ரொம்பவும் வெளிப்படையாக நடித்திருந்தாலும் நம் மணம் கவர்வதென்னவோ அம்மணி ஆண்ட்ரியா தான். அதிலும் உம்மேல ஆசதான்... தண்ணி அடிச்சிட்டு ஆடிய ஆட்டம் தனிச்சிறப்பு.

முதல் ஐந்து இடங்களை பிடித்த அழகிகளை பதிவின் அடுத்த பாகத்தில் பார்ப்போம். யார் அந்த ஐந்து அழகிகள் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.

டிஸ்கி 1: முதலிடம் பிடித்தவரை மட்டும் யாரும் கெஸ் பண்றதுக்கு சான்ஸே இல்லை. அவர் ஒரு அரிய அழகி. (க்ளு: 2009ம் ஆண்டு அறிமுகமாகி 2010ம் ஆண்டில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார்)

டிஸ்கி  2: படங்களை ரைட் க்ளிக்கி தனி விண்டோவில் பார்த்தால் பெரிதாக தெரியும்.

டிஸ்கி  3: முந்தய டிஸ்கியில் டபுள் மீனிங் எதுவுமே இல்லை.

டிஸ்கி 4: நாங்களும் நாலஞ்சு டிஸ்கி போடுவோமில்ல...

Post Comment

27 December 2010

கல்லா கட்டுமா காவலன்

வணக்கம் மக்களே...

நடிகர் விஜய்யை கலாய்த்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் பதிவுலக காமெடிகளும் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் நக்கலை எல்லாம் ஓரம்கட்டிவிட்டி காவலன் படம் வெற்றி பெறுமா என்பது குறித்த ஒரு நடுநிலைப் பார்வை.

முதலில் எப்படியிருக்கிறது பாடல்கள்:
விஜய் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வித்யாசாகர். விஜய்யை பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் இசைகூட சறுக்கிவிட்டது. ஆனால் வித்யாசாகர் இசை சறுக்கியதில்லை.

இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.
-          விண்ணைக் காப்பான் ஒருவன்... பாடலைக் கேட்டவுடனேயே இது ஒப்பனிங் சாங் என்று எளிதாக கூறிவிடலாம். வழக்கமான ஒன்றே தவிர புதுமைகள் ஒன்றுமில்லை.
-          ஐந்தில் என்னுடைய பேவரிட் சட சட... பாடல்தான். வித்தியாசமான டெக்னோ இசை. க்ளப் சாங் போல படமாக்கியிருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.
-          ஸ்டெப் ஸ்டெப்... பாடலில் விதவிதமான ஸ்டெப்களை விஜய்யிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். அவரது நடனத்திறமைக்கு சவால்விடும் பாடல்.
-          யாரது... மற்றும் பட்டாம்பூச்சி... பாடல்கள் டூயட் வகையறா. ஏதோவொரு மலைமுகட்டில் நின்று பாடுவாடு போல என்மனவானில் காட்சி விரிகிறது.

காவலன் படத்தின் கதை:
இந்தப் படம் மலையாள ஹிட் படமான பாடிகார்ட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அந்தப் படத்தை தரவிறக்கி பார்த்தேன். சப் டைட்டில் இல்லாமலே புரிந்தது. அதன் கதை பின்வருமாறு.

ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.

கொஞ்சம் விரிவாகச் சொன்னால்,
ராஜ்கிரண் கட்டப்பஞ்சாயத்து வகையறா ரவுடி கம் தொழிலதிபர். ஆனால் நல்லவர் (!!!). அவரை ரோல்மாடலாக கருதி அடியாளாக இணைகிறார் ஹீரோ விஜய். ராஜ்கிரணின் மகளான அசினை பாதுகாக்கும் பொறுப்பு விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அசினின் தோழியாக இரண்டாம் நாயகி மித்ரா. (தமிழில் சகோதரி என்று நினைக்கிறேன்). அசின் விஜய் மறுபடியும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் ஒரு காதல். ராஜ்கிரண் விஷயம் தெரிந்து சூடானாரா இல்லை காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினாரா, விஜய்யும் அசினும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

பழைய கள்ளுதான் என்பது தெளிவாக தெரிந்தாலும் மலையாளத்தில் இதை ஒரு மெல்லிய காதல் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழில்...?

வித்தியாசமாக இருக்கும் என்று மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் சொல்லக்கூடும். ஆனால் விஜய் வழக்கமான அவரது பார்முலாப்படி திரைக்கதையில் நிறைய மாற்றங்களை புகுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங் செய்துக்கொண்டு வருவார்.

படத்தில் காமெடியனாக வடிவேலு. விஜய் வடிவேலு காம்பினேஷன் நிறைய படங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது எனினும் வில்லு படத்தில் பயங்கர சொதப்பல். சுறா படத்திலும் சுமார் ரகமே. வசீகரா படத்தில் அமைந்தது போல காமெடி காட்சிகள் அமைந்தது என்றால் நிச்சயம் காமெடியில் காவலன் கலக்கும்.

விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் படத்தை பாதிக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அதிலும் விஜய் அம்மா பக்கம் சாய்வது போல இருப்பதால் ஆளும் கட்சி படத்தை முடக்க முயற்சிக்கும். கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை இருட்டடிப்பு செய்வார்கள். அதற்கு பதிலாக ஜெயா டிவி காவலனை விளம்பரப்படுத்தலாம். ஆனால் இப்போ ஜெயா டிவிஎல்லாம் யார் பார்க்கிறார்கள்.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், விஜய் எதிர்ப்பாளர்கள் இவ்வளவையும் மீறி காவலன் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முழுக்க முழுக்க உண்மையான விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது.

நன்றி: http://vijayfans-vinu.blogspot.com/ (படம் குறித்த செய்திகளை திரட்ட உதவியாக இருந்தது)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

டிஸ்கி: விஜய் ரசிகர்களுக்காக தளபதிடா என்ற பெயரில் வலைப்பூ ஒன்றினை நடத்திவரும் திரு.Vinu அவர்கள் காவலன் படத்தின் கதை குறித்து மேலும் சில தகவல்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்திருந்தார். அந்த பின்னூட்டத்தை இந்த இடுகையின் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்.

நண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில்  விஜய் அசினை காதலிக்கவில்லை... இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது... படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும்... ஹார்ட் பிரேக்கிங் ஆக  இருக்கும்... இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்... இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன்...

Post Comment

26 December 2010

மன்மதன் அம்பு – கேள்விக்குறியா..? ஆச்சர்யக்குறியா...?

வணக்கம் மக்களே...

கொஞ்சம் லேட் விமர்சனமே. நேற்றுதான் பார்த்தேன். பாசிடிவ் விமர்சனம் எழுதுவதா...? நெகடிவ் விமர்சனம் எழுதுவதா....? என்று சத்தியமாக தெரியவில்லை. எனவே என் எண்ணத்தை அப்படியே பதிவு செய்கிறேன். அது எப்படிப்பட்ட விமர்சனம் என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

திரைக்கு முன்...
திரையரங்கத்திற்குள் நுழையும்போது சூர்யா பாடல் உட்பட பத்துநிமிட படம் முடிந்திருந்தது. அதைவிட பெரிய காமெடி, திரையரங்கில் வெறும் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா...? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது. மூன்று அரங்கம் கொண்ட அம்பத்தூர் முருகன் காம்ப்லெக்சில் காலை 9 மணிக்காட்சிக்கு சென்றிருந்தோம். நாங்கள் அரங்கம் மாறி அமர்ந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். மொத்தத்தில் அறுநூறு பேர் அமர்ந்து படம் பார்க்கும் இடத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். இடைவேளை கூட விடாமல் தொடர்ச்சியாக ரீல் ஒட்டிவிட்டார்கள். நடுவில் ஒருமுறை மட்டும் சிறுத்தை ட்ரைலர் காண்பிக்கப்பட்டது.

