15 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 15052017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

மாநகரம் படம் வெளிவந்தபோது அதனை பார்த்துவிட்டு நீளமானதொரு கட்டுரை எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். சோம்பல் காரணமாக அந்த எண்ணத்தை கைவிடும்படி ஆனது. மேலும் நான் எழுத நினைத்த கட்டுரைக்கு மனதிற்குள் ஒரு டீஸர் ஓட்டிப்பார்த்தபோது, ஒரு சினிமாவிற்காக எதற்காக இவ்வளவு உக்கிரமாக பொங்கல் வைக்க வேண்டும் என்று சலிப்பாக இருந்ததால் போய்த் தொலையட்டும் என்று விட்டுவிட்டேன். தற்சமயம் இரண்டாவது முறையாக மாநகரம் பார்த்தேன். ஏன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தமிழ் ராக்கர்ஸில் மாநகரம் வெளியாகியிருக்கிறது. நீளமான கட்டுரையெல்லாம் எழுதப் போவதில்லை என்றாலும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிட வேண்டுமென உறுத்திக்கொண்டே இருக்கிறது. 

முதல் விஷயம், மாநகரம் படத்தில் நான் புரிந்துக்கொண்ட மையப்பொருள் என்னவென்றால் சென்னை நகரத்தின் மீது வந்தேறிகளுக்கு ஒரு கெட்ட அபிப்ராயம் இருக்கிறது. அது ஓரளவிற்கு உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சென்னையையும் பழிக்கக்கூடாதென்றும், தனிப்பட்ட முறையில் சென்னைவாசிகள் தங்கள் கண்ணெதிரே நடைபெறும் அநியாயங்களை தட்டிக்கேட்கத் துவங்கினால் இந்நகர் மீதான களங்கத்தை துடைத்தெறியலாம் என்பதுதான் அது. அதன்படி கதையில் சில கெட்டவர்களும், சில நல்லவர்களும் வருகிறார்கள். இதிலே எல்லாம் சரியாகப் போகும் வேளையில், சென்னையை நாசமாக்கிக்கொண்டிருக்கும் P.K.பாண்டியன் என்கிற பொறுக்கியை ஏதோ தியாகி போல காட்டுவது நெருடலாக இருக்கிறது.

இரண்டாவது விஷயம், படத்தின் ஒரு காட்சியில் ஸ்ரீ ஓத்தான்னா என்னன்னு தெரியுமா சார்ன்னு கேட்டு அந்த வார்த்தையில் உள்ள ஆபாசத்தை சொல்லி பொருமுகிறார். உண்மையில் சென்னையில் அந்த வார்த்தையை உபயோகிக்கும் முக்கால்வாசி பேர் அதன் அர்த்தத்தை உணர்ந்து, நேரடியாக அந்த வார்த்தையில் உள்ள ஆபாசத்தை யார் மீதும் வீசுவதில்லை. ஓத்தா என்பது ஒரு உணர்வு. ஓத்தா என்ற வார்த்தையின் அர்த்தம் ஓத்தா கிடையாது. அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய ஒரு வார்த்தை. ஆங்கிலத்தில் உள்ள Fuck என்கிற வார்த்தையைப் பற்றி ஓஷோ என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட ஆங்கில ஃபக்குக்கு இணையான வார்த்தைதான் ஓத்தா. Life fucks everyone என்கிற வாசகத்துக்கு வாழ்க்கை எல்லோருடனும் செக்ஸ் வைத்துக்கொள்கிறது என்று அர்த்தமில்லை. கூடவே, ஏதோ இந்தமாதிரி தாயைப் பழிக்கும் அர்த்தம் வரக்கூடிய வார்த்தைகள் சென்னையில் மட்டும்தான் புழங்குகிறது என்ற தொனியில் பேசுவது அயோக்கியத்தனம். எனக்குத் தெரிந்த சில தென் மாவட்டத்து ஆசாமிகள் துவங்கும்போதே கிறுக்குக்கூதி மவனே என்றுதான் துவங்குவார்கள். புண்டா மவனே, ஒக்காள ஓழி, கண்டார ஓழி போன்ற வார்த்தைகளை எல்லாம் சென்னைவாசிகள் பயன்படுத்துவதில்லை.

நம்முடைய சமூகத்தில் சில விஷயங்களை விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாது, கேட்டால் உடனே கிட்னா தான். எனக்கு NGOக்கள் மீதும் அவர்களுடைய சில செயல்பாடுகள் மீதும் எப்போதும் ஒரு சந்தேகக்கண் இருக்கிறது. என்னுடைய சந்தேகத்தில் எந்த விதண்டாவாதமோ, நக்கலோ, நெகடிவ் ஆட்டிடியூடோ கிடையாது. நிஜமாகவே தெரியாமல்தான் கேட்கிறேன். NGO ஆட்கள் திடீரென மெரினாவிலோ, பெசன்ட் நகர் பீச்சிலோ இறங்கி நாள் முழுக்க உழைத்து குப்பைகளை அகற்றுகிறார்கள். மறுநாள் விடிந்ததும் வழக்கம்போல ஜனத்திரள் வந்து அவ்விடத்தை குப்பையாக்குகிறது. இதனால் என்ன பயன். மாறாக நிறைய பேரின் ஒருநாள் உழைப்பும் விரயமாகிறது இல்லையா ? இன்னொரு விஷயம், புற்றுநோயாளிகளுக்காக அழகான யுவதிகள் தங்கள் தலைமுடியை யாசகம் தருவது. எவ்வளவு யோசித்தாலும் என் மூளைக்கு எட்டாத விஷயம் இது. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டது ? ‘விக்’ என்று சொல்லப்படும் அந்த தலைமுடியை செயற்கையாக உற்பத்தி செய்துகொள்ள முடியாதா ? அப்படியெல்லாம் செய்ய முடியாது என்றால் திருப்பதியில், பழனியில், வேளாங்கன்னியில் காணிக்கை செலுத்தும் தலைமுடியெல்லாம் எங்கே தான் போகிறது. அவற்றைக் கொண்டு இந்த சேவையை செய்ய முடியாதா ? எதற்காக யுவதிகள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டும். யுவதிகள் காணிக்கை செலுத்தும் இந்த தலைமுடி, நிஜமாகவே ஒரு புற்றுநோயாளிக்கு இலவசமாக சென்று சேர்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் யாரேனும் விளக்கிச் சொன்னால் புரிந்துக்கொள்வேன். அதுவரையில் NGO என்பதை மூன்று ஆங்கில எழுத்துகளாக பிரித்துப் படிக்காமல் ஒரே வார்த்தையாக படித்துக்கொள்கிறேன்.

நீருக்கடியில் சில குரல்கள் படித்தேன். பிரபு காளிதாஸின் முதல் நாவல் (இரண்டாவது புத்தகம்). இன்னதென்று வகைப்படுத்த முடியாத அவருடைய முதல் புத்தகத்தை படித்துவிட்டு நானெல்லாம் கமுக்கமாக இருந்துக்கொண்டேன். ஏனென்றால் சாரு பள்ளி மாணவர்கள் எல்லாம் ஒருமாதிரி உக்கிரமானவர்கள், அவர்களைச் சுற்றி ஒரு பதினோரு பேர் கொண்ட துதி பாடும் குழு எப்போதுமிருக்கும். நாம் தப்பித் தவறி ஏதாவது மாற்றுக்கருத்து சொல்லிவிட்டால் ங்கோத்தா, ங்கொம்மா தான். பயம் என்று நினைத்துவிடாதீர்கள். இவர்களிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் பிடிக்கலன்னா போ என்று அன்ஃப்ரென்ட் / ப்ளாக் செய்வது. என்னைப் பொறுத்தவரையில் அன்ஃப்ரென்ட் / ப்ளாக் கொயந்தத்தனமான செயல். இவர்கள் அன்ஃப்ரென்ட் செய்துவிட்டால் நமக்கு ஒரு பொழுதுபோக்கு பறிபோகும் இல்லையா. அதனாலேயே பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொள்வேன். உண்மையில் சாருவின் பள்ளி மாணவர்கள் எழுதும் கமிங் ஆஃப் ஏஜ் வகையறா படைப்புகளை வாசிப்பது என்பது உவப்பான விஷயம்தான். ஆனால் அதில் சாரு எழுதும் முன்னுரையும், பின்னட்டை வாசகங்களும் தான் நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தித் தொலையும். சாரு முன்னுரையில் சடாரென வாய்க்குள் நுழையாத ஒரு லத்தீன் அமெரிக்க எழுத்தாளரின் பெயரை எடுத்துவிட்டு அவருக்கு அப்புறம் இவர்தான் என்பார். பின்னட்டை வாசகங்களோ கட்டமைக்கிற சட்டகங்கள், மீறல்கள், பிறழ்வுகள், ரகசிய நீரோட்டங்கள், சமூகத்தின் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயங்களுக்குப் புறம்பானவை, இருளடர்ந்த மனவெளி என்றெல்லாம் பயம் காட்டுகின்றன. உள்ளே இருப்பதென்னவோ லோக்கல் டாஸ்மாக் சரக்குதான். 

இது உண்மையில் இரண்டு குறுநாவல்கள். அல்லது இரண்டு சிறுகதைகளின் விஸ்தரிக்கப்பட்ட வடிவம். சுந்தர் என்கிற சிறுவனையும், கதிரவன் என்கிற இளைஞனையும் பற்றி தனித்தனியாக எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் நாவலின் ஒற்றைப்படை அத்தியாயங்களையும், இரட்டைப்படை அத்தியாயங்களையும் தனித்தனியாக வாசித்துப் பார்க்கலாம். அப்புறம், நாவலில் வரும் பெண்கள் எல்லாம் யாருடனாவது ஓடிப்போகிறார்கள், யாருடனாவது கள்ள உறவு வைத்துக்கொள்கிறார்கள். முலை, யோனி, குறி என்றெல்லாம் எழுதி கவிதை சமைப்பது போல, பலான காட்சிகள் நிறைய இணைத்தால் நாவலுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடும் என்று யாரோ எழுத்தாளரை நம்ப வைத்திருக்கிறார்கள். நாவலுக்கிடையே ‘குறைந்த ஒளியில்’ என்கிற வார்த்தை மூன்றுமுறை வருகிறது. ஏதேச்சையாகக் கூட இருக்கலாம். முதல் புத்தகத்துடன் ஒப்பிட்டால் அபார முன்னேற்றம். நாவல் என்ற வடிவத்தின் பெயரைக் கெடுக்காமல் 120 பக்கங்களை நிரப்பியிருப்பதே வெற்றியின் முதல் படி ! ஜால்ரா ஆசாமிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, விமர்சனங்களுக்கு செவி சாய்த்தால் எழுத்தாளர் உயரங்களைத் தொடுவார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

ராஜி said...

புத்தக விமர்சனமா?! ரைட்டு

Anonymous said...

திருப்பதியில், பழனியில், வேளாங்கன்னியில் காணிக்கை செலுத்தும் தலைமுடியெல்லாம் எங்கே தான் போகிறது. அவற்றைக் கொண்டு இந்த சேவையை செய்ய முடியாதா ?
https://qz.com/323006/keep-your-hair-on-africa-has-a-billion-dollar-business-for-indian-beauty-firms/
:-)