Showing posts with label hindi. Show all posts
Showing posts with label hindi. Show all posts

5 March 2014

வா நீ கபூர் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வட பாவ் நடிகைகள் தோன்றுவதுண்டு. ஏன் உலக அழகிகளையும், பிரபஞ்ச அழகிகளைக் கூட தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அவர்களில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் தவிர்த்து வேறு யாரும் தமிழர்களை அவ்வளவாக ஈர்த்ததில்லை. லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் விஜய் நடிப்பில் தமிழன் என்ற படம் வெளிவந்திருந்தது. எனது சமூக அறிவியல் ஆசிரியை என்ன காரணத்திற்காகவோ அதனை பார்த்திருக்கிறார். மறுநாள் வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். யாரு அவளையெல்லாம் உலக அழகியாக தேர்ந்தெடுத்தது என்று அறச்சீற்றம் கொண்டவரை அமைதிப்படுத்தவே சிரமப்பட்டுவிட்டோம். அந்த நடிகையின் பெயர் ப்ரியங்கா சோப்ரா. எனக்கு ப்ரியங்கா சோப்ராவின் மேல் உதடுகளை பார்க்கும் போதெல்லாம் மேற்கிந்திய தீவு பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் நினைவுக்கு வருவார். ஆனால் பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் சக்கை போடு போட்டார். அவருடைய கோரமான பல்வரிசையை நீயா நானா ஆசாமிகள் வர்ணிக்கிறார்கள். அதுபோல வித்யா பாலன் என்று தமிழில் அக்கா, அண்ணி கதாபாத்திர முக அமைப்பு கொண்ட ஒருவர் அங்கே சென்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஹிந்திவாலாக்களின் ரசனையை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படி அவ்வப்போது பாலிவுட் சீமாட்டிகள் தமிழில் தலை காட்டுகிறார்கள் இல்லையா...? பாட்டியாவையும், அகர்வால்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்களெல்லாம் தமிழர்களாக இனம் மாறிவிட்டார்கள். அவர்கள் தவிர்த்து, மாற்றான் படத்தில் இஷா ஷெர்வானி வந்து ஒரு ஆட்டம் போட்டு பார்த்தார். பில்லாவில் ப்ரூனா அப்துல்லா வந்தார். ம்ஹூம் யாரும் தேறவில்லை. திடீரென தற்சமயம் யாரோ வாணி கபூராம். சில வாரங்களாகவே அவரைப் பற்றிய விளம்பரங்கள் தூள் பரத்துகின்றன. பண்பலையில் வந்து பேசுகிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், தமிழ் கற்றுக்கொள்ள போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார். என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..? ஒருநாள் கூத்துக்கு ஏனய்யா வேக்ஸிங் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். பின்னே, ஏதோ ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அடுத்து குட்டிக்கர்ணம் அடித்தாலும் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காது. ஏன் சிரமப்பட்டு தமிழெல்லாம் கற்றுக்கொள்கிறார் என்று வருத்தப்பட்டேன்.

என் எண்ணம் அவ்வாறாக இருந்தமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வாணி கபூரின் கன்னங்கள். உட்புறமாக ஒடுங்கியிருந்த கன்னங்கள். தாமரைக் கன்னங்கள் என்று கதாநாயகியை வருணித்து மகிழ்ச்சியுறும் மக்கள் எப்படி வாணி கபூரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே என் ஐயப்பாடு. எனினும், பிற்பாடு ஒரு விஷயத்தை தெரிந்துக்கொண்டேன். வாணியிடம் உள்ள பாகங்களில் கன்னங்களை தவிர வேறெதுவும் ஒடுங்கியிருக்கவில்லை.

வாணி கபூருடைய தாயார் கருவுற்றிருந்த சமயம் குங்குமப்பூவை கிலோ கணக்கில் சாப்பிட்டிருக்கக்கூடும். சும்மா செக்கச் செவேலென கோயமுத்தூர் கொய்யா போல இருக்கிறார். உயரத்தில் அனுஷ்காவை விட ரெண்டு இன்ச் தான் குறைவாக இருப்பார். தலப்பாக்கட்டியை நினைவூட்டுகிறது வாணியுடைய வாளிப்பான கால்கள். டெல்லியில் பிறந்து, வளர்ந்து, இந்திரா காந்தி பல்கலையில் சுற்றுலா மேலாண்மை படித்த வாணி, தன்னைப் பற்றி தமிழகத்திலுள்ள உள்ள ஒரு வலைப்பதிவர் வர்ணித்து எழுதுவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். யாஷ் சோப்ரா என்று மும்பையில் ஒரு பெருந்தலை. தமிழ் சினிமாவில் ஏ.வி.மெய்யப்பர் போல ஒரு மரியாதைக்குரிய பெரியவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய மகனான ஆதித்யா சோப்ரா தான் வாணி முத்துவை தமிழ் சினிமாவிற்கு கொணர்ந்திருக்கிறார். மொத்தமாக மூன்று படங்கள் நடித்துத்தர வேண்டுமென வாணியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ஆதித்யா. அந்த சமயமாக பார்த்து கோலிவுட்டில் கால் பதிக்க ஆதித்யா சோப்ரா விரும்பியது நம்முடைய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் படங்களில் அதிகபட்சமாக எத்தனை உதட்டு முத்த காட்சிகளை பார்த்திருப்பீர்கள்...? அவற்றில் பெரும்பாலானவை பொடனியில் கேமரா வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படியெல்லாம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற முத்தத்தை பார்த்திருக்கிறீர்களா...? நியாயமாக தமிழ் சினிமா நடிகைகள் வாணிக்கு பாத பூஜை செய்துவிட வேண்டும். சிலர் ஆஹா கல்யாணத்தில் இடம்பெற்ற உதட்டு முத்த காட்சியையே ஆஹா ஓஹோ என்கிறார்கள். அவர்கள் அம்மணி ஷுத் தேசியில் சுஷாந்த் சிங்கிற்கு அடித்த கிஸ்ஸை பார்த்திருக்க வேண்டும். ஆஹா கல்யாணத்தில் பன்ச் சாங் என்று ஒன்று வருகிறது பாருங்கள். பஞ்சு நெஞ்சு கொண்டவர்கள் தாங்க மாட்டார்கள். இடுப்பு விஷயத்தில் தமிழர்களுக்கு நன்றாகவே இறக்கம் காட்டியிருக்கிறார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பாக ஏதோ மூன்று பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். ம்ஹூம். அடுத்து தமிழ் சினிமா நாயகர்களுடன் ஒரு வலம் வந்து கடைசியாக கமலுடன் ஜோடி சேருவது வரை வாணியை நாங்கள் விடுவதாக இல்லை. வேண்டுமானால் ஆதித்யா சோப்ராவை தமிழில் படம் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்.

தொடர்புடைய சுட்டி: தன்வி வியாஸ்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 August 2013

“கஞ்சிக்கு செத்த பய” ஷாருக்கான்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பற்றிய செய்திகள் வரத் துவங்கியதிலிருந்தே குறிப்பாக லுங்கி டான்ஸ் காணொளி வெளியானதிலிருந்து இணையவெளியில் சில நண்பர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது, ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதாகவும் ரஜினியை கிண்டலடிப்பதாகவும் வருத்தப் / கோபப் படுகின்றனர். உண்மைதான். ஓம் சாந்தி ஓம் படத்தில் கூட புலியுடன் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போல காட்சியமைத்திருப்பார். ரா ஒன் படத்தில் தமிழராக நடித்து நூடுல்ஸையும் தயிரையும் பெனஞ்சு அடித்தார். நிற்க: மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை, வெறும் கேள்வியறிவு தான். ஷாருக் – தமிழர்கள் – ரஜினி என்கிற காம்பினேஷன் சென்னை எக்ஸ்பிரஸில் தூக்கலாக இருந்து, சில தமிழ் நண்பர்கள் இதற்காகவே சென்னை எக்ஸ்பிரஸை புறக்கணிக்க போகிறோம் என்றெல்லாம் சொல்லும்போது என் சார்பாக சில விஷயங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்.

1. ஷாருக்கான் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் பாடல் வைப்பதும், கமலஹாசன் ஜாக்கிசானை அழைத்து வந்து இசை வெளியீட்டு விழா நடத்துவதும், ஜாக்கி சான் மல்லிகா ஷெராவத்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதும் அவர்களிடையே நிலைக்கொண்டிருக்கும் பாசப்பிணைப்பின் காரணமாக அல்ல. வெறும் வணிக நோக்கமே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் ! சூப்பர்ஸ்டாருக்கு கும்பிடு போட்டால் தான் கோலிவுட்டில் குப்பை கொட்ட முடியும் என்ற சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஷாருக். ரா ஒன் படத்தில் ரஜினியை பயன்படுத்தியபோது அதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அக்வாபினா இருக்கா’ன்னு கேட்டா அக்காவை பத்தி தப்பா பேசாதே’ன்னு* பொங்கி எழும் ஆட்கள் உள்ள பதிவுலகில் அது வழக்கம்போல தவறாகவே புரிந்துக்கொள்ளப்பட்டது. என் முகத்தில் பூசியிருக்கும் கரியை துடைத்துக்கொள்ளுமாறு ரஜினி ரசிகர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தார்கள். ரா ஒன் வெளிவந்தபோது விழுந்தடித்துக்கொண்டு பார்த்த ரஜினி ரசிகர்கள் முகத்திற்கு அந்த ‘கரி’ எப்படி ட்ரான்ஸ்பர் ஆனது என்று தெரியவில்லை. 
* சொலவடை பிரயோகம் – நன்றி சுரேஷ் கண்ணன்.

2. தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதாவது தன்னையே யாரேனும் கிண்டலடித்தால் கூட ரசித்துச் சிரிக்கிற விசித்திர மனோபாவம் தமிழனுக்கு உண்டு. ஒரு எழுத்தாளர் தொலைக்காட்சியில் தோன்றி கட்டம் போட்ட சட்டை போட்டா கண்டிப்பா தமிழனா தான் இருப்பான் என்று பேசுகிறார். துணிக்கடையில கட்டைப்பை வாங்குவதற்கு மல்லு கட்டுவான், டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துவிட்டு அறச்சீற்றம் கொள்வான், பொது இடங்களில் சத்தமாக போன் பேசி சுற்றி இருப்பவர்களை மிரள வைப்பான் என்று தமிழர்களை பற்றி யாரென்ன சொன்னாலும் அதை அதிகம் ரசிப்பவன் தமிழனே ! அப்படியிருக்கும்போது ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதையும் போலவே ஏற்றுக்கொண்டு ரசிக்க வேண்டியது தானே ? ஏன் முடியவில்லை, தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைந்துவிட்டதா ? அல்லது வெளியாள் ஒருத்தர் கிண்டலடிக்கிறாரே என்ற கோபமா ?

3. நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார் ? என்று தமிழ் சினிமாவைப் பார்த்து கேட்க வேண்டும் போல இருக்கிறது. தமிழ் சினிமாவில் மலையாளி என்றாலே ஜாக்கெட், பாவாடை மட்டும் அணியும் டீக்கடை நாயரின் மனைவி. சேட்டு என்றால் குல்லா, குங்குமத்திலகம் வைத்துக்கொண்டு அடகுக்கடை வைத்திருப்பவர். தமிழர்களெல்லாம் நூடுல்ஸுக்கு தயிரை தொட்டுக்கொள்வதில்லை, எல்லா தமிழர்களுடைய பெயரும் அய்யர், அய்யங்கார் என்று முடிவதில்லை என்று சொல்பவர்களே எல்லா சேட்டுகளும் அடகுக்கடை வைத்திருப்பதில்லை. எல்லா சேட்டுகளும் சின்னவீடு சித்திரா வைத்திருப்பதில்லை. அதெல்லாம் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என்றால் சென்னை எக்ஸ்பிரஸையும் வெறும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்கலாம்.

3.1. Last but not least, ஷாருக் லுங்கி டான்ஸின் வாயிலாக ரஜினியை கேவலப்படுத்திவிட்டார் என்று  சொல்லிக்கொள்பவர்களுக்கு: சமீபத்தில் குட்டிப்புலி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. கண்டிப்பாக பெரும்பாலானவர்கள் அந்த கேவலமான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்தப்படத்தில் ஒரு காட்சி. ஹீரோவுடைய அம்மாவும் அத்தையும் ஹீரோவுக்கு நவநாகரிக உடைகள் வாங்க துணிக்கடைக்கு செல்கிறார்கள். பையனின் இடுப்பளவு அம்மாவுக்கு தெரியவில்லை. கடைக்காரர் ஆள் யாரை மாதிரி இருப்பார் என்று அடையாளம் கேட்கிறார். அதற்கு அம்மாக்காரி கடையிலிருக்கும் ஷாருக்கான் படத்தை காட்டி, “அந்த பையன் மாதிரி” என்கிறார். உடனே பக்கத்திலிருக்கும் அத்தை, “ஏத்தா... நம்ம பையன் எவ்வளவு மொகலட்சணமா இருப்பான்... எவனோ கஞ்சிக்கு செத்த பயலை காட்டிக்கிட்டு இருக்க...”. கவனிக்க: எவனோ கஞ்சிக்கு செத்த பய. அதைக்கேட்ட கடைக்காரர் இன்னொரு கடைப்பையனிடம், “இதை மட்டும் ஷாருக்கான் கேட்டாருன்னு வச்சிக்கோயேன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருவாருடீயேய்...” என்று ரகசியமாக சொல்கிறார். ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்தக்காட்சியில் ஷாருக்கை நோண்டியிருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தமிழ் சினிமாக்காரர்கள் வழக்கமாக தங்களுக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துக்கொள்ள ரஜினியையும் அஜித்தையும் தானே பயன்படுத்துவார்கள். ஏன் சசிகுமாரின் முந்தய படத்தில் கூட அவர் ரஜினியின் ரசிகராகத்தானே நடித்திருந்தார். போலவே ரஜினியின் புகைப்படத்தை காட்டி எவனோ கஞ்சிக்கு செத்த பய’ன்னு சொல்லியிருக்கலாம் தானே ?

ஷாருக்கானாவது ரஜினிக்கு ட்ரிப்யூட் என்ற பெயரில் மறைமுகமாக / விவரம் தெரியாமல் ரஜினியை கிண்டலடிக்கிறார். தமிழர்களை பற்றி சரியான புரிதல் இல்லாமல் காட்சிகள் அமைக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் ஷாருக்கானை நேரடியாகவே “கஞ்சிக்கு செத்த பய” என்று சொல்லி கிண்டலெல்லாம் அடிக்காமல் தனிமனித தாக்குதலே நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கடைசியாக, சென்னை எக்ஸ்பிரஸ் உங்களுக்கு பிடிக்காமல் இருந்து பார்க்காமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், தமிழர் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கிறேன் என்றெல்லாம் கூறி உங்கள் மொழி துவேஷ கொண்டையை வெளிக்காட்ட வேண்டாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 July 2013

நஷா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தியாவில் காந்திக்கு பிறகு அரை ஆடை மனிதர் என்று குறிப்பிடக்கூடிய தகுதி உள்ள ஒரே ஆள் – பூனம் பாண்டே ! இந்தியா கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றால் நிர்வாண நடை போடுவேன் என்று அறிக்கை விட்டு பலரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியவர். சொன்னபடி நடக்கவில்லை என்பது வேறு விஷயம், எனினும் அப்படிச் சொல்வதற்கே ஒரு ‘பெரிய மனது’ வேண்டும். (யாருப்பா அது ? இரண்டு வேண்டுமென்று கூட்டத்திலிருந்து சத்தம் போடுவது). அதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தா அடுத்த பதினஞ்சு நிமிஷத்துல குளிக்கப் போறேன்’, ‘இதோ இன்னொரு அரை மணி நேரத்தில் டவுசரை கழட்டப் போறேன்’ என்று சொல்லிச் சொல்லி போட்டோக்களை போட்டுத்தள்ளிய ஸ்ட்ரிப்டீஸிங் ராட்சசி. நிறைய இளைஞர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கியதே அம்மணியை பின்தொடரத்தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பூனம் பாண்டே குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிடப்போவதாக ட்வீட் போட்டால் போதும். டைம்லைனில் இருப்பவர்களுக்கெல்லாம் கை தேயத்தேய வேலை பார்ப்பார்கள் – வேறென்ன, கைகடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதற்கு தான் ! அப்படியெல்லாம் சமகால இளைஞர்களின் மத்தியில் எழுச்சி சிந்தனையை தூண்டிய பூனம் பாண்டேயின் முதல் (மற்றும் கடைசி ?) முழுநீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – நஷா !

நஷாவை பார்க்க முற்பட்டபோது முதலில் எனக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமே மிஞ்சியது. ஆதாகப்பட்ட சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்கில் மட்டுமே நஷா வெளியாகியிருக்கிறது என்றால் கோபம் வராதா என்ன ? அதுவும் ஒவ்வொரு காட்சி மட்டும் ! என்ன மாதிரியான சம்முவத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ? வெளியிட்ட திரையரங்குகளில் ஒன்று AGS, மற்றொன்று PVR. ஏஜிஎஸ்ஸில் சமயங்களில் ஆள் சேரவில்லை என்றால் காட்சியை ரத்து செய்துவிடுவார்கள். அதாவது நாம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வில்லிவாக்கம் வரை லொங்கு லொங்கென்று ஓடவேண்டும். அவர்கள் சுலபமாக காட்சியை ரத்து செய்துவிட்டு புக்கிங் சார்ஜ் போக டிக்கெட் விலையை மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். எனவே அமிஞ்சிக்கரைக்கு பயணித்தேன். டிக்கெட் கிடைப்பதில் பெரிய தள்ளு முல்லு எல்லாம் கிடையாது. அரங்கம் முழுக்க ஹிந்திவாலாக்கள். பாலின பேதமின்றி கூட்டம் சேர்ந்திருந்தது. இனி நஷா !

பூனம் பாண்டே சோப்பு நுரைகளை மட்டும் அணிந்தபடி குளிக்கும் காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. ஒருவேளை செண்டிமெண்டாக இருக்கலாம். கதை என்றால் பல்லாண்டுகளாக சீன் படங்களுக்கே உரித்தான ரதி நிர்வேத கதைதான். மேனிலை பள்ளியில் பயிலும் சில பதின்பருவ மாணவ / மாணவியரைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவன் தான் நம் நாயகன். அவருக்கு ஏற்கனவே ஒரு காதலியும் இருக்கிறாள். அச்சமயம் மாணவர்களை எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸில் ஈடுபடுத்தும் பொருட்டு பணியேற்கிறார் பூ.பா. பூ.பா.வைக் கண்டதும் மாணவர்கள் ஜொள்ளு வடிக்கின்றனர். மாணவிகள் பொறமை கொள்கின்றனர். நாயகன் மட்டும் இரவில் பூ.பா.வை நினைத்து சுயமைதுனம் செய்கிறார். கள்ளங்கபடமில்லாத பூ.பா மாணவர்களிடம் வெகு இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்றனர். இது எல்லா பயல்களுக்குள்ளும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாயகன் மட்டும் ஒருபடி மேலே போய் பூ.பா.வை காதலிப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

படத்தில் ட்விஸ்ட் என்பதால் புதிய பத்தியில் எழுதுகிறேன். பூ.பாவின் அஜானபாகுவான காதலர் கதையிலும் பூ.பாவின் சதையிலும் என்ட்ரி கொடுக்கிறார். சூடு பிடிக்கிறது ! பூ.பாவின் காதலருக்கும் நம்ம ஹீரோ பயலுக்கும் அடிக்கடி பனிப்போர் நடக்கிறது. ஒருநாள் இரவில் பூ.பாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து கட்டிலறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நாயகன். உள்ளே பூ.பா. அவருடைய காதலருடன் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருக்கிறார். வெளியில் சத்தம் கேட்டதும் உடலில் துணியை சுற்றிக்கொண்டு கையில் விளக்குடன் வருகிறார். துணி அருகிலிருக்கும் டேபிளில் சிக்கி அவிழ்ந்துக்கொள்ள நாயகன் முன்பு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறார். உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு புறமுதுகு தரிசனம் மட்டும் தான் ! இடைவேளை.

அடுத்தடுத்த டுவிஸ்டுகள். பூ.பாவின் காதலர் மாணவியர்களுள் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பூ.பாவிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். ப்ரேக் அப். அதேபோல நாயகனும் தன்னுடைய காதலிக்கு முன்பு ‘பழைய’ என்ற முன்வையை சேர்த்துவிடுகிறார். ஏற்கனவே தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால் நாயகன் மீது கோபமாக இருக்கிறார் பூ.பா. இருப்பினும் காதலரை பிரிந்துவாடும் அவருக்கு ஆறுதல் தேவை இல்லையா ? நாயகன் தோள் கொடுக்கிறார். முன்பைவிட நெருக்கமாக பழக துவங்குகின்றனர் – இருவரும் ஒன்றிணைந்து சரக்கடிக்கும் அளவிற்கு. நிற்க. பூ.பா இன்னமும் கள்ளங்கபடமில்லாமல் தான் பழகுகிறார். நாயகன் தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் பூ.பா வேலையை துறந்துவிட்டு ஊருக்கு செல்லத் தயாராகுகிறார். எஸ், நீங்கள் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பிட்டு வருகிறது – பூ.பாவின் வீட்டுக்குச் சென்று போக வேண்டாமென இறைந்து மன்றாடுகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் பூ.பாவுக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துவிடுகிறது. எனினும் இது தவறு என்றுணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் அடுத்த கட்டத்திலேயே உடைந்து உருகிவிடுகிறார். உதடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. உடல்கள் பினைந்துக்கொள்கின்றன. நாயகன் பூ.பாவுக்குள் ஊடுருவுகிறார். அடுத்த காட்சியில் பூ.பாவின் வீட்டு வாசலில் பூட்டு தொங்குகிறது. அவருடைய குரலில் ஒரு நீண்ட வாய்ஸ் ஓவர். ஹிந்தியில் என்பதால் எனக்கு புரியவில்லை. நாயகன் தன் பழைய நண்பர்களுடனும், காதலியுடனும் இணைவதுடன் திரை இருள்கிறது.

பூனம் பாண்டே படத்தையே “தூக்கி நிறுத்தியிருக்கிறார்” என்றுதான் சொல்லவேண்டும். சர்வசாதாரணமாக உள்ளாடை மட்டும் அணிந்து ஜாக்கிங் போகிறார். காதலருடன் நிமிடத்திற்கு நான்குமுறை உதட்டுமுத்தம் பரிமாறிக்கொள்கிறார். போதாத குறைக்கு நாயகனின் கனவில் வேறு அடிக்கடி வந்து தொலைக்கிறார். என்ன ஒன்று, கடைசி வரைக்கும் பெரிதாக எதையும் காட்டவில்லை என்பதுதான் வருத்தம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment