Showing posts with label cassandra. Show all posts
Showing posts with label cassandra. Show all posts

23 March 2015

ஜே.கே & ராஜதந்திரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜே.கே – உண்மையில் எனக்கு ஜே.கே பார்க்கும் ஆர்வம் துளி கூட இல்லை. C2Hன் முதல் முயற்சியை ஆதரிக்கும் ஒரு சமிக்ஞையாக குறுந்தகடை மட்டும் வாங்கி வைத்திருந்தேன். பிறிதொரு சமயத்தில் படத்தை ஓடவிட்டு நகம் வெட்டுவது, காது குடைவது மற்றும் ஹாலில் நடை பயில்வது போன்ற உபயோகமான அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் படமும் பார்த்தேன்.

பொதுவாக விமர்சகர்கள் கழுவி ஊற்றிய ஒரு படத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது, படம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையே என்று தோன்றும். கத்தி, லிங்கா படங்களை நான் பின்னாளில் பார்த்தபோது எனக்கு அவை அவ்வளவாக ஏமாற்றம் அளிக்கவில்லை. ஜே.கேவும் அந்த லிஸ்ட் தான்.

ஏதோ வண்டி ஓடுது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய படம். என்ன ஒன்று, கேன்சர், ப்ரைன் டியூமர் போன்ற இத்யாதிகளை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சித்தார்த், ப்ரியா ஆனந்த் அப்புறம் இதே நித்யா நடித்த நூற்றியெண்பது படம் அங்கங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

அபாரமான தரம் என்பதாலும், விலை வெறும் ஐம்பது ரூபாய் மட்டும் தான் என்பதாலும் படம் சுமாருக்கு கீழ்தான் என்பதை மறந்துவிட்டு தாராளமாக ஜே.கே டிவிடியை வாங்கலாம்.

ராஜதந்திரம் – ஏற்கனவே செத்து புதைத்த படத்தை பற்றி எழுதுவதால் யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. மீஞ்சூர் மணியில் இந்த வாரம் வெளியான படத்தை இரண்டே நாட்களில் தூக்கி வீசிவிட்டார்கள். திருவொற்றியூர் திரையரங்கு ஒன்றில் ஐ’யும் வேலையில்லா பட்டதாரியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் சென்ற வாரம் வெளியான படம் எம்மாத்திரம். நான் சென்றபோது என்னையும் சேர்த்து சரியாக பதினைந்து பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம்.

தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு, ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பது. தற்சமயம் ட்ரெண்டில் இருப்பது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது. ஆங்கிலத்தில் இதனை heist படங்கள் என்கிறார்கள்.

ராஜதந்திரத்தின் காட்சிகள் அப்படியே நமக்கு அதே சாயலில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களை நினைவூட்டுகின்றன. எவ்வளவு நாளைக்குத்தான் சின்ன சின்னதா அடிக்கிறது ? பெருசா அடிச்சிட்டு செட்டில் ஆயிடணும் என்கிற வசனம் வரும்போதும், எம்.எல்.எம் மீட்டிங்கில் எல்லோருமாக சேர்ந்து கை தட்டும்போதும் இதெல்லாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் ஆயிற்றே என்று நெருடுகிறது. உச்சகட்டமாக நகைக்கடை நூதன கொள்ளை காட்சி சதுரங்க வேட்டையை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் காட்சி படமாக்கப்பட்ட இடம் கூட அதே தானா என்று சந்தேகிக்க வைக்கிறது.

மற்றபடி, நூற்றிமுப்பது நிமிட படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் வரை யார் யாருக்கு பின் அடிக்கிறார்கள் என்று எந்த க்ளுவும் கொடுக்காமல் நகர்த்தி இருப்பது பாராட்டிற்குரியது. மிஷெல் டி’மெல்லோவை வைத்து தெலுங்கு சினிமாவில் என்னவெல்லாம் சாகசம் செய்கிறார்கள் தெரியுமா ? இங்கே என்னடா என்றால் அழவும், கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லவும் பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனின் துறுதுறு நண்பராக நடித்திருப்பவர் நல்ல ரிசோர்ஸ். யாரென்று விசாரித்தால் பண்பலை வானொலியை ஒருகாலத்தில் கலக்கிக்கொண்டிருந்த தர்புகா சிவாவாம். நல்வரவு தர்புகா சிவா.

விமர்சனங்களை படித்துவிட்டு நல்ல படத்தை தவற விட்ட குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று அடித்து பிடித்து கடைசி நாளன்று திரையரங்கில் பார்த்த படம், அவ்வளவு மோசமில்லை என்றாலும் இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு பொருந்தாத ஒரு சுமாரான படமாகவே தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 December 2013

கனவுக்கன்னி 2013 – பாகம் 1

10. லக்ஷ்மி ப்ரியா
ங்கர் சிமெண்ட், ஏர்செல் விளம்பரங்கள் மூலம் யாரு சாமீ இவ ? என்று தேட வைத்தவர். சுட்டகதை படத்தில் சினிமா அறிமுகம். ஆறு வயது பையனின் அம்மா, புதிதாய் திருமணமான மணப்பெண், மலைவாழ் இனப்பெண் என எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தபடி தோற்றம் தரக்கூடியது லக்ஷ்மியின் ஸ்பெஷாலிட்டி. தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நடிப்பும் கைவருகிறது. கிரிக்கெட், ஃப்ரிஸ்பீ விளையாட்டுகளில் ஆர்வமுள்ள லக்ஷ்மி இந்திய 'B' அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
09. ஸ்ரீ திவ்யா
ஸ்ரீ திவ்யாவின் எழுச்சி என்று ஒரு கட்டுரையே எழுதலாமா எனக் கருதும் அளவிற்கு ஒரே படத்தில் பிரபலம் ஆகியிருக்கிறார். ஆந்திர வரவு. குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நடிகை போன்ற பரிமாணங்களை கடந்து, கதாநாயகியாக சில தெலுங்கு படங்களில் நடித்தவர். தற்போது வ.வா.ச வெற்றியின் காரணமாக ஜி.வி.பிரகாஷ் படம் உட்பட நான்கைந்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாவாடை தாவணி திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி. பாக்காத பாடலில் முடிவில் காட்டுவது போல சின்னச் சின்ன முகபாவனைகளில் மனதை அள்ளிவிடுகிறார்.
08. விஷாகா
ல் திவ்யா தூள் இப்ப திவ்யா ஆயிட்டா என்பதுதான் க.ல.தி.ஆ பார்த்தவர்களின் ஒருமித்த குரல். பார்த்தால் தமிழ் பொண்ணு மாதிரி தெரியும் விஷாகா அபுதாபியில் பிறந்த பஞ்சாபி. க.ல.தி.ஆ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு போய்விட்டார். அது மட்டுமில்லாமல் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டு மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜாவில் நடிக்க இருக்கிறார். கொஞ்சம் கோதுமை நிறத்தில் ஜொலித்தாலும் Dark is Beautiful என்கிற கேம்பெயினில் பங்கெடுத்திருக்கிறார்.
07. ரெஜினா
ண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்காவின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் ரெஜினா. அதிகம் கவனிக்கப்படாத நிர்ணயம் என்ற லோ பட்ஜெட் படத்திலும் நடித்தார். நிர்ணயம் படத்தைப் போலவே ரெஜினாவின் மீள் வருகையும் கவனிக்கப்படாமல் போனது வருத்தம். தற்சமயம் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் மும்மொழியில் தயாராகும் என் சமையல் அறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா பாப்பா.
06. மிர்த்திகா
செதுக்கி வைத்த சிலை போல் தோற்றமளிக்கும் மிர்த்திகா 555 படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் கேரளத்து பைங்கிளி. நதியா, ஷாலினி போல திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பட்சியின்  லட்சியம். இயல்பில் மிர்த்திகா ஒரு பாடகி மற்றும் நடனப்பிரியை. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரை இயக்குநர் சசி கண்டுபிடித்து நடிப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார். சசி ரசனைக்காரர். மற்ற கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை மிர்த்திகா மீது படாதது அவர்களுடைய துரதிர்ஷ்டம்.

Post Comment

29 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படக்குழுவினர் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் விளம்பர வடிவமைப்பாளருக்கு தான் சொல்ல வேண்டும். பளீரென்று பல்லிளித்து நம்மை திரையரங்கிற்கு வரவேற்கின்றன. அப்புறம் ரெஜினா. சிவா மனசுல சக்தி தெலுங்கு பதிப்பில் நடித்தவர். தமிழிலும் கண்டநாள் முதல் படத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அழகு அப்படியே என்னை அலேக்காக ஆம்னி வேனுக்குள் தூக்கிப்போட்டு ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது.

இரண்டு இணை பிரியா நண்பர்கள். வழக்கம்போல தறுதலைகள். உருப்புட்டார்களா என்பதே படத்தின் உருப்படியான கதை.

எல்லா வணிக திரைப்படங்களையும் போல குடிகார நண்பர்கள், கரித்துக்கொட்டும் அப்பா பரிந்துபேசும் அம்மா அல்லது வைஸ் வெர்ஸா, அரைலூஸு கதாநாயகிகள், முழுலூஸு கதாநாயகி அப்பாக்கள் என்று படம் நெடுக நிறைந்திருந்தாலும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்கிற காற்று பிரியும் சத்தத்தை நம்மிடமிருந்து வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள். போலவே, நாயகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரிந்து உச்சக்கட்ட காட்சியில் ஒன்றுசேருவார்கள், யாருமே எதிர்பாரா வண்ணம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்கிற எண்ணத்திற்கெல்லாம் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். 

இரண்டு கதாநாயகர்கள் இருப்பினும் சிவ கார்த்திகேயன்தான் மனதில் நிற்கிறார். மெரினா படத்தில் அய் பஞ்ச்சு என்பாரே, அதே மாடுலேஷன் அதே உடல்மொழி. அவருடைய ஹியூமர் சென்ஸ் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சி.காவுக்கு எழுதிய அதே வரிகள் தான் விமலுக்கும். அவருடைய மாடுலேஷன், உடல்மொழி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. எதிர்மறையாக புரிந்துக்கொள்ளவும்.

பிந்து மாதவியை பற்றி இரண்டொரு பத்திகள் வர்ணித்து எழுதியிருக்கலாம், ரெஜினா இல்லாமலிருந்தால். எழுதினாலும் “உங்களை கம்பேர் பண்ண சொன்னேனா” என்று ரெஜி கோபித்துக் கொள்ளக்கூடும். சுடச்சுட சில துளிகள் தூறினால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் ரெஜினா ! அந்த ஆரஞ்சு சுளை உதட்டிற்காகவே பக்கத்து வீட்டுக்காரரின் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்துவிடலாம். ரெஜிக்கு ஒரு கவர்ச்சிப்பாடல் கூட வைக்காததால் இதற்கு மேலே எதுவும் சொல்ல முடியவில்லை.

பிந்து மாதவியை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ‘மொக்கமூஞ்சி’. மாவு மாதிரி இருக்கிறார். வேண்டுமென்றால் நகைச்சுவை நடிகையாக வட்டமிடலாம்.

பளிச்சென சிவகார்த்திகேயன் - ரெஜினா. ஃபியூஸ் போனது போல விமல் - பிந்து. குட் காம்பினேஷன். 

துணை நடிகர்கள் தங்கள் பங்கிற்கு அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள். பட்டை முருகனின் தாயாரும், டெல்லி கணேஷும் க்ளாஸான நடிப்பு. டெல்லி கணேஷின் கலாசலா டான்ஸ் ரசிக்க வைக்கிறது. சூரி, அவருடைய மாமனார் ஆகியோரும் சிறப்பு.

இந்த படத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரியாத இரண்டு விஷயங்கள். ஒன்று, இசை யுவன். டைட்டிலில் போடாவிட்டால் கடைசி வரை தெரிந்திருக்காது. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பிற்கு முன்னே என்ற நா.முத்துக்குமாரின் வரிகளுக்காக அந்த இசை பிடித்திருக்கிறது. இரண்டு, இயக்கம் பாண்டிராஜ். நகைச்சுவையை மட்டும் அடித்தளமாக வைத்துக்கொண்டு வெவ்வேறு கருவில் படம் எடுக்கிறார். கே.பி.கி.ர.வை பொறுத்தவரையில் நகைச்சுவை மட்டத்தை உயர்த்திவிட்டு கடைசியாக கொஞ்சமாக கருத்து சொல்லியிருக்கிறார். ஃபினிஷிங் டச் நேரடியாக நம்முடைய மனதை டச் செய்தாலும் கூட, அந்த ரயிலடி மரணத்தை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கலகலவென சிரித்துக்கொண்டிருந்த திரையரங்கம் இரண்டே நிமிடத்தில் வாத்தியார் நுழைந்த வகுப்பறை போலாகிவிட்டது.

முழுநீள நகைச்சுவை, இறுதியில் செண்டிமெண்ட் வகையறா படங்களில் பெரும்பாலும் வேறு வழியே இல்லாமல் கதாநாயகன் ஓரிரவில் / ஒரு பாடலில் வாழ்க்கையை வென்றேடுப்பதாக காட்டி நிறைவு செய்வார்கள். அதிலும் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தான் இருக்கும். (எ.கா: சகுனி தேர்தல் வெற்றி, பாஸ் என்கிற பாஸ்கரன் டுடோரியல் காலேஜ்) இந்தப்படத்திலும் அதுவே தொடர்ந்திருக்கிறது. ஒயின்ஷாப்பில் புட்டி பொறுக்கும் காண்டிராக்ட்டை ஒரே நிமிடத்தில் ஒயின்ஷாப் ஓனரிடம் பேசி வாங்கிவிடுகிறார் நாயகன்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா அடிக்கடி  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் ஒன்பதுல குரு. பொழுதுபோக்கு சினிமா விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment