18 March 2010

தமிழ்ப் படம் கற்றுத்தந்த பாடங்கள்

வணக்கம் மக்களே...

கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கும். என்ன செய்வது...? பூமிக்கும் பண்டோராவுக்கும் உள்ள இடைவெளியை விட எனதிரு பதிவுகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதாக நண்பர்கள் கண்டித்ததால் அவசரமாக இந்த பதிவைப் போடுகிறேன். அது மட்டுமல்ல. மருவத்தூர் பதிவு, அதற்கு ஷிவு போட்ட பின்னூட்டங்கள், சுரேஷுக்கு ஒரு கடிதம் என்று தொடர்ந்து சீரியஸாக போய்க்கொண்டிருந்தால் நமது ஹியுமர் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமென்ற பயத்தில் இந்த பதிவைப் போடுகிறேன்.
படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் படத்தை பார்க்க முடிந்தது. படத்தில் கதை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் விக்கிப்பீடியாவில் மட்டும் பக்கம் பக்கமாக என்னதான் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் தமிழ்ப்படத்தை எப்படி ரசித்தார்களோ, அப்படித்தான் நான் வழக்கமாக பேரரசு, ஹரி படங்களையும் ரசிப்பேன். அந்த வரிசையில் சிவகாசி படத்திற்குப்பின் நான் குலுங்கிச்சிரித்த ஒன்றுதான் தமிழ்ப்படம்.

நாலு லொள்ளு சபா எபிசோடை ஒரே டேக்கில் பார்த்த ஒரு பீலிங். டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கமல் சொன்னது போல கடைசி வரை அதை மெயின்டெயின் பண்ணவும் செய்திருக்கிறார்கள். ஈவன், நாயகன் மற்றும் நாயகியின் பாத்திரங்களின் பெயரில்கூட கலாய்ப்பதை விட்டுவைக்கவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்களேன், முக்கால்வாசி கமர்ஷியல் சினிமாக்களில் நாயகன் பெயர் ஷிவாவாகவும் நாயகியின் பெயர் ப்ரியாவாகவும் தான் இருக்கும்.
கிழக்கே போகும் ரயில், கருத்தம்மாவில் ஆரம்பித்து கந்தசாமி வரை கிழித்திருந்தார்கள். நடிகர்களில் பாக்யராஜ், ராமராஜன் தொடங்கி சிம்பு வரை கலாய்த்திருக்கிறார்கள். முப்பதிற்கும் மேற்ப்பட்ட படங்கள் பஞ்சராக்க பட்டிருக்கிறது. அவற்றுள் எனக்கு பிடித்த நான்கினை மட்டும் போல்ஸில் இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்த காட்சியில் வாக்களித்து விடுங்கள்.
ஏற்கனவே படத்தை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சில எச்சரிக்கைத்துளிகள்:
1. சிறுவர்கள் யாரும் ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து பெடலை சுற்ற வேண்டாம். பின்னர் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
2. சிவாவைப் போல பரதம் ஆட யாரும் முயற்ச்சிக்க வேண்டாம். படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் தேர்ந்த நிபுணர்களால் பலத்த பாதுக்காப்புகளுக்கு மத்தியில் செய்யப்பட்டது.
3. படத்தில் காட்டப்படும் P.R.S. கள்ளிப்பால் விற்பனைக்குட்பட்டது அல்ல. டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று P.R.S கள்ளிப்பால் தான் வேண்டுமென யாரும் அடம் பிடிக்க வேண்டாம்.
படம் பார்த்த பின்பு இன்னமும் கூட கலாய்த்திருக்கலாமோ என்று தோன்றியது. அவ்வாறாக இயக்குனர் தவறவிட்ட சில சிக்சர்கள்:
1. வண்டிக்கடைகள் சிதற, மண்பானைகள் நொறுங்க, பொதுமக்கள் தெறித்து ஓட, என்பதுகளில் வெளிவந்த கிராமத்து படங்களில் காட்டப்பட்ட சந்தைக்கடை சண்டைக்காட்சி மிஸ்ஸிங்.
2. பாய்ஸ் பட பாணியில் யூத்துக்கள் பட்டாபி, வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா அறிமுகமாவது அமர்க்களம். ஆனால் பார்த்திபன் அல்லது கெளதம் மேனன் வாய்ஸில் ஒவ்வொரு யூத்துக்கும் ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கலாம்.
3. விக்ரமன் படங்களில் வருவது போல "காதல்ங்கறது..." என்று ஆரம்பிக்கக்கூடிய தத்துபித்துவ வசனங்கள் இல்லாதது எனக்கு ரொம்பவே வருத்தம். அட்லீஸ்ட் பேக்ரவுண்டில் "லா லா லா... லா லா லா..." என்று பாடும் சியர் கேர்ள்ஸையாவது கூப்பிட்டிருக்கலாம்.
4. அதிகமாக ஷங்கர் தனது படங்களில் பொதுமக்களை ஊறுகாயாக பயன்படுத்தும் ஒரு காட்சி: நாயகன் கைதாகும் போதோ அல்லது இக்கட்டான சூழலில் இருக்கும்போதோ மக்களுள் லோ கிளாஸ் முதல் ஹை கிளாஸ் வரை நாயகனுக்கு ஆதரவாக கமென்ட் கொடுப்பார்கள். அத்தகைய காட்சி எதுவும் இந்தப்படத்தில் இல்லை.
இது தவிர்த்து நாயகன் புலி பொம்மையோடு சண்டையிடும் காட்சியை ஏற்கனவே ஷாருக்கான் கிழித்துவிட்டதால் அது தேவையில்லை.
சரி சீரியஸான விஷயத்திற்கு வருவோம். படத்தை பார்த்தோம், சிரித்தோம். போதுமா...? சிந்திக்க வேண்டாமா...?
தமிழ்ப்படம் கற்றுத்தரும் பாடங்கள் என்னென்ன...?
1. இனியாவது "அசிலி பிசிலி", "டோல் டப்பி மா" என்று அர்தத்தம் புரியாத அல்கஞ்சாரி குல்கா பாடல்களை ஹிட்டாக்கக் கூடாது.
முக்கியமாக சன் மியுசிக்குக்கு கால் பண்ணி அத்தகைய பாடல்களை அக்காப்பொண்ணு அருக்கானிக்கு டெடிகேட் பண்ணக்கூடாது.
2. தாமு, வையாபுரி, சார்லியெல்லாம் அரியர் பேப்பர் கிளியர் பண்ணலை என்று சொல்லிக்கொண்டு காலேஜ் பக்கம் வந்தால் கூட யாரும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.
3. கழிவறையில் அமர்ந்தபடி ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆவது போல கனவு காண்பது தவறு. அதிலும் தொழிலதிபர் கனவு மிகவும் ஆபத்தானது. வேண்டுமானால் ஏ.ஆர்.ரகுமானைப் போல ஒரே பாடலில் உலகப்புகழ் அடைய முயலுங்கள்.
4. இனியாவது கிழவிகளை கட்டிப்பிடிக்கும் நாயகர்களை கண்டு சிலிர்க்க வேண்டாம். இப்படித்தான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஏமாற்றி வருகிறார்கள்.
5. the ultimate one: இனியாவது ஷங்கர், பேரரசு, ஹரி போன்றவர்களது படங்களைப் பார்த்து அடுத்தர்களது போதைக்கு ஊறுகாயாகாமல் இருங்கள்.


இது போல உங்களுக்கும் ஏதாவது தத்துபித்துவங்கள் தோன்றியிருந்தால் பின்னூட்டம் போட்டு பிதற்றிவிட்டு செல்லுங்கள். பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களை அந்த விரலை ஆட்டி நடிக்கும் தம்பி படத்தை நூறுமுறை போட்டுக் காட்டுங்கப்பா...
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

12 March 2010

சுரேஷுக்கு ஒரு கடிதம்

வணக்கம் மக்களே...

(தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, கோவா படத்தை விமர்சிப்பது, சங்கராச்சாரியை கிழிப்பது, பட்டாம்பூச்சியின் அடுத்த பாகத்தை பறக்க விடுவது இவற்றிற்கெல்லாம் முன்னதாக முக்கியமான ஒரு பதிவை எழுதி ஆகவேண்டிய சூழ்நிலை. இது முழுக்க முழுக்க ஒரு personal பதிவு. படிக்க விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம்.)
அன்புள்ள சுரேஷுக்கு,

தங்களது குறுந்தகவலை எனது இன்பாக்ஸில் பார்த்த நொடியில் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே அச்சுப்பிசகாமல் பதிவு செய்கிறேன்.

முதலாவதாக எனது வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கும் பின்னூட்டம் பதிவு செய்ததற்கும் நன்றிகள்.

சில மாதங்களுக்கு முன்னால் நான் எழுதிய நைட் ஷிப்ட் கட்டுரையில் உங்கள் அனுமதியின்றி உங்களைப் பற்றி சில வரிகள் எழுதியிருந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அந்தக் கட்டுரையில் இன்னும் காட்டமாக எனது கோபத்தை சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் எனது வலைப்பூ அலுவலகத்தில் பரவ ஆரம்பித்த அடுத்த நாளே கட்டுரையில் இருந்த சில வரிகளை நாகரிகமாக நீக்கிவிட்டேன். இருப்பினும் கட்டுரையில் இருந்த சில வரிகள் உங்களை காயப்படுத்தி இருக்கலாம். அதற்காக நான் மனமார வருந்துகிறேன்.

கட்டுரையை படித்தபின்பு நீங்கள் என்னை கண்டித்திருந்தாலோ, வேறு விதமாக செயல்பட்டிருந்தாலோ சத்தியமாக நான் அதற்காக துளியும் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். but the way u behaved is quite different. This is what Thiruvalluvar said,
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்"
நீங்கள் அனுப்பிய குருந்தகவலைப் படித்தபோது உண்மையில் நான் மனம் வருந்தினேன்.

கட்டுரையில் நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய எண்ணங்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. அதுதான் சரி என்றோ, நடந்தது இதுதான் என்றோ நான் கூறவில்லை. ஆனாலும் கலகலவென சுற்றித்திரிந்த சரவணனை கல்லாக மாற்றிய சம்பவம் எது என்பது உங்களுக்கும் நினைவிருக்கலாம்.

even விஷனும் நானும் கூட நைட் ஷிப்டில் இருக்கும்போது உங்களிடம் முரண்பட்டே இருந்தோம். விஷனுக்கும் எனக்கும் இருக்கும் உணர்வு ஒற்றுமையை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் விஷன் பக்கத்தில்தான் login செய்வேன் என்று அடம் பிடித்ததெல்லாம் இதற்காகத்தான்.

இதுவரை நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் நைட் ஷிப்டில் நடந்து முடிந்தவை. இனி எழுதப்போகும் வரிகள் அனைத்தும் சில வாரங்களுக்கு முன்பு நான் அக்பர் அணிக்கு மாற்றப்பட்டபோது எழுத நினைத்த வரிகள்.

ஒரு காலத்தில் எப்படியாவது இந்த அணியை விட்டு வெளியேறினால் போதுமென நினைத்திருக்கிறேன். ஆனால் நான் அக்பர் அணிக்கு மாற்றப்பட்டபோது நான் இருந்த மனநிலை எனக்கு மட்டும்தான் தெரியும். ஆர்.சதீஷை பார்த்து பொறாமை பட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நிரஞ்ச் உங்களைத் திட்டும்போதும், நாங்கள் செய்த தவறுகளுக்காக உங்களுக்கு அனுப்பப்படும் மெயில்களை பார்த்தபோதும் உங்களது point of viewல் இருந்து சில உண்மைகளை உணர்ந்துக்கொண்டேன்.

தளத்திலேயே உங்களைப் போல சிறப்பாக பணியாற்றக்கூடிய அணித்தலைவர் யாரும் கிடையாது. Here i like to use the word "dedication". எந்த ஒரு அணியும் நமது அணியைப் போல systematicக்காக இருந்ததில்லை. நான் உங்களுடன் இருந்த மனக்கசப்புகளை மறந்து எப்போதோ உங்களுடன் இணைந்து எனக்காகவும் அணிக்காகவும் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். இதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள். உணரவில்லை என்றால் இப்போது உணர்ந்துக்கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். sincerity, dedication, punctuality, politeness இதுபோன்ற பல வார்த்தைகளுக்கான அகராதியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.

என் வாழ்வில் என்றைக்குமே நான் உங்களைப் போல ஒரு மாமனிதரை மறக்கமாட்டேன். U R A GREAT PERSONALITY. IM ADMIRING U.

என்னுடைய கருத்துக்கும் மதிப்பளித்து இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி. இது மட்டுமல்லாமல் நான் எழுதிய, எழுதும் சமூகப்பதிவுகளையும் நீங்கள் படித்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.

(பி.கு.: எனக்கு சொம்படித்து பழக்கமில்லை. சொம்படிக்கவும் தெரியாது. நான் எனது மனதில் தோன்றிய கருத்துக்களை மட்டுமே எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன்.)
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment