10 November 2010

கனவுதுரத்தி குறிப்புகள் - பதிவுலகில் புதுமுயற்சி

வணக்கம் மக்களே...

பதிவுலகில் இதுவரை யாரும் முயற்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சிலருக்கு பிடிக்கலாம் மற்றவர்கள் முட்டாள்தனமாக நினைக்கலாம். எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன். ஆனால் எல்லாக் கனவுகளையும் இதுபோல எழுத முடிவதில்லை. பெரும்பாலான கனவுகள் எழுந்து நோட்டு பேனாவை எடுப்பதற்குள் மறந்துவிடுகின்றன. பெரும்பலான கனவுகளை நோட்டில் எல்லாம் எழுதி வைக்க முடிவதில்லை. மேற்கண்ட இரண்டு தடைகளையும் தகர்த்து எறிந்த கனவு ஒன்றினை இந்தப் பதிவில் புனைவுகள் ஏதுமின்றி கண்டதை கண்டபடி எழுதுகிறேன். பிடித்திருந்தால் தொடர்ந்து இதுபோல பல விசித்திர கனவுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

கனவு கண்ட தேதி: ஜூலை 4, 2010
கனவு கண்ட நேரம்: காலை 10.30 (!!!)

நேற்றிரவு நைட் ஷிப்ட் செய்துவிட்டு வந்து படுத்தபோது கண்களுக்குள் நுழைந்த சின்னஞ்சிறிய கனவு. ஆனாலும் ரொம்ப பவர்புல்லான கனவு. கெட்ட கனவாகவே இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஷங்கர் படம் போல மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.


கனவில், மணி அப்போது தோராயமாக இரவு 8 இருக்கும். ஒரு வயல்வெளி போன்ற நிலத்தில் நானும் என் தங்கையும் கைகளை கோர்த்தபடி நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னும் பின்னும் சில மனிதர்கள் தென்பட்டனர். அப்போது ஒரு மிகப்பெரிய ஜெட் விமானம் அபரிமிதமான நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பல்டியடிப்பதும் செங்குத்தாக பரப்பதுமாக பல சாகசங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தது. அது சக்திமான் தொடரில் காட்டப்படும் வேற்றுக்கிரக மனிதர்களின் விண்கலம் போல இருந்தது என்றும் சொல்லலாம். அது தரைமட்டத்திற்கு மிகவும் அருகில், அதே சமயம் எங்கள் தலைக்கு நேரே அல்லாமல் சில கிலோமீட்டர்கள் தள்ளியே பறந்தது. திடீரென அந்த ஜெட் விமானம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுவது போல தெரிந்தது. நாங்கள் சற்று தொலைவில் இருந்தாலும் அவ்வளவு பெரிய விண்கலம் விழுந்தால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிந்தது. பேரழிவு வரப்போகிறது என்று உணர்ந்த போதிலும் என் மனம் அந்த பிரம்மாண்டமான காட்சியை ரசித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் எப்படியாவது தங்கையை மட்டும் காப்பாற்றி விட வேண்டுமென துடித்தேன். அந்த வயல்வெளியில் ஓடினாலும் பயனில்லை என்ற காரணத்தினால் நாங்கள் அசையாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தோம். சில நொடிகளில் பலமான சத்தத்தோடு அந்த விண்கலம் தரையில் விழுந்து அதன் சுற்றுவட்டாரத்தை நாசமாக்கியது. நல்லவேளையாக அதன் தாக்கம் எங்களை நெருங்கவில்லை. கீழே விழுந்த விண்கலம் அத்தோடு நில்லாமல் பூமியில் இருந்த கார், பஸ், லாரி போன்ற வாகனங்களை எல்லாம் தூக்கி வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் போல ஏதோ வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்படியே வயல்வெளியில் அண்ணாந்து படுத்துக்கொண்டு வானத்தில் நடக்கும் வேடிக்கைகளை ரசிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்குள்ளாக கனவு கலைந்துவிட்டது.

இந்தப் பதிவிற்கு நீங்கள் பெரும் வரவேற்பை கொடுப்பீர்கள் என்ற...
கனவுகளுடன்,
N.R.PRABHAKARAN

 பி.கு: நண்பர் எஸ்.கே எனது இந்தக் கனவிற்கு பின்னூட்டம் மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் கொடுத்துள்ள விளக்கம் ஏறத்தாழ நூறு சதவிகிதம் சரியாக இருப்பதால் அவரது விளக்கத்தை இந்த இடுகையில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...

பிற்சேர்க்கை:
எஸ்.கே:
நண்பரே...!
எனக்கு தெரிந்தவரை உங்கள் கனவை விளக்குகிறேன்...

வயல்வெளி பாதுகாப்பான / வசதியான இடத்தை குறிக்கிறது.
ஜெட் / விண்கலம் நீங்கள் தனியாக செயல்பட விரும்புவதை குறிக்கிறது. புதிய வழிகளில் நீங்கள் செயல்பட விரும்புவதை குறிக்கிறது. ஆனால் அது விபத்துக்குள்ளாகிறது. அப்படியானால் நீங்கள் தனியாக செயல்பட சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலும் அதனால் பிரச்சினைகள் உண்டாகிறது. அல்லது இது உங்கள் வாழ்வில் உங்களை சார்ந்தவர்களின் வாழ்வில் எதிர்மறையான மாற்றங்களை குறிக்கிறது. ஆனால் நீங்கள் விபத்தை ரசிக்கிறீர்கள். உள்மனது பிரச்சினைகளானாலும் பரவாயில்லை எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதில் விபத்து நிகழ்கிறது. மேலும் உடன் பிறந்தவரை காப்பாற்ற விரும்புகிறீர்கள். மரணம் மீதுள்ள பயம் மற்றும் உடன்பிறந்தவர் மீதுள்ள அக்கறையை குறிக்கிறது.

உங்கள் வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் / முடிவுகள் குறித்து யோசியுங்கள். மேலும் உடன்பிறந்தவர்களிடன் அன்போடு இருங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும். இக்கனவு / இதைப் போன்ற கனவு மீண்டும் வந்தால் தெரிவிக்கவும்.

Post Comment

53 comments:

எல் கே said...

வித்யாசமான கனவுதான்.. புது முயற்சி.. தொடர்ந்து எழுதவும்

Philosophy Prabhakaran said...

@ LK
நேரமே வந்து பின்னூட்டம் இட்டதற்கும் கையோடு எனது வலைப்பூவை பின்தொடர ஆரம்பித்ததற்கும் நன்றிகள்... அடிக்கடி வந்து போங்க...

Unknown said...

கனவு கனவாக இருக்கும் வரை நல்லது நண்பரே.

நம்மாளுங்க சொல்வாங்க விடிகாலையில கண்ட கனவு பலிக்கும்னு
சொல்லிபுட்டேன்.

நன்றி
தொடரட்டும் உங்கள் கனவுப்பாதை.

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
நீங்க வேற... நான் இந்த மாதிரி கனவெல்லாம் பலிக்காதான்னு ஏங்கிட்டு இருக்கேன்... UFO, பறக்கும்தட்டு, வேற்றுகிரக மனிதர்கள் இதப் பற்றியெல்லாம் படிப்பதில் ரொம்ப காலமாகவே எனக்கு அதீத ஆர்வம் உண்டு...

ரஹீம் கஸ்ஸாலி said...

நீங்கள் மென்மேலும் பல கனவுகளை கண்டு அதை எங்களோடு பகிர்ந்துகொள்ள வாழ்த்துகிறேன்.

அன்பரசன் said...

//தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன்.//

வித்தியாசமா இருக்கே.

எப்பூடி.. said...

நீங்க நைட் சிப்ட் முடிச்சிட்டு வந்து படுத்தீங்களா? இல்லை ஹோலிவூட் படம் ஏதாச்சும் பாத்திட்டு வந்து படுத்தீங்களா? :-)

//கனவு கண்ட தேதி: ஜூலை 4, 2010
கனவு கண்ட நேரம்: காலை 10.30 (!!!)//

ஒ நீங்க ரமணா பாட்டியா :-)

சிவராம்குமார் said...

இது கனவா இல்லை ஏதாவது ஹாலிவூட் படமாஆ!!!

aavee said...

வித்தியாசமான முயற்சி!! தொடர்ந்து எழுதுங்கள்!!

கேரளாக்காரன் said...

ethavathu nalla pei kanavu kanda sollirunga sir enakku romba interest

Unknown said...

எனக்கு இந்த மாதிரி கனவு எல்லாம் வரும் ஆனா இந்த அளவுக்கு காட்சி படுத்தமுடியுமானு தெரியல .இனி கனவு வேட்டை தொடரட்டும் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

நல்ல முயற்சி... தொடருங்கள்....

மேலும் நீங்கள் எஸ் கே வின் வலைப்பூவை படிப்பது நலம்... கனவுகள் பற்றி ஒரு தொடரே எழுதி வருகிறார்....

http://manamplus.blogspot.com

அவரை உங்கள் தளத்திற்கு அனுப்பி வைக்கிறேன்

எஸ்.கே said...

நண்பரே!
எனக்கு தெரிந்தவரை உங்கள் கனவை விளக்குகிறேன்.

வயல்வெளி பாதுகாப்பான/வசதியான இடத்தை குறிக்கிறது.

ஜெட்/விண்கலம் நீங்கள் தனியாக செயல்பட விரும்புவதை குறிக்கிறது. புதிய வழிகளில் நீங்கள் செயல்பட விரும்புவதை குறிக்கிறது. ஆனால் அது விபத்துக்குள்ளாகிறது. அப்படியானல் நீங்கள் தனியாக செயல்பட சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலும் அதனால் பிரச்சினைகள் உண்டாகிறது. அல்லது இது உங்கள் வாழ்வில் உங்களை சார்ந்தவர்களின் வாழ்வில் எதிர்மறையான மாற்றங்களை குறிக்கிறது. ஆனால் நீங்கள் விபத்தை ரசிக்கிறீர்கள். உள்மனது பிரச்சினைகளானும் பரவாயில்லை எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதில் விபத்து நிகழ்கிறது. மேலும் உடன் பிறந்தவரை காப்பற்ற விரும்புகிறீர்கள். மரணம் மீதுள்ள பயம் மற்றும் உடன்பிறந்தவர் மீதுள்ள அக்கறையை குறிக்கிறது.

உங்கள் வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்/முடிவுகள் குறித்து யோசியுங்கள். மேலும் உடன்பிறந்தவர்களிடன் அன்போடு இருங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும். இக்கனவு/இதைப் போன்ற கனவு மீண்டும் வந்தால் தெரிவிக்கவும்.

'பரிவை' சே.குமார் said...

கனவு நல்லாத்தானிருக்கு....

தொடரலாம்... தொடரலாம்...
எப்படியெல்லாம் கல்லாக் கட்டுறாங்க பாரு..!

pichaikaaran said...

பெரும்”பலான” கனவுகளை நோட்டில் எல்லாம் எழுதி வைக்க முடிவதில்லை"

பரவாயில்லை... வலை பதிவில் எழுதுங்க... அதுக்குத்தானே பதிவுலகம் இருக்கு !!

Unknown said...

offz-la velaya paakama ethavathu hollywood movie pathutu vanthu paduthingala?? :P

Chitra said...

பெரும் வரவேற்பு!!!!!

Ram said...

சிறந்த முயற்சி.. வாழ்த்துக்கள்.!!!
இது போன்று இல்லாமல் சுவாரஸ்யமான அடுத்து என்ன நடக்க போகும் என்னும் த்ரில்லர் படம் போன்ற கனவுகள் இருந்தால் நன்றாக இருக்கும்..
இதை நானும் தொடரலாம் என இருக்கிறேன்..
என்ன சொல்லுகிறீர்கள்.???

Prasanna said...

நல்லா தான் இருக்குல்ல :) சில கண்டுபிடிப்புகளுக்கு கூட கனவுதான் காரணம்..

அலைகள் பாலா said...

enakku oru kanavu adikkadi vanthukitte irukku. yaaraavathu meaning sollunga

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
கண்டிப்பா ஜி... பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது... அதனால் இனி எந்த கனவு வந்தாலும் பகிர்ந்துக்கொள்கிறேன், பகிர்ந்து கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன்
ம்ம்ம் வித்தியாசம் தான் நண்பரே... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... தூக்கம் தெளிந்தவுடன் படித்துப் பார்த்தால் காமெடியாக இருக்கும்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
விஜயகாந்த் நடத்தி வரும் கல்லூரியில் படித்ததால் அதுபோன்ற தாக்கங்கள் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ சிவா, ஜெ.ஜெ
கனவேதான்... நான் ஹாலிவுட் படங்களெல்லாம் அதிகமாக பார்ப்பது கிடையாது...

Philosophy Prabhakaran said...

@ கோவை ஆவி
என்னது கோவை ஆவியா... ஹேய் ஒன் ஸ்டேப் பேக்... கனவுல எல்லாம் வந்துடாதீங்க பாஸ்...

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
கண்டிப்பா சார்... அந்த மாதிரி கனவுகளும் அடிக்கடி வந்துபோகும்... அடுத்த முறை கண்டிப்பா எழுதிடறேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
அது கொஞ்சம் கஷ்டம் தான்... கனவு கலைந்ததும் துளியும் தாமதப்படுத்தாமல் பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்து விட வேண்டும்... முடிந்தால் தூங்கும் பொது பக்கத்திலேயே பேப்பரையும் பேனாவையும் வைத்துக்கொண்டு தூங்கவும்...

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
நானும் நண்பர் எஸ்.கேவின் பதிவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்... ஆனால் பல பாகங்களாக எழுதி வருவதால் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை... இனி படிக்க முயல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
ஆச்சர்யமாக இருக்கிறது... நீங்கள் சொல்வதெல்லாம் ஏறத்தாழ நூறு சதவிதம் உண்மை... குறிப்பாக நான் தனித்து செயல்பட விரும்புவதையும் சமீபகாலமாக சொந்த வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களால் அதுபோல செயல்பட முடியாததையும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்... நீங்கள் சொன்னதுபோலவே பிரச்சனைகள் வந்தாலும் பரவாயில்லை ஆனால் தனித்து செயல்பட விரும்புகிறேன்... சூப்பர்... எப்படி இதுபோல கனவுகளுக்கு பலன்கள் சொல்ல முடிகிறது...

இனி எந்த கனவு வந்தாலும் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன்...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
முதல்முறையாக எனது பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... மிக்க நன்றி...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
எதுக்கு பாஸ்... நான் 18+ ன்னு எதையாவது எழுதி ஒட்டுமொத்த பதிவுலகமும் கூடி கும்மியடிக்கவா பாஸ்...

Philosophy Prabhakaran said...

@ Chitra
அப்படின்னா இனி பல பகுதிகளாக இந்தக் பதிவு தொடரும்...

Philosophy Prabhakaran said...

@ இராமநாதன்
ம்ம்ம்... அரைகுறையாக இருக்கும் எனது இந்தக் கனவை தொடர்ந்து ஒரு கதையாக எழுத விரும்புகிறீர்கள்... கண்டிப்பாக எழுதுங்கள்... உங்களது அந்த த்ரில்லர் கதையை எனக்கு இப்பவே படிக்கணும் போல இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ Prasanna
கேள்விப்பட்டிருக்கேன்... நாமளும் கண்டுபிடிப்போம்...

Philosophy Prabhakaran said...

@ அலைகள் பாலா
நீங்களும் எழுதுங்கள் நிச்சயம் நண்பர் எஸ்.கே. பதிலளிப்பார்...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
நீங்கள் கொடுத்துள்ள விளக்கத்தை எனது இந்த இடுகையில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்... நன்றி...

எஸ்.கே said...

கனவு பலன் என்பது ஜோசியம் போன்றதல்ல. எல்லாம் உளவியல்தான். நான் உளவியல் படித்திருந்தாலும் அதை சார்ந்த பணி எதையும் செய்யவில்லை. ஆனால் அதன் மீது இருந்த ஆர்வம் அதிகமானது. அதற்காக கற்றவைதான் இது. பல விஷயங்களை கற்றுக் கொளவதன் மூலம் நீங்களும் கூட கனவு பலன்களை 75% துல்லியமாக சொல்லலாம்.

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
நீங்கள் சொல்வதெல்லாம் கேட்கக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது... பிறிதொரு நாளில் கனவுகள் பற்றி நீங்கள் எழுதிவரும் தொடரை முழுமையாக படிக்கிறேன்...

ம.தி.சுதா said...

வித்தியாசமானதொரு முயற்சி வாழ்த்துக்கள் அதிலும் எஸ்கேயின் விளக்கம் அருமை.... ஒரு விசயம் தெரியமா ஒரு மனிதன் வருடத்திற்கு சராசரி 1000 ற்கு மேற்பட்ட கனவு காண்கிறான்.

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா
பின்னூட்டமிட்டதற்கும் பின்தொடர ஆரம்பித்ததற்கும் நன்றிகள்...

// ஒரு மனிதன் வருடத்திற்கு சராசரி 1000 ற்கு மேற்பட்ட கனவு காண்கிறான் //
நீங்கள் சொல்லும் எண்ணிக்கை குறைவு என்றே கருதுகிறேன்...

Unknown said...

பாரட்டுக்கள் எஸ்.கே. அவர்களுக்கு...
எப்பூடி...

Philosophy Prabhakaran said...

@ பாரத்... பாரதி...
எனக்கு இல்லையா :(

சௌந்தர் said...

எனக்கும் சில கனவுகள் அடிகடி வரும் இந்த பதிவு கனவில் எழுதியதா நல்லா பாருங்க இதுவும் கனவா இருக்க போகிறது...

Anonymous said...

My Dear.. I will give my full support.. Sorry.. inimel nee un virupam pol seyal padalam..

Philosophy Prabhakaran said...

@ சௌந்தர்
பின்னூட்டப் புயல் செளந்தர் அவர்களே... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
அன்பே... அனானியாக உள்ளே நுழைந்தாலும் Dear என்ற வார்த்தையை பார்த்த கணம் நீஎன்பதை உணர்ந்துக்கொண்டேன்...

// I will give my full support //
நன்றி...

// Sorry // - sorry இப்படியா சொல்லுவாங்க...

நன்றியை இப்படித்தான் சொல்வார்களா என்று நீ பதிலுக்கு கேட்பது எனக்கு புரிகிறது... நேரில் வா கோடிக்கணக்கில் நன்றி தெரிவிக்கிறேன்...

Anonymous said...

கனவு கண்டதை விட அதை இங்கே சொன்ன விதம் நல்லாக இருக்குது.கனவுகள் தொடரட்டும்..

Philosophy Prabhakaran said...

@ kanthasamy
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

Anonymous said...

Hmmm.. valaipadhivil enaku smiley poda theriyavillai..

Philosophy Prabhakaran said...

@ Anonymous
Smiley எல்லாம் போதாதடி என் வெல்லக்கட்டி...

ஆனந்தி.. said...

தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்...நீங்க சொன்ன இந்த தூக்கத்தில் கனவு கண்டவுடனே முழிச்சு கனவை எழுதுவது எழுத்தாளர் சுஜாதா,மணிரத்னம் கிட்டே எல்லாம் இந்த பழக்கம் இருந்ததா படிச்சுருக்கேன்...:)))

Philosophy Prabhakaran said...

@ ஆனந்தி..
நீங்க எத்தனை வருஷம் கழிச்சு பின்னூட்டம் போட்டாலும் பரவாயில்லை மேடம் நான் கரெக்டா படிச்சிடுவேன்... நீங்கள் சொன்ன தகவலைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

கனவினைக் காட்சிப்படுத்திய விதம் அருமை.