13 February 2010

அஜித்குமாரும் ஆயிரத்தில் ஒருவனும்

வணக்கம் மக்களே...

ஒருவழியாக எனது வலைப்பூவை மொய்க்க தொடங்கிய sp, pandiyaraj k, Ramesh Murugesan, peace train, sweet prabha, வெற்றி ஆகியோருக்கு மெரீனா கடற்கரையோரம் சிலை வைக்கலாம். இவர்களில் peace train
ம் வெற்றியும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும். வலைப்பூ உலகிற்கு வருகைதந்த பட்டுக்கோட்டை பிரபாகருக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களும் விரைவில் வருவார்கள் என்று நம்புகிறேன். philosophy prabhakaran வலைப்பூ இந்த மாதத்தில் அரிய பல மாற்றங்களை காண இருக்கிறது.

மாற்றம்
எண் 1: தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்த பின்னர் வலைப்பூவின் மீது public பார்வை படத்தொடங்கிவிட்டது. எனவே இனி private பதிவுகளுக்கு தடா. கண்டிப்பாக சமூக பதிவுகள் மட்டும்.

மாற்றம்
எண் 2: புத்தக சந்தையில் வாங்கிய "பாமரன் பக்கம்" புத்தகத்தை புரட்டினேன். அந்த writing style என்னை மிகவும் கவர்ந்தது. அது மட்டுமில்லாமல் எனது எழுத்தை மேம்படுத்தும் நோக்கில் பத்து பன்னிரண்டு வலைப்பூக்களை பின்தொடர்ந்து வருகிறேன்.

மாற்றம்
எண் 3: blog உலகின் பல்வேறு பரிமாணங்களை கண்டு வியந்தேன். எண்ணிலடங்கா templates, எண்ணிலடங்கா gadgets. இவ்வாறாக இனி இந்த வலைப்பூவில் template, gadgets, fontstyle என்று அனைத்துமே விரைவில் மாற்றம் காண இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன்
காலம் கடந்த ஓரிரவில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கண்டேன். முதல்பாதி முழுவதுமே குறை சொல்லமுடியாதபடி கழிந்தது. சோழ இளவரசன் கடந்துபோன பாதை துவங்கியதும் படம் வேகமெடுத்தது. ஆங்காங்கே வேகத்தடையாக பாடல்கள். ஆண்ட்ரியாவின் அங்க அசைவுகள் தனித்துவம். இரண்டாம் பாதி ஆரம்பத்தில் இருந்து படம் டாடா டோகோமொவின் பட்டி நெட் போல ஆனது. celebration of life சிலிர்ப்படைய வைத்தது. கார்த்தி தான் சோழ மன்னனை தாய்தேசம் அழைத்துவரும் தூதுவன் என்று தெரிய வருவது வரை சூப்பர். அதன்பிறகு எல்லாமே சொதப்பல். அழகம்பெருமாளின் ஒரேயொரு போன்காலில் இராணுவமே சர்வ ஆயுதங்களோடு குவியும்போது, ரீமா, ஆண்ட்ரியா, கார்த்தி மட்டும் ஏன் ஏழு ஏழரைகளை கடந்து போகிறார்கள் என்பது விளங்கவில்லை. சோழ மக்களை ராணுவம் கொடுமைப்படுத்தும் காட்சி ஈழத்தை நினைவுபடுத்தியது. இறுதிப்போரில் சோழன் வெற்றியடைவதைப்போல காட்டியிருக்கலாம்.

திரிஞ்ச நினைவுகள்
பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் கடந்து வந்த பாதையில் நண்பர்கள் சிலர் தங்கள் மணிக்கட்டில் கறுப்பும் சிகப்புமாக பல கயிறுகளை கட்டியிருப்பார்கள். அந்த கயிற்றை தொட்டாலோ அவதூறு பேசினாலோ கொந்தளிப்பார்கள். அவர்களுக்காக ஒரு situatoion கவிதை :-

"மஞ்சள் நிறத்தில் ஒரு கயிறு மணிக்கட்டில்
கறுப்பு நிறத்தில் இன்னொன்று துணைக்கு
சிவப்பு நிறத்திலும் உண்டு
புரியாத வண்ணத்தில் மற்றொன்று
சே! சாயம் போன பழைய கயிறாம் அது
அம்மா தராத பாதுகாப்பை
அப்பா தராத பாதுகாப்பை
ஆசிரியர் சொல்லாத பாதுகாப்பை
உற்ற நண்பன் என்ன...
ஹமாம் பெற்றுத் தராத பாதுகாப்பை
அந்தக் கயிறுகள் அள்ளித் தருமென...
யார் திரித்த கயிறுகள் அவை...?"
- விஜயலட்சுமி

இதைப் படித்த பின்பாவது சம்பந்தப்பட்டவர்கள் கயிறுகளை கழட்டி எறிவார்கள் என்று நம்புகிறேன்.

DEAD OR ALIVE
அவர் இருக்கிறாரா...? இல்லையா...?
யார்...? கடவுளா...?
இல்லையில்லை... கடவுள் இல்லையென்பது எப்போதோ தெளிவாக தெரிந்துவிட்டது. இப்போது கேட்பது தலைவர் பிரபாகரன் பற்றி. தலைவரின் நிலை பற்றி ஊடகங்கள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாகசெய்திகளை வெளியிட்டபடி உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக நக்கீரன் கிராபிக்ஸ் கலக்கலெல்லாம் காட்டிக்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் ஒரு மாவீரனை ஊடகங்கள் ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. இனி தலைவர் இருந்தாலும் இறந்தாலும் ஒன்று தான். ஏற்கனவே ஈழ இனம் அழிந்து அந்த இடத்தில் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

இட்லிவடை
வலைப்பூவை மேம்படுத்துவதற்காக பல்வேறு வலைப்பூக்களை வண்டாக மாறி மொய்க்க தொடங்கியிருந்தேன். நான் பார்த்த வலைப்பூக்களில் என்னை அதிகம் கவர்ந்ததும் இட்லிவடை. கார்ட்டூன் கந்தசாமி, கடுகு தாளிப்பு, லின்க்ஸ் லிங்குசாமி, சிந்திக்கும் சிவராமன், ஜோக்ஸ் ஜோதிகா, லார்டு லபக்கு தாஸ், மொபைல் மீனா, ஒரே கேள்வி ஒரே பதில், பயாஸ்கோப் பலராமன் என்று சைட்பார் முழுவதும் சைட் டிஷ் கலக்கல். நேரம் கிடைக்கும்போது ஒரு டிபன் ட்ரிப் அடித்துவிட்டு வாருங்கள்.

இந்த வார நகைச்சுவை
"அரசியலை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் என்னிடமே உள்ளது."
- பால் தாக்கரே
இந்த வார கருத்து
"successful people do not relax in chairs. they relax in their works."

இந்த வார கவிதை
"இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் வசிப்பவனுக்கு என்றுமே வாய்த்தது இல்லை விரைவுப் பேருந்தின் இருக்கை...!"
- ஆர்.வேணுகோபால்

அஜித் + அஜித்
அமர்க்களபடுத்தும்


இந்த வார பூச்செண்டு
சரி தலைப்பு கொண்ட கருத்துக்கு வருவோம். கலைஞருக்காக தெருவுக்கு தெரு நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாராட்டுவிழாக்களில் ஒன்றாக திரையுலகினர் ஒன்றினை நடத்தித் தொலைத்தார்கள். விழாவில் பேசிய அனைவரும் (கமல், விஜய் உள்பட) மேடைபேச்சுக்காக கலைஞரை புகழ்ந்துவிட்டுப்போக அஜித் மட்டும் உண்மையை பேசி இருக்கிறார். அப்படி என்னதான் பேசினார் :-

"மூன்று அடியில் உலகை அளந்த கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஐந்தரை அடி உயரத்தில் ஒரு தமிழ்நாட்டை முதல்வர் உருவத்தில் பார்க்கிறேன். திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் கொடுத்ததற்காக, அவரை பாராட்டினால் அது சுயநலம். அறுபது வருடத்துக்கும் மேலாக தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன். தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலன்று நன்றி தெரிவிப்பதை போல, இந்த சூரியனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். சினிமா உலகிற்கு நிறைய சலுகைகள் செய்திருக்கிறீர்கள். சமீப காலமாக சினிமா துறையினர் மீது கோபம் இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் அவர்கள் தலையிடுவதால். சென்சிட்டிவான விஷயங்களில் இன்டஸ்ட்ரி தலையிட வேண்டியதில்லை என்று சொல்லுங்கள். இங்கிருக்கிற ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள். நாங்களும் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். காவிரியில் தண்ணீர் விடவில்லை என்றால் நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துகொள்ளுங்கள். நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது? சினிமா எளிதானதல்ல. புதுமுகமாக இருந்தாலும் ஸ்கிரீன் டெஸ்ட் செய்துதான் வருகிறார்கள். ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள். அப்படி உழைத்தால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு பக்கம் எங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்; வந்தால் மிரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் வரட்டுமே. முதல்வர் இதற்கு முடிவு சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகத்துக்குக் கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்"

பேசி முடித்ததும் சூப்பர் ஸ்டார் தான் சொல்ல முடியாததை சொல்லிவிட்டானே என்று standing oviation கொடுத்தார்.

இந்த வார குட்டு
குட்டு என்றால் தலையில் தான் வைப்பார்கள். இந்த வார குட்டும் தலைக்குத்தான். ஏதோ பெருந்தன்மையாக அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறப்பது போல ஒரு பேட்டியை கொடுத்தார். ஊடகங்கள் புகழ்ந்து தள்ள ஒரு வாரம் கடந்தபின் உண்மை கசிந்துவிட்டது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்திருக்கிறார் அய்யா. ஆயிரம் பெரியார்கள் அணிவகுத்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

தல ரசிகர்கள் என்னை குட்ட போகிறார்களா பூச்செண்டு கொடுக்க போகிறார்களா என்று தெரியவில்லை.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

20 comments:

உண்மைத்தமிழன் said...

வலையுலகத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்..

வருக.. வருக.. வருக..!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாங்க தல.,

settaikkaran said...

அண்ணே, நானும் வந்திட்டேன்! எனக்கு சிலையெல்லாம் வைக்காதீங்க! நீங்க சிலை வைப்பீங்க; ஆட்சி மாறிச்சுன்னா யாராவது வந்து உலை வைப்பாங்க! எதுக்கு வம்பு? வாழ்த்துக்கள்!!

வெற்றி said...

//மெரீனா கடற்கரையோரம் சிலை வைக்கலாம்.//

எதுக்கு? அப்புறம் இன்னொருதவங்க வந்து அதை எடுத்து மியூசியத்துல வைக்கவா :)

//வெற்றியும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால்//

அறிமுகப்படுத்திக்கிற அளவுக்கு பெரிய ஆள் இல்லீங்க..என்னோட தளத்துக்கு வந்து பாருங்க..

//எனது எழுத்தை மேம்படுத்தும் நோக்கில் பத்து பன்னிரண்டு வலைப்பூக்களை பின்தொடர்ந்து வருகிறேன்.//

இதிலெல்லாம் குறையே வைக்க கூடாது..குறைந்தது ஆயிரம் பேரையாவது பின்தொடர்ந்தால் தான் அரை பிளாக்கன் அப்படின்னு வலை சாஸ்திரம் சொல்லுது.. :))

Anonymous said...

இந்த வார குட்டு


இந்த வார பூச்செண்டு

-தலைப்புகளை தவிர்த்து இருக்கலாம்

வேறு பெயர் சூடி இருக்கலாம்

if so (you know the mean of if so) then why you did'nt go for like article வருங்கால தொழில்நுட்பம்
it may use full and interesting....


இந்த வார கவிதை
"இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் வசிப்பவனுக்கு என்றுமே வாய்த்தது இல்லை விரைவுப் பேருந்தின் இருக்கை...!"
- ஆர்.வேணுகோபால்

good...

I was impressed by your last articles but not this time ...expecting much..

and one more thing to ask you why the head line is in english??(Philosophies Redefined)...

-by Ramesh

senthamil said...

mama ithu etharpaththa alavukku illa da

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

@உண்மைத் தமிழன்(15270788164745573644)
மிக்க நன்றி... தங்களது truetamilans வலைப்பதிவை கண்டேன்... தங்களது நான்காண்டு பதிவுகளை நான் படித்து முடிக்க நாட்கள் பல ஆகும்... நேரம் கிடைத்தால் தங்கள் அனுபவங்களை சொல்லிக்கொடுங்கள்...

Philosophy Prabhakaran said...

@SUREஷ் (பழனியிலிருந்து)
உண்மைத்தமிழனுக்கு அளித்த பதில் உங்களுக்கும் அச்சு அசலாக பொருந்தும்... தங்களது கனவுகளே பதிவை பின்தொடர ஆரம்பித்து இருக்கிறேன்... மற்ற இரு பதிவுகளும் எனக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாதது... எனவே மன்னிக்கவும்...

Philosophy Prabhakaran said...

@சேட்டைக்காரன்
நன்றி... தங்களது பதிவை கொஞ்சம் தாமதமாகவே கண்டேன்... "கண்டிப்பா சிரிச்சே ஆகணும்" என்ற புதுப்பதிவை எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

@வெற்றி
நெஞ்சினிலே பதிவை கண்டேன்... நம்ம frequencyக்கு தகுந்த வலைப்பதிவுகள் சிலவற்றை அறிமுகப்படுத்துங்கள்...

Philosophy Prabhakaran said...

@Ramesh
அய்யா ஞாநியின் எழுத்துக்களை ஆண்டாண்டுகாலமாக படித்து வருவதால் அத்தகைய வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை... but till now i cant able to understand the meaning of "if so..." என்னவென்று நேரடியாகவே சொல்லிவிடுங்கள்...

please dont expect so much from me... im an initial blogger only...

ஆரம்பித்த நேரத்தில் தோன்றிய வார்த்தை தான் "philosophies redefined..." தங்களுக்கு ஏதேனும் நல்ல தமிழ் தலைப்புக்கள் மனதில் பட்டால் சொல்லுங்கள்...

Philosophy Prabhakaran said...

@senthamil
நீ ஏன் எதிர்பாக்குற...?

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க :)

Philosophy Prabhakaran said...

@சே.குமார்
தங்களது பதிவுகளில் எதை முதலில் படிப்பது என்று குழப்பம்... எனினும் நெடுங்கவிதைகள் சிறப்பு... முன்னதாகவே பார்த்திருந்தால் அங்கே இருந்து சில கவிதைகளை ஆட்டையைபோட்டிருப்பேன்...

Philosophy Prabhakaran said...

@சுடுதண்ணி
நன்றி... சுடுதண்ணி வலைப்பதிவை கண்டேன்... சில நாட்களாக தொடர்ந்துவரும் என் குழப்பத்தை தீர்த்துவைக்க நீங்கள் தான் சரியான நபர்... இந்த google buzz மற்றும் twitter இவற்றை பற்றி கொஞ்சம்சொல்லிக்கொடுங்களேன்...

Anonymous said...

The way u framed is simply good..Kavidhaigal about ur butterfly is superb..Sutta kavidhai endralum kavignanaga katugindradhu..andha butterflyku konjam over..

premkumar said...

I didn't expect the way you narrate each line.First of all i salute to your fluency in Tamil.I really enjoyed while reading dead or alive? i know your answer from the college days itself. I expected these story very early from this blog. please one request try to write article on your bad habits in college .

Anonymous said...

Ajith gave up his title as "Ultimate Star", the reason may be astrological or his maturity... but astrologist usually tell changes in the name... like adding few letters or new names... they will not just ask anyone to give up the name/title. So, the news about astrological reasons may be bogus... or other people who are competitors to Ajith or people who are not willing to give up their titles may spread this rumor... we sould not pay attention to these kind of rumors... Ajith not only gave up his title, also there was no PUNCH DIALOGUEs in the movie... which is a good example and saw the movie in theatre only for this reason... Lets appreciate all actors who are ready to giv-up such titles, punch dialogues, hero worship and opening songs...

ஷாஜி said...

Lets appreciate all actors who are ready to giv-up such titles, punch dialogues, hero worship and opening songs...