29 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படக்குழுவினர் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் விளம்பர வடிவமைப்பாளருக்கு தான் சொல்ல வேண்டும். பளீரென்று பல்லிளித்து நம்மை திரையரங்கிற்கு வரவேற்கின்றன. அப்புறம் ரெஜினா. சிவா மனசுல சக்தி தெலுங்கு பதிப்பில் நடித்தவர். தமிழிலும் கண்டநாள் முதல் படத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அழகு அப்படியே என்னை அலேக்காக ஆம்னி வேனுக்குள் தூக்கிப்போட்டு ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது.

இரண்டு இணை பிரியா நண்பர்கள். வழக்கம்போல தறுதலைகள். உருப்புட்டார்களா என்பதே படத்தின் உருப்படியான கதை.

எல்லா வணிக திரைப்படங்களையும் போல குடிகார நண்பர்கள், கரித்துக்கொட்டும் அப்பா பரிந்துபேசும் அம்மா அல்லது வைஸ் வெர்ஸா, அரைலூஸு கதாநாயகிகள், முழுலூஸு கதாநாயகி அப்பாக்கள் என்று படம் நெடுக நிறைந்திருந்தாலும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்கிற காற்று பிரியும் சத்தத்தை நம்மிடமிருந்து வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள். போலவே, நாயகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரிந்து உச்சக்கட்ட காட்சியில் ஒன்றுசேருவார்கள், யாருமே எதிர்பாரா வண்ணம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்கிற எண்ணத்திற்கெல்லாம் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். 

இரண்டு கதாநாயகர்கள் இருப்பினும் சிவ கார்த்திகேயன்தான் மனதில் நிற்கிறார். மெரினா படத்தில் அய் பஞ்ச்சு என்பாரே, அதே மாடுலேஷன் அதே உடல்மொழி. அவருடைய ஹியூமர் சென்ஸ் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சி.காவுக்கு எழுதிய அதே வரிகள் தான் விமலுக்கும். அவருடைய மாடுலேஷன், உடல்மொழி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. எதிர்மறையாக புரிந்துக்கொள்ளவும்.

பிந்து மாதவியை பற்றி இரண்டொரு பத்திகள் வர்ணித்து எழுதியிருக்கலாம், ரெஜினா இல்லாமலிருந்தால். எழுதினாலும் “உங்களை கம்பேர் பண்ண சொன்னேனா” என்று ரெஜி கோபித்துக் கொள்ளக்கூடும். சுடச்சுட சில துளிகள் தூறினால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் ரெஜினா ! அந்த ஆரஞ்சு சுளை உதட்டிற்காகவே பக்கத்து வீட்டுக்காரரின் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்துவிடலாம். ரெஜிக்கு ஒரு கவர்ச்சிப்பாடல் கூட வைக்காததால் இதற்கு மேலே எதுவும் சொல்ல முடியவில்லை.

பிந்து மாதவியை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ‘மொக்கமூஞ்சி’. மாவு மாதிரி இருக்கிறார். வேண்டுமென்றால் நகைச்சுவை நடிகையாக வட்டமிடலாம்.

பளிச்சென சிவகார்த்திகேயன் - ரெஜினா. ஃபியூஸ் போனது போல விமல் - பிந்து. குட் காம்பினேஷன். 

துணை நடிகர்கள் தங்கள் பங்கிற்கு அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள். பட்டை முருகனின் தாயாரும், டெல்லி கணேஷும் க்ளாஸான நடிப்பு. டெல்லி கணேஷின் கலாசலா டான்ஸ் ரசிக்க வைக்கிறது. சூரி, அவருடைய மாமனார் ஆகியோரும் சிறப்பு.

இந்த படத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரியாத இரண்டு விஷயங்கள். ஒன்று, இசை யுவன். டைட்டிலில் போடாவிட்டால் கடைசி வரை தெரிந்திருக்காது. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பிற்கு முன்னே என்ற நா.முத்துக்குமாரின் வரிகளுக்காக அந்த இசை பிடித்திருக்கிறது. இரண்டு, இயக்கம் பாண்டிராஜ். நகைச்சுவையை மட்டும் அடித்தளமாக வைத்துக்கொண்டு வெவ்வேறு கருவில் படம் எடுக்கிறார். கே.பி.கி.ர.வை பொறுத்தவரையில் நகைச்சுவை மட்டத்தை உயர்த்திவிட்டு கடைசியாக கொஞ்சமாக கருத்து சொல்லியிருக்கிறார். ஃபினிஷிங் டச் நேரடியாக நம்முடைய மனதை டச் செய்தாலும் கூட, அந்த ரயிலடி மரணத்தை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கலகலவென சிரித்துக்கொண்டிருந்த திரையரங்கம் இரண்டே நிமிடத்தில் வாத்தியார் நுழைந்த வகுப்பறை போலாகிவிட்டது.

முழுநீள நகைச்சுவை, இறுதியில் செண்டிமெண்ட் வகையறா படங்களில் பெரும்பாலும் வேறு வழியே இல்லாமல் கதாநாயகன் ஓரிரவில் / ஒரு பாடலில் வாழ்க்கையை வென்றேடுப்பதாக காட்டி நிறைவு செய்வார்கள். அதிலும் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தான் இருக்கும். (எ.கா: சகுனி தேர்தல் வெற்றி, பாஸ் என்கிற பாஸ்கரன் டுடோரியல் காலேஜ்) இந்தப்படத்திலும் அதுவே தொடர்ந்திருக்கிறது. ஒயின்ஷாப்பில் புட்டி பொறுக்கும் காண்டிராக்ட்டை ஒரே நிமிடத்தில் ஒயின்ஷாப் ஓனரிடம் பேசி வாங்கிவிடுகிறார் நாயகன்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா அடிக்கடி  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் ஒன்பதுல குரு. பொழுதுபோக்கு சினிமா விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

Unknown said...

என்னடா இந்த ஜிகிடிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு நெனச்சேன் சரியாய் நினைவு படுத்தி இருக்கீங்க பாஸ் ஆமாம் கண்ட நாள் முதல் லைலா சிஸ்டர வருவாளே

Prem S said...

ரெஜி அவ்வளவு நல்லாவா இருக்கு !

aavee said...

மறுபடியும் ஒன்பதுல குருவா.. நாடு தாங்காது சாமி.. ரெஜினாவுக்கு இந்த வழிசல் கொஞ்சம் அதிகம் இல்லே??

Ponmahes said...

positiva review எழுதிவிட்டு கடைசில கவுத்துபுட்டிய ப்பா ...