சிறுத்தை முன்னோட்டம்
மறுபடியும் ஒரு போலீஸ் கதை. அண்ணனின் காக்க காக்க, சிங்கம் போன்ற படங்களை எல்லாம் ஒரே படத்தில் தம்பி தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல. அப்படி ஒரு விறைப்பு நம்ம சிறுத்தைகிட்ட. (தேள் எதுவும் கொட்டக்கூடாத இடத்தில் கொட்டிடுச்சு போல). அதுலயும் டபுள் ஆக்ஷன். இன்னொருவர் வழக்கம்போல தமிழ்சினிமாவின் வேலைவெட்டி இல்லாத இளைஞன். தெலுங்கு விக்ரமாற்குடு ரீமேக்காம். வெளங்கிடும்.

சரி இப்போ நம்ம மன்மதன் அம்புவுக்கே போவோம்...

கதைச்சுருக்கம்
ஏற்கனவே பல வலைப்பூக்களில் படித்த அதே வாடிப்போன கதைதான். அதாவது நடிகை நிஷாவும் பிரபல தொழிலதிபர் மதனகோபாலும் காதலிக்கிறாங்க. அவர்கள் காதல், திருமணத்தை நெருங்கும் வேளையில் மதனகோபால் நிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மேஜர் மன்னார் மூலமாக அவரை வேவு பார்க்கிறார். தனது பொருளாதார சூழ்நிலை காரணமாக மேஜர் மன்னார் கொஞ்சம் தகிடுதத்தோம் போட மதனகோபாலும் நடிகை நிஷாவும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

இதில் மேஜர் மன்னார் அவரது மனைவியை விபத்தில் இழந்த கதை, அந்த விபத்துக்கு காரணம் யார், புற்றுநோயால் அவதிப்படும் மேஜர் மன்னாரின் நண்பர், நடிகை நிஷாவின் தோழி தீபாவின் குடும்பம், மதனகோபாலின் அத்தைப்பெண் சுனந்தா என்று சில கிளைக்கதைகள்.

முக்கிய நடிகர்கள்
- மேஜர் மன்னார் கதாப்பாத்திரத்தில் கமல். வழக்கமான கமல் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் கமலின் டாமினேஷன் ரொம்பவும் குறைவே. அடக்கி வாசித்திருக்கிறார். கமல் அறிமுகமாகும் காட்சி தவிர்த்து சண்டைக்காட்சி என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. தகிடுதத்தோம் பாடலில் கமல் போட்டது ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றாலும் அது கமல் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது.

- அம்புட்டு அழகு அம்புஜாஸ்ரீ (எ) நடிகை நிஷாவாக த்ரிஷா. ரொம்ப நல்லவங்க. தமிழில் கவிதைகள் எழுதும் தமிழ் நடிகை என்று சொல்லி நம்மை ஏமாற்ற முயல்கிறார். மேலும் சினிமா நடிகைகள் எல்லாம் இவ்வளவு நல்லவங்களா என்று யோசிக்க வைக்கும் ஒரு பாத்திர படைப்பு.

- தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். ஹீரோ போல அறிமுகமாகி, பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை போல தடம் மாறி, வில்லனாக உருவெடுத்து இறுதியில் ஒரு இரண்டாம் நாயகனாக முடிக்கிறார். பாதி படத்தில் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே வளம் வருகிறார். போதையில் இருப்பவர்களின் பேச்சுமுறை மற்றும் பாடி லாங்குவேஜ் காட்டுவதில் கலக்கியிருக்கிறார்.

மற்றும் பலர்
-          சங்கீதா. கமலுக்கு அடுத்து படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று குறிப்பிடலாம். ஆரம்பத்தில் லோலாயி போல அறிமுகமாகி போகப்போக நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
-          இந்த வரிகளை எழுதுவதற்கே வேதனையாக இருக்கிறது. ஊர்வசி ரமேஷ் அரவிந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்படியே என் அம்மா அப்பாவை நினைவுப்படுத்தி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்கலங்க வைத்தது. அதிலும் ஹீமொதேரபி, ரேடியேஷன் போன்ற வார்த்தைகள் என்னை பாடாய்ப்படுத்தியது.
-          அடப்பாவிகளா ஒரு அழகு ஓவியத்தையே வீணடித்திருக்கிறார்கள். நம்ம களவாணிப்பொண்ணு ஓவியா இரண்டே இரண்டு காட்சிகளில் தலை காட்டி இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் வந்துபோனா தமிழ் சினிமாவில் துண்டு போட முடியாது அம்மணி.
-          குருப் என்ற கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. கொச்சின் ஹனீபா இருந்திருந்தால் இந்த கேரக்டரை அல்வா மாதிரி தூக்கி சாப்பிட்டிருப்பார். இப்போது நடித்திருக்கும் குஞ்சன் என்ற நடிகரின் நடிப்பும் ஹனீபாவையே நினைவூட்டுகிறது.
-          பிரெஞ்சு நடிகை கரோலின் கமலின் மனைவியாக ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுகிறார். வித்தியாசமான ஒரு பாத்திரத்தில் பாடகி உஷா உதுப்.
-          சூர்யா ஒரே ஒரு பாடலில் நடிகர் சூர்யாவாகவே வருகிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் ஆளுக்கொரு காட்சியில் தலை காட்டுகிறார்கள்.

பிண்ணனி தொழில்நுட்பங்கள்
-          இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தெரியவே இல்லை சில காட்சிகளை தவிர்த்து. பல காட்சிகள் கமல் படம் என்று சொல்லும் அளவிலேயே இருக்கிறது.
-          தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நீலவானம் பாடல் இனிமை. தகிடுதத்தோம் பாடல் முன்னர் குறிப்பிட்டது போல நம்மையும் தகிடுதத்தோம் போட வைக்கிறது.
-          வசனங்கள் கலக்கல். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் வசனங்களை எல்லாம் பலமுறை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்க வேண்டுமென தோன்றுகிறது.
-          பாரிஸ், பார்சிலோனா, ரோம், வெனிஸ் என்று ஐரோப்ப நாடுகளை சுற்றிக்காட்டியிருக்கிறது மனுஷ் நந்தனின் கேமரா. கப்பல் காட்சிகளும், நீல வானம் பாடலமைப்பும் சபாஷ்.

படம் சொல்லும் கருத்துக்கள்:
கொஞ்சம் சீரியஸ்:
-          வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பது. வீரத்தின் உச்சக்கட்டம் மன்னிப்பு கேட்பது.

கொஞ்சம் சிரிப்பு:
-          சிட்டி பொண்ணுங்களை சைட் அடிங்க. வில்லேஜ் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணுங்க.

பஞ்ச் டயலாக்:
-          பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.

ரசிகனின் தீர்ப்பு:
கமலின் முழுநீள நகைச்சுவைப்படங்கள் பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களுடன் ஒப்பிடும்போது மன்மதன் அம்பு கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. மாறாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தோடு ஒப்பிட்டால் தேவலை. முதல்பாதி நிறைய செண்டிமெண்டாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவை கொட்டிக்கிடக்கிறது.

கமல் ரசிகன் என்ற முறையில் பார்த்தால் ரசிக்கலாம். மற்றபடி சந்தேகம்தான்.

மன்மதன் அம்பு குறி தவறிவிட்டது
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 December 2010

34வது சென்னை புத்தகக் காட்சி 2011

வணக்கம் மக்களே...

வாசிப்பனுபவம் வாய்த்த சென்னைவாசிகளுக்கு வருடம்தோறும் திருவிழாவாக வந்து மகிழ்ச்சி தரும் புத்தக்காட்சி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

இடம்:  புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி, (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), சென்னை 600030.
தேதி:   04-01-2011 முதல் 17-01-2011 வரை
நேரம்:  மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை (வார நாட்கள்)
        காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை (விடுமுறை நாட்கள்)

-          அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும். அது நமக்கு ஒரு பொருட்டில்லை எனினும் புதியவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அமையட்டும்.
-          சுமார் 650 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
-          இங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மற்றும் இன்னபிற மொழி புத்தகங்களும் கிடைக்கும்.
-          சமய புத்தகங்களில் இருந்து சமையல் புத்தகங்கள் வரை எல்லா வகையறா புத்தகங்களும் கிடைக்கும்.
-          இது தவிர்த்து தினந்தோறும் தமிழறிஞர்களின் சொற்பொழிவு நடைபெறும். அதன் அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு: http://bapasi.com/

புத்தக சந்தை குறித்த எனது அனுபவத்துளிகள் சில:
- இது எத்தனையாவது வருடம் என்று சரிவர நினைவுக்கூர முடியவில்லை. ஆனால் புத்தக சந்தை காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்றுவந்த காலம்தொட்டே சென்றுவருகிறேன். அப்பொழுதெல்லாம் ஸ்டால்கள் தமிழக தெருக்களை போல கோணல் மாணலாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இப்போது நடைபெறவிருக்கும் இடத்தில் ஸ்டால்கள் பாண்டிச்சேரி தெருக்களை போல நேராகவும் சீராகவும் இருக்குமென்பது தனிச்சிறப்பு.

- ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை பார்வையிட ஒரு முறை புத்தகங்களை வாங்குவதற்கு ஒரு முறை என்றும் இரண்டுமுறை செல்வேன். இந்தமுறை நான் ஆணிபுடுங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புத்தக சந்தை பத்து நிமிட பயணமே என்பதால் தினமும் கூட செல்லலாம்.

- வருடாவருடம் வாசிப்பனுபவம் வாய்க்காத அதே சமயம் ஆர்வமுள்ள நண்பர்கள் ஒருவருக்காவது புத்தக சந்தையை அறிமுகப்படுத்துவேன். மேலும் அவர்களுக்கு என் சாய்ஸில் ஏதாவதொரு புத்தகத்தை பரிசளிப்பேன். இந்தமுறை யாரை அழைத்துச் செல்வதென்று இதுவரை முடிவு செய்யவில்லை.

- சிற்றிதழ்களை வாங்குவதில் எனக்கு ஒரு அலாதிப்பிரியம் உண்டு. வருடாவருடம் உயிர்மை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களை தேடித் தேடி வாங்குவேன். இந்த முறை வழமையை விட அதிக அளவில் புத்தகங்கள் வாங்க விருப்பம்.

- கிழக்கு பதிப்பகம், விகடன் பப்ளிகேஷன்ஸ், நக்கீரன் பதிப்பகம் போன்ற கடைகளுக்குள் நுழைந்தால் வெளியே வருவதற்கே மனமிருக்காது. அவர்களும் அதற்கு தகுந்தபடி நான்கு ஸ்டால்களை ஒன்றாக இணைத்து ப்ரைம் ஸ்டால் போட்டு நம்மை மகிழ்விப்பார்கள்.

- சென்ற ஆண்டு புத்தக சந்தைக்கு சென்றபோதே வலைப்பூ வைத்திருந்தேன் என்றாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்த பின்பு காணும் முதல் புத்தக சந்தை இதுதான். எனவே எனது புத்தக தேடல் நிச்சயம் இந்தமுறை புது வகையில் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

- பார்வையாளன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், அஞ்சாசிங்கம் மண்டையன் என்று நிறைய பேரிடம் புத்தக சந்தைக்கு உடன் வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். மேலும் அந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.

- என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது. அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

டிஸ்கி: பதிவை படித்துவிட்டு ஓட்டு போட்டு கருத்து தெரிவிக்கும் வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment