24 February 2010

அவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 1

வணக்கம் மக்களே...

(மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது...)

followers எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடன் இணைந்த உண்மைத்தமிழன், SUREஷ், சேட்டைக்காரன் (நல்லவேளை... வேட்டைக்காரன் இல்லை) ஆகியோருக்கு நன்றி. சிலை வைக்கவில்லை என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். பின்னூட்டம் எழுதிய நண்பர்களுக்கு அங்கேயே பதிலளித்துள்ளேன்.


தேடித்தேடி ஓட்டளிப்பு பட்டைகள் சிலவற்றை இணைத்துள்ளேன். இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.
 
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில் அடுத்த பதிவுக்கான அக்கினிக்குஞ்சு (spark) கிடைத்தது. ஆனால் எவ்வளவோ சிந்தித்தும் தலைப்பை தாண்டி எதுவும் பிடிபடவில்லை. பிப்ரவரி முப்பதாம் தேதி வந்தாலும் எனக்கு கவிதை வராது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. எனவே துளியும் தாமதப்படுத்தாமல் பரணில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆனந்த விகடன்களையும் தபூ சங்கரையும் புரட்டினேன். இரண்டு பதிவுகளுக்கான matter ஒற்றை இரவிலேயே கிடைத்தது.

குறிப்பு: இது sweet பிரபாவின் கவிதைப்பதிவுக்கு போட்டியாக எழுதப்பட்டதல்ல...

அந்த நேரத்தில், அந்தி நேரத்தில் முன்னூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை ரசித்தாலும் அனைத்தையும் copy, paste செய்துவிடவில்லை. முத்தான முப்பது கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை இரண்டாக பிரித்தேன். அதென்ன முத்தான கவிதைகள்...

எனது பட்டாம்பூச்சி மீதான என் உணர்வுகளைச் சொல்லும் கவிதைகள் மட்டும் இங்கே : -

முன் குறிப்பு: பதிவைப் படிக்கும் நண்பர்கள் யாரும் யாரந்த பட்டாம்பூச்சி
என்றோ, பட்டாம்பூச்சி பெயர்க்காரணம் குறித்தோ வினவ வேண்டாம்.

இந்த இரவையே
உனக்கு கடிதமாக அனுப்புகிறேன்...
அஞ்சல்தலையாய் அந்த நிலா...!
*****
எத்தனை குதிரைச் சக்தி கொண்டதோ...?
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும் 
உன் குதிரை வால் கூந்தல்...!
*****
நான் கிளையானபோது பூவானாய்...
கிடாரானபோது கம்பியானாய்...
காதலானபோது ஏன் மௌனமானாய்...?
***** 
இன்னும் அதிகம் ரசிப்பதுண்டு...
என்னை அடித்துவிட்டு 
நீ அழுத நிமிடங்களை...!
*****
நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...
நான் நேசிக்கும்படி இருப்பது...!
*****
பொம்மையை நீ கொஞ்சாதே...
அதற்கு உயிர் வந்துவிட்டால் 
யார் வளர்ப்பது...?
*****
வீட்டுக்கு ஒரு
மரம்தானே வளர்ப்பார்கள்...?
உன் வீட்டில் மட்டும்
ஏன் மயில் வளர்க்கிறார்கள்...?
*****
கனிவானதொரு சொல்லோ...
நேசம் துளிர்க்குமொரு பார்வையோ...
சில்லரையற்ற பொழுதில் 
நீயெடுக்கும் பயனச்சீட்டோ...
போதுமானதாயிருக்கிறது
உன்னை நேசிக்க...!
*****
துடிப்பதைவிட 
உன்னை நினைப்பதற்கே 
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு...!
*****
நீ இரவுகளில் தூங்குவதே இல்லை...
என் கனவுகளில் அல்லவா இருக்கிறாய்....?
நானோ காலையிலும் எழுவதே இல்லை...
கனவுகள் கலையப் பிடிக்காமல்...!
*****
ஏற்கனவே பூத்த பூ தான் 
எனினும் நீ சூடும்போது 
மறுபடியும் பூக்கிறதே...!
***** 
என்னை நினைத்துக்கொண்டு உறங்கு 
என்றாய்...
அதற்குப் பதிலாய் 
கண்ணைத் திறந்துக்கொண்டு உறங்கு
என்று சொல்லியிருக்கலாம்...!
***** 
சிற்பம்...
கவிதை...
ஓவியம்...
இசை...
நான்கு முனைச் சந்திப்பு நீ...!
***** 
எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் கோலம் 
போடுகிறாய்...?
பேசாமல் 
வாசலிலேயே 
சிறிது நேரம் உட்கார்ந்திரு 
போதும்...!
***** 
என்னை நல்லவன் என்று 
நினைத்துக் கொண்டிருந்தேன்...
அந்த நினைப்பில் 
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்...!
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை ஆட்டையைப் போடச்சொல்லி 
நச்சரிக்கிறதே மனசு...!
*****
எல்லாச் சொற்களும் தீர்ந்துவிட்டன...
உன் புன்னகையின் வரி வடிவம் கொடேன்...
கொஞ்சம் கவிதை செய்கிறேன்...!
*****
அப்பாடா இப்போதான் மனதில் உள்ள பாரமே கொஞ்சம் குறைஞ்சிருக்கு... இப்போ ஒரு situation still... சும்மா சாப்பிடுங்க...
ம்ம்ம்... இது சும்மா sample தான். பலமான கவிதைகளை அடுத்த பதிவிற்காக பதுக்கியிருக்கிறேன். பிடித்திருந்தால் பின்னூட்டம் போடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

5 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படம் இன்னொரு கவிதை தலைவரே..,

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

Unknown said...

ANI

Konjam over build up antha pattampuchiku.. Vera ethavathu photo pottu irrukalam .. Jo photo try pannalam.. expecting ur second part.. first decide panna name eh u can keep.. tat was a wonderful one.. pattampuchikitta ellam itha pathi kekadha.. N i also want to knw d reason 4 this edition..

ப்ரியமுடன் வசந்த் said...

தலைப்பு நல்லா இருந்துச்சு ஏன் மாத்துனீங்க யாருக்காகவும் ஏன் மாத்துறீங்க தலைப்பே பல விஷயம் சொன்னது இப்போ பெயர் மாறிய தலைப்பு நோ குட்....

Muthu said...

Tamil la comment eluthanum nu than asai...Ana mudiyala...Unnuduya kavithai thoguppuku oru saalam...kavithai eluthunavanga verayaga irunthalum...Un rasipu thanmai ennai migavam pathithathu...Nan rasitha kavidhaigal niraya..Migavum rasithathu...எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்...?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு
போதும்...!
Ethana uvamaikum poruthamanatha antha pattampoochi ????????

Pattanpoochi yaru endru kandupidika mudiala eluthalare....

Guess pananumna...Unnoda chinna vayasula irundhe therinja pattam poochi nu ninakirennnMay be your relative...or childhood frd...

Unnudaya...karpanai anaithum arumai...
Kavidhai thogupuku kodo kodi nandri...

--------
Un Eluthin Rasigai,
Muthu.....