Showing posts with label தமிழ்த்திரை முன்னோட்டம். Show all posts
Showing posts with label தமிழ்த்திரை முன்னோட்டம். Show all posts

25 October 2011

AZAD – வேலாயுதம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆயிரம் அறிவு வந்தாலும் வேலாயுதத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று முந்தாநாள் கர்ஜித்திருக்கும் தானே சிந்தித்து படமெடுக்கும் தன்மானச் சிங்கம் “ஜெயம்” ராஜாவிற்கு இந்த இடுகையை எருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.

விடிஞ்சா தங்கச்சி மூஞ்சியில தான் முழிப்பேன்னு வைராக்கியத்துடன் இருக்கும் பாசக்கார அண்ணன் நாகார்ஜுன். அப்புறம் அம்மா செண்டிமன்ட் இல்லாமலா. அதுவும் கலைராணி அம்மாவா நடிச்சிருக்காங்க. (இவங்க வந்தாலே படத்துல கதறியழுகிற சீன் ஒன்னு கண்டிப்பா இருக்கும்). ரெண்டாவது சீன்லையே அம்மாவும் தங்கச்சியும் “லா... லா...” பேக்ரவுண்ட் மியூசிக்கோட சென்டிமென்ட்டை கரைச்சி அடிக்கிறாங்க. நாகார்ஜுனின் முறைப்பெண்ணாகவும் கடைந்தெடுத்த லூசுப்பெண்ணாகவும் ஷில்பா ஷெட்டி. 

இங்கிட்டு சென்னையில் பத்திரிக்கையாளராக மறைந்த நடிகை செளந்தர்யா. அநியாயத்தைக் கண்டு பொங்கவும் இயலாமையால் வேகவும் செய்யும் செளந்தர்யா, ஆசாத் என்ற கற்பனை கேரக்டரை உருவாக்குறாங்க. ஆசாத் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ரப்பர் வைத்து அழிப்பதாக ஒரு சீன் க்ரியேட் பண்றாங்க. சிட்டி முழுக்க ஆசாத் புகழ் பரவுகிறது. அதாங்க ஷங்கர் படத்துல எல்லாம் காட்டுவாங்களே, அதே மாதிரிதான்.

தங்கச்சி கல்யாணத்துக்காக நாகார்ஜுன் சிட் பண்டில் சேர்த்து வைத்த ஐந்து லட்ச பணத்தை எடுக்க சென்னை வர்றாரு. அப்ப ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அப்பாவிப்பொண்ணு கதறக்கதற ஓடிவந்து நாகார்ஜுன் பின்னாடி ஒளிஞ்சிக்கிறாங்க. அதுக்கு மேல அங்க என்ன நடக்கும்ன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா...???

எதிர்பாராத திருப்புமுனையாக (!!!) நாகார்ஜுனின் பெயரும் ஆசாத்தாக இருக்க, அவனா நீ என்று ஊரே அல்லோலப்படுகிறது. அப்படியே செளந்தர்யாவோட ஒரு ஒன்சைடு லவ்வு, டூயட். செளந்தர்யா நாகார்ஜுனிடம் ஆசாத் கேரக்டரை தொடரச் சொல்லி கடுப்பை கிளப்புகிறார். ஆனால் ஹீரோ ஆணியே புடுங்க வேணாம்னு தலைதெறிக்க ஓடுகிறார். அங்கே சிட் பண்ட் கம்பெனிக்காரன் தலையில் துண்டைப் போடுகிறான். இந்த இடத்தில் மறுபடி ஒரு பப்ளிக் செண்டிமன்ட். ஏமாந்தவர்கள் கதறியழுகிறார்கள். ஹீரோவுக்கு புடைக்கிறது. (என்னன்னு கேட்கப்பிடாது)

அப்புறமென்ன வில்லன் கும்பலை துவம்சம் செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப்போய் தங்கச்சி கல்யாணத்தை நடத்துகிறார். விடுவாரா வில்லன். ஹீரோவின் தங்கச்சியை போட்டுத்தள்ளி சென்டிமென்ட் முறுக்கை பிழிகிறார். சொன்னதுபோலவே கலைராணி கதறிங். 

க்ளைமாக்ஸ் – ஹீரோ Assassin’s Creed ஸ்டைலில் வில்லனுடன் சண்டை போட்டு, உண்மைத்தமிழன் பதிவு சைஸில் வசனம் பேசியே அவரை சாவடிக்கிறார். க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் மறுபடி பப்ளிக் என்ட்ரி. (டேய் இந்த பப்ளிக்க பப்பாளிக்கா அக்குற பழக்கத்தை நிறுத்தி தொலைங்கடா... இதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்...)

பிரகாஷ் ராஜ் – நல்ல போலீஸ், ரகுவரன் – கெட்ட தொழிலதிபர் கம் தீவிரவாதி. இதுல கூத்து என்னன்னா ஹிந்து மத பக்தகேடியாக அறிமுகமாகும் ரகுவரன் பின்பாதியில் இஸ்லாமிய தீவிரவாதின்னு ஒரு மேட்டரை ஒப்பன் பண்றாங்க. (ஆகக்க, மாத்தி மாத்தி டவுசரை கிழிச்சிக்கோங்க சனங்களே...)

இந்த இத்துப்போன கதையில் நாகார்ஜுனாக – விசை, ஷில்பா ஷெட்டியாக – ஹன்சிகா மோத்வானி, செளந்தர்யாவாக – ஜெனிலியா, தங்கச்சி சுஜிதா கேரக்டரில் சரண்யா மோகன் இம்புட்டுதான். இதுக்கு மேலயும் இந்தப்படத்தை பார்க்கணுமான்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க. ஆனா ஒன்னு தியேட்டரில் படம் பார்த்தா இரண்டரை மணிநேர முழுநீள நகைச்சுவை உத்தரவாதம்.

என்சாய்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 January 2011

சிறுத்தை சீறுமா...?

வணக்கம் மக்களே...

தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் கார்த்தியின் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கும் படம் சிறுத்தை. ஒரு மாஸ் எண்டர்டேயினர் என்று சொல்லப்படும் இந்தப்படம் வெற்றி பெறுமா...? அல்லது மண்ணைக் கவ்வுமா...? என்பது குறித்த ஒரு அலசல்.

பாடல்கள் எப்படி...?
முதல்முறையாக கார்த்திக்காக இசை அமைத்திருக்கிறார் வித்யாசாகர். குத்துப் பாடல்களுக்கு பேமஸ் என்று சொல்லப்படும் வித்யாசாகர் வாத்தியங்களின் விளையாட்டு எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.

மொத்தம் ஐந்து பாடல்கள்...
-          நான் ரொம்ப ரொம்ப... என்று ஆரம்பிக்கும் பாடலை கேட்கும்போதே ஹீரோ அறிமுகப் பாடல் என்று தெளிவாக தெரிகிறது. இந்தப் பாடலை பற்றி நிறைய சொல்ல வேண்டி இருப்பதால் அதை பிற்பாதியில் பார்ப்போம்.
-          செல்லம் வாடா செல்லம்... என்று ஆரம்பிக்கும் பாடல் உதித் நாராயண் சுர்முகி குரலில் ஒரு மெலோடி டூயட் பாடல். எல்லா தமிழ் படங்களிலும் ஒரு பாடலையாவது உதித் நாராயண் பாட வேண்டும் என்று ஒரு செண்டிமெண்ட் போல.
-          அழகா பொறந்துபுட்டா... என்ற பாடல் மாலதி லஷ்மன் குரலில் ஆரம்பிக்கும்போதே ஐட்டம் பாடல் என்று தெரிந்துவிடுகிறது. மேக்னா நாயுடு ஆட்டம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.
-          தாலாட்டு... என்று ஆரம்பிக்கும் பாடல் உண்மையிலேயே ஒரு தாலாட்டுப் பாடல். ஸ்ரீவர்த்தினி குரலில் வரும் இந்த சிறிய பாடல் ஏதாவதொரு செண்டிமன்ட் காட்சியின் பிண்ணனியில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
-          அடி ராக்கம்மா ராக்கு... என்ற பாடல் வழக்கமாக தமிழ் சினிமாக்களில் க்ளைமாக்ஸ் சீனுக்கு முன்னாடி ஒரு குத்துப்பாடல் வருமே அப்படி ஒரு பாடல். முதல்முறை கேட்கும்போதே பாடல் நிச்சயம் சூப்பர்ஹிட் என்று சொல்லத் தோன்றுகிறது.

டைட்டில் விளக்கம்
"பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான். அதன் வேகம் இணையில்லாதது. இப்படத்தின் நாயகனின் கதாபாத்திரமும் இதே குணம் கொண்டதுதான், அதனால்தான் இந்தப் பெயரை படத்தின் தலைப்பாக வைத்தேன்" என்று சொன்னது நானில்லை. படத்தின் இயக்குனர் சிவா.

கதைதான் என்ன...?
மறுபடியும் ஒரு தெலுங்கு ரீமேக். ஆமாம்... ரவிதேஜா, அனுஷ்கா நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்த விக்ரமாற்குடு என்ற தெலுங்கு படத்தின் ரிமேக்கே சிறுத்தை. வேட்டைக்காரன் படம்கூட இந்தப்படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. பின்னர் கதையில் பல மாற்றங்களோடு வெளிவந்தது வேட்டைக்காரன்.

படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடம். ஒருவர் திருடன், இன்னொருவர் போலீஸ் (யப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே... பழைய எம்.ஜி.ஆர் காலத்து கதை). பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு சந்தானத்துடன் காமெடி, தமன்னாவுடன் காதல் என்று லூட்டி அடித்துக்கொண்டிருக்கும் கார்த்தியை திடீரென ஒரு சிறுமி அப்பா என்று கைகாட்ட அதன் பிண்ணனியை திருடன் கார்த்தி ஆராய்கிறார். அப்போது அவரைப்போலவே உருவத்தோற்றம் கொண்ட போலீஸ் கார்த்தியைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில், சந்தர்ப்ப சூழ்நிலையால் போலீஸ் கார்த்தி இறந்துபோக அவரது இடத்தில் ஆள்மாறாட்டம் செய்கிறார் திருடன் கார்த்தி. போலீஸ் கார்த்தியின் மரணத்திற்கு காரணமாக இருந்த சமூக விரோத கும்பலை சிறுத்தை வேட்டையாடியதா என்பதே மீதிக்கதை...

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு போலீஸ் கதை. வழக்கம்போலவே இந்தப் போலீஸும் ரொம்ப நேர்மையானவர், நல்லவர், வல்லவர், துடிப்பானவர், முரட்டுத்தனமானவர் etc etc.

கார்த்தி ஐந்தாவது வெற்றி...?
ஒரு ஹீரோ தான் இதுவரை நடித்திருக்கும் நான்கு படங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அபூர்வம் + ஆச்சர்யம். (சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் பிளாப் என்றும் கூறுவார்கள். அதனை நான் ஏற்கமாட்டேன். சொல்லப்போனால் கார்த்தியின் தற்போதைய பெஸ்ட் ஆயிரத்தில் ஒருவனே). இந்தப் படத்தில் கார்த்தி ஆக்ஷனிலும் நகைச்சுவையிலும் கலக்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஐந்தாவது மாடியில் இருந்து டூப் போடாமல் குதித்திருக்கிறாராம். ஒரு பாடல் காட்சியில் ஒன்பது விதமான கெட்டப்களில் தோன்றி அசத்துவது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.

தமன்னா பொன்னா...? மண்ணா...?
வழக்கமாக ஆக்ஷன் படங்களில் ஹீரோயினுக்கு வேலை இருக்காது. வெறும் பாடல்காட்சிகளில் இடுப்பு காட்டுவதோடு சரி. அது தவிர்த்து சில காட்சிகளில் லூசுத்தனமாக வந்துபோவார். (கேட்டால் பக்கத்துவீட்டுப் பெண் போல துறுதுறு கேரக்டராம்). இந்தப் படத்தில் தமன்னா நகைச்சுவை காட்சிகளில் அருமையாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டாலும் நம்ப முடியவில்லை. மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் காமெடியாகவா தெரிகிறது...?

சந்தானம் சந்தணம் மணக்குமா...?
இப்போது வரும் பெரும்பாலான படங்களை தூக்கி நிறுத்துவதே சந்தானத்தின் நகைச்சுவை தான். இந்தப் படமும் அந்த வரிசையில் இடம் பெறலாம். ட்ரைலரில் வரும் காட்சிகளைப் பார்த்தால் சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் ஒரிஜினல் பதிப்பான விக்ரமாற்குடுவில் இல்லாத வண்ணம் புதிதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.

ரசிகன் தீர்ப்பு
எனக்கென்னவோ தெலுங்கு ரீமேக் படங்களின் மீது துளியளவு கூட நம்பிக்கை இல்லை. அதிலும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் பழிவாங்கும் கதையை வைத்து காய் நகர்த்துவார்கள் என்று புரியவில்லை. இந்தப் படம் கார்த்தியின் கலையுலக வாழ்வில் முதல் அடியாக இருக்கக் கூடும் என்பது எனது கணிப்பு.

நன்றி:

டிஸ்கி 1: படத்தைப் பற்றிய முன்னூட்டமே மிகவும் நீளமாக போய்விட்டதால் நான் ரொம்ப ரொம்ப... பாடலின் மீதுள்ள எனது கொலைவெறியை வேறொரு பதிவில் தீர்த்துக்கொள்கிறேன்.

டிஸ்கி 2: பதவில் காணொளியை இணைப்பது எனக்கு பிடிக்கவில்லை. வலைப்பூவின் வேகம் குறைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை. அதனால் படத்தின் ட்ரைலரை இணைக்கவில்லை. பார்த்தே ஆகவேண்டும் என்று துடிப்பவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி பார்த்துக்கொள்ளவும்.

டிஸ்கி 3 (மீள் டிஸ்கி): வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க...

டிஸ்கி 4: அது என்ன மீள் டிஸ்கி என்று கேட்பவர்களுக்கு, அந்த டிஸ்கி ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் எழுதியது. ஸோ, மீள் பதிவு மாதிரி மீள் டிஸ்கி.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2010

கல்லா கட்டுமா காவலன்

வணக்கம் மக்களே...

நடிகர் விஜய்யை கலாய்த்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் பதிவுலக காமெடிகளும் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் நக்கலை எல்லாம் ஓரம்கட்டிவிட்டி காவலன் படம் வெற்றி பெறுமா என்பது குறித்த ஒரு நடுநிலைப் பார்வை.

முதலில் எப்படியிருக்கிறது பாடல்கள்:
விஜய் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வித்யாசாகர். விஜய்யை பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் இசைகூட சறுக்கிவிட்டது. ஆனால் வித்யாசாகர் இசை சறுக்கியதில்லை.

இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.
-          விண்ணைக் காப்பான் ஒருவன்... பாடலைக் கேட்டவுடனேயே இது ஒப்பனிங் சாங் என்று எளிதாக கூறிவிடலாம். வழக்கமான ஒன்றே தவிர புதுமைகள் ஒன்றுமில்லை.
-          ஐந்தில் என்னுடைய பேவரிட் சட சட... பாடல்தான். வித்தியாசமான டெக்னோ இசை. க்ளப் சாங் போல படமாக்கியிருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.
-          ஸ்டெப் ஸ்டெப்... பாடலில் விதவிதமான ஸ்டெப்களை விஜய்யிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். அவரது நடனத்திறமைக்கு சவால்விடும் பாடல்.
-          யாரது... மற்றும் பட்டாம்பூச்சி... பாடல்கள் டூயட் வகையறா. ஏதோவொரு மலைமுகட்டில் நின்று பாடுவாடு போல என்மனவானில் காட்சி விரிகிறது.

காவலன் படத்தின் கதை:
இந்தப் படம் மலையாள ஹிட் படமான பாடிகார்ட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அந்தப் படத்தை தரவிறக்கி பார்த்தேன். சப் டைட்டில் இல்லாமலே புரிந்தது. அதன் கதை பின்வருமாறு.

ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.

கொஞ்சம் விரிவாகச் சொன்னால்,
ராஜ்கிரண் கட்டப்பஞ்சாயத்து வகையறா ரவுடி கம் தொழிலதிபர். ஆனால் நல்லவர் (!!!). அவரை ரோல்மாடலாக கருதி அடியாளாக இணைகிறார் ஹீரோ விஜய். ராஜ்கிரணின் மகளான அசினை பாதுகாக்கும் பொறுப்பு விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அசினின் தோழியாக இரண்டாம் நாயகி மித்ரா. (தமிழில் சகோதரி என்று நினைக்கிறேன்). அசின் விஜய் மறுபடியும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் ஒரு காதல். ராஜ்கிரண் விஷயம் தெரிந்து சூடானாரா இல்லை காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினாரா, விஜய்யும் அசினும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

பழைய கள்ளுதான் என்பது தெளிவாக தெரிந்தாலும் மலையாளத்தில் இதை ஒரு மெல்லிய காதல் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழில்...?

வித்தியாசமாக இருக்கும் என்று மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் சொல்லக்கூடும். ஆனால் விஜய் வழக்கமான அவரது பார்முலாப்படி திரைக்கதையில் நிறைய மாற்றங்களை புகுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங் செய்துக்கொண்டு வருவார்.

படத்தில் காமெடியனாக வடிவேலு. விஜய் வடிவேலு காம்பினேஷன் நிறைய படங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது எனினும் வில்லு படத்தில் பயங்கர சொதப்பல். சுறா படத்திலும் சுமார் ரகமே. வசீகரா படத்தில் அமைந்தது போல காமெடி காட்சிகள் அமைந்தது என்றால் நிச்சயம் காமெடியில் காவலன் கலக்கும்.

விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் படத்தை பாதிக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அதிலும் விஜய் அம்மா பக்கம் சாய்வது போல இருப்பதால் ஆளும் கட்சி படத்தை முடக்க முயற்சிக்கும். கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை இருட்டடிப்பு செய்வார்கள். அதற்கு பதிலாக ஜெயா டிவி காவலனை விளம்பரப்படுத்தலாம். ஆனால் இப்போ ஜெயா டிவிஎல்லாம் யார் பார்க்கிறார்கள்.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், விஜய் எதிர்ப்பாளர்கள் இவ்வளவையும் மீறி காவலன் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முழுக்க முழுக்க உண்மையான விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது.

நன்றி: http://vijayfans-vinu.blogspot.com/ (படம் குறித்த செய்திகளை திரட்ட உதவியாக இருந்தது)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

டிஸ்கி: விஜய் ரசிகர்களுக்காக தளபதிடா என்ற பெயரில் வலைப்பூ ஒன்றினை நடத்திவரும் திரு.Vinu அவர்கள் காவலன் படத்தின் கதை குறித்து மேலும் சில தகவல்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்திருந்தார். அந்த பின்னூட்டத்தை இந்த இடுகையின் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்.

நண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில்  விஜய் அசினை காதலிக்கவில்லை... இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது... படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும்... ஹார்ட் பிரேக்கிங் ஆக  இருக்கும்... இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்... இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன்...

Post Comment