Showing posts with label smoking. Show all posts
Showing posts with label smoking. Show all posts

11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 15042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும் புகையிலை விழிப்புணர்வு செய்திப்படத்தை பற்றி எழுதியிருந்தேன். அது உண்மையில் பார்க்க சகிக்கவில்லை, உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் என்கிற ரீதியில் சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். உண்மையில் அப்படி யாரும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என்றாலும் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் தொடுப்புக்காக அப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. முதலில், சிகரெட் பாக்கெட்டின் மீது புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று அச்சடித்தார்கள். அப்படி போட்டால் மட்டும் புகை பிடிப்பவர்கள் உணர்ந்து நிறுத்திவிடுவார்களா என்று எகத்தாளம் பேசினார்கள். அடுத்தது நெஞ்சாங்கூட்டின் நெகடிவ் படத்தை சிகரெட் அட்டையில் பொறித்தார்கள். அதுவும் எடுபடவில்லை. இப்போது முகேஷ் ஹரானே புகை பிடிப்பவர்களை அதிர வைக்கிறார். நண்பர்கள் குழுவாக திரையரங்கிற்கு வந்திருக்கும் பட்சத்தில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள நண்பனை மற்றவர்கள் உனக்காக தான்டா போடுறாங்க என்று சொல்லி கிண்டலடிக்கிறார்கள். புகை பிடிப்பவர்களும் கூட மனதளவில் மிரளத்தான் செய்கிறார்கள். அது நல்ல அறிகுறி தானே ! நூற்றில் ஒருவர் கைவிட்டால் கூட நல்ல விஷயம். அதற்காக மற்ற தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த செய்திப்படத்தை சகித்துக்கொள்ளலாம்.

அண்ணா சாலை எல்.ஐ.சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தேவி திரையரங்கம் நோக்கி நடந்துக்கொண்டிருந்த போது, ஒரு மூதாட்டி சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அடியேனைக் கண்டதும் முகம் மலர்ந்தார். மறுக்க முடியுமா ? தமிழர்களையும் ஆயா செண்டிமெண்ட்டையும் அவ்வளவு எளிதாக பிரித்துவிட முடியாது. ஒளவையார் காலத்திலிருந்து மயக்கம் என்ன தனுஷ் வரைக்கும் அப்படித்தான். அந்த நேரம் பார்த்து இரண்டு இள வயது பெண்கள் எங்களை கடந்து சென்றார்கள். அந்த சுமார் மூஞ்சிகளை இம்ப்ரஸ் செய்வதற்கு நான் ஆயாவை பயன்படுத்துவதாக அவர்கள் நினைத்து கொள்ளக்கூடும் என்பது அச்சுறுத்தலாக இருந்தது. அதைவிட எனக்கு தனியாக சாலையை கடப்பதில் எப்போதுமே ஒரு மிரட்சி உண்டு. சமயங்களில் வாகன ஒட்டிகளையும் மிரள வைத்துவிடுவேன். கிண்டி தாமரை - ஒலிம்பியா சந்திப்பிற்கு வார நாட்களில் மதியம் ஒரு மணி வாக்கில் வந்தால், நான் யாரிடமாவது சாவுகிராக்கி என்று திட்டு வாங்கும் காட்சியை ரசிக்கலாம். ஆயாவோடு கடக்க இருப்பது அண்ணா சாலை, அதுவும் காலை பதினோரு மணி. கடைசியில் ஆயாவின் துணையோடு பத்திரமாக சாலையை கடந்துவிட்டேன். அந்த ஆயாவிற்கு என்னுடைய நன்றிகள் !

சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தையல் கடைக்கு ஏற்கனவே சிலமுறை சென்றிருக்கிறேன். அங்கு பணிபுரியும் தையற்காரரை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. மேஜையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருடைய விசிட்டிங் கார்டில் தையல் துறையில் குறிப்பாக சினிமா கலைஞர்களுக்கு தைப்பதில் இருபது வருட அனுபவம் உள்ளவர் என்று தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டதும் பொறி தட்டியது. நீங்க சினிமாவுல நடிச்சிருக்கீங்க தானே சட்டென்று கேட்டுவிட்டேன். ஆமாம் நிறைய படத்துல நடிச்சிருக்கேன்... நீ எந்த படத்துல பாத்த’ன்னு கேட்டார். கள்ள பருந்து என்கிற அந்த கேடு கெட்ட படத்தின் பெயரை தயங்கியபடியே சொன்னேன். சிரித்தார். அந்த மாதிரி படங்கள் கருப்பு பணத்தை வெளுப்பதற்காக, வேண்டுமென்றே ஓடக்கூடாது என்கிற நோக்கத்தோடு எடுக்கப்படுகின்றன என்று விவரித்தார். அப்படியும் எங்களை மாதிரி ஆட்கள் பார்க்கிறார்களே என்று சிரித்து வைத்தேன். நீ ஸ்டில்லை பார்த்து ஏமாந்திருப்ப என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வீராசாமி தொடங்கி லத்திகா, மேதை என்று அடுத்தவாரம் பார்க்கவிருக்கிற திருமதி தமிழ் வரைக்குமான என்னுடைய வரலாற்றைச் சொன்னதும் வெலவெலத்துப் போய்விட்டார். அப்புறம் ஆசுவாசமாகி அந்தமாதிரி படமெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்லை சிஷ்யா... சுத்தி நூறு பேரு பார்த்திட்டு இருப்பாங்க... தப்பான எண்ணம் எதுவும் தோணாது என்று விளக்கினார். நீ கூட சீன் பட ஹீரோ மாதிரி தான் இருக்குற. சான்ஸ் வாங்கித்தர்றேன். நடிக்கிறியா ? என்றதும் கள்ளபருந்தாக மாறி அங்கிருந்து பறந்தேன்.

நான் டைம் மெஷினை கண்டுபிடித்துவிட்டேன் - என்று ஈரானிய விஞ்ஞானி அலி ரசெக்கி அறிவித்திருக்கும் செய்தி எனக்கு கொஞ்சம் ஆர்வத்தீயை கிளப்பத்தான் செய்தது. அதாவது என்னுடைய எண்ணத்தில் டைம் மெஷின் என்பது லிஃப்ட் மாதிரியான ஒரு அறை. அதற்குள் சென்று அமர்ந்துக்கொண்டு பட்டனை தட்டினால் நாம் விரும்பிய வருடத்திற்கு நேரே சென்றுவிடலாம். அதாவது இறந்தகாலத்திற்கு சென்று ஏவாளுக்கு இன்னொரு ஆப்ஷன் கொடுக்கவோ, மன்னர்களிடம் சென்று நீங்கள் ஒரே அம்பில் சிங்கம், மான், கரடி, காட்டுப்பன்றியை கொல்வீர்கள் என்று கப்ஸா விட்டு பரிசில் பெறவோ செய்யலாம். அல்லது எதிர்காலத்திற்கு சென்று ரஜினி ஐஸ்வர்யா ராய் மகளைப் பார்த்ததும் பாடி ஸ்டெடியா இருந்துச்சு; மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு என்று பேட்டி கொடுப்பதையோ, ஜூன் மாதத்திற்கு மேல் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று அப்போதைய முதலமைச்சர் குஷ்பூ அறிக்கை விடுவதையோ கண்டு களிக்கலாம். நாம் பார்த்த சினிமாக்களில் டைம் மெஷின் என்றாலே அப்படித்தானே காட்டுகிறார்கள். ஆனால் ஈரானிய விஞ்ஞானி என்ன சொல்கிறார் என்றால் அவர் உருவாக்கிய மெஷினில் அமர்ந்து ஒரு பட்டனை தட்டினால் அது நம்முடைய எதிர்காலத்தை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்து ஒரு தாளில் அச்சிட்டு கொடுக்குமாம். இதைக் கேட்டதும் நம்ம கன் பவுடர் ஷண்முகராஜன் என்ன சொல்றாரு தெரியுமா ? - “நீ டோண்ட் வொரி பண்ணிக்காத... நான் சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியக்காரன் கிட்டயே கேட்டுக்குறேன்...”

கிழக்கத்திய கழிவறையில் கக்கா போவது எப்படி ?, லுங்கி கட்டுவது எப்படி ? என்றெல்லாம் யூடியூபில் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரியெல்லாம் நமக்கு நடைமுறை வாழ்க்கையில் பயன்படாத, ஆனால் தகவல் உள்ளடக்கிய காணொளி - விண்வெளியில் பல் தேய்ப்பது எப்படி ? இவருடைய விண்வெளி சம்பந்தப்பட்ட மற்ற காணொளிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment