Showing posts with label poonam. Show all posts
Showing posts with label poonam. Show all posts

28 July 2013

நஷா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தியாவில் காந்திக்கு பிறகு அரை ஆடை மனிதர் என்று குறிப்பிடக்கூடிய தகுதி உள்ள ஒரே ஆள் – பூனம் பாண்டே ! இந்தியா கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றால் நிர்வாண நடை போடுவேன் என்று அறிக்கை விட்டு பலரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியவர். சொன்னபடி நடக்கவில்லை என்பது வேறு விஷயம், எனினும் அப்படிச் சொல்வதற்கே ஒரு ‘பெரிய மனது’ வேண்டும். (யாருப்பா அது ? இரண்டு வேண்டுமென்று கூட்டத்திலிருந்து சத்தம் போடுவது). அதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தா அடுத்த பதினஞ்சு நிமிஷத்துல குளிக்கப் போறேன்’, ‘இதோ இன்னொரு அரை மணி நேரத்தில் டவுசரை கழட்டப் போறேன்’ என்று சொல்லிச் சொல்லி போட்டோக்களை போட்டுத்தள்ளிய ஸ்ட்ரிப்டீஸிங் ராட்சசி. நிறைய இளைஞர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கியதே அம்மணியை பின்தொடரத்தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பூனம் பாண்டே குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிடப்போவதாக ட்வீட் போட்டால் போதும். டைம்லைனில் இருப்பவர்களுக்கெல்லாம் கை தேயத்தேய வேலை பார்ப்பார்கள் – வேறென்ன, கைகடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதற்கு தான் ! அப்படியெல்லாம் சமகால இளைஞர்களின் மத்தியில் எழுச்சி சிந்தனையை தூண்டிய பூனம் பாண்டேயின் முதல் (மற்றும் கடைசி ?) முழுநீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – நஷா !

நஷாவை பார்க்க முற்பட்டபோது முதலில் எனக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமே மிஞ்சியது. ஆதாகப்பட்ட சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்கில் மட்டுமே நஷா வெளியாகியிருக்கிறது என்றால் கோபம் வராதா என்ன ? அதுவும் ஒவ்வொரு காட்சி மட்டும் ! என்ன மாதிரியான சம்முவத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ? வெளியிட்ட திரையரங்குகளில் ஒன்று AGS, மற்றொன்று PVR. ஏஜிஎஸ்ஸில் சமயங்களில் ஆள் சேரவில்லை என்றால் காட்சியை ரத்து செய்துவிடுவார்கள். அதாவது நாம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வில்லிவாக்கம் வரை லொங்கு லொங்கென்று ஓடவேண்டும். அவர்கள் சுலபமாக காட்சியை ரத்து செய்துவிட்டு புக்கிங் சார்ஜ் போக டிக்கெட் விலையை மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். எனவே அமிஞ்சிக்கரைக்கு பயணித்தேன். டிக்கெட் கிடைப்பதில் பெரிய தள்ளு முல்லு எல்லாம் கிடையாது. அரங்கம் முழுக்க ஹிந்திவாலாக்கள். பாலின பேதமின்றி கூட்டம் சேர்ந்திருந்தது. இனி நஷா !

பூனம் பாண்டே சோப்பு நுரைகளை மட்டும் அணிந்தபடி குளிக்கும் காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. ஒருவேளை செண்டிமெண்டாக இருக்கலாம். கதை என்றால் பல்லாண்டுகளாக சீன் படங்களுக்கே உரித்தான ரதி நிர்வேத கதைதான். மேனிலை பள்ளியில் பயிலும் சில பதின்பருவ மாணவ / மாணவியரைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவன் தான் நம் நாயகன். அவருக்கு ஏற்கனவே ஒரு காதலியும் இருக்கிறாள். அச்சமயம் மாணவர்களை எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸில் ஈடுபடுத்தும் பொருட்டு பணியேற்கிறார் பூ.பா. பூ.பா.வைக் கண்டதும் மாணவர்கள் ஜொள்ளு வடிக்கின்றனர். மாணவிகள் பொறமை கொள்கின்றனர். நாயகன் மட்டும் இரவில் பூ.பா.வை நினைத்து சுயமைதுனம் செய்கிறார். கள்ளங்கபடமில்லாத பூ.பா மாணவர்களிடம் வெகு இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்றனர். இது எல்லா பயல்களுக்குள்ளும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாயகன் மட்டும் ஒருபடி மேலே போய் பூ.பா.வை காதலிப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

படத்தில் ட்விஸ்ட் என்பதால் புதிய பத்தியில் எழுதுகிறேன். பூ.பாவின் அஜானபாகுவான காதலர் கதையிலும் பூ.பாவின் சதையிலும் என்ட்ரி கொடுக்கிறார். சூடு பிடிக்கிறது ! பூ.பாவின் காதலருக்கும் நம்ம ஹீரோ பயலுக்கும் அடிக்கடி பனிப்போர் நடக்கிறது. ஒருநாள் இரவில் பூ.பாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து கட்டிலறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நாயகன். உள்ளே பூ.பா. அவருடைய காதலருடன் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருக்கிறார். வெளியில் சத்தம் கேட்டதும் உடலில் துணியை சுற்றிக்கொண்டு கையில் விளக்குடன் வருகிறார். துணி அருகிலிருக்கும் டேபிளில் சிக்கி அவிழ்ந்துக்கொள்ள நாயகன் முன்பு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறார். உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு புறமுதுகு தரிசனம் மட்டும் தான் ! இடைவேளை.

அடுத்தடுத்த டுவிஸ்டுகள். பூ.பாவின் காதலர் மாணவியர்களுள் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பூ.பாவிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். ப்ரேக் அப். அதேபோல நாயகனும் தன்னுடைய காதலிக்கு முன்பு ‘பழைய’ என்ற முன்வையை சேர்த்துவிடுகிறார். ஏற்கனவே தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால் நாயகன் மீது கோபமாக இருக்கிறார் பூ.பா. இருப்பினும் காதலரை பிரிந்துவாடும் அவருக்கு ஆறுதல் தேவை இல்லையா ? நாயகன் தோள் கொடுக்கிறார். முன்பைவிட நெருக்கமாக பழக துவங்குகின்றனர் – இருவரும் ஒன்றிணைந்து சரக்கடிக்கும் அளவிற்கு. நிற்க. பூ.பா இன்னமும் கள்ளங்கபடமில்லாமல் தான் பழகுகிறார். நாயகன் தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் பூ.பா வேலையை துறந்துவிட்டு ஊருக்கு செல்லத் தயாராகுகிறார். எஸ், நீங்கள் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பிட்டு வருகிறது – பூ.பாவின் வீட்டுக்குச் சென்று போக வேண்டாமென இறைந்து மன்றாடுகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் பூ.பாவுக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துவிடுகிறது. எனினும் இது தவறு என்றுணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் அடுத்த கட்டத்திலேயே உடைந்து உருகிவிடுகிறார். உதடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. உடல்கள் பினைந்துக்கொள்கின்றன. நாயகன் பூ.பாவுக்குள் ஊடுருவுகிறார். அடுத்த காட்சியில் பூ.பாவின் வீட்டு வாசலில் பூட்டு தொங்குகிறது. அவருடைய குரலில் ஒரு நீண்ட வாய்ஸ் ஓவர். ஹிந்தியில் என்பதால் எனக்கு புரியவில்லை. நாயகன் தன் பழைய நண்பர்களுடனும், காதலியுடனும் இணைவதுடன் திரை இருள்கிறது.

பூனம் பாண்டே படத்தையே “தூக்கி நிறுத்தியிருக்கிறார்” என்றுதான் சொல்லவேண்டும். சர்வசாதாரணமாக உள்ளாடை மட்டும் அணிந்து ஜாக்கிங் போகிறார். காதலருடன் நிமிடத்திற்கு நான்குமுறை உதட்டுமுத்தம் பரிமாறிக்கொள்கிறார். போதாத குறைக்கு நாயகனின் கனவில் வேறு அடிக்கடி வந்து தொலைக்கிறார். என்ன ஒன்று, கடைசி வரைக்கும் பெரிதாக எதையும் காட்டவில்லை என்பதுதான் வருத்தம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment