Showing posts with label பல்சுவைப் பதிவுகள். Show all posts
Showing posts with label பல்சுவைப் பதிவுகள். Show all posts

10 August 2011

அஜீத், அழகர்சாமியின் குதிரை, மங்காத்தா, மாலை மங்கும் நேரம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அஜீத்:
“படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!'' – இப்படி தன்னுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பவர் ஷாட்ஷாத் நம்ம தல அஜீத் தான். நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறேன்.


நடிகப்பசங்க பின்னாடி வராதீங்கடான்னு அன்னைக்கு எம்.ஆர்.ராதா சொன்னதையே தல கொஞ்சம் டீசண்டா, டீடைல்டா சொல்லியிருக்கார். ஆமாம் அஜீத்துக்கு தொப்பை இருக்கு, அவருக்கு ஒழுங்கா நடிக்கத் தெரியாது, அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது, அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வராது, அவருக்கு காமெடி பண்ணத்தெரியாது, அவருக்கு கதை தேர்வு செய்யத்தெரியாது – ஆனாலும் நான் அஜீத் ரசிகன்தான். நீங்க ஒரு ஜென்டில்மேன் தல.

அழகர்சாமியின் குதிரை:
அழகர்சாமியின் குதிரை படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படம் கிட்டத்தட்ட முடியும்வரையில் படத்தில் வரும் கிராமத்தைப் போல வறட்சியாகவே இருந்தது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மட்டும் ஆங்காங்கே தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதேமாதிரி, தம்பியுடன் சத்துணவை பகிர்ந்துக்கொள்ளும் சிறுவன், திருவிழாவிற்கு பணம் வசூல் செய்ய வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு காது கேட்காதது போல நடிக்கும் கிழவி என்று திரைக்கதையிலும் சில சாரல்கள். ஆனால் ஒட்டுமொத்த படமாக பார்த்தால் மொக்கையாகவே இருந்தது. ஒருவேளை கழுதையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அப்படி இருந்தால் சிவாவிற்கு போன் போட்டு திட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இறுதிக்காட்சியில் நச்சென்று நறுக்கென்று கலப்பு திருமணம் பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி படத்தில் மழை பெய்ததைப் போல என் மனதிலும் மழை பெய்ய வைத்துவிட்டனர்.

இருந்தாலும் “குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி...” பாடலை பார்த்து கொஞ்சம் ஏமாந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். படத்தில் மிருகங்களுடனான பாசம், பிணைப்பு பற்றி ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அதே மாதிரி சரண்யா மோகனை வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் நடிக்கவைத்து வீணாக்கிவிட்டார்கள்.

அழகர்சாமியின் குதிரை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனக்காட்சி,
சிறுமி: டேய்... கோடங்கிக்கு பேயா பிடிச்சிருக்கு...?
சிறுவன் 1: இல்ல சாமி வந்திருக்கு...
சிறுவன் 2: ஹேய்... ரெண்டும் ஒன்னுதேன்...
100% உண்மை. சாமியாடுறவங்கள்ல ரெண்டு வகை இருக்கு. ஒன்று, நாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து சாமியாடுபவர்கள். இவர்கள் மனநோயாளிகள். இவர்களை கன்னத்தில் அறைந்தால், ஏன் சிவகாசி படத்தில் வருவதுபோல சரவெடி வைத்தால் கூட சமயங்களில் அசரமாட்டார்கள். இன்னொன்று தெரிந்தே ஊரை ஏமாற்றும் அயோக்கியர்கள். (இந்தப்படத்தில் வரும் கோடாங்கி மாதிரி). இவர்களை பிடித்து பொளேர்ன்னு கன்னத்துல நாலு அறை விட்டுப்பாருங்க. அப்புறம் சாமியாவது, மாமியாவது...

ஆனா, ஆயிரம்தான் சொல்லுங்க... மைக்கேல் ஜாக்சன், பிரபு தேவா இன்னும் எத்தனை பேர் வந்தாலும் சாமியாடுறவங்க மாதிரியும், சாவுக்கு முன்னாடி சரக்கடிச்சிட்டு ஆடுறவங்க மாதிரியும் யாராலும் ஆடமுடியாது. எல்லாம் அந்த அழகர்சாமியின் திருவிளையாடல்தான்.

மங்காத்தா:
இன்னைக்கு மங்காத்தா பாடல் ரிலீஸ். ஏற்கனவே நெட்டில் வெளியாகிவிட்டது. பாட்டிலை திறப்பதற்காக காத்திருக்கிறேன். மேட்டர் அது இல்லை. மங்காத்தா – ஓஷன்ஸ் லெவன் படத்தின் காப்பி என்று சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஓஷன்ஸ் லெவன் படம் பார்த்தேன், மங்காத்தா ட்ரைலர் பார்த்தாலும் அப்படித்தான் தோன்றுகிறது. ஐயாம் சாமை காப்பி அடித்த தெய்வத்திரு(ட்டு)மகளை காறித்துப்பினோம். சீன் பென்னை அட்டகாசமாக இமிடேட் செய்திருக்கும் விக்ரமிற்கு சிறந்த மிமிக்ரி நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்று கலாய்த்தோம். ஆனால் இப்போது அஜீத்தின் முறை என்றதும் கொஞ்சம் நெருடுகிறது. எதற்காக இவ்வளவு பீடிகை என்று கேட்பவர்களுக்கு – ஓஷன்ஸ் லெவன் பற்றிய பதிவு இன்று மாலை வெளிவருகிறது.

தல... அஞ்சலியோட ரொமான்ஸ் பண்ண உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல போல...

மாலை மங்கும் நேரம்:
இசைப்பிரியர்களுக்கு இன்னுமொரு பாம்பே ஜெயஸ்ரீ கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜீவா – ஷ்ரேயா நடிப்பில் வரவிருக்கும் ரெளத்திரம் படத்தில் மாலை மங்கும் நேரம் என்றொரு அற்புதமான பாடல். மீண்டும் மீண்டும் அந்தப்பாடலைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ரனைனா

பாடியவர் பெயர் ரனைனா ரெட்டியாம். இதுவரை தமிழில் சரோஜா படத்தின் கோடான கோடி, கோ படத்தின் அகநக மற்றும் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் புதியவர் - பெயர் பிரகாஷ் நிக்கி.

இந்தப்பாடல் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்களை டார்கெட் செய்து ரொமான்டிக்காக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்த சாம்பிளை பாருங்கள் –
“நான் சமையல் செய்திடுவேன்...
நீ வந்து அனைத்திடுவாய்...
என் பசியும் உன் பசியும்
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்...”
(அது ஏன் இந்த சமையல்கட்டு மேட்டர் எல்லாப்பொண்ணுங்களுக்கும் பிடிக்கிறது... யோவ் சிபி ஒரு ஆராய்ச்சி பதிவை போடுறது...)

இவ்வளவு ரொமாண்டிக்கான பாடலை தாமரையை தவிர வேற யார் எழுதியிருக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க. இந்தப்பாடலை மேலே உள்ள இணைப்பை கிளிக்கி கேளுங்கள். இப்போ நீங்க என்ன செய்யனும்னா இந்தப்பாடலை உங்கள் இணைக்கு அனுப்பி அவரையும் கேட்கச்சொல்லுங்கள். (நான் செய்தது போலவே...)
-     என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 May 2010

திரையைக் கிழித்த சுறா...!

வணக்கம் மக்களே...

தல வாழ்த்து
மே 1 அன்று பிறந்தநாளை கொண்டாடிய (கொண்டாடவே இல்லை) எங்கள் அண்ணன் அஜித் குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். ஏற்கனவே தல தரப்பில் இருந்து இருந்து வெளியான செய்திக்குறிப்பில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாமென அன்புக்கட்டளை இட்டிருந்தார் தல. எனவே, தலைவர் திருநாள் எந்தவித ஆரவாரமும் இல்லாமலே கழிந்துவிட்டது.
சில தொலைக்காட்சி சேனல்கள் தலையைப் பற்றி துண்டுச்செய்தி கூட வெளியிடாத நிலையில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் விஜய் டிவிக்கும் ஜெயா டிவிக்கும் கோடானு கோடி நன்றிகள். அதிலும் குறிப்பாக நாள் முழுவதும் தலப்பாடல்களை ஒளிப்பரப்பி ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி அரும்பணி ஆற்றியது. இங்கு நிலை இப்படியிருக்க மொரோக்கோவில் நடந்துவரும் பார்முலா-2 பந்தயத்தில் கலந்துவரும் அஜித் தனது பிறந்தநாளன்று நடந்த ரேஸில் 21வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். தல தொடர்ந்து தடம் பதிக்க வாழ்த்துக்கள்.

பதிவர்கள் கவனத்திற்கு 
அங்காடித் தெரு படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். விமர்சனங்கள் எழுதியிருக்கலாம். அவ்வாறு உங்கள் மனதில் படத்தினைப் பற்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அவற்றி நீங்கள் என்னோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று அந்தப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார்.
பேஸ்புக்கில் அங்காடித் தெரு படம் பற்றிய உங்கள் எண்ணங்களை பேசிக்கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
பேஸ்புக் கணக்கு இல்லாத பதிவர்கள் "vasantabalan@yahoo.co.in" என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ரசிகர்கள் ரகளை
"இளையதளபதி" விஜயின் அபாரமான நடிப்பில் (!!!) "சுறா" திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக (!!!) ஓடிக்கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்ததே.
இந்நிலையில் திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோட்டில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் பேன், டியுப்லைட் (விஜய்யை குறிப்பிடவில்லை) ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு நில்லாமல் திரையைக் கிழித்து ரகளையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். படத்தின்போது ஏற்பட்ட ஒளிப்பரப்பு கோளாறினால் தான் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக வெளியில் பேசிக்கொண்டாலும் விஷயம் வேறுமாதிரியாக இருந்ததால் திண்டுக்கல் போலீசாரை ரகசியமாக சந்தித்தோம். "படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒவ்வொருவருக்கும் மறை கழன்டுபோக ஆரம்பித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பரவச நிலை அடைந்த ரசிகர்கள் திரையை கிழித்திருக்கிறார்கள்". இவ்வாறு திண்டுக்கல் போலீசார் நம்மிடம் தெரிவித்தனர்.

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது
நீங்கள் நினைப்பது போல ஆஸ்திரேலிய வீரருக்கோ இந்திய வீரருக்கோ லலித் மோடிக்கோ சசி தரூருக்கோ அல்லாமல் ஒரு நேபாள வீரனை சென்றடைகிறது. செய்தி இதுதான். நேற்று முன்தினம் இரவு சென்னையில் பெய்த மழையில் சென்னை மேடவாக்கத்தில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. விவரம் தெரியாமல் தேங்கிய மழை நீரில் காளை வைத்திருக்கிறார் ஒரு தாய்க்குலம். தாயும் சேயும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கூர்க்கா "வீராஜ் குமார்" இரண்டு போரையும் கிரிக்கெட் மட்டையால் அடித்து காப்பாற்றியிருக்கிறார். இப்போது வீராஜ் குமார் தான் "மேன் ஆப் மேடவாக்கம்"


இந்த வார கவிதை 
தேநீர்க் கடையில்
இரட்டைக் குவளை - அதே
கடையில் ஒரே
கல்லாப்பெட்டி...
- வெங்கட. ராசா, ம.பொடையூர்


இந்த வாரப் பூச்செண்டு
லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எதிர்த்து நூதன பிரச்சாரம் செய்த இளைஞர்களுக்கு. சில நாட்களுக்கு முன் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், "லஞ்சம் கொடுக்கவும் செய்யாதீர்கள், வாங்கவும் செய்யாதீர்கள் ப்ளீஸ்" என்று கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்த அந்த இளைஞர்கள், இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பொதுமக்கள் கால்களில் விழுந்து மன்றாடியிருக்கிறார்கள். தங்களது இயக்கத்தின் பெயர் சத்தியாகிரக இயக்கம் என்றும் இதுவரை 26 லட்சம் மக்கள் காலில் விழுந்திருப்பதாக கூறிய அந்த இளைஞர்களை மனமார பாராட்டுவோம்.


இந்த வார வலைப்பூ
அயராத எழுத்துப்பணி (!!!) காரணமாக அடுத்தவர்களது வலைப்பூக்களை தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் வாரம் ஒரு விடுமுறை நாளை ஒதுக்கி விடிய விடிய வலைப்பூக்களை மொய்ப்பதுண்டு. அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு ஓரிரவில் "சேட்டைக்காரன்" வலைப்பூவை படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
நகைச்சுவையாக பதிவிடுவார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த சேட்டையின் மறுப்பக்கத்தை அன்றுதான் உணர்ந்துக்கொண்டேன். அதிலும் சேட்டை சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகள் என்னை கடுமையாக பாதித்தது. ஒன்று, பராசக்தி கோர்ட் வசனக்காட்சியை அவர் உல்டா செய்து எழுதியிருந்த பதிவு. இந்தப் பதிவு ஒரு வரலாற்று பதிவு என்றுகூட சொல்லலாம். எல்லோரும் படித்தே ஆகவேண்டிய இந்தப் பதிவை நீங்கள் படிக்க இந்த இணைப்பை (பராசக்தி ரிப்பீட்டேய்...!) சொடுக்கி படிக்கலாம். "அவிய்ங்க" ராசா, "தேவடியா பசங்க..." என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அதே கருத்தை சேட்டை இன்னும் உருக்கமாகவும் நாகரீகமாகவும் எழுதியிருந்தார் மற்றுமொரு பதிவில். அந்தப் பதிவை படிக்க விரும்புவோர் இந்த இணைப்பை (பயணத்தில் ஒரு நாள்...!) சொடுக்கி படிக்கலாம். சேட்டை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.


படம் சொல்லும் செய்தி என்ன...?
இதோட பன்னிரண்டு வருஷமாச்சு.

என்ன ஒன்னும் புரியலையா...?

மேற்படி அம்மணி வயசுக்கு வந்து பன்னிரண்டு வருஷமாச்சு...
எப்படி நம்ம பினிஷிங் டச். சும்மா தமாசுங்க சீரியஸா எடுத்துக்காதீங்க.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

25 March 2010

காக்னிசன்ட் கனவுகள்

வணக்கம் மக்களே...

சென்ற வாரம் நான் கடந்து வந்த விஷயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போல இருக்கே...!
வழக்கம்போல ஒரு மாலைப்பொழுதில் சிந்தனைப்பசி அதிகமாகி வலைப்பூக்களை மொயத்துக்கொண்டிருந்தேன். அப்போது "அவிய்ங்க" ராசாவின் வலைப்பூவில் "போடா கிறுக்குப் பயலே" என்ற பெயரில் ஒரு பதிவு. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நகைச்சுவை பதிவாக இருக்கக்கூடுமென எண்ணினேன். ஆனால் பதிவைப் படித்து முடிக்கும்போது நான் அலுவலகத்தில் இருக்கிறேன் என்பதையும் மறந்து கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது. பெரும்பாலும் பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே அந்தப் பதிவை படித்திருப்பீர்கள், சிலிர்த்திருப்பீர்கள். படிக்காத பதிவர்களும், வலைப்பூக்கள் அதிகம் பரிட்சயம் இல்லாத எனது சில நண்பர்களும் கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம். ஹும்ஹூம் கட்டாயம் படித்தே தீரவேண்டும்:
"அவிய்ங்க" ராசா இனிமேல் நீங்க "நம்ம" ராசா.
(இந்தப் பகுதிக்கு ஏன் இந்த உபதலைப்பு கொடுத்தேன் என்ற சூட்சுமம் நண்பர்கள் சிலருக்கு புரிந்திருக்கக்கூடும்)

அடிச்ச போதையெல்லாம் இறங்கிடுச்சு...!
இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி. "சென்னையில் போலி மது தொழிற்சாலை கண்டுபிடிப்பு". பாட்டில்களுக்கு மத்தியில் முகத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்த அந்த பாவி என்ஜினியராம். ஒசிக்குடி குடித்தாலும் கவர்ன்மென்ட் சரக்குன்னு தானே நம்பிக்குடித்தோம். சரக்கில் தண்ணீரை கலந்து விற்பனை செய்தீர்கள் பொறுத்துக்கொண்டோம். ஐம்பத்தி ஆறு ரூபாய் சரக்கை எழுபது ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் சகித்துக்கொண்டோம். இப்போது மொத்தமும் போலிஎன்றால் நாங்கள் எந்த நம்பிக்கையில் குடிப்பது. நம் நாட்டு குடிமகன்களுக்கு செக்யூரிட்டி மிகவும் குறைந்து வருகிறது. போலி மருந்து தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலைஞர் அறிவித்திருக்கிறார். இதுவும் ஒரு மருந்து தானே. இதுபோன்ற சட்டவிரோத செயல் செய்பவர்களை தட்டிக்கேட்காத மைனாரிட்டி தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று புரட்சித்தலைவியாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.
(ஒருவேளை மது என்றாலே போலி தானோ. நெப்போலியன் மேல சத்தியமா நான் மதுன்னு சொன்னது டாஸ்மாக் சரக்கைதாங்க)

வேலை வாங்கித்தரப்போறாராம்
அதே செய்தித்தாளில் எனது ரத்தம் கொதிக்கச் செய்த மற்றுமொரு செய்தி. "தே.மு.தி.க வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்." என்று கேப்டன் சொல்லியிருக்கிறார். அட டோனி இல்லைங்க... நம்ம விஜயகாந்த சொன்னேன். லட்சகணக்கில் பணத்தை வாரி இறைத்து இவருடைய கல்லூரியில் படித்துவிட்டு இப்போது தறுதலையாக (பதிவராக) இருப்பவனுக்கு இதைப்படித்ததும் ரத்தம் கொதிக்காமல் என்ன செய்யும். கேப்டன் சார், முதலில் நம்ம கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். அதன்பிறகு எதுகை மோனையாக பேசி தேர்தல் பிரச்சாரம் செஞ்சுக்கலாம்... ஆங்.

காக்னிசன்டில் கலவரம்
பர்சனலா ஒரு விஷயம்... என்ஜினியரிங் படித்துவிட்டு கிடைத்த கால் சென்டர் வேலையிலேயே திருப்தி அடைந்திருந்தேன். திடீரென்று மென்பொருள் துறையில் நுழைய வேண்டுமென்ற ஆசை. அதிலும் பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமாங்க்றதைப் போல காக்னிசன்டில் தான் நுழைய வேண்டுமென ஒரு வெறி. ஏன் அப்படி ஒரு வெறி வந்துச்சுன்னு கூடிய விரைவில் சொல்லுகிறேன்... சொல்லித்தொலைக்கிறேன். எதிர்ப்பார்த்த நேரத்தில் ரிட்டன் டெஸ்ட் ஒன்றினை நடத்தினார்கள்.
ஒருவேளை தேர்வாகிவிட்டால் "அஞ்சாதே" பிரசன்னா ஸ்டைலில் வளர்த்த கூந்தலை தியாகம் செய்ய வேண்டுமே என்ற தயக்கம் ஒரு புறம். கடைசியில் கத்தரிக்கு வேலை வைக்காத வண்ணம் தேர்வு முடிவு வெளியாகி எனது திடீர் காக்னிசன்ட் கனவு கலைந்துப்போனது. "இவனை காக்னிசன்டில் சேர்த்தால் காக்னிசன்டில் கலவரம், சாப்ட்வேர் கம்பெனியில் சில்மிஷம் என்று எதையாவது எழுதித்தொலைப்பான்" என்று சுரேஷும் நிரஞ்சும் மேலிடத்திற்கு ரகசியத்தகவல் அனுப்பிவிட்டார்களோ என்னவோ...? எது எப்படியோ...? இனி எப்போதுமே உங்கள் சேவைக்காக பிரபாகரன்.

தலைக்கு வாழ்த்துக்கள்
அஜித் பற்றிய செய்தி சினிமா பக்கத்தில் வந்த காலமெல்லாம் போய் இப்போது ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் வர ஆரம்பித்தது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. ஏப்ரல் பதினாறாம் தேதி தொடங்கவிருக்கும் F2 சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் கலந்துக்கொள்ளும் மூவரில் ஒருவராக நம்ம தல. தல வெற்றியுடன் திரும்புவதற்கு "philosophy prabhakaran" வலைப்பூ சார்பாக வாழ்த்துக்கள்.

அடுத்தது என்ன...?
நாளைக்கு இந்த நேரம் அங்காடித்தெரு படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். அஞ்சலியின் சிரிப்பிற்க்காகவே படத்தை பார்க்கப்போகிறேன். நாளை மாலையே அதுபற்றிய பதிவை போட்டுவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

9 March 2010

மேல்மருவத்தூர் அபத்தங்கள்

வணக்கம் மக்களே...

செவ்வாடை தொண்டர்கள் சிலர் கட்டாயம் இந்த பதிவை படித்தே தீர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் இந்த பதிவை தேர்ந்தெடுத்தேன். இந்த சமூகத்தின் மீது நான் கொண்ட கோபத்தின் காரணமாக சில இடங்களில் முறையற்ற வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. தவறாக இருந்தால் மன்னித்தருளுங்கள்.
தலைப்பு கொண்ட கருத்துக்கு செல்வதற்கு முன்னால் சில உப கருத்துக்கள்...

தலையிலேயே குட்டுகிறார்கள்...
சரி நம்ம தல தானே என்று அவ்வப்போது நான் அஜித்தைப் பற்றி கிண்டலாகப் பேசி விமர்சிப்பது உண்டு. அவையனைத்தும் தல மீது நான் கொண்ட பாசத்திலும் உரிமையிலும் மட்டுமே. ஆனால் அஜித்தை மற்றவர்கள் தூற்றும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜாக்குவார் தங்கம், டங்குவார் தகரம் என்று ஆளாளுக்கு தலையை கலாயத்ததில் நான் ரொம்பவே அப்செட். அதிலும் "எனது பக்கங்கள்" என்ற பெயர்கொண்ட அந்த வலைப்பூவில் அஜித் மீது தொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. 
சம்பந்தப்பட்ட அந்த இடுகைகளுக்கான இணைப்புகள்:

குட்டியாய் ஒரு குட்டி விமர்சனம்
திரைக்கதை என்னவோ சினிமாத்தனமும் மசாலாத்தனமும் நிரம்பி வழிந்தாலும் கதை கொண்ட கரு மட்டும் என் மனதை கடுமையாக கவர்ந்துவிட்டது. ஒருதலைக்காதலின் மகத்துவத்தை படம் கவிதையாய் வாசித்தது. தனுஷின் நடிப்பில் யதார்த்தம் ரொம்ப குறைவு. ஆனாலும் தனுஷை மிகவும் ரசித்தேன். தனுஷின் மேனரிசங்களும் மவுத் ஆர்கன் வாசிக்கும் விதமும் நண்பன் பாண்டீஸ்வரனை நினைவுபடுத்தியது. தனுஷ் - ஆர்த்தி நட்பு புதுசாக இருந்தது. "குட்டிக்கு வார்னிங்" காட்சி சொன்ன கருத்துகள் அனைத்தும் அற்புதம். "feel my love" என்ற வார்த்தையே ஒரு புதுக்கவிதை. நேரம் கிடைத்தால் நீங்களும் பார்த்து feel பண்ணுங்க.

ஆட்டோ சங்கரின் அத்தியாயம்
சில வாரங்களுக்கு முன்பு தபூ சங்கரை புரட்டிய நான் இந்த வாரம் ஆட்டோ சங்கரை புரட்டினேன். படித்த பத்து பக்கங்களிலேயே தன் மொத்த கோபத்தையும் சமூகத்தின் மீது கொட்டியிருந்தான். உண்மைதான். "பிறக்கும்போது யாருமே நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பிறப்பதில்லை. எல்லோருமே குழந்தைகளாகத்தான் பிறக்கின்றனர்". ஆட்டோ சங்கருக்கு நல்ல பெற்றோர் கிடைத்திருந்தால் அவன் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டான். புத்தகத்தை முழுமையாய் முடித்தபின் இதுபற்றி தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.

வேதியியலா...? வேசியியலா...?
நீண்ட நாட்களாகவே தியான சாமியார்கள் பற்றி இருந்துவந்த மனக்குழப்பம் இப்போது தீர்ந்திருக்கிறது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்", "கதவைத் திற காற்று வரட்டும், மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்", அத்தனைக்கும் ஆசைப்படு", "ரஞ்சிதா ***க்கும் ஆசைப்படு" என்று மையமாக எதையாவது கூறி தியான வியாபாரம் செய்து வந்த கும்பலின் குட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. எப்படியோ என் தமிழ் மக்களுக்கு இதன் மூலமாக கொஞ்சமாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் "நித்தி சரியில்லை ஜக்கியிடம் போவோம்" என்று சென்றால் பிள்ளைவரம் வாங்கிக்கொண்டு திரும்பவேண்டியதுதான்.
இதுவரை தரிசனம் காணாத பக்தர்களுக்காக:

எப்படியோ தேடிக்கண்டுபிடித்து நித்யானந்தர் - ரஞ்சிதா உல்லாச லீலைகளை பார்த்து பாவ விமோட்சனம் அடைந்துவிட்டேன்.  காட்சிகளை விட நக்கீரனின் "நகிர்தனா... திரனனா..." பேக்ரவுண்ட் பாடல் மனதை மிகவும் கவர்ந்தது. என்னைப்போல நீங்களும் கவரப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை சொடுக்கி அந்த பாடலை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

நடுத்தர வயதினர் சிலர் பர்மா பஜாரில் திருட்டு முழியோடு சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. வீடியோவில் நித்யா துள்ளிக்குதித்து எழுந்தருளிய காட்சியை பார்த்தீர்களா...? ச்சே... சான்சே இல்லை... நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். பேசாமல் கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நித்தியானந்தரையும் ரஞ்சிதாவையும் வைத்து எடுத்திருக்கலாம்.  நித்தியாவது டைட்டிலில் "யங் சூப்பர் ஸ்டார்" என்று போட வேண்டுமென அடம் பிடித்திருக்க மாட்டார். நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் இடையில் இருப்பது வேதியியலா வேசியியலா என்று புரியவில்லை.

யார் அடுத்த நித்தியானந்தர்...?
பிரேமானந்தா, சதுர்வேதி, ஜெயந்திரர், தேவநாதன், நித்தியானந்தர் இவர்களது வரிசையில் அடுத்து வரப்போவது யார்...? (புட்டபர்த்தி சாய் பாபாவை ஏற்கனவே ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கி விட்டாலும் மக்கள் இன்னமும் திருந்திய பாடில்லை). ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சிவசங்கர் பாபா, அமிர்தானந்தமயி, என்று ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம பேவரிட் கங்காரு... ஸாரி பங்காரு அடிகளார் பற்றி பேசுவோம்.

இப்பொழுதே பங்காருவைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அம்மாவுக்கு இப்பொழுதே வயது எழுபதை கடந்துவிட்டது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் இறைவனடி சேர்ந்துவிடுவார். அதுமட்டும் நடந்துவிட்டால் இப்போது சாமியாராக திரிபவரை சாமியாக்கி விடுவார்கள். அந்தக் கொடுமை நடப்பதற்குள் விழித்துக்கொள்வோம்.

ஏற்கனவே ஜெயலலிதாவும் அமிர்தானந்தமயியும் அம்மா என்ற வார்த்தைக்கு பெருமை தேடித்தந்தது போதாதென்று பங்காருவும் தன் பங்குக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது 72வது பிறந்தநாளில் 100 கோடியை நலத்திட்டங்களுக்காக மட்டுமே செலவிட்டிருக்கிறார். (எல்லாம் நம்ம வீட்டு பணம்தான்). நலத்திட்டதிற்கே இவ்வளவு தொகை என்றால் அடிகளாரின் சொத்துமதிப்பு எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். (ஐயோ எண்ண முடியாதுங்க... நினைத்து பாருங்கள்) முன்பொரு காலத்தில் அருள்வாக்கு சொல்வதில் ஆரம்பித்தவர் இன்று ஒரு ஊரையே சொந்தமாக்கி இருக்கிறார்.

அம்மா பங்காருவின் காலைக் கழுவி விடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவரது காலைக் கழுவி விடுவதற்கு 25.000, 30,000 என்று நன்கொடை கட்ட வேண்டுமாம். காலைக் கழுவுவதற்கு ஐம்பதாயிரம் வாங்கினால் குண்டியைக் கழுவி விட எவ்வளவு வாங்குவார் என்று தெரியவில்லை. 
என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்

செவ்வாடை தொண்டர்கள் யாராவது வாதாட விரும்பினால் வாருங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

13 February 2010

அஜித்குமாரும் ஆயிரத்தில் ஒருவனும்

வணக்கம் மக்களே...

ஒருவழியாக எனது வலைப்பூவை மொய்க்க தொடங்கிய sp, pandiyaraj k, Ramesh Murugesan, peace train, sweet prabha, வெற்றி ஆகியோருக்கு மெரீனா கடற்கரையோரம் சிலை வைக்கலாம். இவர்களில் peace train
ம் வெற்றியும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும். வலைப்பூ உலகிற்கு வருகைதந்த பட்டுக்கோட்டை பிரபாகருக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களும் விரைவில் வருவார்கள் என்று நம்புகிறேன். philosophy prabhakaran வலைப்பூ இந்த மாதத்தில் அரிய பல மாற்றங்களை காண இருக்கிறது.

மாற்றம்
எண் 1: தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்த பின்னர் வலைப்பூவின் மீது public பார்வை படத்தொடங்கிவிட்டது. எனவே இனி private பதிவுகளுக்கு தடா. கண்டிப்பாக சமூக பதிவுகள் மட்டும்.

மாற்றம்
எண் 2: புத்தக சந்தையில் வாங்கிய "பாமரன் பக்கம்" புத்தகத்தை புரட்டினேன். அந்த writing style என்னை மிகவும் கவர்ந்தது. அது மட்டுமில்லாமல் எனது எழுத்தை மேம்படுத்தும் நோக்கில் பத்து பன்னிரண்டு வலைப்பூக்களை பின்தொடர்ந்து வருகிறேன்.

மாற்றம்
எண் 3: blog உலகின் பல்வேறு பரிமாணங்களை கண்டு வியந்தேன். எண்ணிலடங்கா templates, எண்ணிலடங்கா gadgets. இவ்வாறாக இனி இந்த வலைப்பூவில் template, gadgets, fontstyle என்று அனைத்துமே விரைவில் மாற்றம் காண இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன்
காலம் கடந்த ஓரிரவில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கண்டேன். முதல்பாதி முழுவதுமே குறை சொல்லமுடியாதபடி கழிந்தது. சோழ இளவரசன் கடந்துபோன பாதை துவங்கியதும் படம் வேகமெடுத்தது. ஆங்காங்கே வேகத்தடையாக பாடல்கள். ஆண்ட்ரியாவின் அங்க அசைவுகள் தனித்துவம். இரண்டாம் பாதி ஆரம்பத்தில் இருந்து படம் டாடா டோகோமொவின் பட்டி நெட் போல ஆனது. celebration of life சிலிர்ப்படைய வைத்தது. கார்த்தி தான் சோழ மன்னனை தாய்தேசம் அழைத்துவரும் தூதுவன் என்று தெரிய வருவது வரை சூப்பர். அதன்பிறகு எல்லாமே சொதப்பல். அழகம்பெருமாளின் ஒரேயொரு போன்காலில் இராணுவமே சர்வ ஆயுதங்களோடு குவியும்போது, ரீமா, ஆண்ட்ரியா, கார்த்தி மட்டும் ஏன் ஏழு ஏழரைகளை கடந்து போகிறார்கள் என்பது விளங்கவில்லை. சோழ மக்களை ராணுவம் கொடுமைப்படுத்தும் காட்சி ஈழத்தை நினைவுபடுத்தியது. இறுதிப்போரில் சோழன் வெற்றியடைவதைப்போல காட்டியிருக்கலாம்.

திரிஞ்ச நினைவுகள்
பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் கடந்து வந்த பாதையில் நண்பர்கள் சிலர் தங்கள் மணிக்கட்டில் கறுப்பும் சிகப்புமாக பல கயிறுகளை கட்டியிருப்பார்கள். அந்த கயிற்றை தொட்டாலோ அவதூறு பேசினாலோ கொந்தளிப்பார்கள். அவர்களுக்காக ஒரு situatoion கவிதை :-

"மஞ்சள் நிறத்தில் ஒரு கயிறு மணிக்கட்டில்
கறுப்பு நிறத்தில் இன்னொன்று துணைக்கு
சிவப்பு நிறத்திலும் உண்டு
புரியாத வண்ணத்தில் மற்றொன்று
சே! சாயம் போன பழைய கயிறாம் அது
அம்மா தராத பாதுகாப்பை
அப்பா தராத பாதுகாப்பை
ஆசிரியர் சொல்லாத பாதுகாப்பை
உற்ற நண்பன் என்ன...
ஹமாம் பெற்றுத் தராத பாதுகாப்பை
அந்தக் கயிறுகள் அள்ளித் தருமென...
யார் திரித்த கயிறுகள் அவை...?"
- விஜயலட்சுமி

இதைப் படித்த பின்பாவது சம்பந்தப்பட்டவர்கள் கயிறுகளை கழட்டி எறிவார்கள் என்று நம்புகிறேன்.

DEAD OR ALIVE
அவர் இருக்கிறாரா...? இல்லையா...?
யார்...? கடவுளா...?
இல்லையில்லை... கடவுள் இல்லையென்பது எப்போதோ தெளிவாக தெரிந்துவிட்டது. இப்போது கேட்பது தலைவர் பிரபாகரன் பற்றி. தலைவரின் நிலை பற்றி ஊடகங்கள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாகசெய்திகளை வெளியிட்டபடி உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக நக்கீரன் கிராபிக்ஸ் கலக்கலெல்லாம் காட்டிக்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் ஒரு மாவீரனை ஊடகங்கள் ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. இனி தலைவர் இருந்தாலும் இறந்தாலும் ஒன்று தான். ஏற்கனவே ஈழ இனம் அழிந்து அந்த இடத்தில் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

இட்லிவடை
வலைப்பூவை மேம்படுத்துவதற்காக பல்வேறு வலைப்பூக்களை வண்டாக மாறி மொய்க்க தொடங்கியிருந்தேன். நான் பார்த்த வலைப்பூக்களில் என்னை அதிகம் கவர்ந்ததும் இட்லிவடை. கார்ட்டூன் கந்தசாமி, கடுகு தாளிப்பு, லின்க்ஸ் லிங்குசாமி, சிந்திக்கும் சிவராமன், ஜோக்ஸ் ஜோதிகா, லார்டு லபக்கு தாஸ், மொபைல் மீனா, ஒரே கேள்வி ஒரே பதில், பயாஸ்கோப் பலராமன் என்று சைட்பார் முழுவதும் சைட் டிஷ் கலக்கல். நேரம் கிடைக்கும்போது ஒரு டிபன் ட்ரிப் அடித்துவிட்டு வாருங்கள்.

இந்த வார நகைச்சுவை
"அரசியலை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் என்னிடமே உள்ளது."
- பால் தாக்கரே
இந்த வார கருத்து
"successful people do not relax in chairs. they relax in their works."

இந்த வார கவிதை
"இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் வசிப்பவனுக்கு என்றுமே வாய்த்தது இல்லை விரைவுப் பேருந்தின் இருக்கை...!"
- ஆர்.வேணுகோபால்

அஜித் + அஜித்
அமர்க்களபடுத்தும்


இந்த வார பூச்செண்டு
சரி தலைப்பு கொண்ட கருத்துக்கு வருவோம். கலைஞருக்காக தெருவுக்கு தெரு நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாராட்டுவிழாக்களில் ஒன்றாக திரையுலகினர் ஒன்றினை நடத்தித் தொலைத்தார்கள். விழாவில் பேசிய அனைவரும் (கமல், விஜய் உள்பட) மேடைபேச்சுக்காக கலைஞரை புகழ்ந்துவிட்டுப்போக அஜித் மட்டும் உண்மையை பேசி இருக்கிறார். அப்படி என்னதான் பேசினார் :-

"மூன்று அடியில் உலகை அளந்த கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஐந்தரை அடி உயரத்தில் ஒரு தமிழ்நாட்டை முதல்வர் உருவத்தில் பார்க்கிறேன். திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் கொடுத்ததற்காக, அவரை பாராட்டினால் அது சுயநலம். அறுபது வருடத்துக்கும் மேலாக தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன். தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலன்று நன்றி தெரிவிப்பதை போல, இந்த சூரியனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். சினிமா உலகிற்கு நிறைய சலுகைகள் செய்திருக்கிறீர்கள். சமீப காலமாக சினிமா துறையினர் மீது கோபம் இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் அவர்கள் தலையிடுவதால். சென்சிட்டிவான விஷயங்களில் இன்டஸ்ட்ரி தலையிட வேண்டியதில்லை என்று சொல்லுங்கள். இங்கிருக்கிற ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள். நாங்களும் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். காவிரியில் தண்ணீர் விடவில்லை என்றால் நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துகொள்ளுங்கள். நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது? சினிமா எளிதானதல்ல. புதுமுகமாக இருந்தாலும் ஸ்கிரீன் டெஸ்ட் செய்துதான் வருகிறார்கள். ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள். அப்படி உழைத்தால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு பக்கம் எங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்; வந்தால் மிரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் வரட்டுமே. முதல்வர் இதற்கு முடிவு சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகத்துக்குக் கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்"

பேசி முடித்ததும் சூப்பர் ஸ்டார் தான் சொல்ல முடியாததை சொல்லிவிட்டானே என்று standing oviation கொடுத்தார்.

இந்த வார குட்டு
குட்டு என்றால் தலையில் தான் வைப்பார்கள். இந்த வார குட்டும் தலைக்குத்தான். ஏதோ பெருந்தன்மையாக அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறப்பது போல ஒரு பேட்டியை கொடுத்தார். ஊடகங்கள் புகழ்ந்து தள்ள ஒரு வாரம் கடந்தபின் உண்மை கசிந்துவிட்டது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்திருக்கிறார் அய்யா. ஆயிரம் பெரியார்கள் அணிவகுத்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

தல ரசிகர்கள் என்னை குட்ட போகிறார்களா பூச்செண்டு கொடுக்க போகிறார்களா என்று தெரியவில்லை.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment