அன்புள்ள வலைப்பூவிற்கு,
“மந்த்ரா என்று சொன்னதும் உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்குமானால் நீயும் என் தோழனே...!”
தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் திரையுலகத்தையே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்க வைத்தவர், மிரட்சியில் மலைக்க வைத்தவர் - மந்த்ரா. நாயத்துக்கு நாமெல்லாம் ஆந்திராவின் வரைபடத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். மந்த்ராவை பெற்றெடுத்த பூமி அது ! ஆம், பாலாறு ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி பாய்கிறது.
தமிழகத்தில் ஒரு நடிகர் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இந்தப்படம் என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையில் அவருடைய முதல் படம் தான் திரையுலகிற்கே திருப்பமாக அமைந்தது. ப்ரியமான மந்த்ரா தமிழர்களின் நெஞ்சங்களில் தில்ருபாவாக குடியேறினார். ஆனால், நடிகரின் திராபையான நடிப்பில் படம் தோல்வி. விளைவு, அடுத்து வெளிவந்த லவ் டுடே படத்தில், “காதலுங்குறது வானத்துல பறக்குற புறா இல்ல, கடல்ல மெதக்குற சுறா மாதிரி" என்று டாகுட்டரின் அரிய தத்துவங்களை கேட்க வேண்டிய துர்பாக்கிய கதாபாத்திரம்.
பெண்களை பழித்துப் பேசியே பழக்கப்பட்ட சமுதாயம், மந்த்ராவிற்கு ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தியது. அந்த கிராதகர்களின் முகத்தில் கரியை பூசுவதற்காக தன் பெயரையே ராசி என்று மாற்றிக்கொண்டார் அந்த மகராசி !
பெயரை மாற்றியதும் பெரிய இடத்து மாப்பிள்ளை தேடி வந்தார். ஆனால் பொருத்தமாக அமையவில்லை. கட்டம் போட்ட சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரர் மந்த்ராவோடு ஆட்டம் போட்டால் பொருத்தமாகவா இருக்கும்? மறுபடியும் திருப்புமுனை நடிகர் திருப்பிப் பார்த்தார், ம்ஹூம்.
தேடினேன் வந்தது என்று தேடாமலே ஒரு வாய்ப்பு வந்தது. சராசரி சினிமா தான். ஆனால், அதில் ஆல்ப்ஸ் மலைக்காற்று என்று ஒரு பாடல். அதுவரைக்கும் ஆல்ப்ஸ் போன்ற பிரம்மாண்ட மலைகளை பார்த்திராத இளைய சமுதாயம் இன்பத்தில் திக்குமுக்காடியது. பனி படர்ந்த மலைப்பகுதியில் படமாக்கப்பட்ட அந்த பாடல் பல இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்தது. மியாமி கடலலைகள் சென்னைக்கே வந்துவிட்டதை போலொரு புத்துணர்வு !
தல - மந்த்ரா ! குட் காம்பினேஷன் ரெட்டை ஜடை வயசில் அமைந்தது. பேச்சிலர்களின் தேசிய கீதம் கேட்டிருக்கிறீர்களா ? தனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும், அவளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வேன் என்று பாடுவார் அஜீத். அந்த பாடலுக்கான விடை யாரென்று நினைக்கிறீர்கள் ? ஷாத்ஷாத் மந்த்ராவே தான். கும்முன்னு இருக்கலாம் குஷ்பூ, உள்ளத்தை அள்ளலாம் ரம்பா, அன்னநடையில் கலக்கலாம் நக்மா, ஆனா அத்தனையும் மந்த்ராவைப்போல வருமா ! என்று ஒரு புதுக்கவிஞன் அன்றே பாடினான். ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட்டை பார்த்தால் உன் நினைப்பு என்ற வரிகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் பிரதிபலித்தார் தல.
காத்திருந்தது தமிழனுக்கு எதிர்பாராத சோதனை. ஜகபதி பாபு மந்த்ராவை கையோடு ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அப்பொழுதும் வட சென்னை தமிழர்கள் கள்ள ரயிலேறி ஆந்திராவிற்கு சென்று கலைச்சேவையை தொடர்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வப்போது தமிழுக்கு தலைக்காட்டினாலும், சவலைப்பிள்ளையாக ஏங்கியது கோலிவுட்.
தல அஜித்துக்கும் ராசிக்கும் அப்படி ஒரு ராசி ! அஜித்தின் ராஜா படத்தில் அதிரடியாக குத்தாட்டம் போட்டு தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அவரது மீள் வருகையின் போது தமிழகத்தில் எப்போதுமில்லாத அளவு வெற்றிலையின் விலை சிகரத்தை தொட்டது.
எனினும் இரண்டாவது ஆட்டத்தை தொடர முடியாதபடி, குடும்ப வாழ்க்கைக்குள் குதித்துவிட்டார் மந்திரம். கடைசியாக மந்த்ரா நடித்த தமிழ்ப்படம் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி மட்டுமே தமிழனுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. நேற்று வரை !
இதோ ! இப்போது துவண்டு போன தமிழ் ரசிக நெஞ்சங்களை துள்ளி எழ வைப்பதற்காக மீண்டும் வருகிறார் மந்த்ரா ! நாளை வெளியாகவிருக்கும் ஒன்பதுல குருவில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுகிறார். செய்தியை கேட்டதிலிருந்து என் மனது இமயமலைக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் மாறி மாறி பயணித்துக்கொண்டிருக்கிறது...!
தொடர்புடைய சுட்டி: நக்மாயிசம்
“மந்த்ரா என்று சொன்னதும் உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்குமானால் நீயும் என் தோழனே...!”
- Philosophy Prabhakaran
தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் திரையுலகத்தையே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்க வைத்தவர், மிரட்சியில் மலைக்க வைத்தவர் - மந்த்ரா. நாயத்துக்கு நாமெல்லாம் ஆந்திராவின் வரைபடத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். மந்த்ராவை பெற்றெடுத்த பூமி அது ! ஆம், பாலாறு ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி பாய்கிறது.
தமிழகத்தில் ஒரு நடிகர் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இந்தப்படம் என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையில் அவருடைய முதல் படம் தான் திரையுலகிற்கே திருப்பமாக அமைந்தது. ப்ரியமான மந்த்ரா தமிழர்களின் நெஞ்சங்களில் தில்ருபாவாக குடியேறினார். ஆனால், நடிகரின் திராபையான நடிப்பில் படம் தோல்வி. விளைவு, அடுத்து வெளிவந்த லவ் டுடே படத்தில், “காதலுங்குறது வானத்துல பறக்குற புறா இல்ல, கடல்ல மெதக்குற சுறா மாதிரி" என்று டாகுட்டரின் அரிய தத்துவங்களை கேட்க வேண்டிய துர்பாக்கிய கதாபாத்திரம்.
பெண்களை பழித்துப் பேசியே பழக்கப்பட்ட சமுதாயம், மந்த்ராவிற்கு ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தியது. அந்த கிராதகர்களின் முகத்தில் கரியை பூசுவதற்காக தன் பெயரையே ராசி என்று மாற்றிக்கொண்டார் அந்த மகராசி !
பெயரை மாற்றியதும் பெரிய இடத்து மாப்பிள்ளை தேடி வந்தார். ஆனால் பொருத்தமாக அமையவில்லை. கட்டம் போட்ட சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரர் மந்த்ராவோடு ஆட்டம் போட்டால் பொருத்தமாகவா இருக்கும்? மறுபடியும் திருப்புமுனை நடிகர் திருப்பிப் பார்த்தார், ம்ஹூம்.
தேடினேன் வந்தது என்று தேடாமலே ஒரு வாய்ப்பு வந்தது. சராசரி சினிமா தான். ஆனால், அதில் ஆல்ப்ஸ் மலைக்காற்று என்று ஒரு பாடல். அதுவரைக்கும் ஆல்ப்ஸ் போன்ற பிரம்மாண்ட மலைகளை பார்த்திராத இளைய சமுதாயம் இன்பத்தில் திக்குமுக்காடியது. பனி படர்ந்த மலைப்பகுதியில் படமாக்கப்பட்ட அந்த பாடல் பல இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்தது. மியாமி கடலலைகள் சென்னைக்கே வந்துவிட்டதை போலொரு புத்துணர்வு !
தல - மந்த்ரா ! குட் காம்பினேஷன் ரெட்டை ஜடை வயசில் அமைந்தது. பேச்சிலர்களின் தேசிய கீதம் கேட்டிருக்கிறீர்களா ? தனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும், அவளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வேன் என்று பாடுவார் அஜீத். அந்த பாடலுக்கான விடை யாரென்று நினைக்கிறீர்கள் ? ஷாத்ஷாத் மந்த்ராவே தான். கும்முன்னு இருக்கலாம் குஷ்பூ, உள்ளத்தை அள்ளலாம் ரம்பா, அன்னநடையில் கலக்கலாம் நக்மா, ஆனா அத்தனையும் மந்த்ராவைப்போல வருமா ! என்று ஒரு புதுக்கவிஞன் அன்றே பாடினான். ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட்டை பார்த்தால் உன் நினைப்பு என்ற வரிகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் பிரதிபலித்தார் தல.
காத்திருந்தது தமிழனுக்கு எதிர்பாராத சோதனை. ஜகபதி பாபு மந்த்ராவை கையோடு ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அப்பொழுதும் வட சென்னை தமிழர்கள் கள்ள ரயிலேறி ஆந்திராவிற்கு சென்று கலைச்சேவையை தொடர்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வப்போது தமிழுக்கு தலைக்காட்டினாலும், சவலைப்பிள்ளையாக ஏங்கியது கோலிவுட்.
தல அஜித்துக்கும் ராசிக்கும் அப்படி ஒரு ராசி ! அஜித்தின் ராஜா படத்தில் அதிரடியாக குத்தாட்டம் போட்டு தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அவரது மீள் வருகையின் போது தமிழகத்தில் எப்போதுமில்லாத அளவு வெற்றிலையின் விலை சிகரத்தை தொட்டது.
எனினும் இரண்டாவது ஆட்டத்தை தொடர முடியாதபடி, குடும்ப வாழ்க்கைக்குள் குதித்துவிட்டார் மந்திரம். கடைசியாக மந்த்ரா நடித்த தமிழ்ப்படம் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி மட்டுமே தமிழனுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. நேற்று வரை !
இதோ ! இப்போது துவண்டு போன தமிழ் ரசிக நெஞ்சங்களை துள்ளி எழ வைப்பதற்காக மீண்டும் வருகிறார் மந்த்ரா ! நாளை வெளியாகவிருக்கும் ஒன்பதுல குருவில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுகிறார். செய்தியை கேட்டதிலிருந்து என் மனது இமயமலைக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் மாறி மாறி பயணித்துக்கொண்டிருக்கிறது...!
தொடர்புடைய சுட்டி: நக்மாயிசம்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|



