Showing posts with label das. Show all posts
Showing posts with label das. Show all posts

10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 March 2013

நான்காம் பிறை 3D

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வாரங்களாகவே தினத்தந்தியின் கடைசி பக்கத்தில் கவன ஈர்ப்பு செய்துவந்த படம். டிராகுலா என்கிற மலையாள படத்தின் டப்பிங் என்று தெரிய வந்தது. அதனாலென்ன, இருக்கட்டுமே. 3Dயில் ஹாரர் படம் என்ற ஒன்றே போதும் நான்காம் பிறையை நாடுவதற்கு. ஆனால் என்னிடம் அதனைத் தாண்டியும் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று மோனல் கஜ்ஜார், இரண்டாவது ஷ்ரதா தாஸ். யாரு பாஸு இவங்க ரெண்டு பேரு என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சுலபமாக கேட்டுவிடலாம். தெலுங்கு சினிமா பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். ஐடில்ப்ரைன், ராகலஹரி கேலரி விரும்பிகளாக இருப்பின் நிச்சயமாக தெரிந்திருக்கும். தேவி பாலாவில் எனது ஆஸ்தான முதல் வரிசை, நடு இருக்கையை முன்பதிவு செய்தேன்.



ஹாரர் படங்களுக்கென்று சில கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நான்காம் பிறையில் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன ஒன்று, அதற்கு கொஞ்சம் ரூமேனிய சாயம் பூசி சொல்லியிருக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், ரத்த காட்டேரிக்கும் வேம்பயருக்கும் உள்ள வேறுபாடு. ஏதோ ஒரு புகழ்பெற்ற, வாயில் நுழையாத பெயரைக் கொண்ட ஆங்கில நாவலிலிருந்து கதை அதிகாரப்பூர்வமாக திருடப்பட்டுள்ளது.

தன்னுடைய காதல் இளவரசி இறந்த சோகத்தில் ரத்த காட்டேரியாக மாறிய ஒரு இளவரசன் தற்போது ருமேனியாவின் பிரான் கேஸில் எனும் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். ஹனிமூனுக்காக அந்த கோட்டைக்கு செல்லும் நாயகன், ரத்த காட்டேரியை விடுவிக்கிறான். விடுவிக்கப்பட்ட ர.கா நாயகனை கொன்று அவருடைய உடலிலேயே புகுந்து இந்தியாவிற்கு வந்து விடுகிறது. வந்த இடத்தில் இறந்துபோன இளவரசி சாயலில் நாயகி மோனல். இளவரசியை அடைய துடிக்கிறது ரத்த காட்டேரி. அதனை கிறிஸ்தவ, இந்துத்துவ ஆன்மிக சக்திகள் அறிவியலோடு இணைந்து முறியடிப்பதே மீதிக்கதை.



ஷ்ரதா தாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா சான்ஸே இல்லை. முதல் பாதியில் ஆன்மிக சக்தியாகவும், மறுபாதியில் தீய சக்தியாகவும் தோன்றும் ஷ்ரதா நம்முடைய சக்தியை வீணடித்துவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ஷ்ரதா ஒற்றைக்காலில் நின்றபடி பூஜை செய்யும் காட்சி - அடடா சர்வநிச்சயமாக ஷ்ரதாவின் முன்னோர்கள் சிற்பக்கலை வல்லுனர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஷ்ரதாவின் சேலை விலகியும் விலகாத சமயங்களில் திரைக்கு பக்கவாட்டில் சென்று பார்க்கலாமா என்ற ஆர்வம் மேலிடுகிறது. வெண்ணிற சேலையில் சிங்கிள் ஃப்ளீட் வைத்து ஷ்ரதா நடந்துவரும்போது இன்னும் நான்கைந்து 3D கண்ணாடிகள் கேட்டு வாங்கி மாட்டிக்கொள்ளலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. மேடம்... நீங்க எப்போ தமிழுக்கு வர்றீங்க ? ஐயம் வெயிட்டிங்...!

மோனல் கஜ்ஜார் குஜராத் குல்கந்து. பெயரில் மட்டுமல்ல தோற்றத்திலும் கூட சிம்ரன் தங்கையை நினைவூட்டுகிறார். கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் வள்ளுவனின் கூற்றுக்கேற்ப மோனல் நம்மை அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் ம்ம்ம் அடிக்கடி குட்டை பாவாடை அணிந்தபடி உறங்கி நம் உறக்கத்தை கெடுக்க முயற்சிக்கிறார். சோனா ஒப்ராயும், ப்ரியா நம்பியாரும் ஸ்டார்ட்டர்ஸ்.

நாயகன் பெயர் சுதிர் சுகுமாரனாம் - படுபாவி அனுபவிச்சி நடிச்சிருக்கான். நீளமான தலைமயிர், ஷார்ப் நோஸ், பெண்களை கண்டாலே அலேக்கா தூக்கிட்டு போயிடுறார். திரையரங்கை விட்டு வெளியில் வந்ததும் ஒரு அட்டை ஜெலுசில் வாங்கி விழுங்கிக்கொண்டேன்.

இந்திய ஹாரர் படங்களில் கண்டிப்பாக சாமியாரும், சயின்டிஸ்டும் இடம்பெறுவார்கள். ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் முட்டிக்கொள்ளும். உச்சக்கட்ட காட்சியில் ஆன்மிகமும் உண்மை, அறிவியலும் உண்மை என்று ஈயம் பூசாத மாதிரி பூசி முடிப்பார்கள். நான்காம் பிறையில் சாமியார் நாசர், சயின்டிஸ்ட் பிரபு. நாசர் சட்டையில்லாமல் வலம் வருவதையெல்லாம் 3Dயில் காட்ட வேண்டுமா டைரக்டர் சார் ? 3D படம் என்பதாலோ என்னவோ பிரபு 3D கண்ணாடி போன்ற ஒன்றை கழுத்தில் கட்டி தொங்கவிட்டிருக்கிறார். கூடவே மெக்சிகன் ஹேட், குறுந்தாடி. சில காட்சிகளில் தோன்றினாலும் பெருந்தச்சன் மிளிர்ந்திருக்கிறார்.

கஞ்சா கருப்பு, மனோ பாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் தமிழுக்காக இணைக்கப்பட்டது போல. முடியல பாஸ் இணைக்காமலே இருந்திருக்கலாம். டப்பிங் படம் என்பது தெரியாமலிருக்க நிறைய வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்கள். சில காட்சிகளின் ரீ-ஷூட், பிரபு, நாசர் சொந்தக்குரல், காரில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர். இருப்பினும் சில நடிகர்களின் முகத்தில் மலையாலக்களை காட்டி கொடுத்துவிடுகிறது.

அடிக்கடி கிராபிக்ஸில் தோன்றும் ரத்த காட்டேரியின் உடல் மொழி ரசிக்க வைக்கிறது. தூக்கி வைத்து கொஞ்சலாமா என்று கூட தோன்றுகிறது. விஷுவல் எபக்ட்ஸை பொறுத்தவரையில் இந்திய சினிமாக்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பாரிஜாத பூவே பாடலில், பா.விஜயின் வரிகளில் காமத்துப்பால் பொங்குகிறது. படத்தின் தொடக்கத்திலும் சரி, இறுதியிலும் சரி தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை ?

மொத்தத்தில் சிறப்பு ஒளியமைப்பு, கவர்ச்சி, பகடி என்று எந்த நோக்கத்திற்காக பார்த்தாலும் நான்காம் பிறை முதலுக்கு மோசமில்லாமல் திருப்தியளிக்கிறது. தரமான 3D கண்ணாடிகள் தரும் திரையரங்கை நாடுவது நல்லது.


பார்க்க... ரசிக்க...
ஷ்ரதா தாஸ் I
ஷ்ரதா தாஸ் II
மோனல் கஜ்ஜர்
 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 February 2013

ஹரிதாஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்றவாரம் வரை ஹரிதாஸ் என்று ஒரு படம் வெளிவர இருப்பது குறித்து எந்த தகவலும் என்னுள் பதியப்படவில்லை. பேப்பர் விளம்பரங்கள் பார்த்தபோது வழக்கமான லோ-பட்ஜெட் குப்பை என்றுதான் நினைத்திருந்தேன். படத்தில் சினேகா இருக்கிறார் என்பது கூட பார்ப்பதற்கு முந்தயநாளில் தான் தெரிந்துக்கொண்டேன். தொடர்ச்சியாக பலதரப்புகளில் இருந்து வெளிவந்த பாஸிடிவ் கூவல்கள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. அப்படியென்ன இருக்கிறது ஹரிதாஸில் ?


பிறக்கும்போதே தாயை இழந்து, தந்தையின் கவனிப்பின்றி வளர்ந்து, ஆட்டிஸம் எனும் குறைப்பாடினால் பாதிக்கப்பட்ட சிறுவன். ஒருகட்டத்தில் தந்தை தன்னுடைய மகனின் நிலையை உணருகிறார். பின்னர் அவருக்கும் மகனுக்கும் ஆட்டிஸத்திற்கும் இடையே நிகழும் போராட்டம் தான் ஹரிதாஸ்...!

ஆட்டிஸம் பற்றிய விவரங்களை சில வாரங்களுக்கு முன்புதான் மூத்த பதிவர் பாலபாரதியின் பதிவுகளில் படித்து தெரிந்துக்கொண்டேன். அதற்குள் அதனை படமாகவே பார்க்க கிடைத்த வாய்ப்பு ஒத்திசைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

கிஷோருக்கு நிகழ் வருடம் அற்புதமாக அமைந்திருக்கிறது. வனயுத்தம், ஹரிதாஸ், அடுத்த மாதம் வெளிவரவுள்ள கூட்டம் என்று அனைத்திலும் பிரதான வேடங்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல், துருத்தாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் பிருத்வி தாஸ் மின்னுகிறது. அமுதவல்லி டீச்சர் வேடத்திற்கு சினேகா பொருத்தமான தேர்வு. சினேகாவின் வயதும் அழகும் ஒருசேர பயணிக்கிறது. சினேகாவின் தங்கையும், சக ஆசிரியை சுப்புலட்சுமியும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். பரோட்டா சூரியின் நகைச்சுவை கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறது. தலைமை ஆசிரியை, சினேகாவின் அம்மா, கிஷோரின் நண்பர்கள் போன்ற சிறு நடிக / நடிகைகள் பலம் சேர்த்திருக்கிறார்கள். இரண்டே காட்சிகளில் தோன்றினாலும் யூகி சேது ரசிக்க வைக்கிறார்.

பாடல்கள் மனதில் பதியவில்லை. எனினும், பிண்ணனி இசை இதமாக வருடிக்கொடுத்து பின் எழுச்சியூட்டுகிறது. போலீஸ் கானாவை தவிர்த்து, இசை விஜய் ஆண்டனி என்றால் நம்ப முடியாது. 


ஹரிதாஸ் - என்கிற சரித்திரப்புகழ் வாய்ந்த பெயரை பயன்படுத்தியிருப்பது வருத்தத்திற்குரிய செயல். இந்த படத்திற்கு ஹரிதாஸ் என்ற பெயரை சூட்டவேண்டிய கட்டாயமும் இல்லை. தயாரிப்பாளருடைய பெயரையே கூட சூட்டியிருக்கலாம்.

படம் இரண்டு விஷயங்களை முன்னிறுத்துகிறது. ஒன்று என்கவுன்ட்டர், மற்றொன்று ஆட்டிஸம். என்கவுன்ட்டரை ஒதுக்கிவிடலாம். சொல்லப்போனால் என்கவுன்ட்டர் பற்றிய காட்சிகளுக்கு படத்திலேயே விடை இருக்கிறது. “ஆமாம்... நான் ஒரு LICENSED KILLER...!” என்று நாயகனே மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார். ஆட்டிஸம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதற்காக இயக்குனர் GNR குமாரவேலனுக்கு எழுந்து நின்று கைதட்டலாம்...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment