Showing posts with label history. Show all posts
Showing posts with label history. Show all posts

19 October 2016

மியா கலிஃபா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடக்கத்தில் ஏதோ குமாஸ்தா வேலைக்கான நேர்முகத்தேர்வு போலத்தான் இருக்கிறது. ஆனால் தேர்வாளரின் கேள்விகள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றன. “வயதென்ன ?” என்கிறார். “பாய்ஃபரெண்ட் இருக்கா ?” என்கிறார். “உறவு வைத்துக்கொள்வீர்களா ?” என்கிறார். எல்லா கேள்விகளுக்கும் ‘மனம் நிறைந்த’ தன்னம்பிக்கையுடன், புன்னகை பூத்தபடி பதிலுரைக்கிறார் அந்த இருபத்தியொரு வயது யுவதி. அங்கே இங்கே சுற்றி கடைசியில் மேலாடையை விலக்கும்படி கேட்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் !

மேலே விவரித்துள்ள காட்சிதான் பிரபல நீலப்பட நடிகை மியா கலிஃபாவின் ஆடிஷன் என்று இணையம் சொல்கிறது. மியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் 1993ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஏழு வயது இருக்கும்போதே குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பெயர்ந்துவிட்டனர். பள்ளிப் பருவத்தில் மியாவுக்கு லாக்ராஸ் விளையாட்டு என்றால் பிரியம். லாக்ராஸ் என்பது வடகிழக்கு அமெரிக்காவில் பிரபலமான களவிளையாட்டு. கிட்டத்தட்ட நம் ஹாக்கி போன்றது. சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடக்கூடியது. பள்ளிப்படிப்பு முடித்ததும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றார். மியாவுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

அப்போது மியாவுக்கு 21 வயது. 'வாட்டபர்கர்' என்ற அமெரிக்காவின் பிரபலமான உணவகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். ஸ்கோர் என்ற வயது வந்தோருக்கான இதழின் ஆசிரியர் டேவும் அவரது நண்பர்கள் மூவரும் மதிய உணவிற்காக தொடர்ந்து சில நாட்கள் அவ்வுணவகத்திற்கு செல்ல நேர்கிறது. அப்போது மியா பரிமாறிய பர்கர்களின் சுவையோ என்னவோ அவர்களை ஹெவியாக ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய போர்னோ இணையதளமான ஸ்கோர்லேண்டின் சேவைகளுக்காக மியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஸ்கோர்லேண்ட் என்பது பிரம்மாண்ட மார்பகங்கள் கொண்ட மாடல்களின் படங்கள் / காணொளிகளை மட்டும் பிரத்யேகமாக வெளியிடும் தளம். உணவகம் என்பதால் மியாவிடம் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஒரு துண்டுச்சீட்டில் தங்கள் விருப்பத்தையும், இணையதள முகவரியையும் எழுதி மியாவிடம் கொடுக்கின்றனர். அதனை உணவக கழிப்பறைக்குச் சென்று பிரித்துப் பார்த்த மியா, தனக்கு கிடைத்த வாய்ப்பை புளியங்கொம்பாய் கைப்பற்றுகிறார்.

மியாவின் கலைப்பயணம் இங்கிருந்துதான் துவங்குகிறது. 2014 அக்டோபரில் மியாவின் முதல் நீலப்படம் வெளியாகிறது. மியாவின் கோதுமை நிறமும், கூடைப்பந்து அளவுள்ள அங்கங்களும் அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பிட்டுப்பட ரசிகர்களை ஈர்த்துவிட்டது. குறிப்பாக நீலப்படங்களில் வரும் BJ என்ற வித்தையில் மியா கை தேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். “நீ பார்த்தாயா?” என்று கேட்காதீர்கள். பார்த்தவர்களை பார்த்தேன். இரண்டு மாதங்களிலேயே 'போர்ன் ஹப்' என்கிற பிரபல இணையதளம், பலான இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை மியா என்று அறிவிக்கிறது, கூடவே நம்பர் 1 நீலப்பட நடிகை என்றும் அறிவிக்கிறது.

பிரபலமானாலே பிராப்ளம்களும் பின்னாடியே வருமல்லவா ? தன்னுடைய காணொளி ஒன்றில் பர்தா அணிந்து தோன்றியதால் தன் தாய்நாடான லெபானானில் இருந்தும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை சந்திக்கிறார் மியா. இது குறித்து வாஷிங்க்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், அக்காணொளியை பகடியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் மேலும் ஹாலிவுட் படங்களில் இஸ்லாமிய மதம் இதைவிட பன்மடங்கு இழிவுபடுத்தப்படுகிறது என்று கூறுகிறார். எதிர்ப்புக்குரல்கள் குறைந்தபாடில்லை. மியாவின் குடும்பத்தினரே கூட அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால் இணையத்தில் மியாவை தேடியவர்கள் எண்ணிக்கை மட்டும் ஐந்தாக உயருகிறது. பியர் நிறுவனம் ஒன்று மியாவின் கண்ணாடியை மட்டும் வைத்து குறும்பாக ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. டைம்ஃப்ளைஸ் எனும் இசைக்குழு மியாவுக்காகவே பிரத்யேக பாடலை வெளியிடுகிறது. 

மியாவின் கண்ணாடியுடன் பியர் விளம்பரம்
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் திரைக்குப் பின்னால் என்னதான் நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு பயந்து பணிந்துவிட்டாரா ? தெரியவில்லை, இருக்கலாம். கடந்த ஜூலையில் அதே வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தான் போர்னோ துறையில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கிறார். மியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் கூட பிப்ரவரி 2015க்கு பிறகு புதிய காணொளிகள் இல்லை. ஆறுதலளிக்கும் வகையில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் அவ்வப்போது தன் படங்களை பதிவேற்றி சாஃப்ட்போர்ன் சேவையாற்றி வருகிறார் மியா.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். மியாவைப் போலவே இன்னொரு நீலப்பட நடிகை சன்னியை அரவணைத்துக் கொண்டது போல மியாவையும் ஏன் பாலிவுட் அரவணைக்கக்கூடாது ? சன்னி ‘பிக் பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சமயத்தில், மியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக பேச்சு அடிப்பட்டது. அப்போது ‘இந்தியாவில் காலடி எடுத்து கூட வைக்கமாட்டேன்’ ஒரேயொரு ட்வீட் போட்டு இந்திய இதயங்களை நொறுக்கிவிட்டார் மியா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 September 2016

பாடிகாட் முனீஸ்வரன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சம்பவம் நடந்து சுமார் 25 வருடங்கள் ஆகியிருக்கும். அப்பொழுதெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் சைக்கிள் பயன்பாடு அதிகம். தொழிலாளிகள் தங்கள் வேலை நேரம் முடிந்தபிறகு ஒன்றாக சைக்கிளோட்டியபடி தத்தம் வீடுகளுக்கு திரும்புவார்கள். தொழிலாளர்கள் வீடு திரும்பும் வழியில் பாலமொன்று அமைந்திருந்தது. அந்தப் பாலம் அப்போது பேய்கள் உலவும் இடமாக கருதப்பட்டது. காரணம், பாலத்திற்கு கீழே அமைந்துள்ள சுடுகாடு. இரவில் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்கள் உறங்காமல் பாலத்தின் மீது உலவுவதாக எல்லோரும் பரவலாக பேசிக்கொண்டனர். இரவில் தனியாக அப்பாலத்தை கடந்து செல்பவர்கள் தீயசக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளான கதைகள் உண்டு.

மாடசாமி, தினமும் அந்தப் பாலத்தை கடந்து வீடு திரும்பும் தொழிலாளிகளில் ஒருவர். ஒருநாள் அவருக்கு தொழிற்சாலையில் வேலைப்பளு அதிகமிருந்து நள்ளிரவு ஆகிவிட்டது. முதலில் அங்கேயே உறங்கிவிடலாம் என்றுதான் யோசித்திருக்கிறார். ஆனால் வீட்டில் தனியாக இருக்கும் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து கிளம்பிவிட்டார்.

கும்மிருட்டு. மாடசாமி சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டிருக்கிறார். பாலத்தை நெருங்கிவிட்டார். ஆள் நடமாட்டமேதுமில்லை. சைக்கிள் பாலத்தின் மீது ஏறத்துவங்கியது. மற்றவர்களை ஒப்பிடும்போது மாடசாமி கொஞ்சம் தைரியமான ஆசாமி என்றாலும் அவரும் மனிதர்தானே. வீட்டிற்கு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை மட்டும் மனதில் நிறுத்தி, மூச்சிரைக்க சைக்கிளை மிதிக்கிறார். 

மனித மனம் ஒரு குரங்கு. ஒரு விஷயத்தை செய்யவே கூடாது என்று அதிக கவனம் எடுக்கும்போது தான் அந்த விஷயத்தை செய்வதில் மனித மனம் ஆர்வம் காட்டும். திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நினைத்தவருடைய கண்கள் சுடுகாட்டை நோக்கி பார்க்கின்றன. மயான அமைதி என்பார்களே, அதனை முதல்முறையாக உணர்கிறார். அவருடைய உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. தன்னிலை உணர்ந்து மீண்டும் வேகமாக சைக்கிளை மிதிக்கத் துவங்குகிறார்.

பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்றபோது எதிர்பாராவிதமாக திடீரென சைக்கிள் நின்றுவிடுகிறது. செயின் எதுவும் கழன்றுவிட்டதா என்று குனிந்து பார்க்கிறார். அப்படி எதுவும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. யோசித்தபடி சைக்கிளை மிதிக்கிறார். சைக்கிள் நகர்கிறது. ஆனால் முன்பைப் போல எளிதாக அவரால் ஓட்டமுடியவில்லை. இத்தனைக்கும் இப்போது பாலத்தை விட்டு இறங்கிக்கொண்டிருக்கிறார். சைக்கிள் கேரியரில் ஒரு கனத்த உருவம் உட்கார்ந்திருப்பதாக அவரது உள்ளுணர்வு சொல்கிறது. போகப் போக கேரியரில் கனம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சைக்கிளை ஓட்டுவதற்கு தெம்பின்றி நின்றுவிடுகிறார். இப்போது பின்னாலிருந்து, “ம்ம்ம்ம்” என்றொரு உறுமல் ஒலி கேட்கிறது. அவருடைய பின்னங்கழுத்தில் ஒரு சூடான மூச்சுக்காற்று. மூச்சுக்காற்றும், உறுமலும் அவரை நிற்காமல் ஓட்டு என்று கட்டளையிடுவதைப் போல இருந்தது.

சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்க துணிவில்லாமல் ஓடத் துவங்குகிறார் மாடசாமி. ஏறத்தாழ பாலத்தை கடந்துவிட்டார். அப்போது ஏதோ ஒன்று அவருடைய காலை இடறிவிட நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். அவ்வளவுதான். இனி தப்பிக்கவே முடியாது என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டவர் தனது குலதெய்வத்தை வேண்டிக்கொள்கிறார். எவ்வளவு நேரம் அப்படி விழுந்து கிடந்தார் என்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த சுருட்டு வாசம் மூக்கைத் துளைத்தது. பயம் சற்று விலகி மெதுவாக எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே சாலையோரமாக ஒரு பெரியவர் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தார். மாடசாமி தன்னுடைய பயணத்தில் முதல்முறையாக இன்னொரு மனிதரை காண்கிறார். அந்த உணர்வே அவருக்கு தைரியமூட்ட பெரியவருக்கு அருகில் சென்றார். வாயிலிருந்து சுருட்டு புகை பரவ, பளீரென வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த முதியவர், “யாரப்பா நீ” என்று அதட்டும் தொனியில் கேட்டார்.

மாடசாமி, நடந்த விவரம் அனைத்தையும் கூறுகிறார். வண்டி எங்கே என்கிறார் பெரியவர். பாலத்தை நோக்கி கை காட்டுகிறார். என்னோடு வா என்று பாலத்திற்கு அழைக்கிறார் பெரியவர். தொழிலாளியோ பயத்தில் மறுக்கிறார். தைரியம் சொல்லி அழைத்துச் செல்கிறார் பெரியவர். பாலத்தில் சைக்கிள் அனாதையாக கிடக்கிறது. அங்கே வேறு யாரும் இருந்ததற்கான அடையாளமே இல்லை. இருவருமாக சைக்கிளை தள்ளிக்கொண்டு வருகிறார்கள். பாலத்தைக் கடந்து பின் அந்த சாலையின் எல்லை வரை வந்த முதியவர், “என் எல்லை முடிகிறது. வண்டியை வழியில் எங்கேயும் நிறுத்தாமல் வீட்டுக்குப்போ !” என்று கட்டளையிட்டிருக்கிறார். சுருட்டு வாசம் மட்டும் அவரைத் தொடர்ந்தது.

மேலே சொன்ன கதையில் வரும் பாலம் தற்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், அண்ணா சாலையையும் சென்டிரல் ரயில் நிலையத்தையும் இணைக்கும் பாலம். கதையில் வரும் சுருட்டு பெரியவர் வேறு யாருமில்லை, முனீஸ்வரனே தான். இந்தக்கதை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கதையில் வரும் விவரணைகள், சுடுகாடு, பாலம், பாலத்தின் எல்லையில் முனீஸ்வரன் எல்லாமே பொருத்தமாக இருக்கிறது. பாலத்தின் முடிவில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவில் சமீப வருடங்களாக அசுர பிரசித்தி அடைந்துவருகிறது.

புகைப்படம்: ஸ்ரீநிவாசன்
அதென்ன பாடிகாட் முனீஸ்வரன் ? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குல தெய்வமான முனீஸ்வரன் சிலையை தங்களுடன் கொண்டுவந்து, இங்கிருக்கும் ஒரு மரத்தடியில் வைத்து வணங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தற்போது தலைமைச் செயலகம் இயங்கிவரும் பகுதியில் தான் முனீஸ்வரன் இருந்திருக்கிறார். 1920ம் ஆண்டு பல்லவன் பணிமனைக்கு முன்பாக இடம் பெயர்க்கப்பட்டார் முனீஸ்வரன். அக்காலகட்டத்தில் பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு ‘பாடி கட்டும்’ வேலைகள் நடந்தன. வாகனங்களுக்கு பாடி கட்டும் இடத்தில் அமைந்திருந்ததால் முனீஸ்வரன் – பாடிகாட் முனீஸ்வரன் ஆனார்.

அதே போல, தற்போது கோவில் அமைந்திருக்கும் இடம் ப்ரிட்டிஷ் காலத்தில் கவர்னரின் பாதுகாப்பு படையினருக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. கவர்னர்’ஸ் பாடிகாட் ஏரியா என்றழைக்கப்பட்ட அப்பகுதிக்கு வந்து குடியேறியதால் பாடிகாட் முனீஸ்வரன் ஆனார் என்போரும் உண்டு. அப்படியெல்லாம் இல்லை, வாகனகளுக்கு பாதுகாப்பு தரும் பாடிகார்டாக இருப்பதால் பாடிகாட் முனீஸ்வரன் என்று தற்போதைய தலைமுறையினர் உறுதியாக நம்புகின்றனர்.

நான் சுமார் ஏழெட்டு வருடங்களாக தினசரி பாடிகாட் முனீஸ்வரனை கடந்து செல்கிறேன். ஆரம்பத்தில் பார்த்த முனீஸ்வரனுக்கும் தற்போதுள்ள முனீஸ்வரனுக்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன. நாளுக்கு நாள் முனீஸ்வரனின் புகழ் பரவிக்கொண்டிருக்கின்றன. தினசரி அப்பகுதியை கடக்கும்போது சுமார் இருபது வாகனங்களாவது பூஜைக்காக காத்திருக்கின்றன. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணி இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் சென்னையின் செல்வம் கொழிக்கும் கோவிலாக பாடிகாட் முனீஸ்வரன் மாறப் போகிறார். என்னைக் கேட்டால் பல்லவன் இல்லத்திற்கும், சென்டிரலில் இருந்து அண்ணா சாலை செல்வதற்கும் வேறு இடத்தை இப்போதே பார்த்து வைத்துக்கொள்வது அரசுக்கு நல்லது !

தகவல்கள்: இணையம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 March 2014

வா நீ கபூர் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வட பாவ் நடிகைகள் தோன்றுவதுண்டு. ஏன் உலக அழகிகளையும், பிரபஞ்ச அழகிகளைக் கூட தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அவர்களில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் தவிர்த்து வேறு யாரும் தமிழர்களை அவ்வளவாக ஈர்த்ததில்லை. லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் விஜய் நடிப்பில் தமிழன் என்ற படம் வெளிவந்திருந்தது. எனது சமூக அறிவியல் ஆசிரியை என்ன காரணத்திற்காகவோ அதனை பார்த்திருக்கிறார். மறுநாள் வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். யாரு அவளையெல்லாம் உலக அழகியாக தேர்ந்தெடுத்தது என்று அறச்சீற்றம் கொண்டவரை அமைதிப்படுத்தவே சிரமப்பட்டுவிட்டோம். அந்த நடிகையின் பெயர் ப்ரியங்கா சோப்ரா. எனக்கு ப்ரியங்கா சோப்ராவின் மேல் உதடுகளை பார்க்கும் போதெல்லாம் மேற்கிந்திய தீவு பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் நினைவுக்கு வருவார். ஆனால் பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் சக்கை போடு போட்டார். அவருடைய கோரமான பல்வரிசையை நீயா நானா ஆசாமிகள் வர்ணிக்கிறார்கள். அதுபோல வித்யா பாலன் என்று தமிழில் அக்கா, அண்ணி கதாபாத்திர முக அமைப்பு கொண்ட ஒருவர் அங்கே சென்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஹிந்திவாலாக்களின் ரசனையை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படி அவ்வப்போது பாலிவுட் சீமாட்டிகள் தமிழில் தலை காட்டுகிறார்கள் இல்லையா...? பாட்டியாவையும், அகர்வால்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்களெல்லாம் தமிழர்களாக இனம் மாறிவிட்டார்கள். அவர்கள் தவிர்த்து, மாற்றான் படத்தில் இஷா ஷெர்வானி வந்து ஒரு ஆட்டம் போட்டு பார்த்தார். பில்லாவில் ப்ரூனா அப்துல்லா வந்தார். ம்ஹூம் யாரும் தேறவில்லை. திடீரென தற்சமயம் யாரோ வாணி கபூராம். சில வாரங்களாகவே அவரைப் பற்றிய விளம்பரங்கள் தூள் பரத்துகின்றன. பண்பலையில் வந்து பேசுகிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், தமிழ் கற்றுக்கொள்ள போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார். என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..? ஒருநாள் கூத்துக்கு ஏனய்யா வேக்ஸிங் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். பின்னே, ஏதோ ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அடுத்து குட்டிக்கர்ணம் அடித்தாலும் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காது. ஏன் சிரமப்பட்டு தமிழெல்லாம் கற்றுக்கொள்கிறார் என்று வருத்தப்பட்டேன்.

என் எண்ணம் அவ்வாறாக இருந்தமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வாணி கபூரின் கன்னங்கள். உட்புறமாக ஒடுங்கியிருந்த கன்னங்கள். தாமரைக் கன்னங்கள் என்று கதாநாயகியை வருணித்து மகிழ்ச்சியுறும் மக்கள் எப்படி வாணி கபூரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே என் ஐயப்பாடு. எனினும், பிற்பாடு ஒரு விஷயத்தை தெரிந்துக்கொண்டேன். வாணியிடம் உள்ள பாகங்களில் கன்னங்களை தவிர வேறெதுவும் ஒடுங்கியிருக்கவில்லை.

வாணி கபூருடைய தாயார் கருவுற்றிருந்த சமயம் குங்குமப்பூவை கிலோ கணக்கில் சாப்பிட்டிருக்கக்கூடும். சும்மா செக்கச் செவேலென கோயமுத்தூர் கொய்யா போல இருக்கிறார். உயரத்தில் அனுஷ்காவை விட ரெண்டு இன்ச் தான் குறைவாக இருப்பார். தலப்பாக்கட்டியை நினைவூட்டுகிறது வாணியுடைய வாளிப்பான கால்கள். டெல்லியில் பிறந்து, வளர்ந்து, இந்திரா காந்தி பல்கலையில் சுற்றுலா மேலாண்மை படித்த வாணி, தன்னைப் பற்றி தமிழகத்திலுள்ள உள்ள ஒரு வலைப்பதிவர் வர்ணித்து எழுதுவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். யாஷ் சோப்ரா என்று மும்பையில் ஒரு பெருந்தலை. தமிழ் சினிமாவில் ஏ.வி.மெய்யப்பர் போல ஒரு மரியாதைக்குரிய பெரியவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய மகனான ஆதித்யா சோப்ரா தான் வாணி முத்துவை தமிழ் சினிமாவிற்கு கொணர்ந்திருக்கிறார். மொத்தமாக மூன்று படங்கள் நடித்துத்தர வேண்டுமென வாணியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ஆதித்யா. அந்த சமயமாக பார்த்து கோலிவுட்டில் கால் பதிக்க ஆதித்யா சோப்ரா விரும்பியது நம்முடைய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் படங்களில் அதிகபட்சமாக எத்தனை உதட்டு முத்த காட்சிகளை பார்த்திருப்பீர்கள்...? அவற்றில் பெரும்பாலானவை பொடனியில் கேமரா வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படியெல்லாம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற முத்தத்தை பார்த்திருக்கிறீர்களா...? நியாயமாக தமிழ் சினிமா நடிகைகள் வாணிக்கு பாத பூஜை செய்துவிட வேண்டும். சிலர் ஆஹா கல்யாணத்தில் இடம்பெற்ற உதட்டு முத்த காட்சியையே ஆஹா ஓஹோ என்கிறார்கள். அவர்கள் அம்மணி ஷுத் தேசியில் சுஷாந்த் சிங்கிற்கு அடித்த கிஸ்ஸை பார்த்திருக்க வேண்டும். ஆஹா கல்யாணத்தில் பன்ச் சாங் என்று ஒன்று வருகிறது பாருங்கள். பஞ்சு நெஞ்சு கொண்டவர்கள் தாங்க மாட்டார்கள். இடுப்பு விஷயத்தில் தமிழர்களுக்கு நன்றாகவே இறக்கம் காட்டியிருக்கிறார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பாக ஏதோ மூன்று பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். ம்ஹூம். அடுத்து தமிழ் சினிமா நாயகர்களுடன் ஒரு வலம் வந்து கடைசியாக கமலுடன் ஜோடி சேருவது வரை வாணியை நாங்கள் விடுவதாக இல்லை. வேண்டுமானால் ஆதித்யா சோப்ராவை தமிழில் படம் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்.

தொடர்புடைய சுட்டி: தன்வி வியாஸ்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 September 2013

அங்கவை சங்கவை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

2007க்கு முன்பு “அங்கவை சங்கவை” பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. எதிர்மறை விளம்பரம் கொடுத்தேனும் அங்கவை சங்கவையை தமிழர்களுக்கு அடையாளம் காட்டியமைக்காக இயக்குநர் ஷங்கருக்கு ஒரு நன்றி சொல்லிக்கொள்ளலாம். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் – அங்கவை & சங்கவை. அவர்களுடைய பெயர் அங்கவை – சங்கவை என்பதற்கு சங்கநூல்களில் ஆதாரம் ஏதுமில்லை. எனினும், பிற்கால வரலாற்று ஆய்வாளர்கள் காரணமாக அங்கவை, சங்கவை என்ற பெயர் நிலைத்துவிட்டது. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர். அவ்விருவரும் இரட்டையராய்ப் பிறந்தனரோ என்று ஐயுறும்படி அங்க அழகில் ஒற்றுமை உடையவர்களாய் இருந்தனர்.

சித்தரிக்கப்பட்ட படம்
கடையேழு வள்ளல்கள் சீரிஸின் கடந்த பதிவின் இறுதியிலிருந்து சில வரிகள் :- பாரிவேளை சூழ்ச்சியின் மூலம் கொல்ல முடிவெடுத்த மூவேந்தர்கள் ஒரு பெளர்ணமி நாளில் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன் உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில் மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின் உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள் என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.

தங்களுடைய தந்தையின் மரணத்தில் அங்கவையும் சங்கவையும் வேதனையால் துடித்தனர். அவர்களுடன் ஊர்மக்களும் ஒன்றுகூடி ஓலமிட்டனர். செய்தியறிந்து விரைந்து வந்த கபிலர் கதறினார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ ? தன்னைத் தேற்றிக்கொண்ட கபிலர், பாரிமகளிரை ஆறுதல்படுத்தினர். அத்துடன் நில்லாமல் பருவம் எய்திய அந்நங்கைகளுக்கு மணம் முடித்துவைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பறம்புமலையிடம் பிரியா விடைபெற்றுப் புறப்பட்டார் கபிலர் பாரிமகளிருடன். அன்று, பாரி கொலையுண்ட முன்னாள் போலவே நிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. பாரிமகளிருக்கு தந்தையின் நினைவு மேலோங்கியது. அப்போது அவர்கள் பாடிய பாடல் :-

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறம் 112)

விளக்கம்: மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்.

பாரிவேள் முல்லைக்கொடிக்கு கொழுக்கொம்பாக தேரை கொடுத்தது போல அவ்விரண்டு பெண்கொடிகளுக்கு கொழுக்கொம்பாக தக்கார் யாரையேனும் கண்டு ஒப்படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார் கபிலர். தனக்குத் தெரிந்த கோமான்களையெல்லாம் எண்ணிப்பார்த்தார். கண்மணி போன்ற பெண்மணிகளுக்கு ஏற்ற பொன்மனச் செம்மல்களாக இருக்க வேண்டுமே ! அதன்படி அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தவன் விச்சிமலைக்கு அதிபதியான விச்சிகோன் என்ற சிற்றரசன். கபிலர் பாரிமகளிருடன் அவனிடம் சென்றார். அவனை முறைப்படி வாழ்த்தி, அங்கவை சங்கவையை அறிமுகப்படுத்தி அவர்களை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். எனினும் மூவேந்தர்கள் பாரி மகளிரை விரும்பிப் போர் செய்ததை அறிந்தவனான விச்சிகோன் அவர்களின் பகைமைக்கு அஞ்சி மறுத்துவிட்டான்.

அடுத்து யாரை நாடுவது ? ஹொய்சள வம்சத்தில் பிறந்தவனும் ‘வேள் எவ்வி’ என்ற வள்ளலின் வழி வந்தவனுமாகிய இருங்கோவேள் என்ற குறுநில மன்னன் இன்னும் மணமாகாதவன் என்று தெரிந்தது. உடனே புறப்பட்டார். இருங்கோவேளின் அரண்மனையை அடைந்த கபிலர் பாரியின் சிறப்பைக்கூறி அவரது மகளிரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவனோ, “எங்கோ பிறந்த பெண்களை ஒரு தொடர்பும் இல்லாத நீர்தர நான் மணந்து கொள்வதா ?” என்று எடுத்தெறிந்து பேசினான். இருங்கோவேளின் வார்த்தைகள் கபிலருக்கு வலியூட்டியது, அவருக்கு உள்ளம் சலித்துவிட்டது. திருமண பாரத்தை யாரிடமாவது ஒப்புவித்துவிட அவருடைய தன்மான உணர்வு தவித்தது. யாரிடம் விடுவது ?

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்களை அன்போடு உபசரித்து வந்த அந்தணரான முதியவரிடமே ஒப்படைத்தால் என்ன என்று தோன்றியது. தனக்குள்ள நெடுநாள் விருப்பமாகிய யாத்திரை இருபெண்களால் தடைபடுவதாகவும், எனவே அவர்களை அம்முதியவரிடம் விட்டுச்செல்ல விரும்புவதாகவும் நயம்படக் கூறினார். முதியவர் ஒப்புக்கொண்டார். ஆறுதல் கொண்ட கபிலர் அங்கிருந்து புறப்பட்டு செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற ஈகையிற்சிறந்த சேர மன்னனிடம் பழமரம் நாடும் பறவைபோல் சென்றடைந்தார். சேரமானுடன் சிலகாலம் தங்கியிருந்த கபிலர் அவனைப்போற்றி பத்துப்பாடல்களை பாடினார். பின்பு அங்கிருந்து விடைபெற்றபோது பொன்னும் பொருளும் சில ஊர்களையும் அளித்து வழியனுப்பினான் சேரமன்னன். அவற்றைப் பெற்றுக்கொண்ட கபிலர் பாரிமகளிரிடம் வந்தார். சேரனிடம் பெற்ற அனைத்தையும் அந்தணரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவருக்கு உலகவாழ்க்கை வெறுத்துப் போனதால் விரதமிருந்து உயிர்விட முடிவு செய்தார். உயிர் விடும் முன்பு நண்பர் பாரியை நினைத்து கபிலர் பாடிய கடைசி புறநானூற்றுப் பாடல் :-

இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி யும்மை
இடையில் காட்சி நின்னோடு
உடனுறைவு ஆக்குக வுயர்ந்த பாலே !
(புறம் 236)

விளக்கம்: நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில், "இங்கே இருந்து வருக" எனக்கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.

பாரிவேளைப் பற்றியும் கபிலரைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த ஒளவைப் பிராட்டியாருக்கு அச்சமயம் பாரிமகளிர் ஒரு அந்தணர் பொறுப்பிலிருப்பது தெரியவந்து அங்கு சென்றார். ஒளவையைக் கண்டதும் அங்கவையும் சங்கவையும் ஆற்றாமையால் அழுது புலம்பினர். தங்களால் கபிலர் பட்ட இன்னல்களையும் தற்போது தாங்கள் அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் இருப்பதையும் கூறித்தேம்பினர். அதைக்கேட்ட ஒளவை “கண்மணிகளே ! கலங்காதீர்கள். எல்லாம் வல்லான் வகுத்தபடிதான் நடைபெறும். கவலைப்பட வேண்டாம். பாரியையும் கபிலரையும் எம்மால் மீண்டும் கொண்டுவர இயலாது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற உங்களை நான் நல்லறமாம் இல்லறத்தில் நிலை நிறுத்துவேன்” என்று அன்பொழுக ஆறுதல் கூறினார். சில நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்த ஒளவை, அவ்விரு நங்கைகளுக்கும் மணமகன் தேடி வருவதாக புறப்பட்டார்.

அந்நாளில் திருக்கோவலூரைத் தலைநகராய்க் கொண்ட மலாடு என்கிற மலையமான் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த தெய்வீகன் என்பவன் மணமாகாதவன், நல்ல பண்பாளன் என்றறிந்த ஒளவையார் அங்கு சென்றார். குறுநில மன்னனான அவனை வாழ்த்தி தன் எண்ணத்தைக் கூற அவ்வரசனும் பழுதிலாப்புகழ் பாரியின் இரு பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.

பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலிருந்தது ஒளவையாருக்கு ! அவரே முன்னின்று சேர, சோழ, பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பினார். அவர்கள் முன்னிலையில் செல்விகள் அங்கவை சங்கவைக்கும் மலாடு நாட்டரசனான மலையமான் தெய்வீகனுக்கும் சீருற சிறப்புற திருமணம் நடைபெற்றது. பாரியின் பெற்ற கடமை, கபிலரின் நட்புகொண்ட பொறுப்பு இரண்டும் ஒளவையாரால் நிறைவேற்றப்பட்டது.

முந்தய பதிவுகள்:


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 August 2013

கேப்டன்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் அதிகமாக கேலி செய்யப்படுபவர்களில் ஒருவர். சமகாலத்தில் அவருடைய ரசிகர் என்று யாரேனும் சொன்னால், சொன்னவர் சர்வநிச்சயமாக எள்ளி நகையாடப்படுவார். அவருடைய உருவம், வசன உச்சரிப்பு, சண்டைமுறை, ஆங்கிலம் பேசும் முறை என்று அரசியல் வரைக்கும் எல்லா வகையிலும் அவரை ஜாலியாக கிண்டலடிப்பதில் துவங்கி சீரியஸாக விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனாலும் போகிறபோக்கில் எல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் மிமிக்ரி கலைஞர் என்றால் கண்டிப்பாக அவருக்கு நாக்கை மடித்து, “ஆங்...!” என்று சொல்லும் அவருடைய ஸ்டைல் தெரிந்திருக்க வேண்டும். சிகப்புநிற தோல் இல்லை, புஜபல பராக்கிரமசாலியும் இல்லை, சினிமாவில் பெரிய பின்புலம் இல்லை. ஆனாலும், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில், குறிப்பாக பி, சி செண்டர்களின் பேராதரவை பெற்று பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர். கேப்டன் விஜயகாந்த் !

யாரிந்த விஜயகாந்த் ?

விஜயகாந்த் அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஆகஸ்ட் இருபத்தி ஐந்தில் நாராயணனாக பிறந்தார். ஆண்டாள் அழகர் தம்பதியர் ஈன்றெடுத்தனர். பிறந்த மண் மதுரை. நாராயணன் என்பது அவருடைய தாத்தாவின் பெயர். அந்த பெயரைச் சொல்லி அழைக்கும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக விஜயராஜ் என்ற கூப்பிடுபெயரையும் சூட்டி வைத்தனர். சினிமா அவரை காந்தம் போல ஈர்த்து ராஜ் என்பதற்கு பதிலாக ‘காந்த்’ என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டது. பின்னாளில் இயக்குநர் விஜயன், அமிர்தராஜ் என்ற புதுப்பெயரை சூட்டினாலும் கூட விஜயகாந்த் என்பதே நிலைத்துவிட்டது.

விஜயகாந்தின் குடும்பம் பெரியது. உடன்பிறப்புகளில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று எல்லோரையும் வாய்க்கப்பெற்றவர் விஜயகாந்த். ஆண்டாள் – அழகர் தம்பதியருக்கு விஜயகாந்துடன் சேர்த்து மொத்தம் எட்டு குழந்தைகள். விஜயகாந்துக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. மூன்றாவதாக விஜயகாந்த். ஒரு தங்கை, நான்கு தம்பிகள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. விஜயகாந்த் அவருடைய வீட்டில் ஒரு ஆறிலிருந்து அறுபது வரை ரஜினிகாந்த். தங்கை, தம்பிகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டு திரைப்படத்துறையிலும் முத்திரையை பதித்துவிட்டு தன்னுடைய முப்பத்தி ஏழாவது வயதில் தான் அண்ணியாரை கை பிடித்தார்.

விஜயகாந்தின் தந்தையார் மதுரையில் ரைஸ்மில் முதலாளி. விஜயகாந்தும் பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு நிரந்தர விடுப்பு எடுத்துக்கொண்டு ரைஸ்மில்லை கவனித்து வந்தார். அப்போது விஜயகாந்தின் நண்பர் எம்.ஏ.காஜா மதுரையில் சினிமா கம்பெனி வைத்திருந்தார். 1979ம் ஆண்டு சினிமா பிரவேசம் செய்த எம்.ஏ.காஜா நட்பின் அடிப்படையில் தன்னுடைய இனிக்கும் இளமை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். விஜயகாந்த் என்ற பெயரும் அவர் சூட்டியது தான். அப்படித்தான் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கை துவங்கியது.

சராசரியாக போய்க்கொண்டிருந்த அவருடைய சி.வா.யில் திருப்புமுனை ஏற்படுத்தியது யாரென்று நினைக்கிறீர்கள் ? தி ஒன் அண்ட் ஒன்லி – எஸ்.ஏ.சி ! பஸ்.ஏ.சியின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.சி.க்கு அதுதான் முதல் படம். கிடைத்த நடிகரை கப்பென பிடித்துக்கொண்டு தொடர்ந்து விஜயகாந்தை வைத்தே படங்கள் எடுக்கலானார். எஸ்.ஏ.சி, விஜயகாந்தை வைத்து இதுவரையில் பதினேழு படங்களை இயக்கியிருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். எஸ்.ஏ.சி.யைப் போலவே விஜயகாந்துடன் இணைந்து வளர்ந்த இன்னொரு இயக்குநர் ராம.நாராயணன். அவரும் விஜயகாந்தை வைத்து அதே எண்ணிக்கையில் படங்களை இயக்கியிருக்கிறார்.

புகழின் படிகளில் முன்னேறிய விஜயகாந்த், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துக்கு மாற்றாக இருந்திருக்கிறார். ரஜினியை வைத்து படம் பண்ண முடியாதவர்கள் எல்லாம் நேரே வண்டியை விஜயகாந்த் வீட்டிற்கு செலுத்தியிருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்களின் பொன் முட்டையிடும் வாத்தாக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். 1984 மற்றும் 1985 ஆண்டுகளில் விஜயகாந்த் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்திருக்கிறார். இரண்டே ஆண்டுகளில் முப்பத்தி ஐந்து படங்கள். யோசித்துப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. சராசரியாக இருபது நாட்களுக்கு ஒரு படம். அவற்றில் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும் அடங்கும். தமிழ் சினிமா தன்னை முதன்முதலில் விஜயகாந்த் மூலமாகத்தான் முப்பரிமாணத்தில் வெளிக்காட்டிக்கொண்டது. திரைப்படம்: அன்னை பூமி. 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில… சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் எழுதி தயாரித்த ஊமை விழிகள். 1984ல் மதுரை சூரன் முதல் ஜனவரி 1 படம் வரை 18 படங்களும் 1985ம் ஆண்டில் மட்டும் அலை ஓசை முதல் நானே ராஜா நானே மந்திரி வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். வேறு எந்த ஹீரோவும் செய்யாத சாதனை இது. விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம் இனிக்கும் இளமை.

அந்த சமயத்தில் நடந்த ஒரு பட விழாவில் தான் கலைஞர் முன்னிலையில் புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது. சூட்டியவர் கலைப்புலி தாணு.

நிறைய துணை நடிகர்களை தன்னுடன் சேர்த்து வளர்த்துவிட்டிருக்கிறார் விஜயகாந்த். ஆனந்த் ராஜ், அருண் பாண்டியன் (என்கிற துரோகி), மன்சூர் அலிகான் போன்றவர்களை நிறைய விஜயகாந்த் படங்களில் பார்க்கலாம். போலவே விஜய்யுடன் செந்தூரப்பாண்டி, சரத்குமாருடன் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து அவர்களை ஆரம்பகாலத்தில் உயர்த்தி விட்டிருக்கிறார். இதனை விஜய்யே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தந்த காலக்கட்டங்களில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமைகளை தட்டிக் கொடுத்து தானும் வெற்றிக் கண்டவர் நம்ம கேப்டன். அப்படி வெளிவந்த படங்களில் முக்கியமான படங்கள் செந்தூரப்பூவே மற்றும் ஊமை விழிகள்.

விஜயகாந்தின் நண்பர் அ.செ.இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர் (இப்போது இல்லை). வேற்றுமொழிப்படங்களே நடிக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்த விஜயகாந்த் அவருக்காக மே டே என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பூஜையும் போடப்பட்டது. அசம்பாவிதமாக அதுவும் வெளிவரவில்லையாம். 

புகழின் உச்சியில் இருந்தபோதும் மற்ற மொழிப் படங்களில் நடிக்க சம்மதிக்காத விஜயகாந்த் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார், அது 1975ல் வெளிவந்த Zakhmee. படத்தைப் பற்றிய செய்திகள் இணையத்தில் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. விஜயகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு ஓடியது. சின்ன கவுண்டரை பார்த்த ரஜினி, உதயகுமாரை அணுகி அதுபோன்றதொரு படம் தனக்கு வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டு வெளிவந்தது தான் எஜமான். 

நடனம் ஆடுவதிலும் தலைவர் கில்லி. இதை ஏனோ பல இயக்குனர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பரதன் படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம், மாநகர காவல் படத்தில் வரும் வண்டிக்காரன்  சொந்த ஊரு மதுரை இவரது நடனத்திறமையை வெளிக்கொண்டு வந்த பாடல்கள்.

விஜயகாந்த்துடைய கால்கள் உதைத்து பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவருடைய கைகள் கொடுத்து பழக்கப்பட்டவை. பொன்மனச் செம்மலை பார்த்து வளர்ந்த அவருக்கும் அந்த குணம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய அலுவலகத்தில் குறைந்தது நூறு பேராவது சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (விஜயகாந்த் ஆபீசுல எப்போ கறிசோறு போடுறாங்க என்பதை டைரியில் குறித்து வைத்திருக்கும் அன்னவெறி கண்ணையனை நினைவுகூரவும்).

தமிழ் சினிமாவில் துரிதமாக நூறாவது பட இலக்கை எட்டியவர்களில் ஒருவர் விஜயகாந்த். அவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படத்திற்கு அப்பெயரை சூட்டினார். படம் இமாலய வெற்றி. அன்றிலிருந்து புரட்சிக்கலைஞருடன் கேப்டன் என்கிற புனைப்பெயரும் இணைந்துக்கொண்டது. கேப்டன் பிரபாகரன் என்பது சமகாலத்தில் சிலர் செய்வது போல வணிக நோக்கத்திற்காக சூட்டிய பெயரல்ல. FYI, விஜயகாந்த்துடைய மூத்த மகனின் பெயர் விஜய பிரபாகரன் !

விஜயகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களைப் போல வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்என்று சொல்லி யாரையும் ஏமாற்றவில்லை. இதுவரை, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில், இவர் மட்டும் தான் எடுத்த எடுப்பிலேயே கட்சி ஆரம்பித்தவர். மற்றவர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் இருந்து பின் பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்கள். தன்னுடைய படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டால் உடனே பம்மிக்கொண்டு ஓடி ஒளியும் கோழையும் அல்ல. ச்சும்மா Time to Lead என்று கேப்ஷன் போட்டாலே துரத்தியடிக்கும் கேவலமான அரசியல் சூழல் கொண்ட தமிழகத்தில், கட்சி துவங்கி, சில தேர்தல்களை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கும் அவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை சர்வநிச்சயமாக பாராட்டுக்குரியது தான் ! ஆங் !

ஓவியம்: விஜய்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment