Showing posts with label nude. Show all posts
Showing posts with label nude. Show all posts

19 October 2016

மியா கலிஃபா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடக்கத்தில் ஏதோ குமாஸ்தா வேலைக்கான நேர்முகத்தேர்வு போலத்தான் இருக்கிறது. ஆனால் தேர்வாளரின் கேள்விகள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றன. “வயதென்ன ?” என்கிறார். “பாய்ஃபரெண்ட் இருக்கா ?” என்கிறார். “உறவு வைத்துக்கொள்வீர்களா ?” என்கிறார். எல்லா கேள்விகளுக்கும் ‘மனம் நிறைந்த’ தன்னம்பிக்கையுடன், புன்னகை பூத்தபடி பதிலுரைக்கிறார் அந்த இருபத்தியொரு வயது யுவதி. அங்கே இங்கே சுற்றி கடைசியில் மேலாடையை விலக்கும்படி கேட்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் !

மேலே விவரித்துள்ள காட்சிதான் பிரபல நீலப்பட நடிகை மியா கலிஃபாவின் ஆடிஷன் என்று இணையம் சொல்கிறது. மியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் 1993ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஏழு வயது இருக்கும்போதே குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பெயர்ந்துவிட்டனர். பள்ளிப் பருவத்தில் மியாவுக்கு லாக்ராஸ் விளையாட்டு என்றால் பிரியம். லாக்ராஸ் என்பது வடகிழக்கு அமெரிக்காவில் பிரபலமான களவிளையாட்டு. கிட்டத்தட்ட நம் ஹாக்கி போன்றது. சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடக்கூடியது. பள்ளிப்படிப்பு முடித்ததும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றார். மியாவுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

அப்போது மியாவுக்கு 21 வயது. 'வாட்டபர்கர்' என்ற அமெரிக்காவின் பிரபலமான உணவகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். ஸ்கோர் என்ற வயது வந்தோருக்கான இதழின் ஆசிரியர் டேவும் அவரது நண்பர்கள் மூவரும் மதிய உணவிற்காக தொடர்ந்து சில நாட்கள் அவ்வுணவகத்திற்கு செல்ல நேர்கிறது. அப்போது மியா பரிமாறிய பர்கர்களின் சுவையோ என்னவோ அவர்களை ஹெவியாக ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய போர்னோ இணையதளமான ஸ்கோர்லேண்டின் சேவைகளுக்காக மியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஸ்கோர்லேண்ட் என்பது பிரம்மாண்ட மார்பகங்கள் கொண்ட மாடல்களின் படங்கள் / காணொளிகளை மட்டும் பிரத்யேகமாக வெளியிடும் தளம். உணவகம் என்பதால் மியாவிடம் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஒரு துண்டுச்சீட்டில் தங்கள் விருப்பத்தையும், இணையதள முகவரியையும் எழுதி மியாவிடம் கொடுக்கின்றனர். அதனை உணவக கழிப்பறைக்குச் சென்று பிரித்துப் பார்த்த மியா, தனக்கு கிடைத்த வாய்ப்பை புளியங்கொம்பாய் கைப்பற்றுகிறார்.

மியாவின் கலைப்பயணம் இங்கிருந்துதான் துவங்குகிறது. 2014 அக்டோபரில் மியாவின் முதல் நீலப்படம் வெளியாகிறது. மியாவின் கோதுமை நிறமும், கூடைப்பந்து அளவுள்ள அங்கங்களும் அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பிட்டுப்பட ரசிகர்களை ஈர்த்துவிட்டது. குறிப்பாக நீலப்படங்களில் வரும் BJ என்ற வித்தையில் மியா கை தேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். “நீ பார்த்தாயா?” என்று கேட்காதீர்கள். பார்த்தவர்களை பார்த்தேன். இரண்டு மாதங்களிலேயே 'போர்ன் ஹப்' என்கிற பிரபல இணையதளம், பலான இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை மியா என்று அறிவிக்கிறது, கூடவே நம்பர் 1 நீலப்பட நடிகை என்றும் அறிவிக்கிறது.

பிரபலமானாலே பிராப்ளம்களும் பின்னாடியே வருமல்லவா ? தன்னுடைய காணொளி ஒன்றில் பர்தா அணிந்து தோன்றியதால் தன் தாய்நாடான லெபானானில் இருந்தும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை சந்திக்கிறார் மியா. இது குறித்து வாஷிங்க்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், அக்காணொளியை பகடியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் மேலும் ஹாலிவுட் படங்களில் இஸ்லாமிய மதம் இதைவிட பன்மடங்கு இழிவுபடுத்தப்படுகிறது என்று கூறுகிறார். எதிர்ப்புக்குரல்கள் குறைந்தபாடில்லை. மியாவின் குடும்பத்தினரே கூட அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால் இணையத்தில் மியாவை தேடியவர்கள் எண்ணிக்கை மட்டும் ஐந்தாக உயருகிறது. பியர் நிறுவனம் ஒன்று மியாவின் கண்ணாடியை மட்டும் வைத்து குறும்பாக ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. டைம்ஃப்ளைஸ் எனும் இசைக்குழு மியாவுக்காகவே பிரத்யேக பாடலை வெளியிடுகிறது. 

மியாவின் கண்ணாடியுடன் பியர் விளம்பரம்
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் திரைக்குப் பின்னால் என்னதான் நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு பயந்து பணிந்துவிட்டாரா ? தெரியவில்லை, இருக்கலாம். கடந்த ஜூலையில் அதே வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தான் போர்னோ துறையில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கிறார். மியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் கூட பிப்ரவரி 2015க்கு பிறகு புதிய காணொளிகள் இல்லை. ஆறுதலளிக்கும் வகையில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் அவ்வப்போது தன் படங்களை பதிவேற்றி சாஃப்ட்போர்ன் சேவையாற்றி வருகிறார் மியா.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். மியாவைப் போலவே இன்னொரு நீலப்பட நடிகை சன்னியை அரவணைத்துக் கொண்டது போல மியாவையும் ஏன் பாலிவுட் அரவணைக்கக்கூடாது ? சன்னி ‘பிக் பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சமயத்தில், மியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக பேச்சு அடிப்பட்டது. அப்போது ‘இந்தியாவில் காலடி எடுத்து கூட வைக்கமாட்டேன்’ ஒரேயொரு ட்வீட் போட்டு இந்திய இதயங்களை நொறுக்கிவிட்டார் மியா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 January 2015

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

புதுவருட சபதம் போல ஒவ்வொரு முறையும் இனி இயக்குநர் ஷங்கர் படங்களை பார்க்கவே கூடாது என்று நினைக்கும் ஆள் நான். ஆனால் படம் வெளியாவதற்குள் எப்படியும் ஏதாவது ஒரு தனிமம் என்னை காமன் மேன் ஜோதியில் ஐக்கியமாக்கி விடும். படம் பிடிக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். இம்முறை அத்தகைய பிரத்யேக தனிமங்கள் விக்ரமின் தோற்றம் மற்றும் நோய்க்கிருமி சமாச்சாரம்.

இந்த கால்பந்தில் எல்லாம் ‘கோல்’ அடித்தவுடன் எதிரணி ரசிகர்களை பார்த்து ‘சத்தம் போடாதே’ என்று சைகை காட்டுவார்களே, அதுபோல விக்ரம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வாயடைக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் சீனியரை நினைவூட்டுகிறார். உதாரணமாக, எமியிடம் உங்க ஸாரியை நான் ஏத்துக்கிட்டேன். நீங்க போகலாம் என்று சொல்லும்போது எனக்கு அன்பே சிவம் படத்தில் கமல் சந்தான பாரதியிடம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. விக்ரமுடைய அபார நடிப்பையும், உழைப்பையும் போலவே ஒப்பனைக்காரர்களும், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ஆட்களும், ஒளிப்பதிவாளரும் போற்றப்பட வேண்டியவர்கள். அத்தனையும் விக்ரமிற்கும் படத்திற்கும் பலம் கூட்டியிருக்கிறது.

உமி நீக்கிய தானியமாய் எமி. எமியின் அந்த உதடுகள்... அடடா எப்படி இத்தனை நாட்கள் கவனிக்காமல் போனேன் ? உயிரூட்டப்பட்ட ஆரஞ்சு சுளைகள். திரையில் எமி தோன்றிய காட்சிகளில் எல்லாம் நான் அந்த சுளைகளை மட்டும்தான் பார்த்தேன். நம்ப முடியவில்லை அல்லவா ? சரி, எமியின் கழுத்துக்கு கீழே காட்டாத காட்சிகளில் என்று படித்துக்கொள்ளுங்கள்.

விளம்பர உலகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் படத்துக்கு அல்வா மாதிரி ஸ்பான்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். படச்செலவுக்கு பணமும் ஆச்சு, விளம்பரமும் கிடைத்த மாதிரி ஆச்சு. 

ஷங்கர் இம்முறை சமூக பிரச்சனைகளில் வாயை வைக்காதது என் போன்றவர்களுக்கு பெரிய ஆறுதல். குளிர்பான சர்ச்சை தொடர்பாக ஒரு காட்சி வந்ததும், போச்சுடா பொது மக்கள் ஆவேசமாக கருத்து சொல்லப்போகிறார்கள் என்று பயந்தே போனேன்.

என்னோடு நீ இருந்தால் என்ற பாடல் நெஞ்சே எழு’வையும் (மரியான்) அடியே’வையும் (கடல்) சேர்த்து பிசைந்தாற் போல இருக்கிறது. காலத்திற்கும் நிற்கக்கூடிய பாடல் அது. மற்ற பாடல்கள் பார்த்து ரசிக்கக் கூடியவை.

ஷங்கர் படங்கள் ஒரு மேஜிக் போன்றவை. பது மலர்ச்சியாக பார்க்கும்போது பரவசப்படுத்தும். சில வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்தால் இப்படியா தாழம்பூவை காதில் வாங்கி சொருகிக்கொண்டோம் என்று நமக்கே சங்கடமாக இருக்கும். ஐ’யிலும் அப்படி நிறைய. Influenza நோய்க்கிருமி தாக்கிய ஒருவர் பல சாகசங்கள் புரிகிறார். கதாநாயகியை தூக்கிக்கொண்டு குழாய் வழியாக மாடியிலிருந்து இறங்குகிறார், ஓடும் ரயிலின் மீது தாவி குதித்து சண்டை போடுகிறார். சண்டைக்காட்சிகளில் இயற்பியல் விதிகளை எல்லாம் சர்வசாதாரணமாக மீறுகிறார்கள். Well, இப்பொழுதெல்லாம் சினிமாக்களில் யாரும் தர்க்கம் பார்ப்பதில்லை, பார்த்தால் சக சினிமா ரசிகர்களே உதைக்க வருவார்கள்.

(கிட்டத்தட்ட) கதை என்னவென்று சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்துவிட்டது ஐ’க்கு ஒரு மிகப்பெரிய பலவீனமாக போய்விட்டது. ஒருவேளை அப்படி கசியவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளை யூகிப்பது பெரிய சிரமமில்லை. சுரேஷ் கோபி எமியிடம் ‘என்னை அங்கிள்’ன்னு கூப்பிடாதே’ என்று சொல்லும்போது அந்த எந்தபெத்த சஸ்பென்ஸ் உடைபட்டுவிடுகிறது. 

நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அலுப்பு தட்டவில்லை. வேண்டுமானால், பவர் ஸ்டார், சந்தானம் காட்சிகளை கொஞ்சம் கத்தரிக்கலாம். கிட்டத்தட்ட படம் முடிவுறும் தருவாயில் வரும் சந்தானத்தின் “நல்லா இருந்தேன். நாசமா போயிட்டேன்” காமெடியை எல்லாம் தவிர்த்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தும்.

இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வாங்குவதற்காக டெல்லி வரை சென்றார்கள் என்று ஊடகங்களில் தெரிந்துக்கொண்டேன். நல்லவேளையாக கொடுக்கவில்லை. நியாயமாக ‘ஏ’ சான்றிதழ் பெற வேண்டிய படம். கவர்ச்சிக்காக அல்ல. வன்முறை என்று சொல்வதை விட, இத்தனை கோரமான காட்சிகளை எல்லாம் சிறார்கள் பார்த்தால் மனதளவில் பாதிக்கப்படக்கூடும். 

குறைகளை மீறி திரையில் தோன்றும் படத்தில் விரவிக்கிடக்கும் ஒரு செழிப்பான தோற்றம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொதுவாக வில்லன்கள் என்றால் அடித்து கை, காலை உடைப்பார்கள், சுடுவார்கள், கொல்வார்கள். அந்தமாதிரி இல்லாமல் நோய்க்கிருமியை செலுத்துவது, பதிலுக்கு கதாநாயகன் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விகாரத்தோற்றத்தை ஏற்படுத்தும்படி செய்வது ஒரு அதிர்ச்சியான வசீகரத்தை ஏற்படுத்துகிறது. சில ஸைக்கோ படங்கள் எல்லாம் பார்த்தால் ஒருவித போதை ஏறும் இல்லையா, அதுபோல ஐ ஒரு விலக்கப்பட்ட பரவச உணர்வை ஏற்படுத்துகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 July 2013

நஷா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தியாவில் காந்திக்கு பிறகு அரை ஆடை மனிதர் என்று குறிப்பிடக்கூடிய தகுதி உள்ள ஒரே ஆள் – பூனம் பாண்டே ! இந்தியா கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றால் நிர்வாண நடை போடுவேன் என்று அறிக்கை விட்டு பலரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியவர். சொன்னபடி நடக்கவில்லை என்பது வேறு விஷயம், எனினும் அப்படிச் சொல்வதற்கே ஒரு ‘பெரிய மனது’ வேண்டும். (யாருப்பா அது ? இரண்டு வேண்டுமென்று கூட்டத்திலிருந்து சத்தம் போடுவது). அதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தா அடுத்த பதினஞ்சு நிமிஷத்துல குளிக்கப் போறேன்’, ‘இதோ இன்னொரு அரை மணி நேரத்தில் டவுசரை கழட்டப் போறேன்’ என்று சொல்லிச் சொல்லி போட்டோக்களை போட்டுத்தள்ளிய ஸ்ட்ரிப்டீஸிங் ராட்சசி. நிறைய இளைஞர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கியதே அம்மணியை பின்தொடரத்தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பூனம் பாண்டே குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிடப்போவதாக ட்வீட் போட்டால் போதும். டைம்லைனில் இருப்பவர்களுக்கெல்லாம் கை தேயத்தேய வேலை பார்ப்பார்கள் – வேறென்ன, கைகடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதற்கு தான் ! அப்படியெல்லாம் சமகால இளைஞர்களின் மத்தியில் எழுச்சி சிந்தனையை தூண்டிய பூனம் பாண்டேயின் முதல் (மற்றும் கடைசி ?) முழுநீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – நஷா !

நஷாவை பார்க்க முற்பட்டபோது முதலில் எனக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமே மிஞ்சியது. ஆதாகப்பட்ட சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்கில் மட்டுமே நஷா வெளியாகியிருக்கிறது என்றால் கோபம் வராதா என்ன ? அதுவும் ஒவ்வொரு காட்சி மட்டும் ! என்ன மாதிரியான சம்முவத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ? வெளியிட்ட திரையரங்குகளில் ஒன்று AGS, மற்றொன்று PVR. ஏஜிஎஸ்ஸில் சமயங்களில் ஆள் சேரவில்லை என்றால் காட்சியை ரத்து செய்துவிடுவார்கள். அதாவது நாம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வில்லிவாக்கம் வரை லொங்கு லொங்கென்று ஓடவேண்டும். அவர்கள் சுலபமாக காட்சியை ரத்து செய்துவிட்டு புக்கிங் சார்ஜ் போக டிக்கெட் விலையை மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். எனவே அமிஞ்சிக்கரைக்கு பயணித்தேன். டிக்கெட் கிடைப்பதில் பெரிய தள்ளு முல்லு எல்லாம் கிடையாது. அரங்கம் முழுக்க ஹிந்திவாலாக்கள். பாலின பேதமின்றி கூட்டம் சேர்ந்திருந்தது. இனி நஷா !

பூனம் பாண்டே சோப்பு நுரைகளை மட்டும் அணிந்தபடி குளிக்கும் காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. ஒருவேளை செண்டிமெண்டாக இருக்கலாம். கதை என்றால் பல்லாண்டுகளாக சீன் படங்களுக்கே உரித்தான ரதி நிர்வேத கதைதான். மேனிலை பள்ளியில் பயிலும் சில பதின்பருவ மாணவ / மாணவியரைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவன் தான் நம் நாயகன். அவருக்கு ஏற்கனவே ஒரு காதலியும் இருக்கிறாள். அச்சமயம் மாணவர்களை எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸில் ஈடுபடுத்தும் பொருட்டு பணியேற்கிறார் பூ.பா. பூ.பா.வைக் கண்டதும் மாணவர்கள் ஜொள்ளு வடிக்கின்றனர். மாணவிகள் பொறமை கொள்கின்றனர். நாயகன் மட்டும் இரவில் பூ.பா.வை நினைத்து சுயமைதுனம் செய்கிறார். கள்ளங்கபடமில்லாத பூ.பா மாணவர்களிடம் வெகு இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்றனர். இது எல்லா பயல்களுக்குள்ளும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாயகன் மட்டும் ஒருபடி மேலே போய் பூ.பா.வை காதலிப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

படத்தில் ட்விஸ்ட் என்பதால் புதிய பத்தியில் எழுதுகிறேன். பூ.பாவின் அஜானபாகுவான காதலர் கதையிலும் பூ.பாவின் சதையிலும் என்ட்ரி கொடுக்கிறார். சூடு பிடிக்கிறது ! பூ.பாவின் காதலருக்கும் நம்ம ஹீரோ பயலுக்கும் அடிக்கடி பனிப்போர் நடக்கிறது. ஒருநாள் இரவில் பூ.பாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து கட்டிலறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நாயகன். உள்ளே பூ.பா. அவருடைய காதலருடன் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருக்கிறார். வெளியில் சத்தம் கேட்டதும் உடலில் துணியை சுற்றிக்கொண்டு கையில் விளக்குடன் வருகிறார். துணி அருகிலிருக்கும் டேபிளில் சிக்கி அவிழ்ந்துக்கொள்ள நாயகன் முன்பு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறார். உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு புறமுதுகு தரிசனம் மட்டும் தான் ! இடைவேளை.

அடுத்தடுத்த டுவிஸ்டுகள். பூ.பாவின் காதலர் மாணவியர்களுள் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பூ.பாவிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். ப்ரேக் அப். அதேபோல நாயகனும் தன்னுடைய காதலிக்கு முன்பு ‘பழைய’ என்ற முன்வையை சேர்த்துவிடுகிறார். ஏற்கனவே தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால் நாயகன் மீது கோபமாக இருக்கிறார் பூ.பா. இருப்பினும் காதலரை பிரிந்துவாடும் அவருக்கு ஆறுதல் தேவை இல்லையா ? நாயகன் தோள் கொடுக்கிறார். முன்பைவிட நெருக்கமாக பழக துவங்குகின்றனர் – இருவரும் ஒன்றிணைந்து சரக்கடிக்கும் அளவிற்கு. நிற்க. பூ.பா இன்னமும் கள்ளங்கபடமில்லாமல் தான் பழகுகிறார். நாயகன் தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் பூ.பா வேலையை துறந்துவிட்டு ஊருக்கு செல்லத் தயாராகுகிறார். எஸ், நீங்கள் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பிட்டு வருகிறது – பூ.பாவின் வீட்டுக்குச் சென்று போக வேண்டாமென இறைந்து மன்றாடுகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் பூ.பாவுக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துவிடுகிறது. எனினும் இது தவறு என்றுணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் அடுத்த கட்டத்திலேயே உடைந்து உருகிவிடுகிறார். உதடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. உடல்கள் பினைந்துக்கொள்கின்றன. நாயகன் பூ.பாவுக்குள் ஊடுருவுகிறார். அடுத்த காட்சியில் பூ.பாவின் வீட்டு வாசலில் பூட்டு தொங்குகிறது. அவருடைய குரலில் ஒரு நீண்ட வாய்ஸ் ஓவர். ஹிந்தியில் என்பதால் எனக்கு புரியவில்லை. நாயகன் தன் பழைய நண்பர்களுடனும், காதலியுடனும் இணைவதுடன் திரை இருள்கிறது.

பூனம் பாண்டே படத்தையே “தூக்கி நிறுத்தியிருக்கிறார்” என்றுதான் சொல்லவேண்டும். சர்வசாதாரணமாக உள்ளாடை மட்டும் அணிந்து ஜாக்கிங் போகிறார். காதலருடன் நிமிடத்திற்கு நான்குமுறை உதட்டுமுத்தம் பரிமாறிக்கொள்கிறார். போதாத குறைக்கு நாயகனின் கனவில் வேறு அடிக்கடி வந்து தொலைக்கிறார். என்ன ஒன்று, கடைசி வரைக்கும் பெரிதாக எதையும் காட்டவில்லை என்பதுதான் வருத்தம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2013

அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானை நோக்கிய என்னுடைய கப்பல் பயணத்தில், ஒரு வெள்ளைக்கார சோடியை பார்த்து உள்ளூர்வாசி சொன்னது, “இவுகல்லாம் ஹேவ்லாக் போயி அவுத்துப்போட்டு படுத்துக்குவாக...”. அப்போதிலிருந்தே என்னுடைய மனது அந்த ஒற்றைச் சொல்லை கவனமாக பற்றிக்கொண்டது - ஹேவ்லாக். அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

ஹேவ்லாக் நம் கவலைகளுக்கான பூட்டு ! அந்தமான் தீவுகளிலேயே போர்ட் ப்ளேர் தவிர்த்து வெளிநாட்டவர் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே தீவு - ஹேவ்லாக். அதனாலேயே ஹேவ்லாக் கடற்கரைகள் பிகினி மயமாகவும் பிறந்தமேனியாகவும் காட்சியளிக்கின்றன. கொண்டாட்ட விரும்பிகள், தேனிலவு தம்பதிகள் ஹேவ்லாக்கில் ஒரு இரவாவது தங்கி விரிவாக சுற்றிப்பார்ப்பது உகந்தது. அந்தமான் சுற்றுப்பயணம் முழுவதையும் ஹேவ்லாக்கில் மட்டுமே செலவளிப்போரும் உண்டு.

கொஞ்சம் மெனக்கெட்டால் டிராவல் ஏஜெண்டுகளின் தலையீடு இல்லாமல் ஹேவ்லாக் சென்றுவரலாம். போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்வதற்கு அரசாங்க கப்பல் பம்பூகாவும் தனியார் கப்பல் மாக்ரூஸும் இருக்கின்றன. பம்பூகாவில் டிக்கெட் விலை 250ரூ. மாக்ரூஸில் 900ரூ. உங்கள் டிராவல் ஏஜெண்ட் உங்களிடம் சீசன்  உச்சத்தில் இருப்பதால் அரசாங்க கப்பலில் டிக்கெட் கிடைக்காது என்று காதில் பூ சுற்ற முயற்சிப்பார். ஏமாற வேண்டாம். உண்மையில் பம்பூகா பாதியளவு கூட நிரம்புவதில்லை. தரமான இருக்கைகள், தொலைகாட்சி, கேண்டீன், துரித வேகம் என்று தனியார் கப்பலில் சில வசதிகள் இருப்பது உண்மைதான். என்னைப்பொறுத்தவரையில் போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்லும்போது அரசாங்க கப்பலிலும் திரும்பிவரும்போது தனியார் கப்பலை நாடுவதும் சாலச்சிறந்தது. முந்தய பத்தியில் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்த்து மற்றவர்கள் காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம்.

போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ்லாக் செல்வதற்கு ஹெலிகாப்டர், ஸீ ப்ளேன் சேவைகள் கூட உள்ளன. சராசரி கட்டணம் தான். ஆனால் செல்வாக்கு உள்ள ஆட்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

ஹேவ்லாக்கில் மொத்தம் ஏழு கடற்கரைகள் உள்ளன, எனினும் அவற்றில் இரண்டு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. ராதா நகர் கடற்கரை- ஆசியாவிலேயே தலைசிறந்தது என்று 2004ல் டைம்ஸ் மேகஸின் அறிவித்த கடற்கரை. ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து 11கி.மீ தொலைவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும், எனினும் அது தேவையற்றது. ஹேவ்லாக்கை பொறுத்தவரையில் வெட்கம் என்னும் கருமத்தை களைந்துவிடுவது நல்லது, கூடவே ஆடைகளையும், உங்களுடையதை தான். அபத்தமாக சூரியனை உள்ளங்கையில் பிடித்திருப்பது போல போட்டோவெல்லாம் எடுக்க வேண்டாம். ஜஸ்ட் என்சாய் ! கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

நான் ராதாநகர் கடற்கரைக்கு சென்றபோது மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. சூரியன் மறைகிற தருணம். நிறைய பேர் SLR கேமராவை வைத்து திருகிக்கொண்டிருந்தார்கள். அருகிலேயே ஒரு ரிக்கி பாண்டிங் ஒரு துரையம்மாவின் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியா ஏன் இதுவரை வல்லரசு ஆகவில்லை என்ற உண்மை உரைத்தது. அப்படியே அலைகளை தொட்டபடி ஒரு நடை நடந்தேன். ஒரு பிகினி மங்கை குப்புற படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் புட்டத்தில் ஒட்டியிருந்த ஈரமணல் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த தருணம்... திருவள்ளுவர் ஏதோ சொல்லியிருக்கிறாரே, ஆங் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உலக்கை... என்ன எழவோ, அப்படித்தான் ஆகியிருந்தது என்னுடைய நிலை. மீண்டும் என் உணர்வுகளை சமநிலைக்கு கொண்டுவர நேரம் பிடித்தது.

ராதாநகர் கடற்கரையிலிருந்து மீண்டும் படகுத்துறைக்கோ அல்லது அறைக்கோ செல்லும்வழியில் மூன்று கி.மீ தொலைவில் எலிபேண்ட் பீச்சுக்கு செல்வதற்கான குறுக்குப்பாதை அமைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாது. காட்டுவழிப்பாதையாக சில கி.மீ நடந்து சென்றால் எலிபேண்ட் கடற்கரையை சென்றடையலாம். சில வருடங்கள் முன்பு வரை இங்கே யானை சவாரி நடைபெறும் என்று சொல்கிறார்கள். மற்றபடி முந்தய பதிவுகளில் சொன்ன ஸ்கூபா டைவிங், ஸ்னார்கலிங் வகையறா விளையாட்டுகள் ஹேவ்லாக்கிலும் உண்டு. ஹேவ்லாக் படகுத்துறை - ராதாநகர் பீச் - எலிபேண்ட் பீச் : எளிய புரிதலுக்காக கூகுள் மேப்.

தங்குமிடங்களை பொறுத்தவரையில் ஹேவ்லாக்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நான் ஹேவ்லாக் சென்ற சமயம், என்னுடைய பயணத்தின் கடைசி நாட்கள். ஏற்கனவே என்னுடைய ஏ.டி.ம். கறவை மாட்டின் மடி வற்றியிருந்தது. எனவே ட்ராவல் ஏஜெண்டிடம் பாடாவதி லாட்ஜாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைத்திருந்தேன். அந்த வசந்த மாளிகையின் பெயர் பிலாஷி லாட்ஜ். ம்ம்ம் குடிபோதையில் உள்ள ஒருவன் படுத்து உறங்குவதற்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் கரப்பான்களுக்கு பயந்து இரவெல்லாம் மின்விளக்குகளை எரியவிட்டு, தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கொண்டு தூங்கிய கதையை தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும்.

மிக முக்கியமான தகவலை மறந்துவிட்டேன்; ஹேவ்லாக் செல்லும்போது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ஃபுல் பாட்டில் சரக்காவது வாங்கிச் செல்லுங்கள். மக்கள் வசிக்கும் பகுதிதானே, மதுக்கூடம் இருக்கும் என்று நம்பி சென்றுவிட்டேன். இருந்தது. மூன்று கி.மீ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். சலூன் கடை அளவில் உள்ள மிகச்சிறிய இடம். டேபிள் எல்லாம் இல்லை. கடைக்காரர் ஊற்றிக்கொடுப்பார். அப்படியே வாங்கி குடிக்க வேண்டியது தான். சைட் டிஷ் எல்லாம் ஊற்றிக்கொடுப்பவரின் முன்னே இறைந்துக்கிடக்கும். அள்ளி வள்ளு வதக்கு'ன்னு வாயில போட்டுக்க வேண்டியது தான். ஒரு தனி மனிதனாக இதுபோன்ற அனுபவங்களை நான் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க விரும்பாதவர்கள் சரக்குபுட்டியை போர்ட் ப்ளேரிலிருந்து சுமக்கலாம். அடுத்தது, உணவகங்கள். கிட்டத்தட்ட இரவு எட்டரை மணிக்கெல்லாம் எல்லோரும் கடையை சாத்திவிடுகின்றனர். எனவே தாமதிப்பது உகந்ததல்ல. மதுக்கூடத்திற்கு அருக சில பெங்காலிகளின் வீட்டுவாசலில் டேபிள் சேரெல்லாம் போட்டு உணவு பரிமாறுகிறார்கள். அவற்றை தவிர்த்தால் படகுத்துறைக்கு அருகில் வழக்கம்போல பொரொட்டா, ஃபிரைட் ரைஸ் விற்கும் உணவகங்கள் உள்ளன.

என்னடா ரெண்டு பீச்சு தானே இருக்கு என்று தோன்றலாம். ஹேவ்லாக் என்பது ஒரு உணர்ச்சி. அதனை வார்த்தைகளால் புரிய வைப்பது கடினம். பழமொழி சொன்னா அனுபவிக்கணும் என்று சொல்வதுபோல ஹேவ்லாக்கையெல்லாம் அனுபவிக்கணும் !

பி.கு: அந்தமான் தொடர் இழுத்துக்கொண்டே செல்கிறதே; எப்பதான் முடிப்பீங்க'ன்னு ஒரு நண்பர் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன.

படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment